Jump to content

மார்பக புற்றுநோய் செல்களை கொல்லும் "தேனீக்களின் விஷம்" - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஷத்தில் மெலிட்டின் என்கிற பொருள், சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும் ட்ரிப்பிள் நெகட்டிவ் மற்றும் HER2 Enriched ஆகிய இரு புற்றுநோய் வகைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால், மேலும் இதுகுறித்த பரிசோதனைகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

உலகளவில் பெண்களை தாக்கும் பொதுவான நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது.

ஆய்வக அமைப்பில் பல ஆயிரக்கணக்கான ரசாயன கலவைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருந்தாலும், மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவை, மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தேனீக்களின் விஷத்தில் மெலனோமா போன்ற சில புற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கான குணம் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேரி பெர்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு விவரம், நேச்சர் பிரசிஷன் ஆன்காலஜி என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது என்ன?

300க்கும் மேற்பட்ட தேனீக்கள் மற்றும் பெரு வண்டுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

"தேனீக்களில் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு, மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது தெரியவந்துள்ளது" என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய 25 வயது ஆய்வாளரான சியாரா டஃபி.

 

நஞ்சின் ஒரு செறிவு, வெறும் ஒரு மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவையாக இருந்தது. அதுவும் அவை மற்ற செல்களுக்கு பெரும் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், நஞ்சு அதிக அளவில் கொடுக்கப்படும் போது, அதன் விஷத்தன்மை அதிகரித்தது.

மேலும் மெலிட்டின் என்ற பொருள், புற்று நோய் செல்கள் வளர்வதை தடுப்பதிலும், அவற்றை அழிக்கவும் உதவியதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையாவே தேனீக்களின் விஷத்தில், இந்த மெலிட்டின் காணப்படும் அல்லது அதனை செயற்கையாகவும் தயாரிக்க முடியும்.

மார்பக புற்றுநோய்களில் மிகவும் மோசமானது ட்ரிப்பிள் நெகட்டிவ் மார்பக புற்றுநோய். இதற்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இதனை பயன்படுத்தலாமா?

இந்த ஆய்வை "பிரமிக்கத்தக்கது" என்று விவரித்துள்ளார் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை விஞ்ஞானியான பேராசிரியர் பீட்டர் கிளின்கென்.

"புற்றுநோய் செல்கள் பரவி வளர்வதை மெலிட்டின் எப்படி தடுக்கிறது என்பதை இந்த ஆய்வு காண்பிக்கிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் எவ்வாறு மனித நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது" என்று பேராசிரியர் பீட்டர் தெரிவித்தார்.

ஆனால், இதனை பெரிய அளவில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து தயாரிக்க உதவும் என்பது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/science-53999684

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஓர் ஆங்கில நாளிதழில் செய்தியாக வந்தது  இந்த தகவல்  அப்படி நடந்தால் மிக நல்லது சில நோய்களை கேள்விப்பட்டதும் இந்த நோயெல்லாம் மக்களுக்கு வருகிறதே என வியப்பாக இருக்கும் ஆனால் அதுவே பக்கத்து வீட்டுக்காரருக்கோ அல்லது சொந்தக்காரருக்கோ வரும் போது மனது வேதனையடைகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலை இருக்கேக்கை இரண்டு மூண்டு தரம் குளவி குத்தியிருக்கு.....ஆகையால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கை இரண்டு மூண்டு தரம் குளவி குத்தியிருக்கு.....ஆகையால்

எனக்கு ஒருதரத்திலேயே 4 குளவி குத்தி இருக்கு 

ஒரு உயர்ந்த பனையில் குளவி கூடு இருந்தது 
சின்ன வயதில் ஒவ்வரு நாளும் தோடடத்தில் இருந்து வரும்போது 
ஊமால்கடசியால் எறிவேன் என்றோ ஒரு நாள் அவ்வளவு உயரத்துக்கு 
எறியவேண்டும் என்ற ஆசை இருந்தது 
ஒரு நாள் எனது அதிர்ஷ்ட்டமும் துரதிஷ்ட்டமும் கலந்த நாள் வந்தது 
ஊமல்காட்ச்சி போய் குளவிக்கூட்டிற்குள் இறங்கியது 
அப்படியே நேராக வந்து 4 குளவி குத்தியது 

ஆகையால் ...............
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

எனக்கு ஒருதரத்திலேயே 4 குளவி குத்தி இருக்கு 

ஒரு உயர்ந்த பனையில் குளவி கூடு இருந்தது 
சின்ன வயதில் ஒவ்வரு நாளும் தோடடத்தில் இருந்து வரும்போது 
ஊமால்கடசியால் எறிவேன் என்றோ ஒரு நாள் அவ்வளவு உயரத்துக்கு 
எறியவேண்டும் என்ற ஆசை இருந்தது 
ஒரு நாள் எனது அதிர்ஷ்ட்டமும் துரதிஷ்ட்டமும் கலந்த நாள் வந்தது 
ஊமல்காட்ச்சி போய் குளவிக்கூட்டிற்குள் இறங்கியது 
அப்படியே நேராக வந்து 4 குளவி குத்தியது 

ஆகையால் ...............
 

நான் ஒரு தடவை செவ்வரத்தம் பூ பறித்துக் கொண்டிருந்த வேளையில் ராணி குளவியே குத்தியிருக்கு....
ஆதலால்..........:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதின எல்லோரையும் பார்த்து ஒன்று கேட்கவா  ? .😄

மார்பக புற்று அதிகம் பெண்களுக்கு தான் ஏற்படும்  ஏன் ஆண் சிங்கங்கள்  
மூக்கை நுழைக்கினம்.?குளவிக் குத்துவங்க ஆசைப்  படுகினம்

அக்கா நில்லா தீங்க  ஓடுங்கோ  🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிலாமதி said:

மேலே எழுதின எல்லோரையும் பார்த்து ஒன்று கேட்கவா  ? .😄

மார்பக புற்று அதிகம் பெண்களுக்கு தான் ஏற்படும்  ஏன் ஆண் சிங்கங்கள்  
மூக்கை நுழைக்கினம்.?குளவிக் குத்துவங்க ஆசைப்  படுகினம்

அக்கா நில்லா தீங்க  ஓடுங்கோ  🤣🤣

நிலாமதி இது பெண்களுக்கு வந்தாலும் ஆண் வைத்தியர்கள் தான் வைத்தியம் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கை இரண்டு மூண்டு தரம் குளவி குத்தியிருக்கு.....ஆகையால்

ம்........

(ஏன் வில்லங்கமாக யோசிப்பான்......🤔)

நமக்கேன் வம்பு என்று பேசாமல் போவோம் 😤😤

2 hours ago, குமாரசாமி said:

நான் ஒரு தடவை செவ்வரத்தம் பூ பறித்துக் கொண்டிருந்த வேளையில் ராணி குளவியே குத்தியிருக்கு....
ஆதலால்..........:cool:

இராணிக் குழவி பக்கத்து வீட்டில் இருந்து வந்ததோ அல்லது இராணித் தேனீ இருக்கும் இடமாய்ப் பார்த்து நீங்கள் போய் பறித்தீர்களோ (பூவை(யர்) 😂)

48 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலாமதி இது பெண்களுக்கு வந்தாலும் ஆண் வைத்தியர்கள் தான் வைத்தியம் பார்க்க வேண்டும்.

ஆண் குளவிதான் கொட்டவேண்டும் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.