Jump to content

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூரில் விசேட பூஜை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_2733-720x450.jpg

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூரில் விசேட பூஜை!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனினால் இன்று (புதன்கிழமை) காலை ருத்திராபிஷேகமும் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன், ‘ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒரு முக்கியமான பூஜை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம்.

இது முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்திருக்கிறது. இந்த அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து மக்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இறைவனுடைய அருள் துணை நிற்க வேண்டும்.

அதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மிகப்பழமையான கட்சி அதனுடாக அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற இறைவன் துணையிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்“ எனத் தெரிவித்துள்ளார்.

IMG_2731.jpg

http://athavannews.com/ஶ்ரீலங்கா-சுதந்திரக்கட்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக வாக்குகள் பெற்ற ஒருத்தருக்கு இவ்வளவு மக்கள் கூட்டமா?
அது சரி மகனும் அரசியலுக்கு வரபோகின்றாரோ? மகனா ,தம்பியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம். இந்தச் செயலெல்லாம் சுத்த கோமாளித்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அதிக வாக்குகள் பெற்ற ஒருத்தருக்கு இவ்வளவு மக்கள் கூட்டமா?
அது சரி மகனும் அரசியலுக்கு வரபோகின்றாரோ? மகனா ,தம்பியா

 நக்கலுக்கும் ஒரு அளவிருக்கு........ 😎
கொரோனாவாலைதான் சனம் வரேல்லை.....இல்லாட்டி சனத்தை கட்டுப்படுத்தேலாமல் பொங்கிவழிஞ்சிருக்கும்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

 நக்கலுக்கும் ஒரு அளவிருக்கு........ 😎
கொரோனாவாலைதான் சனம் வரேல்லை.....இல்லாட்டி சனத்தை கட்டுப்படுத்தேலாமல் பொங்கிவழிஞ்சிருக்கும்...😁

ஐயாவுக்கு காவலுக்கு நிப்பினம். வாளோ.. பொல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

ஐயாவுக்கு காவலுக்கு நிப்பினம். வாளோ.. பொல்லோ?

Karungali stick (1/2 feet)/கருங்காலி குச்சி – Anandhaoli Foundation

கருங்காலி கொட்டன்.😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.