Jump to content

'பிளாக் பாந்தர்' கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் புற்று நோயால் இறந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'பிளாக் பாந்தர்' கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் புற்று நோயால் இறந்தார்

 
'பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார்

Reuters

 

'பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார்

'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் குடல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 

43 வயதான அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மேன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள தனது வீட்டில் உயிரிழத்தகாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே போஸ்மேன் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் பொதுவெளியில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

இந்த செய்தி ரசிகர்களையும் பாலிவுட் நட்சத்திரங்களையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

சாட்விக் உண்மையான போராளி என்று அவரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் வில்சனின் 'மா ரைனெய்ஸ் பிளாக் பாட்டம்', மார்ஷல் மற்றும் டா 5 பிளட்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை தனக்கு புற்று நோய் ஏற்பட்ட பிறகு சாட்விக் நடித்துள்ளார். அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சையின் போதே சாட்விக் படப்பிடிப்புகளுக்கு சென்றுள்ளார். 

அரசர் டி'சாலாவின் கதாபாத்திரத்தை பிளாக் பாந்தர் திரை படத்தில் ஏற்று நடித்தது மிக பெரிய பெருமையாக கருதப்படுகிறது. போஸ்மேன் பல துறைகள் சார்ந்த பிரபலங்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

2014ம் ஆண்டு பாடகர் ஜேம்ஸ் பிரவுன், 2013ம் ஆண்டு பேஸ் பால் விளையாட்டு வீரர் ஜாக்கி ராபின்சன் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படங்களில் போஸ்மேன் நடித்துள்ளார். இருப்பினும் 2018ம் ஆண்டு மிக பெரிய வெற்றி பெற்ற பிளாக் பாந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் பேசப்பட்டது.

வாக்கண்டாவின் அரசராக போஸ்மேன் நடித்த திரைப்படம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டியது. இந்த திரைப்பட இயக்குனர் உட்பட பல நடிகர்கள் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

''இளம் வயதினர், அனைத்து வசதிகளையும் உடையவர்கள், கறுப்பினத்தவர்கள்'' குறித்து இருந்த பிம்பத்தை இந்த திரைப்படம் மாற்றியுள்ளது என போஸ்மேன் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் சூப்பர்- ஹீரோ திரைப்படமாக பிளாக்பாந்தர் திரைப்படம் விளங்குகிறது.

Twitter

spacer.png

'பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார்

போஸ்மேன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த செய்தி பொது வெளியில் தெரியாமல் இருந்ததால் தற்போது பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் போஸ்மேன் மிகவும் எடை குறைந்து காணப்பட்டதால், ரசிகர்கள் பலர் கவலை தெரிவித்து வந்தனர்.

அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டிவைன் ஜான்சன், மார்க் ரஃப்பெல்லோ உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
 

https://www.bbc.com/tamil/arts-and-culture-53957074

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது மற்றைய படங்களை விட
Black Panther கதாபாத்திரமே இவரை அதிகம் நினைவுகூறும்.. அந்தளவிற்கு King T’Challaவும் சரி Black Pantherம் சரி இவருக்கு நன்றாக பொருந்தியிருந்தன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

 

மிகவும் அருமையான விமர்சனமும் கலந்துரையாடலும்.. 

நான் Black Panther படத்தை இங்கே releaseசெய்த நாளன்று போய் பார்த்தேன்..அந்தளவிற்கு Marvel  & DC themeல் ஒரு ஆர்வம். 

சில சமயங்களில் Avengers endgameல் பிரபஞ்சத்தினை பாதியாக சிதைப்பதுதான் என்பது COVID வடிவத்தில் வந்துவிட்டதோ என யோசிப்பதுண்டு.. 

விமர்சனத்தையும் கருத்துக்களையும் பார்த்தபின்பு இன்னுமொரு பார்க்க வேண்டும் போல உள்ளது.. 

இணைத்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.