Jump to content

கல்முனையில் 305 பேருக்கு நியமனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை – கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) கையளிக்கப்பட்டன.

கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.https://newuthayan.com/கல்முனையில்-305-பேருக்கு-நி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எத்தனை தமிழ்?

ம்கும் போட்டோ காட்டவா  இது செய்தியில் இருக்கும் முஸ்லீம் பிரிவு தமிழ் பிரதேச செயலகத்தில் எத்தனை என தெரியாது 

வெளிவாரி பட்டங்களை குறிப்பாக அம்பாறையில் இருக்கும் தமிழ் இளையவர்கள் முடிப்பதில்லை ஏ எல் முடிந்த பிறகு ஆண்கள் சந்தியில் பெண்கள் வீட்டில் ஆனால் முஸ்லீம் இனத்தவர்கள் அப்படி இல்லை கிடைக்கும் சகல வளங்களையும் பயன்படுத்தி முன்னேறி விட்டார்கள் 

இதனால்தான் தொழில் இல்லை நம்ம இனத்தவர்களுக்கு காசு கொடுத்து அரசியல் வாதிகளை பிடித்து தொழிலை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் இதனால் அரசியல் வாதிகளுக்கு பின்னுக்கு வால் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இப்ப வரைக்கும்

Image may contain: 1 person, sitting and crowd

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் போட்டோ காட்டவா  இது செய்தியில் இருக்கும் முஸ்லீம் பிரிவு தமிழ் பிரதேச செயலகத்தில் எத்தனை என தெரியாது 

வெளிவாரி பட்டங்களை குறிப்பாக அம்பாறையில் இருக்கும் தமிழ் இளையவர்கள் முடிப்பதில்லை ஏ எல் முடிந்த பிறகு ஆண்கள் சந்தியில் பெண்கள் வீட்டில் ஆனால் முஸ்லீம் இனத்தவர்கள் அப்படி இல்லை கிடைக்கும் சகல வளங்களையும் பயன்படுத்தி முன்னேறி விட்டார்கள் 

இதனால்தான் தொழில் இல்லை நம்ம இனத்தவர்களுக்கு காசு கொடுத்து அரசியல் வாதிகளை பிடித்து தொழிலை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் இதனால் அரசியல் வாதிகளுக்கு பின்னுக்கு வால் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இப்ப வரைக்கும்

Image may contain: 1 person, sitting and crowd

இது தேர்தலுக்கு பின் வந்த நியமனக்களா?

இவர்களின் ஆட்டம் புதிய தமிழ் அரசியல்வாதிகளால் கொஞ்சம் குறைந்திருக்குமோ என்று நினைத்தேன் ( அப்படி நடக்கும் என நம்பவில்லை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இது தேர்தலுக்கு பின் வந்த நியமனக்களா?

இவர்களின் ஆட்டம் புதிய தமிழ் அரசியல்வாதிகளால் கொஞ்சம் குறைந்திருக்குமோ என்று நினைத்தேன் ( அப்படி நடக்கும் என நம்பவில்லை).

இது நேற்று வழங்கப்பட்டது 

 

அப்படி அடக்க முடியாது அவர்களை  கர்ணா தோற்றதுதான் அவர்களுக்கு பாரிய வெற்றியாம்

அரசியலை விடுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது நேற்று வழங்கப்பட்டது 

 

அப்படி அடக்க முடியாது அவர்களை  கர்ணா தோற்றதுதான் அவர்களுக்கு பாரிய வெற்றியாம்

அரசியலை விடுவோம் 

அம்மானுக்கு தேசிய பட்டியலில் கொடுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அம்மானுக்கு தேசிய பட்டியலில் கொடுத்திருக்கலாம்.

