Jump to content

இயற்கையை காப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சலிம் அலி பிறந்த நாள் விழா மற்றும் வெடியில்லா தீபாவளி கையெழுத்து இயக்கம்

 

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழிவை எதிர் நோக்கும் அரியவகை மான்கள்!

கனடாவில் அரியவகை வெள்ளை மூஸ் மான்கள் அதிகளவில் கொல்லப்படுவதால் அதன் இனம் அழிவை எதிர் நோக்கியுள்ளதாகச்  செய்திகள் வெளியாகியுள்ளன.

moose.jpg

மான் இனத்திலேயே மிகப் பெரியதான மூஸ் மான்களில் வெள்ளை நிறத்தில் இருப்பது அரியதாகும். இவை கனடாவின் அண்டாரியோவிலுள்ள  டிம்மின்ஸ் பகுதியில் காணப்படுகின்றன.

இந் நிலையில் அப்பகுதியிலுள்ள உள்ளுர் மக்கள் மற்றும் வேட்டையாடிகளால் வெள்ளை மூஸ்கள் அதிகம் கொல்லப்படுவது தெரியவந்துள்ளது.

White_Moose_Sweden.jpg

இதனால் இதன் இனமே அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூஸ்களை வேட்டையாடுவதைத் தடுக்க கனடா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

https://thinakkural.lk/article/89913

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருவநிலை மாற்றம் கொரோனாவைவிட பெரிய அச்சுறுத்தல் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

 
602391.jpg
 34 Views

கொரோனாவைவிட பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். இதற்குத் தடுப்பூசிகள் கிடையாது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவைச் சேர்ந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஜெபக் சாப்பகெய்ன் இன்று செய்தியாளர்கள் பங்குபற்றிய மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ”1960களில் இருந்து உலகம் நூற்றுக்கும் மேற்பட்ட பேரிடர்களை சந்தித்து விட்டது. இதில் பெரும்பாலானவை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டவையே. இதனால் 5கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இப்போது கோவிட் – 19 வைரஸ் இருப்பது உண்மை தான். அது நம் குடும்பத்தை, உறவினர்களை, நண்பர்களைப் பாதிக்கிறது. இதனால் உலகம் தற்போது கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. இதனால் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

இருந்தும் தடுப்பூசி வந்த பின்னர் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் பருவநிலை மாற்றம் அப்படிப்பட்டதல்ல. துரதிஸ்டவசமாக இதற்கு தடுப்பூசி இல்லை.

தொடர்ச்சியான வானிலை மற்றும் பருவநிலை தொடர்பான நிகழ்வுகளின் தீவிரம், சமீபகாலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2019இல் மட்டும் உலகத்தில் 308 இயற்கையான பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 77 சதவீதம் வானிலை அல்லது பருவநிலை சம்பந்தப்பட்டவை. இதனால் 24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விகிதம் 1990இல் இருந்ததைவிட தற்போது 35 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று ஜெகன் சாப்பகெய்ன் தெரிவித்தார்.

https://www.ilakku.org/பருவநிலை-மாற்றம்-கொரோனாவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் மழை..! நச்சுகழிவுகள் வெளியேற்றம்!! சென்னைக்கு பேராபத்து? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – பொ.ஐங்கரநேசன்

 
1-4.png
 25 Views

மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தினம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

மாவீரர்கள் எமது மண்ணின் காவலர்கள். இந்த மண்ணையும் மக்களையும் அளவுக்கு அதிகமாக நேசித்ததன் காரணமாகத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். தங்கள் குடும்ப உறவுகளைக் கடந்து மொத்தத் தமிழினத்தினதும் வலிகளைத் தங்கள் தோள்மேல் சுமந்தவர்கள். ஈகைக்கு உவமை வேறு இல்லாத அளவுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்த தியாக சீலர்கள்.

உக்கிரமான போர் நகர்வுகளின்போதுகூடப் படையினரின் நினைவு நடுகற்களைப் பாதுகாத்த முன்னுதாரணர்கள். போர் மரபுகளை மீறி இவர்களது நினைவு நடுகற்களைப் படையினர் சிதைத்து அழித்தாலும், இவர்தம் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதித்தாலும் எம் ஆழ்மனதில் நீங்காத நினைவுகளாக இடம்பெற்றிருப்பவர்கள். இவர்தம் வித்துடலணுக்கள் நிலம், நீர், காற்று என்று அரூபமாக வியாபித்திருந்தாலும் நினைக்கும்தோறும் சோதிப் பெருவெளிச்சமாய் முகம் காட்டுபவர்கள். திக்கற்றுத் தவிக்கும் தமிழ்மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக ஒளிவீசிக் கொண்டிருப்பவர்கள்.

