Jump to content

யாழ். சிறுமியின் நேர்மையான செயல்! குவியும் பாராட்டுக்கள்


Recommended Posts

 

யாழ். சிறுமியின் நேர்மையான செயல்! குவியும் பாராட்டுக்கள்

 

யாழில் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது வீதியில் கண்டெடுத்த தங்க நகையை பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் ஜெகதீஸ் ஜெகதீபா என்ற 12 வயதுச் சிறுமியே இவ்வாறு செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மறவன்புலோ மேற்கு பகுதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் நகைப் பெட்டி ஒன்றினை அவதானித்துள்ளார்.

சிறுமி அதனை திறந்து பார்த்த போது அதனுள் மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் சங்கிலி ஆகியன இருந்துள்ளன. இருப்பினும் சிறுமி அதனை அச்சத்தில் வீட்டுக்கு கொண்டு செல்லாமல் அவ்விடத்திலேயே வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்தவர்கள் அந்த நகைப் பெட்டியை மீட்டு நேற்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பெறுமதிமிக்க நகைகளை நேர்மை மனப்பாங்குடன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தமைக்காக சாவகச்சேரி பொலிஸார் சிறுமிக்கும், சிறுமியின் குடும்பத்தினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

https://adimudi.com/archives/54114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அந்த மண்ணில் மழை  பெய்வது இப்படியானவர்கள் மூலம்தான் பாராட்டுக்கள்  ஜெகதிஸ் ஜெகதீபா வுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இன்னும் அந்த மண்ணில் மழை  பெய்வது இப்படியானவர்கள் மூலம்தான் பாராட்டுக்கள்  ஜெகதிஸ் ஜெகதீபா வுக்கு .

போலீஸ் காரர் இடம் நகை தப்புமா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எமக்கு உரித்தானவை எப்படியாவது எம்மை சேரும். மற்றெல்லாம் எவ்வழியிலாவது போய்சேர்ந்துவிடும் என்று மனப்பூர்வமாக அறிந்த சிறுமி  ஜெகதீபாவுக்கு  எனது பாராட்டுக்கள் ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்ல் ஒளி உண்டானால், வாக்கில் ஒளி உண்டாம். 

வாழ்த்துக்கள் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உரித்தாகட்டும் 👏👏

(எனக்குள்ள சின்னக் கேள்வி - மறவன்  புலவு  / மறவன் புலோ இதில் எது சரியானது 🤔)

Link to comment
Share on other sites

https://ta.wikipedia.org/wiki/மறவன்புலவு

 

சிலர் பேச்சு வழக்கில் மறவன் புலோ என்பதை கேட்டிருக்கிறேன். இற்றை வரை மறவன் புலவு தான் சரியானது என எண்ணினேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான பிள்ளைக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.