Jump to content

அடிப்படை வசதிகளற்ற நிலையில் சாளம்பஞ்சேனை மக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
01-9.jpg?189db0&189db0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் சென்று இடப்பக்கமாக 02 கிலோமீற்றர் தூரத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தினமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு காணப்படுகின்றனர்.

இங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளாக குடி நீர் பிரச்சனை பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. இங்கு காணப்படும் பொதுக் கிணறுகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு ஒருவரின் வீட்டின் மாத்திரமுள்ள கிணற்றில் ஓரளவு நீர் காணப்படுகின்றது.

குறித்த நீரையே இங்கு வாழும் மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பெற்றுக் கொள்வதுடன், மிஞ்சும் நீரைக் கொண்டு தோட்டப் பயிர்களுக்கு ஊற்றி தோட்டங்களை பராமரித்து வருகின்றனர். இங்கு வாழ்பவர்களின் ஜீவனோபாய தொழிலாக வீட்டுத் தோட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன முக்கியத்துவம் பெறுகின்றது.

கிராம மக்கள் தங்களது வீடுகளின் தோட்டங்கள் அமைத்து தங்களது அன்றாட தேவைகளுக்கும், வியாபார நடவடிக்கைகளுக்குமாக மேற்காண்டு வரும் நிலையில் தண்ணீர் பிரச்சினையானது பாரிய பிரச்சனையாக இவர்களின் மத்தியில் எழுந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் எவரும் கரிசணை கொள்வதில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தேர்தல் காலங்களில் மாத்திரம் வரும் அரசியல்வாதிகளிடம் மற்றும் அரச திணைக்களங்களுக்கு சென்று அரச அதிகாரிகளிடம் குடி நீர் பிரச்சனையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கையும் இடம்பெற்றவில்லை.

அத்தோடு எமது சாளம்பஞ்சேனை கிராமத்தினுள் இரவு வேளைகளில் யானைகளினால் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகின்றது. இதன்காரணமாக சில வீடுகள் முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்டதுடன், உடமைகள் அனைத்தையும் சேதமாக்குகின்றது. அத்தோடு வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்ட கச்சான், கத்தரி, வெண்டி, மிளகாய் என்பவற்றையும் அழித்து துவம்சம் செயகின்றது.

எங்களது பகுதிகளுக்கு தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் இடம்பெற்று வரும் நிலையிலும், இதன் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இரவு நேரங்களில் கண் விழித்து தோட்டங்களை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் எமது பகுதியை அண்மித்த இடங்களில் வெளி மாவட்டங்களில் உள்ளவர்களின் மாடுகள் கட்டப்பட்டுள்ளதால் மாடுகளை மேய்வதற்கு வெளியில் விடும் சமயத்தில் எமது கிராமத்திற்குள் வரும் மாடுகள் எங்களது தோட்டப் பயிர்களையும் அழித்து விடுகின்றது.

இதனால் யானைகளில் இருந்து காப்பாற்றும் மீதி தோட்டப் பயிர்களை மாடுகளுக்கு உண்பதற்கு கொடுக்கும் நிலைமை உருவாகின்றது. இங்கு வாழும் மக்கள் பகல் மற்றும் இரவு வேளைகளில் கண் விழித்து தோட்டங்களை மற்றும் வீடுகளை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

அத்தோடு சாளம்பஞ்சேனை கிராமத்திற்கு பிரதான வீதியில் வருவதற்கான வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. உள் வீதிகள் சில கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்டாலும் பிரதான வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

எமது சாளம்பஞ்சேனை கிராமத்திற்கு தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகளுக்கு எங்களது கிராமம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆனால் தேர்தல் முடிந்ததும் எங்களது கிராமங்களை மறந்து விடுகின்றனர். தேர்தல் காலங்களில் வரும் போது அதனை செய்வோம், இதனை நிறைவேற்றுவோம் என்பார்கள் ஆனால் எதுவும் செய்து தருவதில்லை.

ஆனால் மீண்டும் அடுத்த தேர்தல் வரும் போது முன்னையவர்கள் செய்யவில்லை. நாங்கள் செய்து தருவோம் என்று எங்களை ஏமாற்றி செல்வார்கள். அவர்களால் எதுவும் இடம்பெறுவதில்லை. தற்போது வந்துள்ள அரசாங்கமாவது எங்களது நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறித்த விடயம் தொடர்பில் பல தடவை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும், இனியாவது இதில் கூடிய அக்கறை கொண்டு எங்களது உயிரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

எனவே சாளம்பஞ்சேனை கிராம மக்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி யானை வேலி அமைத்து தருமாறும், எமது பகுதியை அண்டியுள்ள பகுதியில் கட்டப்படும் மாடுகளை வேறு பகுதிகளில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு குறித்த கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் குடி நீர் பிரச்சனைக்கு தீர்வு பெறும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (150)https://newuthayan.com/அடிப்படை-வசதிகளற்ற-நிலை-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:
 

எமது சாளம்பஞ்சேனை கிராமத்திற்கு தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகளுக்கு எங்களது கிராமம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆனால் தேர்தல் முடிந்ததும் எங்களது கிராமங்களை மறந்து விடுகின்றனர். தேர்தல் காலங்களில் வரும் போது அதனை செய்வோம், இதனை நிறைவேற்றுவோம் என்பார்கள் ஆனால் எதுவும் செய்து தருவதில்லை.

ஆனால் மீண்டும் அடுத்த தேர்தல் வரும் போது முன்னையவர்கள் செய்யவில்லை. நாங்கள் செய்து தருவோம் என்று எங்களை ஏமாற்றி செல்வார்கள். அவர்களால் எதுவும் இடம்பெறுவதில்லை. தற்போது வந்துள்ள அரசாங்கமாவது எங்களது நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்தல் முடிந்துவிட்டது, இனி மாகாண சபை தேர்தல், திரும்பவும் வருவார்கள்... இது ஒரு தொடர்கதை... இவர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள்.

ஒரு காற்று அடித்தால் சரி இந்த வீடு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைப் பிரச்சனையை அடியோடு இல்லாம்ல் செய்வதற்கு தேனீ வளர்ப்பு சிறந்தது. 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.