தமிழர்கள் விக்கிரக வழிபாட்டுக்கு முன்னர் மரங்களை வளர்த்து இறைவனாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர்கள். இப்போதும் ஆலயங்களில் தலவிருட்சங்களாக மரங்களை வளர்த்து வழிபடும் மரபைக் கடைப்பிடிப்பவர்கள். மாண்டவர்கள் நினைவாக நடுகற்களை நிறுவுவதற்கு முன்னர் மரங்களை உயிருள்ள நினைவுச் சின்னங்களாக நட்டுப் பராமரிக்கும் மரபைக் கொண்டிருந்தவர்கள். அந்தவகையில் மாவீரர் புகழ் பாடி, அவர்களின் நினைவு நாளில் இல்லங்கள்தோறும் சுடரேற்றி அஞ்சலிக்கும் நாம் அவர்களின் நினைவாக மரமொன்றையும் நட்டுவைப்போம்.

மாவீரர்களைப் போன்றே மரங்களும் இந்த மண்ணின் பாதுகாவலர்கள். இவை வேறு எந்த உயிரினத்தையும்விட மண்மீது கூடுதலான நேசிப்பும் பிடிமானமும் கொண்டவை. தங்கள் இனத்தையும் கடந்து புவிக்கோளின் ஒட்டுமொத்த உயிர்ப்பல்வகைமையையும் தாங்கி நிற்பவை. எமது எதிர்காலச் சந்ததி இந்த மண்ணில் வளமாக வாழ்வதற்கான உத்தரவாதமும் இவையே. மாவீரர்தம் இலட்சியக் கனவுகளும் இம்மண்ணில் எமது மக்களின் வளமான சுதந்திரமான நீடித்த வாழ்வை உறுதி செய்வதாகத்தான் இருந்தன.

மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ilakku.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குப்பை மேட்டை கிளறி உணவு தேடும் யானைக்கூட்டம் பரிதாபக்காட்சி

குப்பை மேட்டை கிளறி உணவு தேடும் யானைக்கூட்டம் பரிதாபக்காட்சி

 

இலங்கையில் சமீபகாலமாக காடு அழிப்பு நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளதால், காட்டு யானைகள் தங்கலது  வாழ்விடங்களை இழந்து உணவு கிடைக்காமல் சுற்றி திரியும் புகைப்படங்கள் அடிக்கடி செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது.
 
 
இந்தநிலையில் காட்டில் வாழும் யானைகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து உணவை தேடி குப்பை மேட்டிற்கு சென்று அழுகிய காய்கறிகளுடன் ஆபத்து நிறைந்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் ஆகியவற்றையும் உண்பது போன்ற காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவப்பட்டு வருகின்றது.
 
காட்டு யானைகள் பன்றிகள் போல குப்பை மேட்டைக் கிளறி உண்ணும் காட்சி பார்ப்போரை வேதனையடைய செய்வதாக உள்ளது.
 
அதிலும் குப்பைக் மேட்டில் யானைகள் சாப்பிடும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடித் துகள்கள், அழுக்குகளை உண்பதால் யானைகள் நோய்வாய்ப்பட்டு அதிகளவில் மடிந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.மேலும் இலங்கையில், 2019 ம் ஆண்டில் மட்டும் 361 யானைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் தனிமையான யானைக்கு கிடைத்த விடுதலை

the-world-s-loneliest-elephant  

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்டு வந்த கவான் யானை பலவருட தனிமைக்குப் பிறகு புதிய வாழ்கைக்கு செல்ல இருக்கிறது.

பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்தில் கடந்த பத்து வருடங்களாக தனியாக தவித்து வந்த கவான் யானை விடுதலை செய்யப்பட உள்ளது

1985 ஆம் ஆண்டு கவான் யானை பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்துக்கு அழைத்து வரப்பட்டது. இலங்கையிடமிருந்து அன்பு பரிசாக அளிக்கப்பட்டதுதான் இந்த கவான் யானை. சரணலாயத்தில் தனியாக இருந்த கவான் யானைக்கு துணையாக இருந்த சாஹிலி என்ற யானை 1990 ஆம் ஆண்டு அழைத்து வரப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நிலவும் தட்ப வெப்ப நிலைக் காரணமாக சாஹிலி யானை 2012 ஆண்டு மரணமடைந்தது. இதனைத் தொடர்ந்து கவான் யானை தனிமையில் இருந்து வந்தது. தனிமையின் காரணமாக கவானுக்கு அடிக்கடி மதமும் பிடித்து வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள விலங்கு நல ஆரவலர்கள் கவானை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சிக்கர செய்தியாக கவான் விடுதலை செய்யப்பட உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவுக்கு கவான் அனுப்பப்பட உள்ளது.

