Jump to content

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

அதை விடுங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் தீவிர தேசியம் பேசிக்கொண்டு மக்களை தேசியத்திற்காக உசுப்பேற்றி (இவர்களில் பலர் சமாதான காலத்தில் தளபதிகளுடன் தொடர்பில்  இருக்கும் அளவுக்கு புலிகளுடன் நெருக்கமானவர்கள்) மக்களை ஏமாற்றி  பல மில்லியன் பணத்தை மக்களிடம் திருடியவர்கள் அனைவரும் சுத்த தமிழர்களே அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருட்டு தமிழர்கள் என்று அழைப்பீர்களா? ஐரோப்பாவில் கடன் அட்டை களவில் தமிழர்கள் பெருமளவில் இருப்பதை அறிவீர்களா? அதில் சிலர் தமிழ்த்  தேசிய அமைப்புக்களுடன்  தொடர்பில் இருந்ததை அறிவீர்களா?  2005 காலப்பகுதியில் இவர்களில் மூவர் சென்னை வந்து அங்கு கள்ள மட்டை உபயோகித்து ATM ல் பணம் திருடி கையும் களவுமாக மாட்டி அந்த செய்தி பத்திரிகைகளில் படங்களுடன்  வந்தது தெரியுமா? லண்டனில் உழைத்து வாழாமல் உங்கள் நாட்டிற்கு வந்து அங்கு ஏழை மக்கள் வைப்பு செய்த பணத்தை திருடிய தமிழர்களை  எப்படி அழைப்பீர்கள்? 

ஆகவே விளங்கிக் கொள்ளுங்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தில்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. 

தமிழ் நாட்டில் பொதுத்துறை ஊழல் நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு  அதில் முக்கிய பங்கு இருக்கும்  இது சாதாரண பொது அறிவு உள்ள அனைவருக்கும்  தெரிந்த உண்மை இது. ஆகவே ஊழல் குற்றங்களை காட்டி  காட்டி இனங்களை வெறுக்கும் அரசியலில் ஈடுபடுவது தவறானது.  கருணாநிதி ஊழல. செய்தீல் கருணாநிதியை ஊழல் வாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஒட்டு மொத்த மக்களையும் குற்றம் சாட்டினால்  தமிழர்களும் அதற்குள் அடங்குவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

நீங்கள் எழுதுவதை பதிவிட முன் மீண்டும் வாசீப்பீர்களா?.... நீஙகள் சொல்லும் உதாரணங்கள், இன்னும் ஒரு ஈழத்தமிழருக்கு புரிந்து வாதிடக்கூடியவை. புரட்சிக்கு புரியிற மாதிரி உங்கள் வாதங்களை வையுங்கோ.

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
10 minutes ago, ஈழப்பிரியன் said:

துல்பன் நீஙகள் சொல்லுவது மக்களைப் பற்றி.

அவர் சொல்லுவது மாறிமாறி அரசுகளே இதை முன்னின்று ஊக்குவித்து செய்கின்றன.
ஆகவே அரசை மாற்ற வேண்டும் என்கிறார்.

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது. ஏனென்றால் ஊழல், பணமோசடி  செய்வதில் தமிழர்கள் எந்த விதத்த்திலும்  சளைத்தவர்கள் அல்ல என்பதை ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகள் பதிவேட்டைப் பார்ததால் தெரியும்.  பதிவேடே தேவையில்லை தமிழர்களின் மனச்சாட்சிக்கே அது தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை ஆனால் தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர்.

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை  ஆனால் சீமானை அல்லவா கதிர்காமரோடு ஒப்பிடுகிறீர்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

மருதங்கேணி நீங்கள் வைத்திருக்கும் புத்தகமும் என்னிடம் இருக்கும் புத்தகமும் ஒரே புத்தகமா? கவர் மட்டும் மாறி உள்ளதா? large.090F76BD-09D6-4D6C-83E7-1801136791E7.jpeg.f7652615cc7961aab5239fc16ca7aa6a.jpeg

ருல்பென், மருதர்: இரண்டும் வெவ்வேறு நூல்கள். மருதர் வைத்திருப்பது கி.மு 300 முதல் கி.பி 2000 வரை இலங்கையில் தமிழர் வரலாறு. ருல்பென் வைத்திருப்பது தமிழ் தேசியத்தின் தோற்றம் பற்றியது, பெரும்பாலும் நவீன வரலாற்றுச் சம்பவங்களை ஒட்டியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது. ஏனென்றால் ஊழல், பணமோசடி  செய்வதில் தமிழர்கள் எந்த விதத்த்திலும்  சளைத்தவர்கள் அல்ல என்பதை ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகள் பதிவேட்டைப் பார்ததால் தெரியும்.  பதிவேடே தேவையில்லை தமிழர்களின் மனச்சாட்சிக்கே அது தெரியும். 

