Jump to content

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

 

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


உங்களிடம் உள்ளது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்,இந்த நாட்டில் சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம் அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்,மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

https://www.madawalaenews.com/2020/08/blog-post_516.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் அதுக்கான வயதும் இல்லை, காலமும் இல்லை.

பிரபாகரன் துவக்கு தூக்கினார். விக்கினேஸ்வரன் வார்த்தைகளை தூக்கி உள்ளார்.

இவர்களுக்கு வரப்போகும் சிக்கல், விக்கியினை வெளியே அனுப்பினால் தெரியும். 

என்ன விஷயம் என்றால், விக்கி, கஜன் அடுத்த தேர்தலுக்கான அடித்தளம் போட்டு விடுவார்கள். சுமந்திரனுக்கு கலக்கம் வரும்.... என்னப்பா இந்தாள் இந்த போடு போடுது... நாமளும் வாயை திறக்க வேண்டும் என்று யோசிப்பார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றம் சிங்களவருக்கானது என்பதை மிகத்தெளிவாக ஐக்கிய மக்கள் ச(த்)க்தி  சொல்லுது . இதிலை என்னவென்றால் கூடிக்குலாவிக் கும்மாளமடிச்ச குழுக்களையோ குழுக்களின் குரலாளர்களையோ காணேல்லை. வயசான நேரத்திலை தனிய நின்று  கருத்தாடுறார் விக்கி ஐயா.  மொட்டும் ஐக்கிய மக்கள் ச(த்)க்தியும் ஏதோ ஒரு புரிந்துணர்வோடு நாடகம் நடத்துகிறார்கள். அதாவது மொட்டுத் தரப்பினுடைய   பாதுகாப்பு வளையமாக தமிழரை எதிர்த்தாடும் தரப்பாக உள்ளனர்.  இந்த இடத்திலே இவர்களை ஐநாவரை தடுத்தாடியவை வந்து பதில் குடுத்தாநல்லது.  அது சிங்கள நாடாளுமன்ற வரைவேட்டிலாவது பதிவாகும்.  

ஒருவேளை விக்கி ஐயாவை கலைக்கட்டுமென்று நரிகள் படுத்திருக்கலாம்.  ஆனால் நரிகளை யானை காப்பற்றலாம் . மானுக்கெறிந்த  தடி காகத்தால் காப்பற்றப்பட்ட மானுக்குப்படவில்லை. மானை மாட்டிவிட்டோமென்று மகிழ்வில் மானிறைச்சியைச் சுவைக்கக் காந்திருந்த நரிக்கு நடந்ததே  நினைவுக்கு வந்து தொலைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் அதீத இனவாதி என்று மக்களுக்குக் காட்டுவதில் போட்டி ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

வெள்ளிக் கிழமை ....ம்ம்

சஜித் இல்ல சரத்...

ஆனைக்கும் அடி சறுக்குமுங்கோ ... 😂

இந்த நேரத்திலாவது எமதாட்கள் தமது ஒற்றுமை(யீனத்தை)யை வெளிக்காட்டினால்தானுண்டு. செய்வார்களா அல்லது வளமை போலவா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Prison Uprising: The Subaltern Wakeup Call - Sri Lanka Guardian   sarath-fonseka-in-jail-colombo-telegraph - Today Jaffna News - Jaffna  Breaking News 24x7 

சிறையில்... இப்படி,  இருந்த... சரத்பொன்சேகாவா.... இவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

வெள்ளிக் கிழமை ....ம்ம்

சஜித் இல்ல சரத்...

ஆனைக்கும் அடி சறுக்குமுங்கோ ... 😂

இந்த நேரத்திலாவது எமதாட்கள் தமது ஒற்றுமை(யீனத்தை)யை வெளிக்காட்டினால்தானுண்டு. செய்வார்களா அல்லது வளமை போலவா 🤔

தம்பி ராசா, 

வெள்ளியோ வியாழனோ நான் எப்பவும் பிளேண்டி, அதுவும் சீனி போடாமல்🤣

சரத் மட்டுமில்ல, நேற்று மனுஷ்யவும் கத்தினவரல்லே.