இச்செய்தியை விலங்கு நல ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் மர்காசர் சரணாலயம் கவானின் பிரிவு எங்களுக்கு நிச்சயம் வருத்தத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

https://www.hindutamil.in/news/world/606164-the-world-s-loneliest-elephant-1.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைக் காவலன்’ அஜய் தேசாய்

elephant-guard  

யானை பாதுகாப்பில் அக்கறை உள்ள அனைவருக்கும் பெரும் துயரமளிக்கும் செய்தி கடந்த வாரம் வந்துசேர்ந்தது. உலகப் புகழ்பெற்ற ஆசிய யானைகள் ஆய்வாளர் அஜய் தேசாய் (62) மாரடைப்பால் காலமானதுதான் அந்தச் செய்தி. யானை அறிவியலையும் அஜய் தேசாயையும் அறிந்தவர்கள், அவரின் மரணம் எத்தகைய பேரிழப்பு என்பதை உணர்வார்கள்.

1980-களில் ஆப்பிரிக்க யானை களைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஆசிய யானைகள் குறித்த ஆய்வுகள் அரிதாகவே இருந்தன. அப்போது, ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம்’ (BNHS) யானைகள் பற்றிய ஆய்வுப் பணி ஒன்றைத் தொடங்கியது. ஜே.சி. டேனியல் தலைமையில் ஏ.ஜே.டி. ஜான்சிங் போன்றவர்களால் தொடங்கப்பட்ட அந்த ஆய்வு முதுமலை, பந்திபூர், நாகரஹொலே பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதற்காக இளம் ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்றபோது கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த அஜய் தேசாய், தமிழகத்தைச் சேர்ந்த சிவகணேசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டார்கள்.

தமது கல்வித் தகுதி, காட்டுயிர் ஆய்வில் கொண்டிருந்த ஆர்வம் ஆகியவற்றுடன் மாணவப் பருவத்தில் கால்பந்து, ஓட்டப்பந்தயம் ஆகிய வற்றில் பரிசு வென்றிருந்ததும் தாம் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்று அவரே கூறியுள்ளார். ஏனென்றால், காட்டு யானைகள் குறித்த ஆய்வுக்கு உடல்தகுதி அவசியம் என்று தேர்வுக்குழு அறிவுறுத்தியிருந்தது.

நவீன அடிப்படை ஆய்வு

கடல் உயிரின ஆய்வில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த அஜய் தேசாய், 1982 ஆம் ஆண்டு யானை ஆய்வுப் பணியைத் தொடங்கினார். காட்டு யானைகளை ஆய்வுசெய்ய நேரடியாக அவர் அனுப்பப்படவில்லை. தென்தமிழகத்தில் களக்காடு சரணாலயப் பகுதியில் அப்போது நடைபெற்ற பணிகளுக்கு உதவ ஆனைமலையிலிருந்து 4 வளர்ப்பு யானைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. அப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை நடத்திவந்த ஏ.ஜே.டி. ஜான்சிங்கின் வழிகாட்டுதலில் வளர்ப்பு யானை களைக் கண்காணித்து, அவற்றின் நடவடிக்கைகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்யும் பணியை சிவகணேசனுடன் இணைந்து அஜய் தேசாய் தொடங்கினார்.

பின்னர் இருவரும் முதுமலை வந்தனர். அங்கே 10 ஆண்டுகள்வரை யானைகள் குறித்த பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்தனர். மேல்கார்குடி பகுதியில் இருந்த ‘கரடி பங்களா’ என அழைக்கப்பட்ட பழைய கட்டடம் ஒன்றைச் சீரமைத்து, அங்கே தங்கியிருந்து ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வுதான் நவீன காட்டுயிர் அறிவியல் முறையான ‘ரேடியோ காலர்' முறையில் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு. ஆசிய யானைகள் பற்றி இன்று நாம் அறிந்திருக்கும் வாழிடம், வலசை, உணவுமுறை எனப் பல்வேறு தகவல்களை தந்த முன்னோடி ஆய்வு அது.