தலைவரின் குறுகியகால ஆட்சியில் ஊழல், பணமோசடிகள் இடம்பெற்றதாக நினைவில்லை. அப்படிநடந்திருந்தாலும் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா எல்லாரும் என்ன சொல்ல வாறியள் நாங்கள் என்ன மலையாளியளா இல்லையா? சட்டுப்புட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, tulpen said:

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

அதை விடுங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் தீவிர தேசியம் பேசிக்கொண்டு மக்களை தேசியத்திற்காக உசுப்பேற்றி (இவர்களில் பலர் சமாதான காலத்தில் தளபதிகளுடன் தொடர்பில்  இருக்கும் அளவுக்கு புலிகளுடன் நெருக்கமானவர்கள்) மக்களை ஏமாற்றி  பல மில்லியன் பணத்தை மக்களிடம் திருடியவர்கள் அனைவரும் சுத்த தமிழர்களே அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருட்டு தமிழர்கள் என்று அழைப்பீர்களா? ஐரோப்பாவில் கடன் அட்டை களவில் தமிழர்கள் பெருமளவில் இருப்பதை அறிவீர்களா? அதில் சிலர் தமிழ்த்  தேசிய அமைப்புக்களுடன்  தொடர்பில் இருந்ததை அறிவீர்களா?  2005 காலப்பகுதியில் இவர்களில் மூவர் சென்னை வந்து அங்கு கள்ள மட்டை உபயோகித்து ATM ல் பணம் திருடி கையும் களவுமாக மாட்டி அந்த செய்தி பத்திரிகைகளில் படங்களுடன்  வந்தது தெரியுமா? லண்டனில் உழைத்து வாழாமல் உங்கள் நாட்டிற்கு வந்து அங்கு ஏழை மக்கள் வைப்பு செய்த பணத்தை திருடிய தமிழர்களை  எப்படி அழைப்பீர்கள்? 

ஆகவே விளங்கிக் கொள்ளுங்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தில்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. 

தமிழ் நாட்டில் பொதுத்துறை ஊழல் நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு  அதில் முக்கிய பங்கு இருக்கும்  இது சாதாரண பொது அறிவு உள்ள அனைவருக்கும்  தெரிந்த உண்மை இது. ஆகவே ஊழல் குற்றங்களை காட்டி  காட்டி இனங்களை வெறுக்கும் அரசியலில் ஈடுபடுவது தவறானது.  கருணாநிதி ஊழல. செய்தீல் கருணாநிதியை ஊழல் வாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஒட்டு மொத்த மக்களையும் குற்றம் சாட்டினால்  தமிழர்களும் அதற்குள் அடங்குவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

தலைவன் வழி தொண்டன் வழி .. ஆண்ட கட்சிகள் சரியில்லை .. திராவிட கட்சிகளின் ஆட்சி  .?

பெண்களுக்கு சம உரிமை , சொத்துரிமை , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்டு 10% நல்லவை நடந்தது என்டால் 90% தீயவை . ஊரை அடித்து உலையில் போட்டது என்பதை மறுக்க இயலாது .👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

 

போர்த்துக்கீசர்  தென்இந்திய கரையோரங்களில் வந்து இறங்கியபோது 
பெரும்பாலமான கரையோரங்கள் விஜயநகர பேரரசின் ஆடசிக்கு உட்பட்டு இருந்தது 
போர்த்துக்கீசரின் வருகைகள் வணிகம் நோக்கியே இருந்தது இடங்களை பிடித்து ஆளுமை 
செய்யும் எண்ணம் அவர்களிடம் அப்போது  இருக்கவில்லை. ஆதலால் அந்த அரசர்களுக்கு 
லஞ்சம்போல தங்களிடம் இருந்த சில வெகுமாணங்களை கொடுத்து இங்கிருந்த திரவியங்களை 
அறாவிலையில் பெற்றுக்கொண்டார்கள் ... அப்படியொரு டீலில்தான் சொந்த ஆடசியை இழந்து இருந்த 
கேரளா மக்கள் விஜயநகர அரசுகளால் போர்த்துக்கீசருக்கு விற்கப்படடார்கள் அவர்கள்தான் மலபார்கள்.
அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தென்காசி பாண்டியர்கள் மீள் எழுச்சிபெற்று விஜயநகர ஆடசியை விரட்டிக்கொண்டு இருந்தார்கள். 

அந்த மலபார்களை போர்த்துக்கீசர் யாழ் தீவுகளில் கொண்டுவந்து குடியேற்றினார்கள் நெடுந்தீவு புங்குடுதீவு  போன்ற இடங்களில் கொண்டுவந்து குடியேற்றி தமது குதிரைப்படையை வளர்ப்பது வணிக பொருட்களை ட்ரான்சிட் செய்ய அவர்கள் புங்குடுதீவையும் நெடுந்தீவையும் பயன்படுத்தினார்கள் அதற்கும் அவர்களை பயன் படுத்த்தினார்கள். 

