Jump to content

உரியவர் உண்மையைச் சொல்லா நிலையில் உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே – பரமபுத்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உரியவர் உண்மையைச் சொல்லா நிலையில் உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே – பரமபுத்திரன்

solhei-696x553.jpg

 

அணுங்கி  ஒருகுரல்  மீண்டும் சிணுங்குது

தன்னையும் வெளிக் காட்டிட  நினைக்குது

இன்னமும் நம்பிட இருக்குது தமிழ்ச்சனம்

இதனால் தெறிக்குது அவர்களின் உரைகள்

ஏனென்றால் தமிழர் உளவியல் அடிமைகள்

தன்னினம் பிறனால் இழிக்கப் படினும்

மகிழ்ந்து சிரித்துக்  கருத்தினை உவந்து

எங்களைப்  பிழையென்று எப்போதும் ஏற்கும்

சங்கடக் குழுவென்று  உலகமே நம்புது

இந்த எண்ணத்தை வலுவாய்ப் பற்றி

எடுத்துத் தொடங்குகிறார் திரும்பவும் பழங்கதை

இவரின் செய்தியை  கேட்கநாம்   தயார்தான்

காரணம் இன்னமும் புலிகளில் வெறுப்புண்டு

இராசிவ் காந்தியைக்  கொன்றது புலிகளாம்

அன்ரன்பாலா தன்  காதில் சொன்னாராம்

அவர்போன பின்தான்  அறிக்கை போடுறார்

உயிருடன் இருக்கையில் உரைக்காது விட்டதேன்

உரியவர் உண்மையைச்  சொல்லா நிலையில்

உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே

சமாதானப் பிரியராய் சந்தினுள் நுழைந்து

வெள்ளைப் புலியென  சிங்களம் சொல்லிட

வெட்கப்   பட்டுச்  செல்லமாய்  நெளிந்து

தொன்நூற் றெட்டில் உள்ளே புகுந்து

தமிழர்  தேசம் அழுகையில் துவண்டு

குருதியால் நிறைந்து பிணங்களால் குவிந்து

உணவின்றி வறண்டு உயிருக்காய் அலைந்து

எல்லாம் முடிந்து பதைத்துத் தவித்து

ஏங்கிப் பயந்து  சிதைந்து  கலைந்து

வழிதேடி  ஓடிப்  போகும் போது

எதுவும் செய்யும் வலிமை  யற்று

இரண்டா யிரத்தொன்பதில் வெளியே சென்று

இப்ப சொல்லுறார் புலிகளில் வெறுப்பாம்

கருத்திட்டுத்  தன்னையும் பெருமையாய்க்  காட்டுறார்

மேலும் அவரே அறிவுரை பகார்கிறார்

வன்முறை தவிர்த்துக்  களத்திலும் புலத்திலும்

நீண்ட நெடிய அமைதிப்போர்  நடத்தி

வெல்லலாம் தமிழர் நல்வழி அதுவென்று

அரசுகள் எல்லாம் ஆயுதம் தாங்கி

சுட்டுப் பொசுக்கலாம் துரத்தி விரட்டலாம்

அப்பாவிக் குடிகளை அழித்து முடிக்கலாம்

அவர்க்கது அனுமதி தப்பே யில்லை

ஆனால் மக்கள் அமைதி காத்து

அறவழிப் போரினை நடத்த வேண்டும்

இப்படி மதியுரை  கூறுவோர் எல்லாம்

சொல்லுக ஒருமுறை அரசு செய்வோர்க்கு

ஆயுதம் தவிர்த்து நீதியை உணர்ந்து

மக்கள் குறையினை மதித்து அறிந்து

அனைவரும் சமமாய்  ஆக்கிடின் நலமே

சுற்றும் உலகின் பொதுவிதி எதுவெனில்

வெற்றியைப் போற்றித்  தோல்வியை இழித்து

தாங்கள்  வாழ வழியினைத் தேடல்

நல்லவர்  என்று சிரிப்புடன் கூறல்

விடுதலைப் புலிகளை விடுவோம் ஒருபுறம்

இனிமேல் ஒன்றைத்  தெளிவாய் புரிவோம்

தறிகெட்டுத்  தவித்த தமிழருக்  குதவிட

தாங்கள் செய்திட்ட செயல்கள் சொல்லுக

வெள்ளைக் கொடியுடன் உயிரினை விரும்பி

வெறுங்கை உயர்த்தி அடைக்கலம் கேட்டோர்

எங்கென்று தெரியா அவலமே எச்சம்

நாட்டினில் இருந்து வேற்றிடம் சென்றோன்

அகதியாய் தனிமையில் நொந்து வாழ்கிறான்

மனைவி பிள்ளைகள் ஊரினில் இருக்க

மாற்று நாட்டில் அநாதை ஆயினர்

அங்கும் பலபேர் செத்தும் போயினர்

எங்களுக்கும் அதுவெறும் செய்தி மட்டுமே

தமிழர்க்கு நாம் கவலைப்படவே மாட்டோம்

வென்றவன் உலகில் நன்றே வாழ

தோற்றவன் நிலையை சிந்திக்க யாருமில்லை

கூத்தின் கோமாளி சிரிக்க வைப்பதுபோல்

உத்திகள் புதிதாய் எடுத்து விடுகிறார்

முடியாமை கண்டால் ஒதுங்கிடல் பண்பு

மற்றோரைக்  குறை கூறிடல் இழிவு

விறைப்பாய் நிமிர்ந்தவர்  வீழ்ந்தது சோகம்

நொந்தவன் தமிழன் வெந்தது தமிழ்நிலம்

தாழ்ந்தது தமிழினம் வீழ்ந்தது தமிழ்க்குடி

உயிரீந்த பெரியோரை குறைகாணல்  சரியல்ல

உயர்வாக நீங்கள் சிறப்பாக வாழுங்கள்

இழுக்காதீர் வீரர்களை உரைக்காதீர் புதுக்கதைகள்

அவர்கள்போல நாமும் அடிமையென உணர்கையிலே

தமிழினம் விடிவுபெறும் தரணியில் உரிமையுடன்

http://www.ilakku.org/உரியவர்-உண்மையைச்-சொல்ல/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.