Jump to content

கத்தரீனுக்கு வயது பதினெட்டு!


Recommended Posts

கலாச்சார வித்தியாசங்களின் பரிமாங்களும் அளவுகோல்களும்!  

(ஆங்கில உரையாடல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.)

“எப்படி இருக்கிறாய் தோழி?” சிரித்தபடி வந்த கத்தரீனின் நீலக்கண்களும் புன்னகைத்தன.

“ நல்ல சுகமாய் இருக்கிறன்!” சொன்னபடியே அவள் முகத்தைப் பார்த்தேன்.
“ எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருந்தது ஏனோ?” கேள்வியில் ஒரு வித கோபம் கலந்த பாசம்.
“நேத்தைக்கு ஏதோ முகத்தை தூக்கி வைச்சிருந்தாய்,கோபத்தில் இருக்கிறாய், இன்று பேசலாம் என இருந்தேன்,” பதில் சொல்ல கத்தரீன் கலகலவெனச் சிரித்தது அந்தக் கணங்களை லேசாக்கியது.
“ நேற்றைக்கு எனக்கு உடல் நிலை நல்லாயில்லை, வைத்தியரைக் கூப்பிடச் சொன்னேன், நீ கூப்பிடவேயில்லை!” கத்தரீன் குறைப்பட்டுக் கொண்டாள்.
“ நான் தொலைபேசியில்க் கூப்பிட்டேன், வைத்தியர் வராததுக்கு நான் என்ன பண்ணலாம்?” பதில் சொல்லிவிட்டு நான் சில ஆவணங்களைச் சரி பார்க்கத் தொடங்க, கத்தரீனின் அடுத்த தாக்குதல் ஆரம்பித்தது.

“ வைத்தியர் ஆங்கிலம் மட்டும் தான் பேசுவார், நீ சிலவேளை உன்னுடைய மொழியில் அழைத்திருந்தால் அவருக்குப் புரிந்திருக்காது. அது தான் அவர் என்னைப் பார்க்க வரவில்லைப் போல!” குறுகுறுவென என்னைப் பார்த்தாள்.

“உடம்பெல்லாம் திமிர்தான் உனக்கு, உனக்கு இனவெறி இருப்பதாய் பொலிசிடம் முறைப்பாடு செய்யப் போறன்!” சொல்லும் போதே எனக்கு சிரிப்பு வந்தது, அடக்கிக் கொண்டேன்.
“ நான் பார்க்காத பொலிசா? நீ என்னுடைய சிகரெட் பக்கெற்றை எனது அனுமதியின்றி வைத்திருக்கிறாய் என்று அவர்களுக்குப் போட்டுக் கொடுப்பேன்!” அவளுடைய பதிலில் இருந்த நிஜம் என் மனதைத் தொட்டுச் சென்றது.

“ நீ எந்த நாளும் வைத்தியரைக் கூப்பிடுறது எதுக்கெண்டு எனக்கெல்லோ தெரியும்!” முகத்தை படு சீரியஸாக வைக்க முயற்சித்தேன்.
வைத்தியர் வந்ததும் தனக்கு சிகரெட் வேண்டும் என்று கேட்பதும், அந்த வைத்தியரும் அவள் தன் வாழ்வை அனுபவிக்க வேண்டும், கொடுத்துத் தொலையுங்கோ என்று சிரிப்பதும் வழமை.

“ அப்ப விளங்குதெல்லோ, அந்தாள் வந்து சொன்னால் தான் எல்லாம் சரியாய் நடக்கும், குறையெல்லாம் நினைக்காமல் தயவு செய்து, ஒரேயொரு சிகரெட் தா!” கத்தரீனின் கெஞ்சலும் கொஞ்சலும் ஒருபடியும் குறையாது.

" உனக்கு எத்தனையாவது பிறந்த நாள் வருகிறது கேத்தரின் ?"

"பதினெட்டு !" பட்டென்று வந்தது பதில். தொடர்ந்தும் கேள்விகள், " என்னோடு என் பிறந்த நாளில் கொஞ்ச நேரம் செலவழிப்பாயா?"