தேசவழமை சட்டம் சங்கிலி மன்னர்களால்தான் அறிமுகமானது 
முன்பு நிலங்கள் ஏதும் மக்களுக்கு சொந்தம் இல்லை பின்பு வேளாண்மை செய்ய என்று 
சில நிலங்களை வேளாண்மை செய்பவர்களுக்கு இனாமாக அரசு வழங்கியது இதனால் இவர்கள் 
நிலவுடமை பெற்றதால் சமூகத்தில் ஒரு உயர் அந்தஸ்தை பெற்று இங்குதான் ஈழத்தில் முதன் முதலில் ஏற்ற தாழ்வு  (சாதி) சமூகத்தில் ஏற்படுகிறது தம்மை வேளாளர் என்றும் உயர்வானவர்கள் என்றும் ஒரு போக்கை அவர்கள் கொண்டார்கள். 

தேசவழமை சட்டம் பின்னாளில் வன்னியில் ஆளுமை கொண்ட பண்டாரவன்னியனால் 
அங்கிருந்து நீக்கபட்டது ஆனால் அது யாழ் மைய பகுதியில் ஒல்லாந்தர் காலத்திலும் அது  நீடித்தது.  

நான் பேசிய ஆய்வாளர் சொல்வது, ஜரோப்பியர்கள் சகலரையுமே, ஒரே மொழி பேசியதால் மலபார் என்றே அழைத்தனர். தமிழர் என்று அவர்கள் பத்திரங்களில் குறிக்கவில்லையாம்.

இதுஆங்கிலேயர், இந்தியாவில்,கிறிஸ்தவன், இஸ்லாமியன் அல்லாதவன்இந்து என்றதுபோன்றது என்கிறார்.

நான் இனிதான் வாசித்தறிய வேண்டும். முடிந்தால், இது சரியானதா என சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நான் பேசிய ஆய்வாளர் சொல்வது, ஜரோப்பியர்கள் சகலரையுமே, ஒரே மொழி பேசியதால் மலபார் என்றே அழைத்தனர். தமிழர் என்று அவர்கள் பத்திரங்களில் குறிக்கவில்லையாம்.

இதுஆங்கிலேயர், இந்தியாவில்,கிறிஸ்தவன், இஸ்லாமியன் அல்லாதவன்இந்து என்றதுபோன்றது என்கிறார்.

நான் இனிதான் வாசித்தறிய வேண்டும். முடிந்தால், இது சரியானதா என சொல்லுங்க.

போர்த்துக்கீசர் அதை செய்திருக்க வாய்ப்பு இருக்கு 
காரணம் அவர்கள் உள்ளூர் அரசியலில் தலையிட ஆரம்பத்தில் விரும்பவில்லை 
அவ்வாறான ஒரு பலம் அவர்களிடம் இருக்கவும் இல்லை. 
ஆகாவே தமிழர் மலையாளிகள் என்று அவர்களுக்கு பிரிவு இருப்பதே தெரியாமல் இருந்திருக்கலாம் 
தெரிந்தாலும் அதை பற்றி அலட்டுவதுக்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை 
ஆதலால் மலபார் என்று பொதுவாகவே லைஹ்த்து இருக்கலாம் 

ஆனால் பிரிடிஷ் காலத்தில் தமிழர்கள் என்பது கண்டி தமிழர்கள் என்பது எல்லாம் எழுத்தில் இருக்கிறது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது.

இதுவரை ஆண்டவர்களால் எதுவுமே முடியவில்லை.
இன்னும் மிச்சம்மீதி இருக்கும் இயற்கையையும் நிலவளங்களையும் விற்று சொத்து சேர்க்கவே முனைகிறார்கள்.
அதிலிருந்து மீள முயற்சி செய்வது என்பது மனித இயல்பு.
அதை ஏன் நீங்கள் எதிராக நினைக்கிறீர்கள்.

இலங்கையில் தேசியத்தலைவர் சிறியகாலம் என்றாலும் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சாத்தியமான சுதந்திரமாக மக்கள் இருப்பார்கள் என்று காட்டவில்லையா?

Link to comment
Share on other sites

8 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுவரை ஆண்டவர்களால் எதுவுமே முடியவில்லை.
இன்னும் மிச்சம்மீதி இருக்கும் இயற்கையையும் நிலவளங்களையும் விற்று சொத்து சேர்க்கவே முனைகிறார்கள்.
அதிலிருந்து மீள முயற்சி செய்வது என்பது மனித இயல்பு.
அதை ஏன் நீங்கள் எதிராக நினைக்கிறீர்கள்.

இலங்கையில் தேசியத்தலைவர் சிறியகாலம் என்றாலும் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சாத்தியமான சுதந்திரமாக மக்கள் இருப்பார்கள் என்று காட்டவில்லையா?