எல்லாரும் டெலிபோன் கட்சிதானே? டெலிபோனின் தலைவர் சஜித்தானே?

உது கட்சி மட்டத்தில் பேசி எடுத்த முடிவு. சஜித் பின்னால நிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

இவர் செம்மணிப் படுகொலைகளில் இருந்து.. முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர் மட்டுமன்றி..தமிழ் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஆவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

வேற வழி இல்லாமல்தான்.

இதெல்லாம் ஒரு அரசியல் வியாபார யுக்திதான்.

2015 இல பாதி சிங்கள வாக்கையும், முழு சிறுபான்மை வாக்கையும், நல்லாட்ட்சி கோசத்தையும் சேத்து பெளத்த-சிங்கள வாக்கு வங்கிய மேவலாம் எண்டு ரணில் காட்டினார்.

அதனால அதே டிரிக்கை நேற்றுவரை டிரை பண்ணினார் சஜித்.

ஈஸ்டர் அட்டாக், சிறிசேனா கோமாளிதனம், முஸ்லிம் எதிர்ப்பை கையில் எடுத்து மறுபடியும் பேரினவாத வாக்கு வங்கிதான் வெல்லும் வழி என்று காட்டிவிட்டது மொட்டு.

யு என்பி பெளத்த சிங்கள விரோத கட்சி என்று பதிவாகிவிட்டதால் - சஜித் இப்ப free யா தந்தாலும் வேண்டாம் என்றார்.

சஜித் இதுவரை செய்த அரசியல் வென்று அவர் இப்ப ஜனாதிபதி என்றால் - அவர் இப்பவும் சிறுபான்மை இன நண்பன் வேடம்தான். இந்த கூச்சலை கமன்பில போட்டிருப்பார்.

சஜித் இப்ப வெல்ல வேண்டும் என்று இனவாதத்தை கையில் எடுக்கிறார்.

முந்திய சமசமாஜ கட்சிக்கு நடந்த அதே கதைதான்.

உது- வோட் போட்ட தமிழ் சனத்துக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தம்பி ராசா, 

வெள்ளியோ வியாழனோ நான் எப்பவும் பிளேண்டி, அதுவும் சீனி போடாமல்🤣

சரத் மட்டுமில்ல, நேற்று மனுஷ்யவும் கத்தினவரல்லே.

எல்லாரும் டெலிபோன் கட்சிதானே? டெலிபோனின் தலைவர் சஜித்தானே?

உது கட்சி மட்டத்தில் பேசி எடுத்த முடிவு. சஜித் பின்னால நிக்கிறார்.

விழுந்தாலும் மீசயில  மண் ஒட்டயில்ல 😜😜 சாமியோவ்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

இவர் செம்மணிப் படுகொலைகளில் இருந்து.. முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர் மட்டுமன்றி..தமிழ் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஆவார். 

அது தான் அமெரிக்கா பெரியம்மா 
பாட்டாவை திருகோணமலையில் போய் சந்தித்தவ.
அடுத்த தீபாவளிக்கிடையில விளையாட்டிருக்கு.
வேணமெண்டா இருந்து பாருங்கோ.

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

ஏன் பொன்சேகாவையும் ஆதரித்தவை தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் பொன்சேகாவையும் ஆதரித்தவை தானே?

மக்களை வாக்குக்காக செம்மறிக்கூட்டங்களாக வழிநடத்தி காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியவர்களே இதற்கு பதில் கூற கடமைப் பட்டவர்கள்.

 

4 hours ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு கலக்கம் வரும்....