"பார்க்கலாம், உனக்கு தானே என்னுடன் அடிக்கடி கோபம் வருகிறது!"

" நீ தான் தேவையில்லாமல் என்னுடன் மல்லுக்கட்டுகிறாய்." கேத்தரின் புன்னகைத்தாள்.

“ நீ பேசாமல் யாராவது ஒருத்தனோட செட்டில் பண்ணியிருந்தால் இண்டைக்கு அவன் உனக்கு சிகரெட் வாங்கித் தந்திருப்பான், என்னைக் கெஞ்ச வேண்டி வந்திருக்காது!” சீண்டி விட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தேன்.
“ நான் எந்த ஆணிடமும் அடி பணிய விரும்பவில்லை, என் தாய், தந்தையை இறுதி வரை என்னுடனேயே வைத்துப் பராமரித்ததால் எவனுக்கும் என்னோடு சேர்ந்திருக்க விருப்பமிருக்கவிலை. எல்லாருக்கும் என் சொத்தில் மாத்திரம் ஒரு கண், களவானிப்பயல்கள்! நான் இப்ப நல்லாய்த் தானே இருக்கிறன்? கத்தரீனின் கேள்வி தொக்கியது.

“ சிகரெட் பெட்டி வாங்கிக் கொடு, தயவு செய்து!“ மீண்டும் மிடுக்கோடு கட்டளை.
உண்மை தான், நெஞ்சில் சளி பிடித்திருப்பதால் புகைத்தல் இன்னும் கத்தரீனுக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் தப்பானது. தன் விருப்பத்திற்கு நடப்பது, அவள் உரிமை, அதில் தலையிட முடியாது.

“ சரி சரி தோட்டத்தில் போய் இரு, பத்தே நிமிடத்தில் வருகிறேன்.” நான் பக்கத்துக் கடைக்குப் புறப்பட்ட போது முகமெல்லாம் மலர “ உன்னை சொர்க்கத்தில் ஆண்டவர் கௌரவிப்பார்!” என்றவாறே கண்களைச் சிமிட்டிச் சிரித்த கத்தரீனுக்கு வயது அப்போது 98. வயோதிபம் வினோதமானது.

“ அண்ணை ஒரு பக்கெட் சில்க் கட் , 20 தாங்கோ!” கேட்டதும் அநியாயத்துக்கு அந்தத் தமிழ் கடைக்காரர் என்னை முறைத்துக் கொண்டார். 😅
இளம் பட்டதாரியாய் ஆங்கில வயோதிபர் இல்லம் ஒன்றை முகாமைத்துவம் செய்த அனுபவம் அலாதியானது.
( Residential Homes- management)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வயோதிபர்களை பராமரிக்கின்றீர்களா... நல்ல சேவை... நல்ல பெறுமை வேண்டும், அவர்களும் குழந்தைகளே

நீங்கள் நல்ல பொறுமைசாலியென நினைக்கின்றேன். நல்ல பணி தொடருங்கள்.

நன்றி பகிர்வுக்கு

நீங்கள் இந்த கொரோணா கலத்தில் கடவுள்🙏, இப்பதான் பலருக்கு உங்கள் சேவையின் மகிமை தெரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவக் கதை .....நிறைய அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும், முடிந்தால் பகிருங்கள் பொல்லுத்தடியால அடிவாங்கிறது திட்டு வாங்கிறது உட்பட......!   😁

Link to comment
Share on other sites

15 hours ago, உடையார் said:

நீங்கள் வயோதிபர்களை பராமரிக்கின்றீர்களா... நல்ல சேவை... நல்ல பெறுமை வேண்டும், அவர்களும் குழந்தைகளே

நீங்கள் நல்ல பொறுமைசாலியென நினைக்கின்றேன். நல்ல பணி தொடருங்கள்.