தேசியத்தலைவரை இதற்குள் ஏன் இழுக்கின்றீர்கள் நான் கூறியது தமிழர்களைப்பற்றியது. தமிழர்கள் ஊழல் செய்யபட்டார்கள்  என்ற பொய்யான புனைவு காட்டி எம்மெ ஏமாற்றுவதால் என்ன பயன்?  தேசியத்தலைவரின் நிர்வாகத்தில் அவரை மீறியே பல  ஊழல் நடந்திருக்கும்  போது எம்மையே நாம் ஏமாற்றுவது  போல கருத்து ஏன் ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாதவூரான் said:

கடைசியா எல்லாரும் என்ன சொல்ல வாறியள் நாங்கள் என்ன மலையாளியளா இல்லையா? சட்டுப்புட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா

வாதவூரான், நாங்கள் (நீங்கள்) எல்லாரும் தமிழர்!

25,000 ஆண்டுகள் முன்பே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நிலப்பரப்பில் மனிதர்கள் இருந்த ஆதாரங்கள் உண்டு.

7000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை இந்தியாவுடன் நிலப் பரப்பில் இணைந்தே இருந்திருக்கிறது! பாக்கு நீரிணையும் ஒரே இரவில் இலங்கையை இந்தியாவிடமிருந்து பிரித்து விடவில்லை!

படையெடுப்புகள் நிகழ முன்னமே தென்னிந்தியாவில் இருந்த மக்களும் இலங்கையில் இருந்த மக்களும் ஒரே வகையினராக (homogeneous) இருந்திருக்கின்றனர்!

பின்னர் படயெடுப்புகளும், பௌத்தமும், சைவமும் வந்த பின்னர் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்று இரு கலாச்சார மொழி ரீதியாக பிரிந்த மக்கள் உருவாகினர்!

இதற்குள் தமிழரையோ சிங்களவரையோ "தூய்மையான" இனமாக நிறுவ முடியுமா என்றால் பதில் முடியாது என்பதே! 

இப்போது நீங்கள் பேசும் மொழி, பின் தொடரும் கலாச்சார முறைமைகள் சார்ந்து நீங்களும் நாங்களும் தமிழர் என்பது மட்டுமே நிறுவக் கூடிய ஒரு விடயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அது போன வருசம்...

புது கணக்கு எட்டு மாதத்தில் தெரியுமே... 😁

இரட்டிப்பாகலாம் என்பதே என் கணிப்பும். 

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அது யார் கதிர்காமர் முன்னாள் வெளியுறவு அமைச்சரா..?

16 லட்சம் - உண்மை ..கூட்டி கழித்து பார்த்தால்  ... 

தொழில் முறை திராவிட கட்சிகளின் ஒன்றிய / கிளை செயலாளர் ஆனால் வாழ்க்கை "செற்றில்.." ஆகும் என்ற கனவோடு அந்த பக்கம் பல கோடி பேர் இருப்பது உண்மைதான் ..

"பொய் , பித்தலாட்டம் , லஞ்சம் , கூட்டுறவு வங்கி மோசடி , ஊழல் , ஓட்டுக்கு காசு , புரியாணி, மது  , மாது , சினிமா கவர்ச்சி ,டாப்பா" சரக்கு கொடுத்து மூளையை மழுங்கடித்தல் தன் இன பெருமை உணரா தன்மை , கான்ரெக்ட், கோமிசன் ..கட்சி கொடி , பார்ச்சுனர் கார்..போலீஸ் ஸ்ரேசன்/ டோல் கேட்டில்  பவுசு .. கட்ட பஞ்சாயத்து , உருட்டல் மிரட்டல் , ரியல் எஸ்டேட் , நில அபகரிப்பு . ..

திராவிட செம்புகளின் பித்தலாட்டங்களை தமிழ் தேசிய பேரியக்கம் , இளந்தமிழர்  இயக்கம் போன்ற தேர்தல் அமைப்பு சாரா தமிழர் இயக்கங்கள் வழியாக நம்பிக்கையோடு எடுத்து செல்கிறோம் 16 லட்சம் இரட்டிப்பாகும் .. என்ற நம்பிக்கையோடு ..👍

 

ஓம் தோழர் முன்னாள் வெ.உ மந்திரி.

தமிழ் தேசியம் வளர்வது சந்தோசமே.

ஆனால் தமிழ் மட்டும் பேச தெரிந்தவர்களை தமிழர் அல்லாதோர் என்பது ஏற்க முடியாது தோழர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2020 at 18:09, பிழம்பு said:

இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம்

இதை வாசித்த பின்னரும் இனவாத அரசிற்கு சார்பாக கருத்து எழுதும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களை என்னவென்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

உண்மை தான். எல்லாம் நரி திராட்சைப்பழக்கதை தான். 