அவர் மொட்டில் கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் தனிக்கட்சி என்றபடியால் கொடுக்க முடியாது வாக்கு அதிகம் பெற்றீருக்க வேண்டும் மாவட்ட விகிதாசரத்திற்கேற்ப

கர்ணா அம்மானை தோற்க வைத்தது கூட்டமைப்பினரே . அதே முஸ்லீம்களாலும் முஸ்லீம் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிடப்பட்டது தமிழ் தேசிய கூட்ட்மைப்புக்கு வாக்களிச்சொல்லி காரணம் கர்ணா வென்றால் தங்களுக்கு ஆபத்தாக அமையுமென்றும். நாதா   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் மொட்டில் கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் தனிக்கட்சி என்றபடியால் கொடுக்க முடியாது வாக்கு அதிகம் பெற்றீருக்க வேண்டும் மாவட்ட விகிதாசரத்திற்கேற்ப

கர்ணா அம்மானை தோற்க வைத்தது கூட்டமைப்பினரே . அதே முஸ்லீம்களாலும் முஸ்லீம் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிடப்பட்டது தமிழ் தேசிய கூட்ட்மைப்புக்கு வாக்களிச்சொல்லி காரணம் கர்ணா வென்றால் தங்களுக்கு ஆபத்தாக அமையுமென்றும். நாதா   

அரசியல் பேசவில்லை முனி,

ஆனால் கருணா 10 வருடமாக பிரதி அமைச்சர்தானே? அப்போ ஏன் இவர்களின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. 

இந்தா பிள்ளையான், எம்பி. அமல் ராஜாங்க அமைச்சர் - ஏன் இவர்களால் முடியவில்லை? 

கருணா பிரதி அமைச்சராக இருந்த காலத்தில்தானே ஹிஸ்புல்லா மார்கெட்டும், கம்பெஸ்சும் கட்டின?

உண்மை என்னவென்றால் இந்த பூனைக்கு இவர்கள் ( கூட்டமைப்பையும் சேர்த்துத்தான்) யாராலும் மணி கட்ட முடியாது.

இவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்செல்லாம் மேடைக்கு மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வி. முரளிதரனை  வைத்து முஸ்லிம், தமிழ் முரண்பாடுகளை வளர்க்கவும், ஒருமைப்படாமல் தடுக்கவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் இலக்கு த .தே. கூட்டமைப்பை உடைத்து  கைக்கூலியை பிரித்தெடுத்து  தனது தேவைக்கு கையாள்வது. கருணாவை வெல்ல வைப்பதால் சிங்களத்துக்கு என்ன நன்மை? முரளிதரனால்  பெற்ற நன்மை முடிந்து விட்டது. இனி தொடரும் சிக்கலில் இருந்து மீள்வதற்கு யார் வேண்டுமோ அவரை வளைப்பதிலேயே அவனது கவனம்.  ஒவ்வொரு துரோகியும் தனக்குள்ள வரையறையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுக்கு மேல் துள்ளினா அவன் தன் பாணியில் கவனிப்பான். அவர் மக்களுக்கு சேவை செய்தவர் என்றால், முஸ்லீம்களிடம் இருந்து காப்பாற்றுவார் என்று மக்கள் எண்ணியிருந்தால், சேவை பெற்றிருந்தால் ஏன் அவரை கைவிட்டனர்? எல்லாம் ஏற்படுத்தப்பட்ட மாயை. அவரது தேர்தல் பேச்சு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நெருக்கடியை தோற்றுவித்தது. இவரை தன்னோடு வைத்திருந்தால் தான் குற்றவாளி என்பதற்கு வேறொரு ஆதாரம் தேவையில்லை, தனது வீரக்கதை எடுபடாது என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும். த. தே. கூட்டமைப்புக்கு விருந்து வைத்துக்கொண்டே வீடைக்கொள்ளை அடித்ததுபோல் இவருக்கும் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

அரசியல் பேசவில்லை முனி,

ஆனால் கருணா 10 வருடமாக பிரதி அமைச்சர்தானே? அப்போ ஏன் இவர்களின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. 

இந்தா பிள்ளையான், எம்பி. அமல் ராஜாங்க அமைச்சர் - ஏன் இவர்களால் முடியவில்லை? 

கருணா பிரதி அமைச்சராக இருந்த காலத்தில்தானே ஹிஸ்புல்லா மார்கெட்டும், கம்பெஸ்சும் கட்டின?

