Jump to content

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

 

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


உங்களிடம் உள்ளது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்,இந்த நாட்டில் சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம் அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்,மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

https://www.madawalaenews.com/2020/08/blog-post_516.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் அதுக்கான வயதும் இல்லை, காலமும் இல்லை.

பிரபாகரன் துவக்கு தூக்கினார். விக்கினேஸ்வரன் வார்த்தைகளை தூக்கி உள்ளார்.

இவர்களுக்கு வரப்போகும் சிக்கல், விக்கியினை வெளியே அனுப்பினால் தெரியும். 

என்ன விஷயம் என்றால், விக்கி, கஜன் அடுத்த தேர்தலுக்கான அடித்தளம் போட்டு விடுவார்கள். சுமந்திரனுக்கு கலக்கம் வரும்.... என்னப்பா இந்தாள் இந்த போடு போடுது... நாமளும் வாயை திறக்க வேண்டும் என்று யோசிப்பார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றம் சிங்களவருக்கானது என்பதை மிகத்தெளிவாக ஐக்கிய மக்கள் ச(த்)க்தி  சொல்லுது . இதிலை என்னவென்றால் கூடிக்குலாவிக் கும்மாளமடிச்ச குழுக்களையோ குழுக்களின் குரலாளர்களையோ காணேல்லை. வயசான நேரத்திலை தனிய நின்று  கருத்தாடுறார் விக்கி ஐயா.  மொட்டும் ஐக்கிய மக்கள் ச(த்)க்தியும் ஏதோ ஒரு புரிந்துணர்வோடு நாடகம் நடத்துகிறார்கள். அதாவது மொட்டுத் தரப்பினுடைய   பாதுகாப்பு வளையமாக தமிழரை எதிர்த்தாடும் தரப்பாக உள்ளனர்.  இந்த இடத்திலே இவர்களை ஐநாவரை தடுத்தாடியவை வந்து பதில் குடுத்தாநல்லது.  அது சிங்கள நாடாளுமன்ற வரைவேட்டிலாவது பதிவாகும்.  

ஒருவேளை விக்கி ஐயாவை கலைக்கட்டுமென்று நரிகள் படுத்திருக்கலாம்.  ஆனால் நரிகளை யானை காப்பற்றலாம் . மானுக்கெறிந்த  தடி காகத்தால் காப்பற்றப்பட்ட மானுக்குப்படவில்லை. மானை மாட்டிவிட்டோமென்று மகிழ்வில் மானிறைச்சியைச் சுவைக்கக் காந்திருந்த நரிக்கு நடந்ததே  நினைவுக்கு வந்து தொலைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் அதீத இனவாதி என்று மக்களுக்குக் காட்டுவதில் போட்டி ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

வெள்ளிக் கிழமை ....ம்ம்

சஜித் இல்ல சரத்...

ஆனைக்கும் அடி சறுக்குமுங்கோ ... 😂

இந்த நேரத்திலாவது எமதாட்கள் தமது ஒற்றுமை(யீனத்தை)யை வெளிக்காட்டினால்தானுண்டு. செய்வார்களா அல்லது வளமை போலவா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Prison Uprising: The Subaltern Wakeup Call - Sri Lanka Guardian   sarath-fonseka-in-jail-colombo-telegraph - Today Jaffna News - Jaffna  Breaking News 24x7 

சிறையில்... இப்படி,  இருந்த... சரத்பொன்சேகாவா.... இவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

வெள்ளிக் கிழமை ....ம்ம்

சஜித் இல்ல சரத்...

ஆனைக்கும் அடி சறுக்குமுங்கோ ... 😂

இந்த நேரத்திலாவது எமதாட்கள் தமது ஒற்றுமை(யீனத்தை)யை வெளிக்காட்டினால்தானுண்டு. செய்வார்களா அல்லது வளமை போலவா 🤔

தம்பி ராசா, 

வெள்ளியோ வியாழனோ நான் எப்பவும் பிளேண்டி, அதுவும் சீனி போடாமல்🤣

சரத் மட்டுமில்ல, நேற்று மனுஷ்யவும் கத்தினவரல்லே.

