Jump to content

செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக தேங்காய் தின நல்வாழ்த்துக்கள்.

World Coconut Day 2019 | உலக தேங்காய் தினம் 2019 - YouTube

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உலக தேங்காய் தின நல்வாழ்த்துக்கள்.

World Coconut Day 2019 | உலக தேங்காய் தினம் 2019 - YouTube

வாழ்த்துக்கள் தோழர் ..👍

IMG-20200902-175301.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தேங்காய்!

தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான்.

தேங்காய்

தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.

இளநீர்

குளிர்ச்சியைத் தரவல்லது; தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ     (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர்  அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது.

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தேங்காய்!
 

தேங்காய்ப் பூ

தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.

தேங்காய்ப்பால்

பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். தேங்காய்ப்பாலைக் காய்ச்சி வடித்து எடுப்பது ‘உருக்கு தேங்காய் எண்ணெய்’ ஆகும். இதைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நீலிபிருங்காதி கேர தைலம்’ தயாரிக்கப்படுகிறது. இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை  நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.

‘இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா’ என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான்.

தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தோழர் ..👍

IMG-20200902-175301.jpg 

 

22 minutes ago, suvy said:

Hawaii GIF - Find on GIFER

இரண்டையும் பாக்கவே புல்லரிக்குது......😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே தேங்காய்ப் பால் பவுடர் தான் கறிக்குப் பயன்படுத்துவது. அதைவிட வாரம் மூன்றுநாட்களாவது பிட்டுக்கு தேங்காய்ப்பூ பயன்படுத்துவேன். எனக்கு கொலஸ்ரோல் மனதில் மட்டும்தானேயன்றி உடலில் இல்லை😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே தேங்காய்ப் பால் பவுடர் தான் கறிக்குப் பயன்படுத்துவது. அதைவிட வாரம் மூன்றுநாட்களாவது பிட்டுக்கு தேங்காய்ப்பூ பயன்படுத்துவேன். எனக்கு கொலஸ்ரோல் மனதில் மட்டும்தானேயன்றி உடலில் இல்லை😎 

நான் பிறந்ததிலையிருந்தே  தேங்காய் சேர்க்காத சாப்பாடுகளே இல்லை எண்டு சொல்லலாம். இப்ப கொஞ்சக்காலமாய் வீட்டிலை  ஒராளின்ரை மூளையை யூரியூப்பிலை ஆரோ தேங்காய் கூடாதெண்டு கழுவி ஊத்திப்போட்டினம். அதிலையிருந்து நான் தேங்காய் கலந்த சாப்பாடுகளை எட்டி நிண்டு பார்க்கலாமே தவிர சாப்பிடுற நோக்கமே வரப்படாதாம்.🙃

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 

 

எங்க எந்த நாட்டில் வாழ்கிறது என் எதிர்காலம் என்பதே தெரியவில்லை.
தெரிந்தால் தேங்காய் பாலிலேயே குளிக்க வைக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நான் பிறந்ததிலையிருந்தே  தேங்காய் சேர்க்காத சாப்பாடுகளே இல்லை எண்டு சொல்லலாம். இப்ப கொஞ்சக்காலமாய் வீட்டிலை  ஒராளின்ரை மூளையை யூரியூப்பிலை ஆரோ தேங்காய் கூடாதெண்டு கழுவி ஊத்திப்போட்டினம். அதிலையிருந்து நான் தேங்காய் கலந்த சாப்பாடுகளை எட்டி நிண்டு பார்க்கலாமே தவிர சாப்பிடுற நோக்கமே வரப்படாதாம்.🙃

Bild

உங்கள் வீட்டுக்காரிக்கு தேங்காய்ப் பாலில் செய்வினை செய்யவேணும் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

எங்க எந்த நாட்டில் வாழ்கிறது என் எதிர்காலம் என்பதே தெரியவில்லை.
தெரிந்தால் தேங்காய் பாலிலேயே குளிக்க வைக்கலாம் 

சரியாய் கெட்டு நொந்து போனார். :grin:

14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் வீட்டுக்காரிக்கு தேங்காய்ப் பாலில் செய்வினை செய்யவேணும் 😃

  ம்... சிவனே எண்டு சும்மாய் இருக்க சீனியில்லாமல் தாற தேத்தண்ணிக்கும் வேட்டு வைக்கிற பிளான் போலை கிடக்கு....:grin:

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 14:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே தேங்காய்ப் பால் பவுடர் தான் கறிக்குப் பயன்படுத்துவது. அதைவிட வாரம் மூன்றுநாட்களாவது பிட்டுக்கு தேங்காய்ப்பூ பயன்படுத்துவேன். எனக்கு கொலஸ்ரோல் மனதில் மட்டும்தானேயன்றி உடலில் இல்லை😎 

20 ஆண்டுகள் தானோ? அதுக்கு முன்னம்.... ஊரிலை?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 17:44, Nathamuni said:

20 ஆண்டுகள் தானோ? அதுக்கு முன்னம்.... ஊரிலை?

அதுக்கு முன்னம் double cream தான் யேர்மனியில்.  ஊர்ல அம்மாதான் சமையல் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுக்கு முன்னம் double cream தான் யேர்மனியில்.  ஊர்ல அம்மாதான் சமையல் 🤣

என்ன நடந்தது.... எல்லோரும் ஓகேயா?

நாம கொஞ்சம், நஞ்ச கவலையா பட்டம் ... வந்தது நின்மதி. கொரோனா காலம் எல்லோ .... அதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

என்ன நடந்தது.... எல்லோரும் ஓகேயா?

நாம கொஞ்சம், நஞ்ச கவலையா பட்டம் ... வந்தது நின்மதி. கொரோனா காலம் எல்லோ .... அதுதான்

கொஞ்சம் உயர் இரத்த அழுத்தம். இப்ப ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொஞ்சம் உயர் இரத்த அழுத்தம். இப்ப ஓகே.

அதுக்குதான் அப்பவே சொன்னானங்கள் தேங்காய் பாவிக்காதேங்கோ என்று 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.