Jump to content

வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர்

sakthi-696x522.jpg

 

மட்டக்களப்பு செங்கலடி நகரில் உள்ள பிரபல வர்த்தகரான ராஜன் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செங்கலடி சக்தி ஸ்டோர்ஸ் முதலாலியான இவர் கடந்த 1990 ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு வருகை தந்து பல சிறிய சில்லறை கடை வர்த்தகர்களை உருவாக்கி உதவி செய்தவரின் தற்கொலை செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகுந்த கடன் காரணமாக தன்னிடம் இருந்த மூன்று கடைகள் மற்றும் வீடு என்பவற்றை விற்பனை செய்த அவர் தான் விற்பனை செய்த வீட்டில் இருந்து இரவு முழுவதும் பொருட்களை ஏற்றியவர் இரவு வீடு செல்லாது இருந்துள்ளார்.

இன்நிலையில் காலை வீட்டின் பின்புறம் வேலைக்கு சென்றவர்கள் கதவை திறந்த போது கடையின் பின்புற அரையிறுதியில் தூக்கில் தொங்கி நிலையில் அவரது சடலத்தை கண்டு ஏறாவூர் பொலீசாருக்கு அறிவித்துள்ளனர்.

வட்டி மாபியாக்களினால் கடனுக்கு மேல் கடன் சுமையில் வீழ்த்தப்பட்ட இவருக்கு சுமார் ஐந்து கோடிக்கு மேல் இருந்த கடனை அடைப்பதற்காக தான் 30 வருடங்களாக சேர்ந்த சொத்து கடைகள் வீடு என்பவற்றை விற்பனை செய்துள்ளார்.

இதன் தாக்கமே அவரை தற்கொலைக்கு தூண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் காணப்படும் வட்டிக்கு பணம் வேண்டுதல் அதனை அடைப்பதற்கு  வங்கியில் சொத்துக்களை வைத்து கடன் பெறுதல் என கடனுக்கு கடன் வாங்கியே பல வர்த்தகர்கள் செங்கலடி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

வட்டி மாபியாக்கள் மிகவும் திட்டமிட்டு வட்டிக்கு பணம் கொடுத்து இவ்வாறு பல வர்த்தகர்களை இல்லாமல் செய்துள்ளனர்.

வட்டிக்கு பணம் வாங்கிய பல வர்த்தகர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பல வர்த்தகர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டனர். எனவே வர்த்தகர்கள் இனியாவது இந்த வட்டி மாபியாக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செங்கலடி சக்தி ஸ்டோர் முதலாளி  மரணம் நடந்து என்ன?

rajan.jpgவங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட, தனது குடியிருந்த வீட்டையும், கடைத்தொகுதியையும் விற்று தனியார் வங்கியொன்றுக்கு பணத்தை செலுத்தியிருக்கிறார்.

75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி (27/08) மரணித்துள்ளார்..

விற்கப்பட்ட கடையை, வாங்கிய முதலாளி ஓடாவி மேசன்மார்களை வைத்து திருத்த வேலைகளை செய்துவருவதால், இன்று காலை திருத்த வேலைகளுக்காக வந்த ஒடாவி ஒருத்தரே ஸ்டோர் அறைக்கு சென்றபோது, .இவர் தூக்கிட்டிருப்பதை அடையாளம்கண்டு, அவரது மனைவிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

பின்னர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, கௌரவ நீதிபதியின் உத்தரவுக்கமைய, பிரதேச மரண விசாரனை அதிகாரி MSM நஸீர், தடயவியல் பொலிசாரின் வருகையோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

http://www.ilakku.org/வட்டி-மாபியாக்களினால்-பற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி (27/08) மரணித்துள்ளார்..

வங்கிகள் என்பது சட்ட நியாயாதிகமும், வலுவும் அளிக்கப்பட்ட பண்பான கொள்ளைக்காரர்கள்.    

ஆனால், வங்கியில் மில்லியன் இல் கடன் வாங்கினால், அது வங்கியின் பிரச்சனை, கடன் வாங்கியவரின் பிரச்னை இல்லை பொறுப்பு கடன் வாங்கியவராயினும்.

வங்கிகள் செய்தது, psychological அழுத்தம். அநேகமாக, சட்ட விரோதமாகவே இருக்கும். 

இவர் உயிர் வாழ்வதே வங்கிகளுக்கு பிடி என்பது இவருக்கு தெரியவில்லை. ஆனால், அதற்கு சட்ட அறிவு தேவை.  

மற்றது, வணிக கடன் வாங்கும் போது, இப்படியனவர்கள் சட்டம் , மற்றும் நிதி  ஆலோசனை  இல்லாமல் எடுப்பதே  இயல்பு. இது இங்கு மேலை நாடுகளிலும் இயல்பாக நடக்கிறது.
 