எல்லாரும் டெலிபோன் கட்சிதானே? டெலிபோனின் தலைவர் சஜித்தானே?

உது கட்சி மட்டத்தில் பேசி எடுத்த முடிவு. சஜித் பின்னால நிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

இவர் செம்மணிப் படுகொலைகளில் இருந்து.. முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர் மட்டுமன்றி..தமிழ் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஆவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

வேற வழி இல்லாமல்தான்.

இதெல்லாம் ஒரு அரசியல் வியாபார யுக்திதான்.

2015 இல பாதி சிங்கள வாக்கையும், முழு சிறுபான்மை வாக்கையும், நல்லாட்ட்சி கோசத்தையும் சேத்து பெளத்த-சிங்கள வாக்கு வங்கிய மேவலாம் எண்டு ரணில் காட்டினார்.

அதனால அதே டிரிக்கை நேற்றுவரை டிரை பண்ணினார் சஜித்.

ஈஸ்டர் அட்டாக், சிறிசேனா கோமாளிதனம், முஸ்லிம் எதிர்ப்பை கையில் எடுத்து மறுபடியும் பேரினவாத வாக்கு வங்கிதான் வெல்லும் வழி என்று காட்டிவிட்டது மொட்டு.

யு என்பி பெளத்த சிங்கள விரோத கட்சி என்று பதிவாகிவிட்டதால் - சஜித் இப்ப free யா தந்தாலும் வேண்டாம் என்றார்.

சஜித் இதுவரை செய்த அரசியல் வென்று அவர் இப்ப ஜனாதிபதி என்றால் - அவர் இப்பவும் சிறுபான்மை இன நண்பன் வேடம்தான். இந்த கூச்சலை கமன்பில போட்டிருப்பார்.

சஜித் இப்ப வெல்ல வேண்டும் என்று இனவாதத்தை கையில் எடுக்கிறார்.

முந்திய சமசமாஜ கட்சிக்கு நடந்த அதே கதைதான்.

உது- வோட் போட்ட தமிழ் சனத்துக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தம்பி ராசா, 

வெள்ளியோ வியாழனோ நான் எப்பவும் பிளேண்டி, அதுவும் சீனி போடாமல்🤣

சரத் மட்டுமில்ல, நேற்று மனுஷ்யவும் கத்தினவரல்லே.

எல்லாரும் டெலிபோன் கட்சிதானே? டெலிபோனின் தலைவர் சஜித்தானே?

உது கட்சி மட்டத்தில் பேசி எடுத்த முடிவு. சஜித் பின்னால நிக்கிறார்.

விழுந்தாலும் மீசயில  மண் ஒட்டயில்ல 😜😜 சாமியோவ்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

இவர் செம்மணிப் படுகொலைகளில் இருந்து.. முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர் மட்டுமன்றி..தமிழ் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஆவார். 

அது தான் அமெரிக்கா பெரியம்மா 
பாட்டாவை திருகோணமலையில் போய் சந்தித்தவ.
அடுத்த தீபாவளிக்கிடையில விளையாட்டிருக்கு.
வேணமெண்டா இருந்து பாருங்கோ.

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

ஏன் பொன்சேகாவையும் ஆதரித்தவை தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் பொன்சேகாவையும் ஆதரித்தவை தானே?

மக்களை வாக்குக்காக செம்மறிக்கூட்டங்களாக வழிநடத்தி காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியவர்களே இதற்கு பதில் கூற கடமைப் பட்டவர்கள்.

 

4 hours ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு கலக்கம் வரும்....