நன்றி பகிர்வுக்கு

நீங்கள் இந்த கொரோணா கலத்தில் கடவுள்🙏, இப்பதான் பலருக்கு உங்கள் சேவையின் மகிமை தெரிகின்றது

நன்றி உடையார், இது பல ஆண்டுகளின் முன் நான் ஒரு  இளம் பட்டதாரியாய் இருந்த போது ஏற்பட்ட அனுபவம். அதன் பின்னர் என்னை மீள் பயிற்சி செய்து ஒரு ஆசிரியையாக கடமை ஆற்றினாலும் இரண்டு வயதுப் பிரிவினரும் நீங்கள் சொல்லியது போல குழந்தைகள் தாம்.  இப்போதும் வயதானவர்களைக் கவனித்துக் கொள்கிறேன் ஒரு வேலையாக அல்ல, அவர் தம் தேவை கருதி.

Link to comment
Share on other sites

7 hours ago, suvy said:

நல்ல அனுபவக் கதை .....நிறைய அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும், முடிந்தால் பகிருங்கள் பொல்லுத்தடியால அடிவாங்கிறது திட்டு வாங்கிறது உட்பட......!   😁

நன்றி , இது பல ஆண்டுகளின் முன் நான் ஒரு  இளம் பட்டதாரியாய் இருந்த போது ஏற்பட்ட அனுபவம். பல ஆண்டுகளில் பல்வேறு  விதமான அனுபவங்கள் கிடைத்தன. நீங்கள் சொன்னது போல பொல்லால் சண்டையும் நடந்தது ஆனால் எனக்கு அடிக்கவல்ல. அது இரு வயோதிப தாத்தாக்கள் ஒரு அழகான பாட்டிக்காக அடித்துக் கொண்டார்கள். 😁 தொடர்ந்தும் எழுத முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய தமிழர்கள் இப்படியான பராமரிப்பு நிலையங்களில் வேலை செய்கிறார்கள் ...இப்படியான சேவை செய்வதற்கு நிறைய பொறுமையும் ,சகிப்புத் தன்மையும் தேவை ...என்னிடம் துண்டற இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2020 at 17:45, தோழி said:

இளம் பட்டதாரியாய் ஆங்கில வயோதிபர் இல்லம் ஒன்றை முகாமைத்துவம் செய்த அனுபவம் அலாதியானது.

இப்போது வயோதிபர் இல்லங்களில் கட்டாயம் கமரா பூட்ட வேண்டும்.
சில காணொளிகளைப் பார்த்தா போட்டு சாத்துகிறார்கள்.

எல்லோராலும் இங்கு வேலை செய்ய முடியாது.
பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நிறைய தமிழர்கள் இப்படியான பராமரிப்பு நிலையங்களில் வேலை செய்கிறார்கள் ...இப்படியான சேவை செய்வதற்கு நிறைய பொறுமையும் ,சகிப்புத் தன்மையும் தேவை ...என்னிடம் துண்டற இல்லை 

பொறுமையை எழுத்திலேயே தெரியுது.
எவ்வளவு சம்பளமென்றாலும் அந்தப்பக்கம் போயிடாதீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நிறைய தமிழர்கள் இப்படியான பராமரிப்பு நிலையங்களில் வேலை செய்கிறார்கள் ...இப்படியான சேவை செய்வதற்கு நிறைய பொறுமையும் ,சகிப்புத் தன்மையும் தேவை ...என்னிடம் துண்டற இல்லை 

அப்ப  ரதியின்ர அப்பா, அம்மா பாடு பெரும் திண்டாட்டம்தான் போல கிடக்கிது!!🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎09‎-‎2020 at 16:47, Eppothum Thamizhan said:

அப்ப  ரதியின்ர அப்பா, அம்மா பாடு பெரும் திண்டாட்டம்தான் போல கிடக்கிது!!🤪

இவள் தங்களை வைச்சு பார்க்க மாட்டாள் என்று தெரிந்தாலோ என்னவோ இருவருமே வேளைக்கு மண்டையை போட்டுட்டினம் 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.