தாங்கள் சார்ந்தவர்கள்/வியாபரிகள் எழுதினால் வரலாறு.
மற்றவர்கள் எழுதினால் பாட்டி வடை சுட்ட கதையும்.....நரிக்கதையும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

நீங்கள் கேட்டவர் சட்டம் படித்தவரா? வரலாற்று ஆசிரியரா? 99 வயதில் அவனவனுக்கு சொந்த பெயரே நினைவு வருவது கஸ்டம்.

எது எப்பிடியோ உங்களுக்கும் நாதமுனிக்குமான பதில் கீழே:

அது அப்படியாம், இது இப்படியாம் என்று எழுதுவதில் அர்த்தம் இல்லை. 

டச்சு மொழி மூலம், ஹேக்கிலும், இதர உசாத்துணைகள் கொழும்பு, ஜகார்த்தாவிலும் உண்டு. இவை 1706க்கானவை. நான் போட்டோ போட்டது பின்னாளில் இதை ஆங்கிலேயர் தமது சட்ட கோவையில் இட்டது.

தேசவழமை - யாழ்பாணத்துகு பொறுப்பான திசாவையினால், யாழில் இருந்த சமூக தலைவரகளிடம், நீங்கள் யார்? உங்கள் சட்டம் என்ன, வழக்கம் என்ன என கேட்டு தொகுக்கபட்டதே தேசவழமை.

இது தனியே ஒரு கூட்டத்துக்கான சட்டம் அல்ல. யாழில் பிறந்த எல்லோருக்குமானது.

இன்றுவரை, யாழில் பிறந்த ஒருவரது தனியுரிமை விடயங்கள் சிலதை இதுவே ஆளுகிறது. 

முந்தைய யாழ்பாணராச்சியம் முழுமைக்குமான சட்டம். அங்கே வாழ்ந்த பெரும்பான்மையானோரின் சட்டம். அங்கே வாழ்ந்த பெரும்பான்மையானோரை டச்சுகாரம் “மலபாரி வந்தேறிகள்” என்றும் “தேச வழமையை” மலபாரி வந்தேறிகளின் சட்டம்” என்றும் எழுதி வைத்துள்ளான்.

இவ்வளவும் primary sources உள்ள ஆவணபடுத்த பட்ட வரலாறு.

அது அப்படியாம், இது இப்படியாம் கதைகளை விட்டுவிட்டு, ஆதாரங்களோடு வாருங்கள், பேசுவோம்.

2 hours ago, Nathamuni said:

கோசன் இணைத்த தேசவழமை சட்ட விபரங்கள் கேள்விக்கு உரியது.... மலபார் என்று தீவில் சிங்களவர் அல்லாதவரை குறித்துள்ளார்கள் எனது ஆய்வாளரான நண்பர் ஒருவர். மேலும் தேசவழமை சட்டம் இந்தியாவில் தென்மாநிலங்களிலில் இல்லாத நிலையில் இலங்கை வடக்கில் காவி சுமக்க வேண்டியதன் காரணம் வந்தேறிகளால் அல்ல என்கிறார்.

போர்துக்கேயரும், பின்னர் வந்த டச்சுக்காரரும், தென் இந்திய மலபார் பகுதியில் வந்திறங்கியே பின்னர் தீவின் வடக்கே, வந்து சேர்ந்தனர்...

அப்போது தான் உருவாகத் தொடங்கிய மலையாளத்துக்கும், தமிழுக்கும் வேறுபாடு புரியாததால், சிங்களம் பேசாத சகலரும் மலபார் என வகைப்படுத்தப்பட்டனர்.

மேலும், இது குறித்த விபரம் போர்த்துக்கேய மொழியில் அல்லது டச்சு மொழியில் இருந்தால் அன்றி, ஆங்கிலத்தில் மட்டும் உள்ளதை எந்தளவுக்கு நம்ப முடியும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

தேசியத்தலைவரை இதற்குள் ஏன் இழுக்கின்றீர்கள் நான் கூறியது தமிழர்களைப்பற்றியது. தமிழர்கள் ஊழல் செய்யபட்டார்கள்  என்ற பொய்யான புனைவு காட்டி எம்மெ ஏமாற்றுவதால் என்ன பயன்?  தேசியத்தலைவரின் நிர்வாகத்தில் அவரை மீறியே பல  ஊழல் நடந்திருக்கும்  போது எம்மையே நாம் ஏமாற்றுவது  போல கருத்து ஏன் ?  

துல்பன் நீங்கள் ஒரு குடும்ப தலைவனாக 100 வீதமும் சரியாக நடக்க முடியாது.
அது போலவே அரசியலிலும் அங்கங்கே ஒருசில தவறுகள் நடக்கலாம்.
அதுக்காக முழு அரசையுமே குற்றம் சுமத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

எனக்குத்தெரிய  தென்மராட்சியில் உள்ள ஒரு ஊரில் "மலயாள பக்கம்" என்று ஒரு பிரிவினரை சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை  ஆனால் சீமானை அல்லவா கதிர்காமரோடு ஒப்பிடுகிறீர்கள் !!