 விறைச்ச மண்டைக்கு கலக்கமாவது, அடுத்த தேர்தலில் சிங்களக் கட்சியில் பாரிய பதவி ஒன்றை நோக்கி நிதானமாக காயை நகர்த்துவார். அதாவது இருக்கிற கொட்டிலும் பத்தி எரிந்து சாம்பலாக்கிப்போட்டு வெற்றியோடு எங்கிருந்து வந்தாரோ, யாரால் அனுப்பப்பட்டாரோ அங்கே கலந்துவிடுவார். ஸ்ரீதரன் சாமரம் வீசுவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அது தான் அமெரிக்கா பெரியம்மா 
பாட்டாவை திருகோணமலையில் போய் சந்தித்தவ.
அடுத்த தீபாவளிக்கிடையில விளையாட்டிருக்கு.
வேணமெண்டா இருந்து பாருங்கோ.

உங்கண்ட ஊர்ல வாற ஆளை பொறுத்தது.

ஜோ வந்தால் எப்படி இருக்கும்?

நம்மூரிலே போரிஸ் சப்போர்ட் தான்... ஆனால் பாவம், மனிசன் வந்ததில் இருந்து அந்தாளுக்கு ஒரே பிரச்னை தான். 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

யாரப்பா இந்த சர்வதேசம்? இவர் ஏதாவது செய்யக்கூடிய ஆளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

யாரப்பா இந்த சர்வதேசம்? இவர் ஏதாவது செய்யக்கூடிய ஆளோ?

large.9B6F0314-9C05-40AD-8C63-D8D377C657D6.jpeg.65348a099d220e1edba69b5352864b07.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் போர்வெற்றி, மறுபக்கம் மழுப்பல். தமிழருக்கு  பிரச்சனை இல்லை, தமிழர் வந்தேறு குடிகள், நாம் கொடுப்பதை வாங்கிக்கொண்டு இருக்கவேண்டும். உரிமை பற்றி எல்லாம் கதைக்க கூடாது என்கிற சட்டம்.  களி திண்டும் திமிர் அடங்கேல்லை இந்தாளுக்கு. தட்டிப்பறித்ததை சொந்தமாக்கிக் கொள்வதில் எப்படி ஒத்துழைக்கிறானுகள். நாமே சிங்களம் படித்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும்போது, அவனுக்கும் அனுகூலந்தானே. சிங்களக் கல்விமூலம் பிரச்சனை தீர்ந்ததாக மூடப் பார்க்கிறான் அவன். தமிழரின் சுதந்திரத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் என்கிற உண்மை நமக்கு புரிய மாட்டேன்  என்கிறது. நாங்கள் நம் பாட்டில் எதுவும் கேட்க்காமல் நமது தொழில், கல்வி, முன்னேற்றம் என்றுதானே இருந்தோம். வேற்றுமையையும், பிரிவினையையும், கலவரங்களையும் யார், ஏன் ஏற்படுத்தினார்கள்? இனியும் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று மூடி மறைப்பதில் இருந்தே இந்தப்பிரச்சனை தீராது, தீர்க்கப்படாது நாம் எல்லாவற்றையும் விட்டு அடிமைகளாக வாழ அவர்களால் நிர்பந்திங்கப்படுகிறோம் , நம்மை நாமே விட்டுக்கொடுக்கிறோம் என்பது புரியாமலேயே நம்புகிறோம் அவர்கள் சொல்வதை எல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான வார்த்தைகள் வருவது யாரிடமிருந்து? – சரத்தை பதிலாள் தாக்கிய கஜேந்திரகுமார்

Kajenthirakumar-Ponnambalam-Sarath-Fonseka.jpg?189db0&189db0

 

பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம். இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே கடுமையான வார்த்தைகள் வெளி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்பிக்கு பதிலளித்துள்ளார்.

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (28) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும்,

“சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன். அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன்.

ஏனெனில், இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது. ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம். ஆனால், அவர் எனக்கு இந்த அறிவுரையினை வழங்கியமையை மிகமுக்கியமாகப் பார்க்கிறேன்.

