Jump to content

A/L தொழினுட்பவியல் மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை உடையவர்களா?


Recommended Posts

A/L தொழினுட்பவியல் மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை உடையவர்களா?
 
பிறரும் பயன்பெற பகிர்ந்து விடுங்கள். ஆசிரியர்களாக இருப்பின் இத்தகவல்களை மாணவர்களுக்கு கொண்டு போய் சேருங்கள்.
க.பொ.த உயர்தர தொழினுட்ப பிரிவு மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவர்களா? என்று கேட்டால் பதில் ஆம் என்பதாக இருந்தாலும் அதனை முழுமைப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளை முற்கூட்டியே நிவர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
விண்ணப்பிப்பதற்கும் தெரிவு செய்யப்படுவதற்குமான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் பற்றிய பூரண விளக்கம் மற்றும் வழிகாட்டல்கள் இல்லாத எங்களுடைய மாணவர்கள் தங்களுடைய உயர் கல்விக்கான வாய்ப்புக்களை இழந்து கொண்டு உள்ளார்கள் என்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
இந்த வகையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான தெரிவுகளின் போது குறிப்பாக தொழினுட்பவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அதற்கான தெரிவு ஒழுங்குகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்பதிவின் ஊடாக தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன்.
(1)உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல் மாணவர்களுக்கு!!
தொழில்நுட்பவியல் பிரிவில் உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல் மற்றும் தொழினுட்பத்திற்கான விஞ்ஞானம் மற்றும் விவசாய விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்திருந்தால் பாடநெறி இலக்கம் 22 ஐச் சேர்ந்த விவசாய மற்றும் உணவு தொழினுட்பம் எனும் படத்திற்காக தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவில் மூன்றாவது பாடத்தெரிவாக விவசாய விஞ்ஞானம் எனும் பாடத்தைத் தெரிவு செய்யாது வேறு பாடத்தை தெரிவு செய்த மாணவர்கள் இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாக இருக்கும் அதேவேளை நீங்கள் உங்களுடைய O/L பரீட்சையில் விஞ்ஞானமும் தொழினுட்ப பாடத்திற்கு குறைந்தபட்சம் திறமை சித்தியை (B) பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் ஆதலால் O/L பரீட்சையில் விஞ்ஞான பாடத்திற்கு குறைந்தது திறமை சித்தி (B) இல்லையேல் மீண்டும் ஒருமுறை அப் பாடத்தை முயற்சி செய்து திறமை சித்தியை பெற்று வைப்பதன் மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவராகிக் கொள்ள முடியும்.
(2) பொறியியல் தொழினுட்பவியல் மாணவர்களுக்கு!!
தொழினுட்பவியல் பிரிவில் பொறியியல் தொழினுட்பவியல் மற்றும் தொழினுட்பத்திற்கான விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பவியல் பாடத் துறைக்கான மூன்றாவது பாடமாக அங்கீகரிக்கப்பட்ட பாடங்களில் ஒரு பாடம் உள்ளடங்கலாக ஒரே அமர்வில் நீங்கள் சித்தி அடைந்திருந்தால் பாடநெறி இலக்கம் 24(A)
ஐச் சேர்ந்த வடிவமைப்பும் கட்டிட தொழினுட்பமும் பாடநெறி இலக்கம் 24(B)ஐச் சேர்ந்த வடிவமைப்பும் பொறியியல் தொழினுட்பமும் மற்றும் பாடநெறி இலக்கம் 24(C)ஐச் சேர்ந்த வடிவமைப்பும் இலத்திரனியல் தொழினுட்பமும் எனும் பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இருப்பினும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்(O/L) விருப்பத் தெரிவு பாடங்களான வடிவமைப்பும் கட்டிட தொழினுட்பமும் அல்லது வடிவமைப்பும் இயந்திரவியல் தொழினுட்பமும் அல்லது வடிவமைப்பும் இலத்திரனியல் தொழினுட்பமும் அல்லது வடிவமைப்பும் தொழினுட்பவியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்திற்கு சாதாரண சித்தியுடன்(C) சித்தியடைந்து இருந்தால் மட்டுமே நீங்கள் விண்ணப்பிப்பதற்கான முழுத் தகுதியையும் பெறுவீர்கள்.