உண்மை என்னவென்றால் இந்த பூனைக்கு இவர்கள் ( கூட்டமைப்பையும் சேர்த்துத்தான்) யாராலும் மணி கட்ட முடியாது.

இவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்செல்லாம் மேடைக்கு மட்டுமே. 

நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் இருந்தது மட்டக்களப்பில் ஆனால் சில விடயங்கள் அங்கு நடந்தாலும் அது தாவது நூற்றுக்கு 20 வீதம் ஆனால் அம்பாறை அப்படியல்ல யாருமே இல்லாததால் மொத்தமாக கூறு போட்டு எடுத்துக்கொண்டார்கள் 

நீங்கள் குறிப்பிட்ட காலம் மட்டக்களப்பு எம்பிக்கள் பிரதி யமைச்சர்கள் அம்பாறையை கண்டு கொள்ள வில்லை என்பது மறக்க முடியாத உன்மை .

சில விடயங்களை மட்டக்களப்பில் பிள்ளையான் தடுத்தார் ஆனால் அவர்கள் மத்திய கிழக்கின் நிதிகளை  இலங்கைக்குள் கொண்டு வந்ததனால் அரசும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை பிள்ளையானால் எதுவும் செய்ய முடியவில்லை சஹ்றான் வச்ச ஆப்பு அவர்களை இன்று கொஞ்சமாவது இறுக்கி வைத்துள்ளது இல்லையென்றால் இதை விட மூர்க்கமாக இருக்கு கோசான் 

16 hours ago, satan said:

வி. முரளிதரனை  வைத்து முஸ்லிம், தமிழ் முரண்பாடுகளை வளர்க்கவும், ஒருமைப்படாமல் தடுக்கவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் இலக்கு த .தே. கூட்டமைப்பை உடைத்து  கைக்கூலியை பிரித்தெடுத்து  தனது தேவைக்கு கையாள்வது. கருணாவை வெல்ல வைப்பதால் சிங்களத்துக்கு என்ன நன்மை? முரளிதரனால்  பெற்ற நன்மை முடிந்து விட்டது. இனி தொடரும் சிக்கலில் இருந்து மீள்வதற்கு யார் வேண்டுமோ அவரை வளைப்பதிலேயே அவனது கவனம்.  ஒவ்வொரு துரோகியும் தனக்குள்ள வரையறையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுக்கு மேல் துள்ளினா அவன் தன் பாணியில் கவனிப்பான். அவர் மக்களுக்கு சேவை செய்தவர் என்றால், முஸ்லீம்களிடம் இருந்து காப்பாற்றுவார் என்று மக்கள் எண்ணியிருந்தால், சேவை பெற்றிருந்தால் ஏன் அவரை கைவிட்டனர்? எல்லாம் ஏற்படுத்தப்பட்ட மாயை. அவரது தேர்தல் பேச்சு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நெருக்கடியை தோற்றுவித்தது. இவரை தன்னோடு வைத்திருந்தால் தான் குற்றவாளி என்பதற்கு வேறொரு ஆதாரம் தேவையில்லை, தனது வீரக்கதை எடுபடாது என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும். த. தே. கூட்டமைப்புக்கு விருந்து வைத்துக்கொண்டே வீடைக்கொள்ளை அடித்ததுபோல் இவருக்கும் நடந்தது. 

இவ்வளவும் தெரிந்தும் 30000 பேர் ஏன் எதற்க்காக வாக்களித்தார்கள் என்றும் சிந்திக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது பிரமையா அல்லது உண்மையா என்று தெரியவில்லை. கருணா தோற்றதன் பிறகு ஒரு சில யாழ் இணைய அன்பர்களின் கருத்துக்களை அதிகம் காணக் கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். முஸ்லீம்களை எதிர்க்கவே கருணாவை ஆதரித்தீர்களென்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், கருணா பிரிந்துசென்றபோது நீங்களும் அதனைக் கடுமையாக விமர்சித்தே வந்தீர்கள். ஆகவே அவர் செய்ததுபற்றி உங்களுக்குப் போதுமான தெளிவு இருந்தது, இப்போதும் இருக்கலாம். 