 விறைச்ச மண்டைக்கு கலக்கமாவது, அடுத்த தேர்தலில் சிங்களக் கட்சியில் பாரிய பதவி ஒன்றை நோக்கி நிதானமாக காயை நகர்த்துவார். அதாவது இருக்கிற கொட்டிலும் பத்தி எரிந்து சாம்பலாக்கிப்போட்டு வெற்றியோடு எங்கிருந்து வந்தாரோ, யாரால் அனுப்பப்பட்டாரோ அங்கே கலந்துவிடுவார். ஸ்ரீதரன் சாமரம் வீசுவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அது தான் அமெரிக்கா பெரியம்மா 
பாட்டாவை திருகோணமலையில் போய் சந்தித்தவ.
அடுத்த தீபாவளிக்கிடையில விளையாட்டிருக்கு.
வேணமெண்டா இருந்து பாருங்கோ.

உங்கண்ட ஊர்ல வாற ஆளை பொறுத்தது.

ஜோ வந்தால் எப்படி இருக்கும்?

நம்மூரிலே போரிஸ் சப்போர்ட் தான்... ஆனால் பாவம், மனிசன் வந்ததில் இருந்து அந்தாளுக்கு ஒரே பிரச்னை தான். 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

யாரப்பா இந்த சர்வதேசம்? இவர் ஏதாவது செய்யக்கூடிய ஆளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

யாரப்பா இந்த சர்வதேசம்? இவர் ஏதாவது செய்யக்கூடிய ஆளோ?

large.9B6F0314-9C05-40AD-8C63-D8D377C657D6.jpeg.65348a099d220e1edba69b5352864b07.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் போர்வெற்றி, மறுபக்கம் மழுப்பல். தமிழருக்கு  பிரச்சனை இல்லை, தமிழர் வந்தேறு குடிகள், நாம் கொடுப்பதை வாங்கிக்கொண்டு இருக்கவேண்டும். உரிமை பற்றி எல்லாம் கதைக்க கூடாது என்கிற சட்டம்.  களி திண்டும் திமிர் அடங்கேல்லை இந்தாளுக்கு. தட்டிப்பறித்ததை சொந்தமாக்கிக் கொள்வதில் எப்படி ஒத்துழைக்கிறானுகள். நாமே சிங்களம் படித்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும்போது, அவனுக்கும் அனுகூலந்தானே. சிங்களக் கல்விமூலம் பிரச்சனை தீர்ந்ததாக மூடப் பார்க்கிறான் அவன். தமிழரின் சுதந்திரத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் என்கிற உண்மை நமக்கு புரிய மாட்டேன்  என்கிறது. நாங்கள் நம் பாட்டில் எதுவும் கேட்க்காமல் நமது தொழில், கல்வி, முன்னேற்றம் என்றுதானே இருந்தோம். வேற்றுமையையும், பிரிவினையையும், கலவரங்களையும் யார், ஏன் ஏற்படுத்தினார்கள்? இனியும் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று மூடி மறைப்பதில் இருந்தே இந்தப்பிரச்சனை தீராது, தீர்க்கப்படாது நாம் எல்லாவற்றையும் விட்டு அடிமைகளாக வாழ அவர்களால் நிர்பந்திங்கப்படுகிறோம் , நம்மை நாமே விட்டுக்கொடுக்கிறோம் என்பது புரியாமலேயே நம்புகிறோம் அவர்கள் சொல்வதை எல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான வார்த்தைகள் வருவது யாரிடமிருந்து? – சரத்தை பதிலாள் தாக்கிய கஜேந்திரகுமார்

Kajenthirakumar-Ponnambalam-Sarath-Fonseka.jpg?189db0&189db0

 

பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம். இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே கடுமையான வார்த்தைகள் வெளி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்பிக்கு பதிலளித்துள்ளார்.

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (28) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும்,

“சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன். அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன்.

ஏனெனில், இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது. ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம். ஆனால், அவர் எனக்கு இந்த அறிவுரையினை வழங்கியமையை மிகமுக்கியமாகப் பார்க்கிறேன்.