அப்போது பெற்ற அறிவும் அனுபவமும் தொடர்ந்து யானைகள் குறித்த ஆய்வில் அவரை ஈடுபடவைத்தது. இந்தியா மட்டுமன்றி இலங்கை, வியட்நாம், மலேசியா உள்பட ஆசிய யானைகள் வாழும் பல்வேறு நாடுகளில் அவருடைய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. கடந்த 38 ஆண்டுகளாக அவருடைய ஆய்வுப் பணி தொய்வின்றித் தொடர்ந்துகொண்டிருந்தது.

16065330192006.jpg

வல்லமை மிகுந்த ஆலோசகர்

யானை - மனித எதிர்கொள்ளல் அதிகரிக்கத் தொடங்கியது கடந்த 25 ஆண்டுகளாகத்தான். எனவே, அந்த விவகாரத்தை மேலாண்மைசெய்ய ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அறிவியல் தரவுகள் தேவைப்பட்டன. அவற்றைத் தரும் வல்லமை பெற்றவராக அஜய் இருந்தார்.

உலக இயற்கை நிதியத்தின் (WWF) ஆசிய யானை சார்ந்த செயல் பாடுகளுக்கான ஆலோசகர், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆசிய யானைகள் சிறப்புக் குழுவின் தலைவர், உறுப்பினர், மத்திய அரசு அமைத்த யானை சிறப்புச் செயல்பாட்டுக் குழு (Elephant Task Force) உறுப்பினர் ஆகிய முக்கியப் பொறுப்புகளை அஜய் தேசாய் வகித்துள்ளார்.

காட்டில் யானைகள் வாழும் எல்லா இந்திய மாநிலங்களிலும் பல்வேறு மேலாண்மைப் பணிகளுக்கு ஆலோசகராக இருந்துவந்தார். டேராடூன் இந்தியக் காட்டுயிர் நிறுவனம் (WII) பல்வேறு ஆய்வுப் பணிகளுக்கும் மேலாண்மைப் பணிகளுக்கும் அவரை ஆலோசகராக நியமித்திருந்தது.

அவரின் ஆய்வுகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டதால், நமது காடுகளை நன்கு அறிந்தவராக இருந்தார். யானைகள் மேலாண்மை குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் பல்வேறு முடிவுகள் அஜய் தேசாயின் ஆலோசனை யைப் பெற்றே இறுதி செய்யப்பட்டு வந்துள்ளன. அன்மையில் கோவை வனக் கோட்டத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த யானைகள் மரணம் பற்றி அறிய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார்.

வலசை பாதை பாதுகாப்பு

இந்தியாவில் யானைகள் பயன்படுத்தும் குறுகிய வலசைப் பாதைகளைக் (Elephant corridors) காப்பாற்றும் பெருமுயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால், தனியார் நிலத்தில் இருக்கும் யானைகளின் வலசைப் பாதைகளுக்கு எவ்விதச் சட்டப் பாதுகாப்பும் இல்லை. நீலகிரியில் உள்ள சீகூர் யானை வலசைப் பாதை குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பு சார்ந்த மேல்முறையீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

மசினகுடி பகுதியில் யானை வலசைப் பாதையை மறித்து இயங்கிவரும் கேளிக்கை விடுதிகளை மூடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கி யிருந்தது. அதற்குத் தமிழக வனத்துறை தந்த அறிவியல் தரவுகள் முக்கியக் காரணம். அந்த அறிவியல் தரவுகளுக்கு முதன்மைக் காரணமாக இருந்தவர் அஜய் தேசாய். அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

பல உயிரியலாளர்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் நூல்கள் எழுதுவதிலும் வல்லவராக இருப்பார்கள். ஆனால், கள ஆய்வை யும் அனுபவத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றிருக்க மாட்டார்கள். பெரும்பாலும் நகரத்தில் இருந்துகொண்டு கல்விப்புல அறிவைக் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் மேலாண்மைப் பரிந்துரைகள் பெரும்பாலும் நடைமுறைக்குச் சாத்தியமற்றவையாகவும் குறிப்பிட்ட பகுதிக்குப் பொருந்தாதவையாகவும் இருக்கும்.

ஆனால், 38 ஆண்டுகள் தொடர்ந்து கள ஆய்வு செய்பவராக இருந்த அஜய் தேசாய் தரும் ஆலோசனைகள் நடைமுறையில் சாத்தியப்படக்கூடியவையாகவே இருந்தன. அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவையாகவும் இருந்தன. அத்துடன் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் யானைகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு அரங்குகளில் அஜய் தேசாயின் குரல் வலிமையாக ஒலித்துள்ளது.

