Jump to content

அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பே மிகவும் அவசியம்; சபாநாயகர் யாப்பா.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பே மிகவும் அவசியம்; சபாநாயகர் யாப்பா.!

1598846831_3.jpg

"இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மட்டுமல்லாது நாட்டின் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பு அவசியமாகும். எனவே, புதிய அரசமைப்பை விரைவில் உருவாக்கி ஐக்கியமாக நாட்டைக் கட்டியெழுப்ப நாடாளுமன்றத்தில் சகலரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அதனை வரவேற்பேன். அவ்வாறான செயற்பாடுகளை மக்களும் ஆதரிப்பார்கள்."

- இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்தும், அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டுவருவது குறித்தும் ஆளும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதித்து வருகின்ற நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டுக்குப் புதிய வேலைத்திட்டங்கள், புதிய தலைமைகள், புதிய கொள்கைகள் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இம்முறை தேர்தலில் மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பிய காரணத்தால் புதிய அரசு உருவாகியுள்ளது. அதேபோல் நாட்டில் ஆரோக்கியமான விதத்தில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டுமென்றால் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக உள்ளது.

இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்பானது 19 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளன. பல இணைப்புகள், சட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆனாலும், நாடாக நாம் இன்னமும் முன்னேற்றம் காணவில்லை. எனவே, புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுமாயின் - அதில் நாட்டை ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படுமாயின் அதனை நாம் வரவேற்க வேண்டும்.

நாட்டில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுத்து, சகல மக்களும் ஒரே நாட்டுக்குள் ஐக்கியமாகவும், சமாதானமாகும், புரிந்துணர்வுடனும் வாழக்கூடிய சூழலை உருவாகிக்கொடுத்தால் அதனூடாக நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்.

அதனைச் சகலரும் உணர்ந்து நாடாளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன். இந்த விடயத்தில் இன, மத, மொழி பாகுபாடுகளைக் கடந்து இலங்கையர் என்ற உணர்வுடன் சகல மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அரசியல் சுயநலங்களை கடந்ததே மக்கள் நலன். அதனைச் சகலரும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/08/31/16146/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் டட்லியும் சொன்னார்.. பண்டாரநாயக்கவும் சொன்னார்.. சிறீமாவோ பண்டாரநாயக்காவும் சொன்னார்.. ஜே ஆரும் சொன்னார்.. சந்திரிக்கா அம்மையாரும் சொன்னார்.. மகிந்தவும் சொன்னார்.. இப்ப கோத்தாவும் சொல்கிறார். 

என்ன தீர்வும் இல்லை.. ஒரு உருப்படியான அரசியல் அமைப்பும் இல்லை.

இதோ சனாதிபதி முறைமையை 100 நாளைக்குள் ஒழிக்கின்றன் என்று வந்தவை எல்லாம்.. அந்த முறைமையை சர்வாதிகாரத்துக்குள் இழுத்துச் சென்று பலப்படுத்திச் சென்றது தான் நிகழ்கிறது.

பேரினவாத.. பதவி அதிகார ஆசையை தவிர.. சொறீலங்காவில் வேறு எதுவும்.. இந்த அரசியலமைப்பு மாற்றங்களால் சாத்தியமாகவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pinto, ஹிந்தி  தமிழ் வெறுப்பு இனத்துவேசிகளுடனுடனும், சௌத் block இல்  உள்ள தமிழ் வெறுப்பாளர்களுடனும், முக்கியமாக மலையாளிகல் மற்றும் பிரமாணுருடனும் 13 ஐ இல்லாமல் செய்வது பற்றி கதைத்து செய்தி அனுப்பி விட்டாரா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.