Jump to content

வாங்கோ பேசுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ பேசுவோம்

தற்போது குடும்பங்களின் மிக பெரிய தலையிடி  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா ?  அல்லது கணனி வழி கல்வி . மூலம்  படிப்பிக்கலாமா ?  ஏற்கனவே  குழந்தைகள் ஆறு மாதம் வீட்டில் உள்ள குழப்படி யெல்லாம்  செய்து பள்ளி தொடங்கினால் காணும் என  தாய் மாரின் ஓலம் சமையலை பார்ப்பதா?  குழந்தைகளை அடக்குவதா ? .வீட்டில் இருந்து வேலை ஒரு படி மேல் ?  தலையை பிச்சுக்கலாம் போல  ? குழந்தைகளுக்கு அடைபட வாழ்க்கை , எத்துணை மட்டும் டி வீ யும்  கைத்தொலைபேசியும் ?

 எடடாம்  வகுப்புக்கு மேல் படட மாணாக்கர்  கை கழுவுவார்கள் முக கவசம் அணிவார்கள் .ஒரு வி ழிப்புணர்வு  இருக்கும்  . பாலர் முதல்  எடடாம்  வகுப்பு குழந்தைக ளை அனுப்பலாமா ?குளிர் காலம் ஆரம்பிக்க   இருக்கிறது  என்ன செய்யலாம் ? ....உங்கள் வீட்டில் எப்படி  கையாளுகிறீர்கள் ?

வாங்க பேசலாம் .....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஈர், பேன் என்றாலே பிரைமறி ஸ்கூல் கட்டுபடுத்த திணறும். 

கொரோனாவை?

இந்த பிள்ளையள் எல்லாத்தையும் கையாள அழையுங்கள், விளையாடுங்கள். 

கட்டாயம் வர வேண்டுமாம்.

முதல் ரெண்டு கிழமை வயித்தால போகுது எண்டு சொல்லி போட்டு - நிலமை முன்னேற்றம் இல்லாட்டில் Home Schooling ற்கு போட நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நிலாமதி said:

ஏற்கனவே  குழந்தைகள் ஆறு மாதம் வீட்டில் உள்ள குழப்படி யெல்லாம்  செய்து பள்ளி தொடங்கினால் காணும் என  தாய் மாரின் ஓலம் சமையலை பார்ப்பதா?  குழந்தைகளை அடக்குவதா ? .வீட்டில் இருந்து வேலை ஒரு படி மேல் ?  தலையை பிச்சுக்கலாம் போல  ? குழந்தைகளுக்கு அடைபட வாழ்க்கை , எத்துணை மட்டும் டி வீ யும்  கைத்தொலைபேசியும் ?

      குழந்தைகளை அடக்குவதை விட இப்போ கணவன்மாரும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் பெரும் குழப்பம்.

     போதாக் குறைக்கு சீரியலுகளும் இல்லை.
இங்கே பாடசாலை திறக்கப்படும் என்கிறார்கள்.அதிலும் ஒரு தெளிவின்மை காணப்படுகிறது.
       ஒரு வகுப்பில் 30-35 பிள்ளைகள்.எப்படி விலத்தி வைப்பது?ஒரு பிள்ளைக்கு வருத்தம் வந்தால் பாடசாலையே மூடப்படுமா?இப்படி பல விடை தெரியா கேள்விகள்.

27 minutes ago, goshan_che said:

முதல் ரெண்டு கிழமை வயித்தால போகுது எண்டு சொல்லி போட்டு - நிலமை முன்னேற்றம் இல்லாட்டில் Home Schooling ற்கு போட நினைக்கிறேன்.

இரண்டு கிழமைக்குள் பாடசாலை பூட்டப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு நாடுகளிலும் அமெரிக்காவிலும் இது வரை நடந்த உதாரணங்களின் படி பார்த்தால், தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும் வரை குழந்தைகள் பாடசாலைக்குத் திரும்புவது சாத்தியமாகாது என்றே தெரிகிறது. சிறு குழந்தைகளுக்கு கடினம் தான், ஆனால் வளர்ந்த பிள்ளைகள் பழகி விட்டார்கள். 

பிள்ளைகள் நோயினால் கடுமையாகப் பாதிக்கப் படப்போவதில்லை (அமெரிக்காவில் இறந்த 170,000 பெரில் 90 பேர் 19 வயதுக்குட்பட்டோர் என்பது ஒரு தகவல்). ஆனால், அவர்கள் வைரசை வளர்ந்தவர்களுக்குப் பரப்புவதால் மரணங்கள் அதிகரிக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சும்மா ஈர், பேன் என்றாலே பிரைமறி ஸ்கூல் கட்டுபடுத்த திணறும். 

கொரோனாவை?

இந்த பிள்ளையள் எல்லாத்தையும் கையாள அழையுங்கள், விளையாடுங்கள். 

கட்டாயம் வர வேண்டுமாம்.

முதல் ரெண்டு கிழமை வயித்தால போகுது எண்டு சொல்லி போட்டு - நிலமை முன்னேற்றம் இல்லாட்டில் Home Schooling ற்கு போட நினைக்கிறேன்.