அவர் தோற்றதற்காக நீங்கள் கவலைப்படுவது முஸ்லீம்களின் கொட்டத்தினை அடக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில்த்தான் என்றால், அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவரை உங்கள் தலைவராகவோ, அரசியல் பிரதிநிதியாகவோ பார்த்துப் பின் தொடர்வது ஆபத்தானது. ஏனென்றால் அவரை ஆட்டுவிப்பது சிங்களப் பேரினவாதம்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 

Link to comment
Share on other sites

இதை நாம் கிழக்கு பிரச்சனையாக மட்டும் கோள்கள் கூடாது; 5 வருடங்களாக ஓய்ந்திருந்த காணி பிடிப்பு இனி முன்னாள் அடாவடி மினிஸ்ட்டரினால் மீண்டும் தொடங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

இது எனது பிரமையா அல்லது உண்மையா என்று தெரியவில்லை. கருணா தோற்றதன் பிறகு ஒரு சில யாழ் இணைய அன்பர்களின் கருத்துக்களை அதிகம் காணக் கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். முஸ்லீம்களை எதிர்க்கவே கருணாவை ஆதரித்தீர்களென்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், கருணா பிரிந்துசென்றபோது நீங்களும் அதனைக் கடுமையாக விமர்சித்தே வந்தீர்கள். ஆகவே அவர் செய்ததுபற்றி உங்களுக்குப் போதுமான தெளிவு இருந்தது, இப்போதும் இருக்கலாம். 

அவர் தோற்றதற்காக நீங்கள் கவலைப்படுவது முஸ்லீம்களின் கொட்டத்தினை அடக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில்த்தான் என்றால், அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவரை உங்கள் தலைவராகவோ, அரசியல் பிரதிநிதியாகவோ பார்த்துப் பின் தொடர்வது ஆபத்தானது. ஏனென்றால் அவரை ஆட்டுவிப்பது சிங்களப் பேரினவாதம்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 

ஹாஹா இது எனக்கு எழுதியிருந்தால், மன்னிக்கவும் உங்கள் நினைப்பு பிழை ... என்னுடைய அண்ணா அம்பாறையில் நின்ற முதல் தேர்தலிலேயே 30 000 வாக்குகள் எடுத்திருந்தார் ...இது சம்மந்தர் ,சீவி எடுத்த வாக்குகளை விடவும் அதிகம் ....அவர் தோத்ததிற்கு காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...அந்த மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட தவறி விட்டார்கள்....அவர்களும் வோட் போட போயிருந்தால் நிட்சயமாய் வென்று இருப்பார்.
சீவி போன்றவர்களை நம்பிக் கெடுவதை விட இவரை நம்புவது ஒன்றும் ஆபத்தில்லை ...இவர் ஒன்றும் நான் உங்களுக்கு தீர்வு எடுத்து தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை...தன்னால் முடிந்ததை தான் செய்வேன் என்று சொல்லுகிறார்.
தற்போது புலிகள் அமைப்பு இல்லாத கால கட்டத்தில் சீவியோ சரி அல்லது மற்ற யாருமோ சரி புலிகள் மக்களுக்காய் தான் போராடினார்கள் என்று பழங் கதைத்து யாருக்கு என்ன பிரயோசனம் ?... புலிகள் ,எங்களுக்காய் போராடினார்கள் என்பது எங்களை விட கோத்தா சகோதரர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ நன்றாய்த் தெரியும் ...மீண்டும் உணர்ச்சிகரமான  கதைகளை கதைத்து மிச்சமிருக்கும் தமிழரையும் அழிப்பதற்கு அல்லது நாட்டை விட்டு ஓட வைப்பதற்கு தான் சீவி போன்றவர்கள் முயலுகிறார்கள்....தங்கள் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காய் அந்த மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துகின்றனர்...என்னைப் பொறுத்த வரை டக்கி,அங்கயன் இவர்களை விட எவ்வளவோ மேல் .

