Jump to content

கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெரு விழா 2020’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெரு விழா 2020’

August 28, 2020

1-1.png

 

னடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த ‘தமிழர் தெரு விழா’ நிகழ்வு இவ்வாண்டு முற்றுமுழுதாக வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது என கனடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டன்ரன் துரைராஜா அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இவ்வாண்டிற்கான ‘ தமிழர் தெரு விழா 2020’ நிகழ்வானது இணையம் வழியாக கொண்டாடப்படவிருக்கிறது. கனடியத் தமிழர் பேரவையானது உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை பல்வேறு நாட்டுக் கலைஞர்களுடன் இணைத்து புதுமையானதொரு முறையில் ‘தெருவிழா 2020’ கொண்டாட்டத்தை உங்கள் வீட்டிற்குள்ளேயே கொண்டுவருகிறது.

இதற்கமைய ‘ தமிழர் தெரு விழா 2020’ எதிர்வரும் சனிக்கிழமை ஒகஸ்ட் 29ஆம் திகதி காலை 10:30 மணிக்கு இணையத்தில் தொடங்கி வைக்கப்படும். அதன்பின், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர தெருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் பிற்பகல் 2:30 வரை நேரடி ஒளிபரப்பாக இணையத்தில் கொண்டுவரப்படும். அதேபோல இரண்டாம் நாள் நிகழ்வுகளும் ஞாயிற்றுக் கிழமை 30-08-2020 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2:30வரை தொடரும். இரண்டாவது தினத்தன்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை இணையம் வழியாகக் கவர்ந்திழுக்கும்.

 

1-2.png

 

கனடியத் தமிழர் பேரவை தரும் தெரு விழாவின் பெரும் சிறப்பே தமிழின் சிறப்புகளைச் சொல்லும் நிகழ்வுகளை தமிழர்களும், தமிழரல்லாதவர்களும் பிரமித்துப் பாராட்டும் வகையிலிருக்குமாறு மேடைக்குக் கொண்டு வருவதாகும். அவ்வகையில் இவ்வாண்டிற்கான சிறப்புப் பேச்சாளர்களாக இலங்கையிலிருந்து கம்பன் கழகத்தின் ‘கம்பவாரிதி’ ஜெயராஜ் அவர்களும் தமிழகத்திலிருந்து தமிழ்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் வணக்கத்துக்குரிய ஜெகத் காஸ்பர் அடிகளார் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். அத்துடன் இம்முறையும் தமிழ்பண்பாட்டை வெளிக்காட்டும் நடனங்கள் மற்றும் அனைவரையும் ரசிக்க வைக்கும் கலை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மெல்லிசை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைக் கவரவிருக்கின்றன.

 

தெருவிழாவின் முதல்நாளான சனிக்கிழமை ‘மெகா ரியூனேர்ஸு’டைய இன்னிசை நிகழ்ச்சி பிற்பகல் 2:30வரை இசை ரசிகர்களை மெய்மறக்க வைக்கும். இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ‘அக்னி இசைக்குழு’வின் இன்னிசை நிகழ்ச்சி பிற்பகல் 2:30 வரை தொடரும். வழக்கம் போல இம்முறையும் உங்கள் அபிமானத்திற்குரிய தமிழக, ஈழத்து, கனேடிய பாடகர்கள் தெருவிழா மேடையில் இணையவிருக்கிறார்கள்.

 

அதற்கமைய இவ்வாண்டு தமிழகத்திலிருந்து பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிசரண் ஆகியோருடன் ஈழத்துப்பாடகர்கள் ஜெயந்தன் கந்தப்பு, பிரதா கந்தப்பு மற்றும் கனடாவின் பாடகர்களான ‘சுப்பர் சிங்கர்’ புகழ் ஜெசிக்கா ஜூட் மற்றும் சின்மய் ஆகியோர் உங்களை தமது குரல்களால் மயக்க வருகிறார்கள். பிற நிகழ்ச்சிகள் வரிசையில் கனடிய இளங்கலைஞரான சுருதி பாலமுரளியின் இனிய இசை மற்றும் ஆதவன், சந்தியாவின் நகைச்சுவை என பல்வேறு மனங்கவர் நிகழ்ச்சிகள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

 

மேலும் இவ்வாண்டும் தமிழர் தெருவிழாவில் தமிழ் வளர்ச்சிக்கான பங்களிப்பும், தாயக உறவுகளுக்கான ஆதரவும் இருக்கும். இம்முறை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை உருவாக்கும் முயற்சியும், ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகளும் ‘ தமிழர் தெரு விழா2020’ கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்பதால் உங்கள் அனைவரதும் ஆதரவை கனடியத் தமிழர் பேரவை பணிவுடன் நாடி நிற்கிறது.

தமிழர் தெரு விழா 2020யின் புது அனுபவத்திற்கு நீங்கள் tamilfest.ca என்ற இணையத்தளத்தில் பார்த்து மகிழலாம். மேலும் உங்கள் Facebook மற்றும், Youtube ஊடாகவும் நிகழ்ச்சிகளை நேரலையாக கண்டு களிக்க முடியும். நிகழ்ச்சிகளுக்கான இணைப்புக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

 

Facebook : https://www.facebook.com/tamilfestTO/posts/2762400487418606

Youtube : https://youtu.be/su83yB0xl4s

உங்கள் கணணி, கைத்தொலைபேசி அனைத்திலும் தெருவிழா 2020 வந்து உங்களை எதிர்வரும் சனி ஞாயிறு தினங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவைக்கப்போகிறது..

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 29 திகதியான சனிக்கிழமையும், 30ந் திகதியான ஞாயிற்றுக்கிழமையும் ஒரு புது அனுபவத்தின் ஊடாக தமிழையும் தமிழ்க் கலை கலாச்சாரத்தையும் உலகம்வாழ் தமிழர்களோடு இணையவழி இணைந்து நின்று கொண்டாட ‘தமிழர் தெருவிழா 2020’க்கு கனடியத் தமிழர் பேரவை உங்களை அன்புடன் அழைக்கிறது.”

 

http://thinakkural.lk/article/64957

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச ஆள்  கிடைக்கவில்லையோ...கம்பவாரிதி....இது எதற்கு..காசுப்பார்....இதுதான்...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.