-
Tell a friend
-
Topics
-
Posts
-
போரை போராட்ட களத்தை என்ன பார்வையில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதில் இந்த கதாசிரியரின் பார்வையை நான் மதிக்கிறேன். அங்கே களமாடிய களத்தில் இருந்த அனைவருக்கும் அவரது பார்வையில் போரை எழுதும் தார்மீக உரிமை எல்லாருக்கும் உண்டு. அவர் கவனிக்கபடவில்லை என்று வருந்தவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போர் விட்டுச்சென்ற வரலாறை எழுதுவதில் கவனிப்பு இல்லை என்ற கருத்துக்கே இடமில்லை, காலச்சக்கரத்தில் பதிவுகளை நினைவுகள் அழியமுதல் பதிவிடுவதில் எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை. போரில் 4 தரப்புகள் இருந்தன. போரிடும் இரு தரப்புகள் இராணுவம், புலிகள் மற்றும் பொதுமக்கள், சர்வதேசம். புலிகளாக போரிட்டவர்களுக்கு ஒரே எண்ணம் தான் இருந்தது, தங்களின் கடைசி மூச்சு உள்ளவரை போரிடுவது. இறுதி நாட்களில் அந்த எண்ணங்களில் தளம்பல் அடைந்தவர்கள் சரணடைவுக்கு தயாரானார்கள். போருக்குள் இருக்கும்போது இந்த காதாசிரியரின் பார்வையில் போரை பார்க்கும் மனநிலை யாருக்கும் இருக்கவில்லை. இது இறுதி யுத்தமாக நினைத்து எந்த அர்பணிப்பு எல்லைக்கும் செல்லும் மனநிலையில் தான் போராளிகள் இருந்தார்கள். அவற்றில் சில புல்லுருவிகளால் களங்கங்கள் ஏற்பட்டது உண்மை. இப்போ வெளியில் இருந்து அந்த போர் மனநிலைக்கு சென்று சரி பிழை பார்க்கும் தளம் வேறு, போராட்டகளம் வேறு என்பதை உணர்ந்தால் அவரின் எழுத்துக்களுக்கு கூடுதல் வலிமை இருக்கும் என்பது என் கருத்து. போரின் போக்கை தீர்மானித்த முடிவுகளின் ஆழங்கள் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் சம்பவங்களின் மறுபக்கங்களை இலகுவாக எழுத முடிகின்றன.
-
By தமிழ் சிறி · Posted
இணையவன்.... நீங்கள் ஒரு குறிக்கோளுடன், மிகக் கடினமானதும், செலவு மிக்கதுமான... உணவுக் கட்டுப் பாட்டை கடைப் பிடிப்பதனை மெச்சுகின்றேன். 👍 அந்தக் கடைசி வரி... என்னை சிரிக்க வைத்ததாலும், நீங்கள் ஒறிஜினல் தமிழன் என்று... சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்து விட்டது. 🤣 அதற்காக... "நாம் தமிழர் கட்சியில்" சேருங்கள் என்று வற்புறுத்த மாட்டோம். 😜 -
By தமிழ் சிறி · Posted
சாந்தி அக்கா.... ஈழப்பிரியன் ஓடினால், ஆரையும் கூட்டிக் கொண்டு, ஒரே ஓட்டமாக.... ஓடி விடுவார் என்று, குமாராசாமி அண்ணை, பயப்பிடுகிறார் போலுள்ளது. 🤣 -
By தமிழ் சிறி · Posted
குமாரசாமி அண்ணை.... இந்தப் படம் தமிழ்நாட்டில் உள்ள வைத்தியசாலையில், எடுக்கப் பட்டுள்ளதை, பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 🤯 திராவிட ஆட்சி தமிழகத்தையும்.... குட்டிச் சுவராக்கி விட்டது. இப்படியே... போனால், ஆயிரம் வருடத்துக்கு மேல் எடுக்கும். எவ்வளவு... கெதியில், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருகிறார்களோ... அன்று தான்... தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும். -
By தமிழ் சிறி · Posted
முதல்வன்.... மேலதிக வலைத்தள இணைப்பிற்கு நன்றி. நீங்கள் சொல்வதை பார்க்க, படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரிக்கின்றது. ஆனாலும்.. படத்தை ரசித்துப் பார்க்க, ஓய்வான நேரமும்... நல்ல மனநிலையும் தேவை என்பதனை அறிவீர்கள். ஒரு நாள்.... நிச்சயம் பார்த்து விட்டு, எனது உணர்வை எழுதுவேன்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.