கருணா ஒன்றும் தேர்தலுக்காய் மட்டும் அந்த மக்களுக்காய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை ...தேர்தலுக்கு முன்னும் சரி ,பின்னும் சரி தன்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறார்...அவர் தேர்தலில் தோத்தது கொஞ்சம் கவலை தான்...ஆனால் அதற்காக யாழை விட்டு ஒதுங்கும் அளவிற்கு அல்ல 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஹாஹா இது எனக்கு எழுதியிருந்தால், மன்னிக்கவும் உங்கள் நினைப்பு பிழை ... என்னுடைய அண்ணா அம்பாறையில் நின்ற முதல் தேர்தலிலேயே 30 000 வாக்குகள் எடுத்திருந்தார் ...இது சம்மந்தர் ,சீவி எடுத்த வாக்குகளை விடவும் அதிகம் ....அவர் தோத்ததிற்கு காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...அந்த மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட தவறி விட்டார்கள்....அவர்களும் வோட் போட போயிருந்தால் நிட்சயமாய் வென்று இருப்பார்.
சீவி போன்றவர்களை நம்பிக் கெடுவதை விட இவரை நம்புவது ஒன்றும் ஆபத்தில்லை ...இவர் ஒன்றும் நான் உங்களுக்கு தீர்வு எடுத்து தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை...தன்னால் முடிந்ததை தான் செய்வேன் என்று சொல்லுகிறார்.
தற்போது புலிகள் அமைப்பு இல்லாத கால கட்டத்தில் சீவியோ சரி அல்லது மற்ற யாருமோ சரி புலிகள் மக்களுக்காய் தான் போராடினார்கள் என்று பழங் கதைத்து யாருக்கு என்ன பிரயோசனம் ?... புலிகள் ,எங்களுக்காய் போராடினார்கள் என்பது எங்களை விட கோத்தா சகோதரர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ நன்றாய்த் தெரியும் ...மீண்டும் உணர்ச்சிகரமான  கதைகளை கதைத்து மிச்சமிருக்கும் தமிழரையும் அழிப்பதற்கு அல்லது நாட்டை விட்டு ஓட வைப்பதற்கு தான் சீவி போன்றவர்கள் முயலுகிறார்கள்....தங்கள் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காய் அந்த மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துகின்றனர்...என்னைப் பொறுத்த வரை டக்கி,அங்கயன் இவர்களை விட எவ்வளவோ மேல் .

கருணா ஒன்றும் தேர்தலுக்காய் மட்டும் அந்த மக்களுக்காய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை ...தேர்தலுக்கு முன்னும் சரி ,பின்னும் சரி தன்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறார்...அவர் தேர்தலில் தோத்தது கொஞ்சம் கவலை தான்...ஆனால் அதற்காக யாழை விட்டு ஒதுங்கும் அளவிற்கு அல்ல 🙂

திருகோணமலையில் வயல்காணிகளை பிடித்து யாரும் உள்ளே செல்லக்கூடாது வயல் எங்களுக்கு சொந்தம் என சொல்கிறார் ஒரு பிக்கு என்ன செய்யலாம்  சம்பந்தர் ஐயாவை போய் கோட்டாவிடம் பேச சொல்லுவோமா  தலைநகரத்தையே கொடுத்தாச்சு இப்ப தள்ளாடும் அம்பாறையை என்ன செய்வது ?

காலம் கடந்து போச்சு ரதி  ரகுநாதன் போல எனக்கும் கவலைதான் ஆனால் என்ன செய்வது  வழுக்கி விழுந்தாச்சி இருக்கும் வாலாவது மிஞ்ச வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

திருகோணமலையில் வயல்காணிகளை பிடித்து யாரும் உள்ளே செல்லக்கூடாது வயல் எங்களுக்கு சொந்தம் என சொல்கிறார் ஒரு பிக்கு என்ன செய்யலாம்  சம்பந்தர் ஐயாவை போய் கோட்டாவிடம் பேச சொல்லுவோமா  தலைநகரத்தையே கொடுத்தாச்சு இப்ப தள்ளாடும் அம்பாறையை என்ன செய்வது ?