வடக்கு கிழக்கு பகுதிகள் இலங்கையில் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள். 32 வருடங்களாக நாம் போரை எதிர்கொண்டோம்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது. அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.

32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பிறகு அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 32 வருடங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்களை, இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் சம அளவாக போட்டியிட எதிர்பார்ப்பது சாத்தியமற்றது” – என்றார்.

https://newuthayan.com/கடுமையான-வார்த்தைகள்-வரு/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் தமிழர்களுடன் இனவாத விளையாட்டு விளையாடி தங்களுடைய பல தலைவர்களை  இழக்க நேரிட்டதையும் ,அந்த நாட்டை பிராந்திய வல்லரசுகளுக்கு அடகு வைக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிய தமிழ் தளபதியை மறந்து விட்டர்....அந்த தளபதியை உலகம் பூராவும் பிச்சைவாங்கி அழித்தமையை மறந்துவிட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்

கடந்த காலத்தில் தமிழரை குறைத்து மதிப்பிட்ட சிங்களவர்களும் ஆயிரக்கணக்கில்  தமிழர்களால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பதையும் ஐயா நினைவில் கொள்ளணும்.

 

ஆனால் ஒன்று...

மஹிந்தவுக்கு மைத்திரிய பிடிக்காது..

மைத்திரிய கோத்தாவுக்கு பிடிக்காது..

ஆளும் கட்சிய சஜித்துக்கு பிடிக்காது

இவர்கள் பலரை விமல் வீர சிங்கவுக்கு பிடிக்காது

தன்னை சிறையில் தள்ளியதால் பொன்சேகாவுக்கு மஹிந்த குரூப்பை பிடிக்காது,

அந்த குரூப்பை சந்திரிக்காவுக்கும் பிடிக்காது,

ஆனால் இவர்கள் எவருக்குமே தமிழரை பிடிக்காது,

தமிழர் என்று வந்துவிட்டால் இவர்கள் அனைவருக்குமே ஒருவரை ஒருவர் ரொம்ப பிடித்து ஒற்றுமை ஆகி விடுவார்கள்.

 

மறு பக்கம் ...

கருணா டக்ளஸ் புளொட் ரெலோ பிள்ளையான் தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஆனந்த சங்கரி...

இவர்களுக்கெல்லாம் புலிகளையும்  பிடிக்காது..

இவர்களுக்கு இடையே உள்ள போட்டி  கட்சிகளையும் பிடிக்காது..

ஆனால் ஒட்டு மொத்த தமிழரையும் வெறுக்கும் சிங்கள தலைமைகளை இவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

சிங்களவனை நேசிக்கும் தற்போதைய  தமிழர்கள் தலைமைகளிடமிருந்தும்,

சிங்களவனுடன் மறைமுக நேரடி  தொடர்புகளை இறுதி யுத்தம் முடிந்து ஓரிரு மாதங்களிலே ஏற்படுத்திவிட்ட புலம்பெயர் தேசத்து தேசியவாதிகளையும் நம்பி 

தமிழ் தேசியம் வளர்க்கலாம் என்று எனக்கொருவர் இங்கே  கிளாஸ் எடுத்தாரு.

இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்,

சிங்களவனுக்கு தற்கால தமிழர் தலைமைகளால்  காட்டி கொடுக்கப்பட்டு தலையிலயே சுட்டு கொல்லபடுவார்கள்.

சிங்களவர்களுக்கும் எமக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ,

அவர்கள்  தமக்கிடையே எத்தனை தகராறுகள் வந்தாலும் , தமது தாயகம் என்று வந்துவிட்டால்  முதலில் பொது எதிரி யார் என்றுதான் பார்க்கிறார்கள்.

நாம்? நாம் எப்படி இருக்கிறோம் என்று நமக்கே தெரியாதா என்ன?