கதிர்காமர் நெஞ்சில் பாய்ந்த கத்தி...

பிரபாகரனின் படத்தை தூக்கி, தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டியபடி, தமிழர் மத்தியில் சாதிய பிளவுகளை ஏற்படுத்தி, சங்கிகளுக்கு பாதை போட்டு கொடுக்கும் சீமான்.....

முதுகில் பாயும் கத்தி.

1 hour ago, Justin said:

ருல்பென், மருதர்: இரண்டும் வெவ்வேறு நூல்கள். மருதர் வைத்திருப்பது கி.மு 300 முதல் கி.பி 2000 வரை இலங்கையில் தமிழர் வரலாறு. ருல்பென் வைத்திருப்பது தமிழ் தேசியத்தின் தோற்றம் பற்றியது, பெரும்பாலும் நவீன வரலாற்றுச் சம்பவங்களை ஒட்டியது!

ஓம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி தருவோம் என்றீர்கள் 
இப்போ ஓட ஓட விரட்டுவோம் 
என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தாங்கள் சார்ந்தவர்கள்/வியாபரிகள் எழுதினால் வரலாறு.
மற்றவர்கள் எழுதினால் பாட்டி வடை சுட்ட கதையும்.....நரிக்கதையும்....

காரணம் எல்லோரும் எதோ ஒரு இலக்கை நோக்கியே ஆய்வை மேற்கொள்ளுகிறார்கள் 
அவர்களுடைய இலக்கை எட்டுவதுதான் அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது 

உண்மையில் ஒரு முழுமையான ஆய்வு வேண்டுமெனில் 
அதுக்கு பாரிய செலவு ஆகும் அதற்கு ஒரு குழுமம் அமைக்கவேண்டும் 
எல்லா  ஆதாரங்களையும் சேகரிக்கவேண்டும் 

அரசர்கள் கால நேரம் 
மதங்களின் கால நேரம் 
புதிய புதிய பொருட்களின் தோற்ற கால நேரம் 
கலாச்சார  பண்டிகைகள் மாறுதலின் கால நேரம் 
பாரிய இயற்கை அழிவுகளின் பூகோள மாறுதலின் கால நேரம் 
இலக்கியங்களின் படைப்பாளிகளின் புலவர்களின் கால நேரம் 
என்று ஒவ்வோர் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்களை ஒன்று கூட்டி 

எல்லாவற்றையும் ஒரே நேர் கோட்டில் கொன்டு செல்ல வேண்டும்.

இது பல மில்லியன்கள் டாலர் செலவுடன் கூடிய ஒரு செயல்படாக அமையும்.
ஆதலால் இன்று வரை இதை எவராலும் செய்ய முடியாது இருக்கிறது 

இது தவிர இதுக்கு இந்திய அரசோ சிங்கள அரசோ உங்களுக்கு அனுமதி தரப்போவதில்லை 
காரணம் பல உண்மைகள் இந்த அரசால் மூட் மறைத்து அடைகாக்கப்பட்டு வருகிறது.

யாழ்கள தத்துவ ஞானிகள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 
காரணம் அவர்களுக்கு தெரிந்தது மட்டுமே உலகம் உண்மை மற்றதெல்லாம் பொய் 
என்பதே அவர்கள் அடிப்படை தத்துவம் .......இருந்தும் எழுதுகிறேன் 

இந்திய அரபி கடலுக்குள் துவாரகை (துவாரகா) என்ற நகரம் இப்போதும் கடலின் கீழ் கிடக்கிறது 
இது இப்போதைய துவாரகை என்ற நகரில் இருந்து வெறும் 20 மைலில்தான் இருக்கிறது 
இதை முதன் முதலில் கண்டுபிடித்தபோது இந்திய அரசு பாரிய மகிழ்ச்சி .. காரணம் அவர்கள் வைஷணம் 
சார்ந்த நகர் துவாரகை கிருஸ்ணர் பிறந்த ஊர்  ஆகையால் தாம் தமது மதத்துக்கான  ஆதாரங்களை 
அடையப்போவதாக எண்ணி உடனேயே பாரிய அளவில் நிதி ஒதுக்கி அகழ்வாராய்ச்சி தொடங்கியது 
அகழ்வாய்வாளர்கள் கொண்டுவந்த ஆதாரம் இவர்களை திருப்திப்படுத்தவில்லை 
(எனது சொந்த கணிப்பில் அங்கு இஸ்லாம் சார்ந்த விடயம் அல்லது தமிழ் சார்ந்த விடயம் இருக்கிறது என்று எண்ணுகிறேன்) ஆதலால் உடனடியாகவே அகழ்வாய்வு நிறுத்தப்பட்டது. அதுக்கான நிதி ஒதுக்கீடு 
 நிறுத்தப்பட்ட்து. பின்பு சில வெளிநாட்டு அகழ்வாய்வு நிறுவனர்கள் தமது சொந்த செலவிலேயே அதை தொடர கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அங்கு அகழ்வாய்வு செய்ய இப்போ இந்திய அரசால் நிரந்தர தடை விதிக்க பட்டுள்ளது. 