காலம் கடந்து போச்சு ரதி  ரகுநாதன் போல எனக்கும் கவலைதான் ஆனால் என்ன செய்வது  வழுக்கி விழுந்தாச்சி இருக்கும் வாலாவது மிஞ்ச வேண்டும் 

சத்தியமா தனி,

இந்த பிள்ளையான், கருணா, அமல் போன்றவர்களினால் வாலாவது மிஞ்சும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

சாணக்கியன் ஆள் எப்படி? கொஞ்சம் துடிப்பா செயல்படுறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 22:54, goshan_che said:

சத்தியமா தனி,

இந்த பிள்ளையான், கருணா, அமல் போன்றவர்களினால் வாலாவது மிஞ்சும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

சாணக்கியன் ஆள் எப்படி? கொஞ்சம் துடிப்பா செயல்படுறார்?

ஹாஹா அவரும் அரசின் கைக்குள்தானே முதல் மகிந்த கட்சி தானே ஆள் 

தமிழரசுக்கட்சிக்கு வளர்ச்சி நிதி கொடுத்து உள்ள வந்திருக்கிறார் நாளை நாலாவது மாதத்தில் காட்சிகள் மாறலாம் 😊😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா அவரும் அரசின் கைக்குள்தானே முதல் மகிந்த கட்சி தானே ஆள் 

தமிழரசுக்கட்சிக்கு வளர்ச்சி நிதி கொடுத்து உள்ள வந்திருக்கிறார் நாளை நாலாவது மாதத்தில் காட்சிகள் மாறலாம் 😊😊

ஆகா.. நீங்கள் சொல்லீட்டீங்கள் தனி, இந்த திரியில் இவர்கள் எப்படி பொங்கியிருக்கிறார்கள்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2020 at 01:58, தனிக்காட்டு ராஜா said:

சம்பந்தர் ஐயாவை போய் கோட்டாவிடம் பேச சொல்லுவோமா

உங்கள் அரசியல் எனக்குப் புரியவில்லை. கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் ஆதரவளித்து பிள்ளையானையும், வியாழேந்திரனையும் பாராளுமன்றம் அனுப்பிய நீங்களல்லவா கோத்தாவுக்கு அருகில் இருக்கிறீர்கள், நீங்கள் பேசலாமே? அபிவிருத்தியும், வேலைவாய்ப்பும் போதும் என்றுவிட்டு இப்போது நிலம்பறிபோகுதென்று அழுதால் எப்படி? எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

ஆகா.. நீங்கள் சொல்லீட்டீங்கள் தனி, இந்த திரியில் இவர்கள் எப்படி பொங்கியிருக்கிறார்கள்....

 

இவர் அங்கு தேர்தலில் நிற்க முன்னரே இவர் வென்றதும் கட்சி மாறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தது தான் ....கூட்டமைப்பில் தொடர்ந்து இருந்தால் அமைச்சு பதவி கிடைக்காது  அல்லது கூட்டமைப்பை உடைப்பதற்காக  சும்முக்கு உதவியாய் இருப்பாரோ தெரியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாங்கள் சொன்னால் பிரதேசவாதம் என்பியள்....

9 hours ago, ரதி said:

இவர் அங்கு தேர்தலில் நிற்க முன்னரே இவர் வென்றதும் கட்சி மாறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தது தான் ....கூட்டமைப்பில் தொடர்ந்து இருந்தால் அமைச்சு பதவி கிடைக்காது  அல்லது கூட்டமைப்பை உடைப்பதற்காக  சும்முக்கு உதவியாய் இருப்பாரோ தெரியாது 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 11:59, ரதி said:

ஹாஹா இது எனக்கு எழுதியிருந்தால், மன்னிக்கவும் உங்கள் நினைப்பு பிழை ... என்னுடைய அண்ணா அம்பாறையில் நின்ற முதல் தேர்தலிலேயே 30 000 வாக்குகள் எடுத்திருந்தார் ...இது சம்மந்தர் ,சீவி எடுத்த வாக்குகளை விடவும் அதிகம் ....அவர் தோத்ததிற்கு காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...அந்த மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட தவறி விட்டார்கள்....அவர்களும் வோட் போட போயிருந்தால் நிட்சயமாய் வென்று இருப்பார்.
சீவி போன்றவர்களை நம்பிக் கெடுவதை வி இவரை நம்புவது ஒன்றும் ஆபத்தில்லை ...இவர் ஒன்றும் நான் உங்களுக்கு தீர்வு எடுத்து தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை...தன்னால் முடிந்ததை தான் செய்வேன் என்று சொல்லுகிறார்.
ற்போது புலிகள் அமைப்பு இல்லாத கால கட்டத்தில் சீவியோ சரி அல்லது மற்ற யாருமோ சரி புலிகள் மக்களுக்காய் தான் போராடினார்கள் என்று பழங் கதைத்து யாருக்கு என்ன பிரயோசனம் ?... புலிகள் ,எங்களுக்காய் போராடினார்கள் என்பது எங்களை விட கோத்தா சகோதரர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ நன்றாய்த் தெரியும் ...மீண்டும் உணர்ச்சிகரமான  கதைகளை கதைத்து மிச்சமிருக்கும் தமிழரையும் அழிப்பதற்கு அல்லது நாட்டை விட்டு ஓட வைப்பதற்கு தான் சீவி போன்றவர்கள் முயலுகிறார்கள்....தங்கள் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காய் அந்த மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துகின்றனர்...என்னைப் பொறுத்த வரை டக்கி,அங்கயன் இவர்களை விட எவ்வளவோ மேல் .

கருணா ஒன்றும் தேர்தலுக்காய் மட்டும் அந்த மக்களுக்காய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை ...தேர்தலுக்கு முன்னும் சரி ,பின்னும் சரி தன்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறார்...அவர் தேர்தலில் தோத்தது கொஞ்சம் கவலை தான்...ஆனால் அதற்காக யாழை விட்டு ஒதுங்கும் அளவிற்கு அல்ல 🙂

உண்மைதான்.இதைச் சொன்னால் பட்டமளிப்பு விழா எல்லோ நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 00:31, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் போட்டோ காட்டவா  இது செய்தியில் இருக்கும் முஸ்லீம் பிரிவு தமிழ் பிரதேச செயலகத்தில் எத்தனை என தெரியாது 

வெளிவாரி பட்டங்களை குறிப்பாக அம்பாறையில் இருக்கும் தமிழ் இளையவர்கள் முடிப்பதில்லை ஏ எல் முடிந்த பிறகு ஆண்கள் சந்தியில் பெண்கள் வீட்டில் ஆனால் முஸ்லீம் இனத்தவர்கள் அப்படி இல்லை கிடைக்கும் சகல வளங்களையும் பயன்படுத்தி முன்னேறி விட்டார்கள் 

இதனால்தான் தொழில் இல்லை நம்ம இனத்தவர்களுக்கு காசு கொடுத்து அரசியல் வாதிகளை பிடித்து தொழிலை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் இதனால் அரசியல் வாதிகளுக்கு பின்னுக்கு வால் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இப்ப வரைக்கும்

ஓய் ...ஒருக்கா பாருமப்பா முக்கால்வாசி ஓதல் பள்ளியில் அரபியில் ஓத படிச்சுப்போட்டு வந்து 
அரச வேலை கேக்குதாம்...நம்ம ஏரியாவை விடுங்கோ இனி கடவுள் தான் காப்பாற்றவேணும் 
அதுதான் கருணாவையும் காலிபண்ணியாச்செல்லோ வெறிக்குட்டி கோடீஸ் புண்ணியத்தில் 
அதிலும் அதாவுல்லா மகனோடு சேர்ந்து கருணாவிற்கு எதிராக வேலை பார்த்தார் பாருங்கோ ...தமிழன்டா  