 

 

Link to comment
Share on other sites

'இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்'

மற்றவனின் அதுவும் இவ்வளவும் அனுபவித்தவன் அவமானப்படுத்துவான் என்று நாங்கள் மாற வேண்டாமே . எனக்கும் உங்களுக்கும்(?) வந்த பாதைகள் மறக்கலாமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Hana said:

'இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்'

மற்றவனின் அதுவும் இவ்வளவும் அனுபவித்தவன் அவமானப்படுத்துவான் என்று நாங்கள் மாற வேண்டாமே . எனக்கும் உங்களுக்கும்(?) வந்த பாதைகள் மறக்கலாமோ

நாம் மறக்கவில்லை, பலர் மறந்துவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து எள்ளி நகையாடுகின்றார்கள், அவர்களை என்ன செய்ய,

இந்த கூத்தமைப்பு முதுகெலும்புள்ளதா இருந்திருந்தால் 2009 க்கு பின், இந்த நிலை வந்திருக்காது, ஒரு மாபெரும் பேரம் பேசும் சக்தியாக விளங்கியிருக்கலாம். 

தங்களின் நலனை பேணியதை தவிர என்ன செய்தார்கள்,

ஒன்று மட்டும் செய்தார்கள் - எமது தேசியத்தை சிதைத்தார்கள்

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

நாம் மறக்கவில்லை, பலர் மறந்துவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து எள்ளி நகையாடுகின்றார்கள், அவர்களை என்ன செய்ய,

இந்த கூத்தமைப்பு முதுகெலும்புள்ளதா இருந்திருந்தால் 2009 க்கு பின், இந்த நிலை வந்திருக்காது, ஒரு மாபெரும் பேரம் பேசும் சக்தியாக விளங்கியிருக்கலாம். 

தங்களின் நலனை பேணியதை தவிர என்ன செய்தார்கள்,

ஒன்று மட்டும் செய்தார்கள் - எமது தேசியத்தை சிதைத்தார்கள்

அவர்கள் எள்ளி  நகையாடட்டும். கூட்டமைப்பை விடுங்கள்.அதனப் பற்றி சிந்தித்து எங்களின் நேரத்தை வீணாக்க முடியாது. யாரும் ஆக்கபூர்வமாக அதற்கு புரிய வைப்பார்கள் என்றால் வேறு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம். எங்கள் மக்கள் முன்னால்  உள்ள தேவைகள் நிறைவேறும்  போது அவர்களுக்கு தேசியத்தின் தேவை புரியும். இப்போதும் புரியும் பலருக்கு ஆனால் வேறு தேவைகள் முன் நிற்கும். பதவி கிடைத்தவருக்கும் தங்களின் எல்லை எதுவரை என்று விளங்கும். செய்வதுகளை  பரப்புரை இன்றி செயலில் காட்டிட வேண்டும். எங்களின்  போரினால் பாதிக்கப்பட்ட /படாத இளைய சமுதாயம் தன்னம்பிக்கையுடன் வளர பாதை (வழிகாட்டல்) அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்வைஸ் எல்லாம் இல்லை,

ஒரு introspection.

இதே யாழ் களத்தில் யாழில் மதப்போதகர் விரட்டல், மன்னார் வளைவு உடைப்பு என்ற திரிகளை மீண்டும் ஒருக்கால் வாசித்து பாருங்கோ.

இங்கே இரெண்டு அணியாய் பிரிந்து நிற்பவர்கள், அவற்றில் வேறு இரு அணிகளாய் பிரிந்து நின்று சக தகமிழனையே திட்டி தீர்த்தது விளங்கும்.

இதுதான் நாங்கள். இப்படி பிரச்ச்னை ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்தால் அது எம் தலைமைகளில் வெளிப்படுவது இயற்கையே.

30 வருடம் ஒரு தனிமனிதன் இந்த அடைசல்களை எல்லாம் மேவி, பூசி மெழுகி வைத்திருந்தான் - அவ்வளவுதான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.