Jump to content

ஒரு சாவும் அதன் சம்பிரதாயங்களும்


Recommended Posts

பதிவுக்கு நன்றிகள்

சமபிரதாயங்களோ இல்லை சில முறைளையோ சாவுநிகழ்வில் கடைப்பிடிக்கும் போது இறந்தவரை சரியான முறையில் வழிஅனுப்பிவிட்டோம் என்ற ஆறுதல் சம்மந்தப்பட்ட உறவுகளுக்கு கிடைக்கின்றது. இந்த ஆறுதலே பிரதானமானது.

ஏகப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் முறைகள் என அவரவருக்கு நாட்டாமை செய்து இந்த ஆறுதுல் கிடைக்காமல் போகும்  நிலையும் அதிக சாவு வீடுகளில் நடக்கின்றது. இந்த முறைகளை ஒரு வரயறையோடு காலத்துக்கேற்ப நெறிப்படுத்துவதும் அவசியமாகின்றது.

(புகையிலை மற்றும் சுருட்டு ஒருகாலத்தில் சாவு வீட்டில் அவசியமானது. அது ஒரு தொற்று நீக்கியாக இருந்த காலத்தில்.- இந்தக் காலத்தில் அது நோயை ஏற்படுத்தும் ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது)

சிலர் சாவு நிகழ்வை  சமூக அந்தஸ்த்து போட்டியோடு இணைத்து செய்கின்றார்கள். தாம் இதை செய்தோம் இவ்வளவு செலவழித்தோம் என்று பெருமை தேடுவதுண்டு, இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

இறந்த உறவுகளின் திகதி திதிகளில் விளக்கு வைத்து உணவு படைத்து வணங்குவதை (யாரையும் அழைக்கவேணுமென்றில்லை) ஒரு பழக்கமாக வைத்திருப்பது ஆரோக்கியமானது. நல்ல உணர்வு கிடைக்கும். சித்திரை பௌணமி ஆடி அமவாசையை கடைப்பிடிப்பதும் இவ்வாறே நல்ல உணர்வு கிடைக்கும். 

இறந்தவர் சாம்பலை விழைநிலத்திலோ ஆற்றிலோ குளத்திலோ இல்லை கடலிலோ தூவலாம். கங்கையில்தான் என்பது அவரவர் தெரிவுகள். 

On 3/9/2020 at 15:31, Sasi_varnam said:

நல்ல கருத்து .. கையில் பச்சை இல்லை. 
நான் எனக்கு எழுதக்கூடிய உயில் :) ... 
எனக்கு பிடித்த தமிழ் இசையை தவழ விடுங்கள்.
என்னை சுற்றி வாழ்ந்த என் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு என் வாழ்க்கையை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு பெரிய தொரு நன்றி தெரிவியுங்கள். 
என் பெயரில் 100 மரங்கள் நடுங்கள். அது நல்ல படியாக வளர்வதை உறுதி செய்யுங்கள்.

முடிந்தால் தம்பட்டமில்லாமல் கொஞ்ச தான தர்மங்கள் ...அவர்களோடு சேர்ந்து வழங்கி மகிழுங்கள். 

முடியும் !!! 🙏

 

வன்னியில் இரண்டு வருடங்களுக்க முன்பு இறந்த எனது உறவினரின் ஒருவரின் அந்தியோட்டி நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவருக்கும்  மரக்கன்றுகள் கூடுதலாக தென்னங்கன்றுகள் கொடுத்து அனுப்பினார்கள்.  அந் நிகழ்வு மிக நிறைவைத் தந்தது. பலர் இதை இப்போது செய்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

அல்வாயன்... உங்களது, மகனின்...  இழப்பிற்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.  
தந்தை.. மகனை... இழப்பது, கொடுமையிலும், கொடுமை  என்று சொல்வார்கள்.

நன்றி தமிழ் சிறி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

இது என்னுடைய வீட்டில் நடந்தது...எனது 2 வது மகன் சுகவீனம் காரணமாக இறந்துவிட்டார்..சனி  ஞயிறு என்று எதிர்பாராமல்...செவ்வாய் புதனில் காரியங்கள்  செய்யப்பட்டன..அய்யர் வந்தார்..கிரியை செய்து கொள்ளியும் மண்டபத்திலையே வைக்கப்பட்டது.(கொள்ளிக்கட்டைசம்பிரதாயமானது)பின்பு  தகனக்கிரியை மண்டபத்தில் பெட்டியின்மேல் கற்பூரம் கொழுத்தப்பட்டது..பின் தகன வாயினுள் செலுத்தப்பட்டது..அவ்விடமிருந்து..நெருங்கிய உறவுகளூ ம் வீட்டிர்கு வந்தவுடன் உறவினரால் உ ணவு வழங்கப்பட்டது..சிலர் குழித்துவிட்டு வந்தார்கல்..அப்படியேயும் சில்ர் சாப்ப்ட்டார்கள்..1 மாதம்வரை உறவுகள், நண்பர்களேணா 3  நேரமும் சாப்பாடு வந்தபடியே இருக்கும்..இதனை விட சரி 8 ம்நாள்.. காடாத்தும் 8ம் நாள் காரியமும் மாமிச உ ணவுகளுடன் படைத்தபின் அதனை ஒரு பொட்டலமாக கட்டி..ஒரு பாலத்தின் கீழ் ஓடும் னீரோடையில் கொண்டு சென்றூ  வைத்துவிட்டு வந்தோம்..31ம் நாள் 3  அய்யர்கள் ..அதில் ஒருவர் அதிகாலை 3 மணீக்கே தன்னுடைய இடத்துக்கு  வரச்சொல்லி முறைப்படி சடங்கு செய்த்து பிறிம்லி பீச்சில் உள்ள தண்ணீரில் போடச்சொல்லுவர்...எமது குடும்பத்துக்கு முதலில் இந்த அனுபவம் இருந்தபடியால் நானும் மனையும்..தம்பி ஒருவனும் சென்று அஸ்தியை கரைத்துவிட்டு வந்தோம்..பின்னர் 2 குருமார் வந்து பிட்டம் வைத்து தானம் செய்தபின் பந்தி நடந்தது...இது கனடாவென்றாலும் எமது பாரம் பரியத்தை கடைப்பிடிக்க வே ணும் என்பதனால் இவை அனத்தும் செய்யப்பட்டது..பெற்றவர் நாம்  கனடாவில் பிறந்த பிள்ளைக்காக இதனைசெய்து  எமது மனதை ஆற்றிக்கொண்டோம் ....ஆற்றீக் கொண்டிருக்கின்றோ...ம்..

உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை, மிகப்பெரிய இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அல்வாயான்,

முதலில் உங்களின் மகனின் இழப்பிற்கு எனது அஞ்சலியையும் மன ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் இங்கே கனடாவில் தான் இருக்கிறீர்கள் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.
யாழ் களம் ஊடாக கிடைத்த டொரோண்டோ நண்பர்கள் வட்டம் இன்னும் தோழமையோடு தொடர்பில் இருக்கிறது. சேர்ந்திருங்கள்.

நீங்கள் கூறி இருந்த அதே வழிமுறைகளை தான் எனது மனைவியின் சித்தப்பா இறந்த போது கடைப்பிடித்தார்கள்.
உங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி. சாந்தி நிலவட்டும். 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.