கோசான் ஜீ ..முதலிலேயே சொன்னேனில்லையா....மக்கள் அவர்களுக்கான தெரிவை அவர்களே கண்டுகொள்ளவார்கள் என்று, கோடீஸ் கூத்தடித்ததால் காலி , சாணக்கியன் அரசுடன் சேர்ந்தால் பிழைப்பார் ,கலையரசன் டம்மி பீசு, கூத்தாடிகள் வந்த வேலையை தொடங்கிட்டினம் தங்களது வேலையை விட்டுவிட்டு 
வியாளன் பொன்னாடை போர்த்தப்படுவதையும் அங்கயனுக்கு தடல் புடல் வரவேற்பு கொடுப்பதையும் விமர்சனம் செய்யும் Duty Assume பண்ணியிருக்கினம் , வியாளனும், அங்கயனும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கத்தான் இவையல்  பாராளுமன்றம் வந்திருக்கினம் போல ...அதுசரி இவர்களால் முடிந்தது இவ்வளவும்தானே, மூன்றுமொழிகளிலும் பிய்த்து உதறுகிறார் என்று புளங்காகிதமடைந்தவர்களுக்கு பொன்சேகா கொடுத்த வார்னிங் ஓவராக பம்மினால் ரவிராஜ் தான் ,   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2020 at 04:54, ரஞ்சித் said:

உங்கள் அரசியல் எனக்குப் புரியவில்லை. கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் ஆதரவளித்து பிள்ளையானையும், வியாழேந்திரனையும் பாராளுமன்றம் அனுப்பிய நீங்களல்லவா கோத்தாவுக்கு அருகில் இருக்கிறீர்கள், நீங்கள் பேசலாமே? அபிவிருத்தியும், வேலைவாய்ப்பும் போதும் என்றுவிட்டு இப்போது நிலம்பறிபோகுதென்று அழுதால் எப்படி? எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

யார் அழுதது கிழக்கில் அம்பாறை போகும் போது ஒருவர் கூட வாய்திறக்க வில்லை இப்போது திருகோணமலை யாராவது வாய் திறந்தார்களா இல்லை  மன்னிிக்கவும் எனது ஒரு வாக்கு அவர்களை பாராளுமன்றம் நோக்கி அனுப்பாாது 

இழந்தவன் மட்டும் அழுவான் மற்றவர்கள் ஆறுதல் கருத்து சொல்லலாம் 😊

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஓய் ...ஒருக்கா பாருமப்பா முக்கால்வாசி ஓதல் பள்ளியில் அரபியில் ஓத படிச்சுப்போட்டு வந்து 
அரச வேலை கேக்குதாம்...நம்ம ஏரியாவை விடுங்கோ இனி கடவுள் தான் காப்பாற்றவேணும் 
அதுதான் கருணாவையும் காலிபண்ணியாச்செல்லோ வெறிக்குட்டி கோடீஸ் புண்ணியத்தில் 
அதிலும் அதாவுல்லா மகனோடு சேர்ந்து கருணாவிற்கு எதிராக வேலை பார்த்தார் பாருங்கோ ...தமிழன்டா  

கோசான் ஜீ ..முதலிலேயே சொன்னேனில்லையா....மக்கள் அவர்களுக்கான தெரிவை அவர்களே கண்டுகொள்ளவார்கள் என்று, கோடீஸ் கூத்தடித்ததால் காலி , சாணக்கியன் அரசுடன் சேர்ந்தால் பிழைப்பார் ,கலையரசன் டம்மி பீசு, கூத்தாடிகள் வந்த வேலையை தொடங்கிட்டினம் தங்களது வேலையை விட்டுவிட்டு 
வியாளன் பொன்னாடை போர்த்தப்படுவதையும் அங்கயனுக்கு தடல் புடல் வரவேற்பு கொடுப்பதையும் விமர்சனம் செய்யும் Duty Assume பண்ணியிருக்கினம் , வியாளனும், அங்கயனும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கத்தான் இவையல்  பாராளுமன்றம் வந்திருக்கினம் போல ...அதுசரி இவர்களால் முடிந்தது இவ்வளவும்தானே, மூன்றுமொழிகளிலும் பிய்த்து உதறுகிறார் என்று புளங்காகிதமடைந்தவர்களுக்கு பொன்சேகா கொடுத்த வார்னிங் ஓவராக பம்மினால் ரவிராஜ் தான் ,   

கண் சொட்தானே அது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.