வடக்கு கிழக்கு பகுதிகள் இலங்கையில் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள். 32 வருடங்களாக நாம் போரை எதிர்கொண்டோம்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது. அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.

32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பிறகு அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 32 வருடங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்களை, இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் சம அளவாக போட்டியிட எதிர்பார்ப்பது சாத்தியமற்றது” – என்றார்.

https://newuthayan.com/கடுமையான-வார்த்தைகள்-வரு/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் தமிழர்களுடன் இனவாத விளையாட்டு விளையாடி தங்களுடைய பல தலைவர்களை  இழக்க நேரிட்டதையும் ,அந்த நாட்டை பிராந்திய வல்லரசுகளுக்கு அடகு வைக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிய தமிழ் தளபதியை மறந்து விட்டர்....அந்த தளபதியை உலகம் பூராவும் பிச்சைவாங்கி அழித்தமையை மறந்துவிட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்

கடந்த காலத்தில் தமிழரை குறைத்து மதிப்பிட்ட சிங்களவர்களும் ஆயிரக்கணக்கில்  தமிழர்களால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பதையும் ஐயா நினைவில் கொள்ளணும்.

 

ஆனால் ஒன்று...

மஹிந்தவுக்கு மைத்திரிய பிடிக்காது..

மைத்திரிய கோத்தாவுக்கு பிடிக்காது..

ஆளும் கட்சிய சஜித்துக்கு பிடிக்காது

இவர்கள் பலரை விமல் வீர சிங்கவுக்கு பிடிக்காது

தன்னை சிறையில் தள்ளியதால் பொன்சேகாவுக்கு மஹிந்த குரூப்பை பிடிக்காது,

அந்த குரூப்பை சந்திரிக்காவுக்கும் பிடிக்காது,

ஆனால் இவர்கள் எவருக்குமே தமிழரை பிடிக்காது,

தமிழர் என்று வந்துவிட்டால் இவர்கள் அனைவருக்குமே ஒருவரை ஒருவர் ரொம்ப பிடித்து ஒற்றுமை ஆகி விடுவார்கள்.

 

மறு பக்கம் ...

கருணா டக்ளஸ் புளொட் ரெலோ பிள்ளையான் தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஆனந்த சங்கரி...

இவர்களுக்கெல்லாம் புலிகளையும்  பிடிக்காது..

இவர்களுக்கு இடையே உள்ள போட்டி  கட்சிகளையும் பிடிக்காது..

ஆனால் ஒட்டு மொத்த தமிழரையும் வெறுக்கும் சிங்கள தலைமைகளை இவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

சிங்களவனை நேசிக்கும் தற்போதைய  தமிழர்கள் தலைமைகளிடமிருந்தும்,

சிங்களவனுடன் மறைமுக நேரடி  தொடர்புகளை இறுதி யுத்தம் முடிந்து ஓரிரு மாதங்களிலே ஏற்படுத்திவிட்ட புலம்பெயர் தேசத்து தேசியவாதிகளையும் நம்பி 

தமிழ் தேசியம் வளர்க்கலாம் என்று எனக்கொருவர் இங்கே  கிளாஸ் எடுத்தாரு.

இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்,

சிங்களவனுக்கு தற்கால தமிழர் தலைமைகளால்  காட்டி கொடுக்கப்பட்டு தலையிலயே சுட்டு கொல்லபடுவார்கள்.

சிங்களவர்களுக்கும் எமக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ,

அவர்கள்  தமக்கிடையே எத்தனை தகராறுகள் வந்தாலும் , தமது தாயகம் என்று வந்துவிட்டால்  முதலில் பொது எதிரி யார் என்றுதான் பார்க்கிறார்கள்.

நாம்? நாம் எப்படி இருக்கிறோம் என்று நமக்கே தெரியாதா என்ன?