இதேபோல கன்னியாகுமரி கீழேயும் ஓர் இடம் உண்டு அதுபோல் தடையும் உண்டு.
இந்த ராமர் பால ஆய்வை ஒரு அமெரிக்க நிறுவனம் செய்தது அதுக்கு அனுமதி ஏன் கிடைத்த்து என்றால் 
கடலுக்குள் இருக்கும் மணலும் அந்த குறிப்பிட்ட பாலம் இருக்கும் இடத்தில் இருக்கும் மணலும் 
வேறு வேறு கால பகுதி உடையவை என்பதை அது நிரூபித்தது. ஆகவே மனிதர்களால் எதோ ஒரு மாற்றம் அங்கு நடந்திருக்கிறது என்பது தெளிவு ஆகவே அது ராமர் பாலம்தான் என்று நிரூபிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனாலும் அங்கே கிடக்கும் கற்பாறைகள் சாதகமா இல்லை 
அவைகள் தென்னிந்திய மலைசார் பகுதிக்கு சார்பற்றவையாக இருக்கிறது என்கிறது அதே நிறுவனம். 

இப்படி பல இடியப்ப சிக்கல்கள் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஆனால் தமிழ் மட்டும் பேச தெரிந்தவர்களை தமிழர் அல்லாதோர் என்பது ஏற்க முடியாது தோழர்.

கோசான் இதை மற்றைய மாநிலங்களிலேயே முதலில் நிறுவினார்கள்.
அதை தமிழர் பின் பற்றும் போது மட்டும் இனவாதமென்கிறீர்கள்.

நீங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டியது மற்றைய மாநிலங்களில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

வாதவூரான், நாங்கள் (நீங்கள்) எல்லாரும் தமிழர்!

25,000 ஆண்டுகள் முன்பே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நிலப்பரப்பில் மனிதர்கள் இருந்த ஆதாரங்கள் உண்டு.

7000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை இந்தியாவுடன் நிலப் பரப்பில் இணைந்தே இருந்திருக்கிறது! பாக்கு நீரிணையும் ஒரே இரவில் இலங்கையை இந்தியாவிடமிருந்து பிரித்து விடவில்லை!

படையெடுப்புகள் நிகழ முன்னமே தென்னிந்தியாவில் இருந்த மக்களும் இலங்கையில் இருந்த மக்களும் ஒரே வகையினராக (homogeneous) இருந்திருக்கின்றனர்!

பின்னர் படயெடுப்புகளும், பௌத்தமும், சைவமும் வந்த பின்னர் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்று இரு கலாச்சார மொழி ரீதியாக பிரிந்த மக்கள் உருவாகினர்!

இதற்குள் தமிழரையோ சிங்களவரையோ "தூய்மையான" இனமாக நிறுவ முடியுமா என்றால் பதில் முடியாது என்பதே! 

இப்போது நீங்கள் பேசும் மொழி, பின் தொடரும் கலாச்சார முறைமைகள் சார்ந்து நீங்களும் நாங்களும் தமிழர் என்பது மட்டுமே நிறுவக் கூடிய ஒரு விடயம்!

இவ்வளவுதான் மேட்டர்.

இறுதி பனிகாலம் (ice age ) முடிந்து பனி உருகி ஓடும் வரை இந்தியாவின் ஒரு அங்கம் இலங்கை. அடுத்து மிக கிட்டிய கடல் தூரம் இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும். ஆகவே இங்கே தமிழருக்கும் சிங்களவருக்கும் அடிப்படை தென்னிந்திய குடிகளே என்பதில் எந்த வியப்பும் இல்லை.

மரபணு ஆராய்சியும் சொல்வது இதையே.

யார் தமிழர்? என்பதில் எமக்கு தெளிவு இருந்தால் 

நாங்கள் மலையாள வந்தேறியா, தெலுங்கு வந்தேறியா என்ற ஆராய்சியே தேவையற்றது.

பின்வரும் வரைவிலக்கணம் யார் தமிழர் என்பதை அளவிட நான் கைக்கொள்வது.

1. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழ் மரபுரிமையில் வந்தவர் அல்லது

2. தமிழை அடிப்படை மொழியாக (primary language ) கொண்டு, உணர்வால் “நாம் தமிழர்” என்று (subjective identification) தம்மை தமிழராக அடையாளப்படுத்துபவர்கள்.