ஆனாலும் எங்களுடைய மாணவர்களில் பலர் O/L இல் தொழினுட்பவியல் பாடங்களைத் தெரிவு செய்யாது அதற்கான எந்தவித பெறுபேறுகளும் இல்லாது A/L இல் தொழினுட்ப பிரிவை தெரிவுசெய்து கற்கும்போது அவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்புகளை இழக்கின்றார்கள். ஆதலால் இதுவரை O/L இல் திறமைச் சித்தி (C) பெறுபேறு இல்லாது கல்வி கற்கும் தொழினுட்ப பிரிவு மாணவர்கள் மீண்டும் ஒரு தடவை O/L பரீட்சைக்கு விண்ணப்பித்து தொழினுட்பவியல் பாடங்களில் ஏதாவது ஒன்றுக்கு குறைந்தது சாதாரணதர சித்தியை பெற்று வைப்பதன் மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் தகுதியை பெற முடியும். இல்லையேல் பொறியியல் தொழினுட்ப பிரிவு மாணவர்களுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மறுக்கப்படும்.
(3) பொறியியல் தொழினுட்பவியல்
பாடத்துறைக்கான மூன்றாவது பாடமாக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் பாடத்தை தெரிவுசெய்த மாணவர்களுக்கானது !!
தெரிவு - 01
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச்சித்தி (B) உட்பட மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழிப் பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச் சித்தி(B) அல்லது ஆங்கில இலக்கியத்தில் சாதாரண சித்தியுடன் (C) சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
தெரிவு - 02
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் சாதாரண சித்தியுடன் (C) மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்து இருத்தல் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் குறைந்த பட்சம் திறமை சித்தியுடன் (B) மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச் சித்தி (B) அல்லது ஆங்கில இலக்கியப் பாடத்திற்கு சாதாரண சித்தியுடன் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
மேலும் பாடநெறி இலக்கம் 23 ஐச் சேர்ந்த தொழினுட்பக்கலையும் கைப்பணியும் எனும் பாடநெறி தெரிவுக்கு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எவையேனும் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்து இருக்கும் அதேவேளை க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கலையும் கைப்பணியும் பாடத்திற்கு குறைந்தபட்சம் சாதாரண சித்தியுடன் (C) சித்தி பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
இல்லையேல் இப்பாட நெறிக்கும் நீங்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழப்பீர்கள்.
தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான இறுதி வாய்ப்பு பாடநெறி இலக்கம் 20 ஐச் சேர்ந்த உடற்கல்வி எனும் பாடநெறி இதற்கு தெரிவுக்கு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எவையேனும் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்து இருக்கும் அதேவேளை க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்திற்கு குறைந்தபட்சம் சாதாரண சித்தியுடன் (C) அங்கீகரிக்கப்பட்ட தடகள மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் , ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுக்கள் சம்பந்தமான அடைவுகளை அல்லது திறமைகளை பெற்றிருத்தல் அவசியம் ஆகும்
இல்லையேல் இப்பாட நெறிக்கும் நீங்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழப்பீர்கள்.
சிந்தித்து செயற்படுங்கள்.
மேலதிக தகவல்கள் ஏதும் தேவைப்படின் தொடர்பு கொள்ளுங்கள். என்னால் இயன்ற அளவிற்கு உங்களின் சந்தேகங்களை தீர்த்து முறையான வழிகாட்டல்களை மேற்கொள்ள முயற்சிப்பேன்.
COPIED FROM
S.j.Aathy
Mu/vidyananda college.
2019-01-25 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைத்துறை கற்கும் க.பொ.த உயர்தரம் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகம் செல்ல முடியாவிட்டால் தொடர்ந்து எவ்விதமான பயிற்சி நெறிகளை தொடரலாம்? அரசாங்க வேலைவாய்ப்பை இவர்கள் பெறுவதற்கு ஏதும் வழிமுறைகள் உள்ளனவா? யாருக்கும் தெரிந்தால் உங்கள் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது பல்கலைக்கழக பட்டம் இல்லாமல் அரசாங்க வேலைகளில் நியமனம் பெறுவது சாத்தியம் இல்லை என்று கேள்விப்பட்டேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.