யோசித்து செய்யுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டிலும் ஆரம்ப பாடசாலைக்கு போகும் பிள்ளைகள் இருக்கிறார்கள். இன்னும் தீர்மானமாக முடிவெடுக்க முடியாத நிலையிலேயே பெற்றோர் உள்ளனர். அநேகமாக முதல் இரண்டு வாரத்திற்கு நிலமையைப் பார்த்து அதன்பின் அனுப்பவதுதான் சிறந்தது என்ற அபிப்பிராயத்தில் உள்ளனர். இரண்டு வாரத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் என்ற கருத்தே அனைவரிடமும் உள்ளது. வீட்டில் வைத்திருப்பது சிரமம் என்று பார்த்து பாடசாலைக்கு அனுப்பவது உசிதமல்ல. அதைவிட பிள்ளைகள் பாடசாலைக்கு போய் வருவதால் எம்போன்ற முதியவர்களுக்கும் பாதுகாப்பில்லை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். இக்கட்டான நிலைதான். எதற்கும் ஒன்லைன் இருப்பதால் பிள்ளைகள் வீட்டிலிருந்து படித்துவிட்டு நிலமையை பார்த்து பாடசாலைக்கு போவதே நல்லது. அதிலும் குழந்தைகள் தம் சுகாதாரத்தை பேணமாட்டார்கள். பேசித்தீர்க்க முடியாத பெரிய சவாலாக உள்ளது கொரோனா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பேரப்பிள்ளைகள்  பாடசாலைக்குப் போய் வருகிறார்கள்..... அங்கு மிகவும் கண்டிப்புடன் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்கள். மாஸ்க் போடுதல், கை கழுவுதல் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். ...... பிள்ளைகளின் பெற்றோருடனும் கலந்துரையாடி செய்கின்றார்கள்....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரியன் அண்ணா, மீரா மற்றும் உறவுகளுக்கு.

எங்கள் வீட்டிலும் பழைய ஆட்கள் இருக்கினம். தாதிகளையும் நிப்பாட்டி போட்டு நாங்கள்தான் பாக்கிறம். பிள்ளையின் படிப்பு, குளப்படி, இருவரும் வீட்டில் ஒவ்வொரு அறையில் வேலை - தொற்றில்லாமல், குறைவா இருக்கும் என்ற உத்தரவாதம் இருந்தால் நான்தான் முதலாவதாக அனுப்புவேன்.

ஆனா ஒருக்கா வெளியால விளையாட கூட்டி போனாலே bin முதல்கொண்டு எல்லா இடத்திலயும் கைஅடிக்கிற பிள்ளையள் ஸ்கூலில எப்படி இருக்கும்?

தொற்றை வீட்டுக்கு கொண்டுவந்தால் - இவ்வளவுகாலம் இருந்ததும் வேஸ்ட்.

படிப்பை தொய்யவிடாமல் இழுத்துதான் பிடிச்சிருக்கு. ஆகவே அது பெரிய பிரச்சினை இல்லை.

நாங்கள் பாத்க்காத குழப்பமா? நாங்களும் படிச்சதுதானே. ஆனால் இங்க சட்ட பிரச்சினை வேறு உள்ளது.

பார்போம்.

19 minutes ago, suvy said:

எனது பேரப்பிள்ளைகள்  பாடசாலைக்குப் போய் வருகிறார்கள்..... அங்கு மிகவும் கண்டிப்புடன் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்கள். மாஸ்க் போடுதல், கை கழுவுதல் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். ...... பிள்ளைகளின் பெற்றோருடனும் கலந்துரையாடி செய்கின்றார்கள்....!  😁

பிரைமறியா? செகண்டறியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரப்பிள்ளைகளில் பிரைமரி .....செகண்டரி  மற்றும் cm 2 (கொலிஜிஜுக்கு போகமுதல் ) வரை இருக்கின்றார்கள்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த கள உறவுகளுக்கு நனறி.  எங்கள் வீட்டிலும் 6 , 4   வயதில் ஆணும் பெண்ணுமாய்   இரண்டு பேர் இருக்கினம் மகள் விடமாடடா . தை மாதம் பார்க்கலாம்   என்று சொல்கிறா.  அவவுக்கு வீட்டில் இருந்து வேலை .அம்மா அம்மா என்று அவ ரூமுக்குள்ளே  தஞ்சம் . டி வீ யும் . .  கைபேசியும்  ஒரு மணி நேரம்  அனுமதி .  பகலில் தூங்கவும்  மாடடார்கள் . குளிர் பெட்டியை திறந்து அது தா... இது தா... என்று . சோறு கறியை விட கள்ளத்தீனை விரும்புவர் . மாலையில் பின் வளவில் பப்பியுடன் பந்து விளையாடுவர்.ஒரே பொருளுக்கு இருவரும் சண்டை .மூண்று நிமிடத்தால் அது கேட்ப்பாரற்று கிடைக்கும் . அவர்கள் போய் வந்தால் தாத்தா பாட்டிக்கு  சிரமம் . அவர்களுக்கும் சிரமம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

பேரப்பிள்ளைகளில் பிரைமரி .....செகண்டரி  மற்றும் cm 2 (கொலிஜிஜுக்கு போகமுதல் ) வரை இருக்கின்றார்கள்......!

எனக்கும் பேரன் 15ம் திகதி டே கெயருக்கு போறான்.
எனக்கு 13ம் திகதியே ரிக்கட் போட்டு அனுப்புப்படுது.அங்கே யார் யாருக்கு என்ன என்ன வருத்தமோ தெரியாது.ஆனபடியால் கட்டாயம் போக வேண்டும் என்று சொல்லியாச்சு.சரி நியூயோர்க் போனால் அங்கு இரண்டு பேர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லாம் பழைய நிலைக்கு வந்துவிட்டது, ஒரு பிரச்சனையுமில்லை, கடந்த ஒரு மத த்திற்கு மேல் பாடசாலை செல்கின்றார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.