இப்படி யார் தமிழர் என்பதை நாம் வரையறுத்தால் நாமும் தமிழர் நாயக்கரும் தமிழர், இசை வேளாளரும் தமிழர்.

ஆனால் இலங்கை முஸ்லீம்கள் தமிழர் இல்லை, எனென்றால் அவர்கள் ஒரு குழுவாகவே தம்மை தமிழர் இல்லை என subjective ஆக உணர்ந்தவர்கள்.

இல்லை மரபுரிமை மட்டுமே யார் தமிழர் என்பதை தீர்மானிக்கும் என்றால் பின்னர் நீங்கள் மலையாளா வந்தேறியா இல்லையா என பார்க வேண்டி வரும்.

அது மட்டும் இல்லை புலத்தில் வேறு இனத்தில் திருமணம் செய்தால் பேரப்பிள்ளைகளும் தமிழ் இல்லை என்றாகிவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் இதை மற்றைய மாநிலங்களிலேயே முதலில் நிறுவினார்கள்.
அதை தமிழர் பின் பற்றும் போது மட்டும் இனவாதமென்கிறீர்கள்.

நீங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டியது மற்றைய மாநிலங்களில்.

அப்போதும் கொடுத்தேன் அண்ணா.

என் தங்கச்சி புருசன் என் தங்கச்சிய போட்டு அடிகிறான். அதுக்காக அவன் தங்கச்சியான என் பொண்டாடிய, நானும் போட்டு மதிக்கோணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

நீங்கள் கேட்டவர் சட்டம் படித்தவரா? வரலாற்று ஆசிரியரா? 99

இரண்டு பேருக்கும் தங்களின் பெயர் பெருமை கொண்டவர்கள் காசை கண்டால்   எஸ்கிமோவுன் இனப்பரம்பல் ஈழத்தமிழர் என்றும் சொல்லுவார்கள் .

 

43 minutes ago, goshan_che said:

99 வயதில் அவனவனுக்கு சொந்த பெயரே நினைவு வருவது கஸ்டம்

இப்பவும் சிலம்பம் சுத்துவார்  காலையில் மெதுவாக என்றாலும் வீடு கட்டி முடிப்பார்(வீடு என்பது சிலம்பத்தில் ஏழு அடிமானம்களின் தொகுப்பு ) அவரின் தொழிலே பர்மாவுக்கும்  நாகபட்டினத்துக்கும் ஓடிய கடலோடி .

முதலில் உங்கடை நுனி பபுல்  மேய்ந்த வரலாற்று கதைகளை திரும்பவும் சரிபார்க்கவும் பல இடங்களில் இடறியுள்ளீர்கள் ஆனாலும் இப்படியொரு  கதையை  தொடக்கியபின் எவ்வளவு ஆதாரம்களையும் கொண்டுவந்து போட்டாலும் நீங்களோ  அல்லது உங்களுக்கு பாய்ந்து விழுந்து பச்சை குத்தும் ஐடிகளோ ஏற்று கொள்ள போவதில்லை ஆனால் உங்களை பொறுத்தவரை  குறிப்பிட்ட மனிதர்கள் மீது தொடர் சேறு பூசுதல் மூலம் ஒருவகையான மனப்பிறழ்வு இன்பம் கான்கிறீர் கள் வெற்றி  கொண்டதாக எண்ணி மகிழ்ச்சி கொள்கிறீர்கள் ஏனென்றால் உங்கள் வாழ்வின் கடந்த காலங்களில் அந்த பகுதி மக்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாய் நம்புகிறீர்கள் இல்லை அவர்களை  பார்த்து தேவையில்லாமல் பொறாமை உணர்வு கொள்ள முயல்கிறீர்கள் . நல்ல வைத்தியரை நாடுவது உங்கள் இனத்துக்கு நல்லது .

 

43 minutes ago, goshan_che said:

வரலாற்று ஆசிரியரா?

வரலாற்று ஆசிரியர் சொல்வது உண்மை என்று நம்ப சொல்லும் உங்களால் விக்கிரமபாகு கருணாரத்ன சொல்வதை ஏற்க முடியாது உள்ளது ?

undefined

 

41 minutes ago, goshan_che said:

கதிர்காமர் நெஞ்சில் பாய்ந்த கத்தி...

பிரபாகரனின் படத்தை தூக்கி, தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டியபடி, தமிழர் மத்தியில் சாதிய பிளவுகளை ஏற்படுத்தி, சங்கிகளுக்கு பாதை போட்டு கொடுக்கும் சீமான்.....

முதுகில் பாயும் கத்தி.

இது இங்கிருக்கும் ஒருத்தரை மகிழ்விக்க சொல்லும் சொல் உண்மையில் உங்கள் பிரச்சனை வேறு என்பது எங்களுக்கு தெரியும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.