Jump to content

சுமந்திரன் சம்பந்தன் முறுகலா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குணா,

உங்கள் வீடியோவை நான் இன்னும் பார்க்கவில்லை ஆனால் என்னை கலங்கடித்த எழுத்து நஞ்சுண்டகாடு.

மேலும் எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வு, இது ஒரு கேவலமான அரசியல் செயல். இத்தனை அனுபமிருந்தும்.

வெளிப்படையாக நடந்தால் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்பார்கள்.

மாற்று தரப்பு ஒன்றாக சேர்ந்தால் நல்லது, அரசியலில் பலமிக்கதாக மாறலாம், அல்லது நீங்கள் சொன்னமாதிரி வாக்குகள் சிதறி மற்றவர்கள் ஆளும் நிலைதான் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தமிழரசு கட்சி பங்காளிகட்சிகளுடன் நட்புறவோடு பயணிக்கும் - சி.வி.கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தோல்விக்கு அதன் தலைமையே காரணம்(செவ்வி)- வினோ நோகராதலிங்கம்

vivo.jpg
 

கூட்டமைப்பின் தோல்விக்கு அதன் தலைமையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்பு ஏற்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் வருமாறு:

கேள்வி: இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: மக்கள் தமிழ்த் தேசியத்தின்பால் அக்கறையுடன் செயற்படுகிறார்கள். அதில் மாற்றமில்லை. பெரும்பான்மை கட்சியின் வேட்பாளர்கள் மக்களுக்கு சில சலுகைகளை வழங்கியதால் தேர்தல் கால இறுதி நேரத்தில் எங்களுக்கான ஆதரவு நிலையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தேசியத்தின்பால் அக்கறை இருக்கிறது. இருந்தாலும் தேசியம் மட்டும் தேவையில்லை என்ற நிலையிலும், இப்படியான சோரம் போகும் நிலையில் மக்கள் உள்ளனர். தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். இதனாலேயே எங்கள் வாக்குப் பலத்தில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது.

கேள்வி: உங்கள் தனிப்பட்ட வெற்றிக்கு அப்பால் உங்கள் கட்சியின் பின்னடைவு தொடர்பில் கூற முடியுமா?

பதில்: நான் வெற்றி பெற்றிருக்கிறேனே தவி, கூட்டமைப்பு படு தோல்வியை சந்தித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில்,நாங்கள் யாழ்ப்பாணத்தில் 2 ஆசனங்களை இழந்திருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தையே இழந்திருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக அரச சார்பானவர்கள் செயற்பட்டனர். இதனால் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை பிரித்து அளித்துள்ளனர். எனவே அங்கு எங்கள் பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்றோம்.

வாக்குகளை ஒருங்கே குவித்தால் தான் எங்கள் பிரதிநிதித்துவத்தை,காப்பாற்ற முடியும் என்று சிந்திக்க மக்கள் தவறி விட்டார்கள். இந்த

மக்கள் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டு, ஓரணியின் கீழ் ஒன்று சேர்ந்திருந்தால்,அது எந்த அணியானாலும் சரி,அந்த ஆசனத்தை நாங்கள் பெற்றிருக்க முடியும். கூட்டமைப்பின் தேசியத்துடன் அவர்கள் பயணித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். அதில் அவர்கள் விழிப்படையத் தவறி விட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் எப்படியிருந்தாலும் அது தமிழர் பிரதேசம். அது வேறு விடயம். ஏனைய இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக எங்கள் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வியடைந்திருக்கின்றார்கள் என்றால், எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அல்லது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களே இதற்கு பொறுப்புக் கூறவேண்டியிருக்கிறார்கள். தனிப்பட்ட வேட்பாளர்களைக் கூற முடியாது. தவறுகள் முழுக்க கூட்டமைப்பின் தலைமையிலேயே இருக்கின்றது. இதை நான் பகிரங்கமாக கூறுவேன்.

கேள்வி: மக்கள் ஆணையால் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தினால் வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் வெற்றியை தமிழ்த் தேசிய மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?

பதில்: தமிழ்த் தேசியத்தின்பால் சரியான பாதையிலேயே கடந்த காலங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். அத்துடன் மக்களின் மேம்பாட்டிற்கான சமாந்தரமான அபிவிருத்திக்கான அடையாளங்களை முன்னெடுப்போம்.

மக்களுக்கு தீர்க்கப்படாத நிறைய பிரச்சினைகள் காலம் காலமாக இருக்கின்றது. பல கட்சிகள் இருந்தும்,ஆளும் கட்சிகள்,எதிர்க் கட்சிகள் மற்றும் கட்சிகளால் தீர்க்கப்பட முடியாத தீர்க்கப்பட வேண்டிய, தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல உள்ளன. மக்களின் வாழ்வாதாரங்களை அதிகரிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தாமல் நாம் அவர்களை ஏமாற்ற முடியாது. அவர்களின் குடும்பத்தின்,ஒரு கிராமத்தின் வாழ்வாதாரங்களை நாம் மேம்படுத்தாமல் இருக்க முடியாது.

பொதுஜன பெரமுன அரசாங்கமே ஆட்சிக்கு வந்திருக்கின்றது. அந்த அரசாங்கத்துடன் ஆகக் கூடியளவு எங்கள் மக்களின் அபிவிருத்தித் திட்டங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுவோம். உரிமை சார்ந்த பிரச்சினையிலும், இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளிலும் எப்படியான நிலைப்பாட்டை எடுப்பது என்பது ஒரு புறம் இருக்க, கூடுதலான தமிழ் மக்களால் ஏற்றுக் கொண்ட கட்சி என்பதால் எங்களுடன் சேர்ந்து அபிவிருத்தி விடயங்களில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு கடமைப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

நாங்கள் அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அரசாங்கத்திடம் இருந்து நிதி வளங்களைப் பெற்று அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய ஒரு பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

இந்த தேர்தல் மூலம் நாங்கள் உணர்ந்த விடயம் அது தான். ஒவ்வொரு கிராமங்களிலுள்ள தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு மக்கள் எங்களிடம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அவற்றை நாங்கள் செய்து கொடுக்க வேண்டிய கடமை இருக்கின்றது. அது தான் நாங்கள் மக்களிடமிருந்து அந்நியப்படாமல் இருக்க செய்யவேண்டியது.

 

http://www.ilakku.org/the-failure-of-tna/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.