இப்படி வசதி உள்ளவருக்கே கடன் பிரச்சனை என்றால், இது ஓர் வியாபார சேவை மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

அதாவது, debt counselling என்ற சேவையை ஆரம்பிப்பது.

வியாபார மற்றும் நுகர்வு  கடன் சட்ட அறிவும் மற்றும் இருக்கும் ஏனைய பொது சட்டங்களை கொண்டு எவ்வாறு கடன் சுமையை குறைப்பது, பிற்போடுவது, இருப்பதை இழக்கும்  நிலையலானும் அடிப்படை தேவைகளை (வீடு, மற்றும் தொழில்  போன்றவைகள்), உரிமத்தை கொடுத்துவிட்டு,  அவர் வாழும் வரைக்கும் வைத்திருக்கும்  (வாடகை அடைப்படையில் அல்லது amortization அடிப்படையில்) வகை செய்வது போன்றவைகள்.

இதற்கு, debt counselling,  இன்னும் சட்டங்களும் தேவை, அவற்றை கொண்டு வருவதற்கு lobby மற்றும் pressure groups, சட்ட ஆலோசனையுடன் அமைத்து அழுத்தம் வழங்குதல்.

Link to comment
Share on other sites

7 hours ago, உடையார் said:

வட்டிக்கு பணம் வாங்கிய பல வர்த்தகர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

  1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
  2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.

இது முஸ்லிமாக இருக்க வேண்டும் வட்டி இல்லாமல் கடன் பெறுவதற்கு. அது ஷரியா சட்டப்படி வட்டி வாங்குவது மதத்துக்கு விரோதம் எனும் நம்பிக்கை அடிப்படையில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கற்பகதரு said:
  1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
  2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 

ஐயா கற்பகம், மட்டக்களப்பில் முசுலிம் வங்கியில் கணக்கு திறக்கவே முசுலிம் ஆக இருக்க வேண்டும்...

இந்த வட்டி மாபியாக்களின் பின்னணி யார்??

Link to comment
Share on other sites

5 hours ago, கற்பகதரு said:
  1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
  2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 

 

5 hours ago, Kadancha said:

இது முஸ்லிமாக இருக்க வேண்டும் வட்டி இல்லாமல் கடன் பெறுவதற்கு. அது ஷரியா சட்டப்படி வட்டி வாங்குவது மதத்துக்கு விரோதம் எனும் நம்பிக்கை அடிப்படையில். 

தமிழர் வட்டி வாங்காமல் கடன் கொடுக்க மாட்டார்களா? 

4 hours ago, MEERA said:

ஐயா கற்பகம், மட்டக்களப்பில் முசுலிம் வங்கியில் கணக்கு திறக்கவே முசுலிம் ஆக இருக்க வேண்டும்...

இப்படியான வட்டி  வாங்காத தமிழ் வங்கிகளை ஏன் தமிழர் வைத்திருக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லஹாக்கு குல்லா போடுற கதை தெரியுமோ?

வெளியாலதான் வட்டி இல்லா இஸ்லாமிய வங்கி என்று கதை- உள்ள போனால், மாதாந்த சேவை கட்டணம், லாபத்தில் பங்கு அல்லது இது போன்ற பெயரில் வட்டிக்கு நிகரான பணத்தை கறந்துவிட்டுத்தான் விடுவார்கள்.

வட்டி இல்லாமல் வங்கி நடத்தேலுமே.

Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

அல்லஹாக்கு குல்லா போடுற கதை தெரியுமோ?

வெளியாலதான் வட்டி இல்லா இஸ்லாமிய வங்கி என்று கதை- உள்ள போனால், மாதாந்த சேவை கட்டணம், லாபத்தில் பங்கு அல்லது இது போன்ற பெயரில் வட்டிக்கு நிகரான பணத்தை கறந்துவிட்டுத்தான் விடுவார்கள்.

வட்டி இல்லாமல் வங்கி நடத்தேலுமே.

அதான் 😊😊. இந்த வட்டி இல்லா கதையெல்லாம் யதார்த்தம் மீறியது. வட்டி இல்லாமல் வங்கி நடத்துவதானால் பணம் எனற விடயத்தை பயன் படுத்தாமல் பண்டமாற்று முறைக்கு தான் போக வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கியில் கடன் எடுத்து இவ்வாறு கடனில் மூழ்கினார் என்பதை நம்பமுடியவில்லை. வங்கியில் கடன் கிடைக்காமல் வறுமையில் வாழும் அல்லது அதனால் தற்கொலை செய்த குடும்பங்கள் எத்தனையோ. இவர் அளவுக்கு மீறி பல இடங்களிலும் காலை அகல விரித்து வைத்து அகப்பட்டு இருக்கிறார். அனுதாபப்படுவதை விட மற்றவர்களுக்கு பாடமாக தான் பார்க்கணும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.