 

 

Link to comment
Share on other sites

'இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்'

மற்றவனின் அதுவும் இவ்வளவும் அனுபவித்தவன் அவமானப்படுத்துவான் என்று நாங்கள் மாற வேண்டாமே . எனக்கும் உங்களுக்கும்(?) வந்த பாதைகள் மறக்கலாமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Hana said:

'இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்'

மற்றவனின் அதுவும் இவ்வளவும் அனுபவித்தவன் அவமானப்படுத்துவான் என்று நாங்கள் மாற வேண்டாமே . எனக்கும் உங்களுக்கும்(?) வந்த பாதைகள் மறக்கலாமோ

நாம் மறக்கவில்லை, பலர் மறந்துவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து எள்ளி நகையாடுகின்றார்கள், அவர்களை என்ன செய்ய,

இந்த கூத்தமைப்பு முதுகெலும்புள்ளதா இருந்திருந்தால் 2009 க்கு பின், இந்த நிலை வந்திருக்காது, ஒரு மாபெரும் பேரம் பேசும் சக்தியாக விளங்கியிருக்கலாம். 

தங்களின் நலனை பேணியதை தவிர என்ன செய்தார்கள்,

ஒன்று மட்டும் செய்தார்கள் - எமது தேசியத்தை சிதைத்தார்கள்

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

நாம் மறக்கவில்லை, பலர் மறந்துவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து எள்ளி நகையாடுகின்றார்கள், அவர்களை என்ன செய்ய,

இந்த கூத்தமைப்பு முதுகெலும்புள்ளதா இருந்திருந்தால் 2009 க்கு பின், இந்த நிலை வந்திருக்காது, ஒரு மாபெரும் பேரம் பேசும் சக்தியாக விளங்கியிருக்கலாம். 

தங்களின் நலனை பேணியதை தவிர என்ன செய்தார்கள்,

ஒன்று மட்டும் செய்தார்கள் - எமது தேசியத்தை சிதைத்தார்கள்

அவர்கள் எள்ளி  நகையாடட்டும். கூட்டமைப்பை விடுங்கள்.அதனப் பற்றி சிந்தித்து எங்களின் நேரத்தை வீணாக்க முடியாது. யாரும் ஆக்கபூர்வமாக அதற்கு புரிய வைப்பார்கள் என்றால் வேறு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம். எங்கள் மக்கள் முன்னால்  உள்ள தேவைகள் நிறைவேறும்  போது அவர்களுக்கு தேசியத்தின் தேவை புரியும். இப்போதும் புரியும் பலருக்கு ஆனால் வேறு தேவைகள் முன் நிற்கும். பதவி கிடைத்தவருக்கும் தங்களின் எல்லை எதுவரை என்று விளங்கும். செய்வதுகளை  பரப்புரை இன்றி செயலில் காட்டிட வேண்டும். எங்களின்  போரினால் பாதிக்கப்பட்ட /படாத இளைய சமுதாயம் தன்னம்பிக்கையுடன் வளர பாதை (வழிகாட்டல்) அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்வைஸ் எல்லாம் இல்லை,

ஒரு introspection.

இதே யாழ் களத்தில் யாழில் மதப்போதகர் விரட்டல், மன்னார் வளைவு உடைப்பு என்ற திரிகளை மீண்டும் ஒருக்கால் வாசித்து பாருங்கோ.

இங்கே இரெண்டு அணியாய் பிரிந்து நிற்பவர்கள், அவற்றில் வேறு இரு அணிகளாய் பிரிந்து நின்று சக தகமிழனையே திட்டி தீர்த்தது விளங்கும்.

இதுதான் நாங்கள். இப்படி பிரச்ச்னை ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்தால் அது எம் தலைமைகளில் வெளிப்படுவது இயற்கையே.

30 வருடம் ஒரு தனிமனிதன் இந்த அடைசல்களை எல்லாம் மேவி, பூசி மெழுகி வைத்திருந்தான் - அவ்வளவுதான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.