16065330392006.jpg

யானைக் காவலன்

அவரது ‘The Indian elephant: endangered in the land of Lord Ganesha’ (1997) எனும் நூல் யானைகளைப் பற்றிய அடிப்படை அறிவியலை அறிய உதவும் முக்கிய நூல்.

உலகின் முன்னணி ஆய்வாள ராகவும் அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோரிடம் நெருக்க மானவராகவும் இருந்திருந்தாலும் எந்த மகுடங்களையும் சூட்டிக்கொள்ளாத எளிய மனிதராக அவர் இருந்துவந்தார். தம்மை நாடி வரும் இளம் ஆய்வாளர் களை அரவணைத்து வழிநடத்தும் உயர்ந்த பண்பைக் கொண்டிருந்தார்.

யானைகள் குறித்த ஆய்வுகளிலும் மேலாண்மை நடவடிக்கைகளிலும் பெரும் பங்காற்றிய தலைச்சிறந்த அறிவியலாளரை இழந்துள்ளோம். இது ஒரு பெரும் வெற்றிடம். ஆசிய யானைகள் பெரும் காவலனை இழந்திருக்கின்றன.

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: pasumaiosai@gmail.com

https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/606065-elephant-guard-5.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென வைகையில் பொங்கிய நுரை... அதிர்ச்சியில் மதுரை மக்கள்!

நுரை பொங்கிய வைகை

நுரை பொங்கிய வைகை

ரசாயனக் கழிவுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் வைகை நதி.

மதுரையில் பெய்த மழையின் விளைவால் நகருக்குள் ஓடும் வைகை ஆற்றிலும் செல்லூர் கண்மாயிலும் 10 அடி உயரத்துக்கு நுரை பொங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்புத்துறையினர் வந்து நுரையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வைகை ஆறு
 
வைகை ஆறு

ஏற்கனவே மதுரைக்குள் ஓடும் வைகை ஆற்றுப் பாதையிலும், அதை சார்ந்த கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அது மட்டுமல்லாமல், வீடுகள், தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் அனைத்தும் வைகை ஆற்றில்தான் கலந்து வருகின்றன.

 
 

இதற்கிடையே நகர வளர்ச்சிக்காக கரையோரங்கள் குறுக்கப்பட்டு இருபக்கமும் இரட்டை வழி சாலை போடப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை வைகை செல்லும் பாதை அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும் புகார் எழுப்பி வருகிறார்கள். வைகையை பாதுகாக்க உயர்நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

வைகை ஆறு
 
வைகை ஆறு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் பெய்த மழையின் விளைவால் நேற்று வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நீர் செல்லூர் கண்மாயில் சேரும் இடத்திலும், மீனாட்சிபுரம் பாலத்திலும் 10 அடி உயரத்துக்கு வெண்ணிற நுரை எழும்பியதால் அப்பகுதி முழுவதும் சின்ன பனிமலை போல் காட்சி அளித்தது. இதைப் பார்க்க மக்கள் கூட ஆரம்பித்தார்கள்.

 

பின்பு தீயணைப்புத் துறையினர் வந்து நுரையை கலைக்கும் வகையில் நீரை பீய்ச்சி அடித்தார்கள். வைகை ஆற்றையும் கண்மாய்களையும் ஒட்டியுள்ள ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் அனுமதி இல்லாத சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவு நீர் வைகையாற்றில் கலப்பதால்தான் இதுபோன்று நுரை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் வளர்ந்து வைகையின் நீரோட்டத்தை தடுத்ததால் தரைப்பாலத்தில் தண்ணீர் வழிந்தோட ஆரம்பித்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பார்வையிட்ட செல்லூர் ராஜூ
 
பார்வையிட்ட செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பகுதிக்கு வந்து ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை பார்வையிட்டார். வைகை ஆற்றில் அபாயத்தை உண்டாக்கும் ரசாயன கழிவுநீரைத் தடுக்க வேண்டும் என்று அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

https://www.vikatan.com/social-affairs/environment/toxic-foam-forms-in-vaigai-river-due-to-industrial-pollution

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல்கலாமின் நினைவாக தொடர்ந்து 275ஆவது வாரமாக மரக்கன்று நடவு செய்த இளைஞர்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை மழை பொழியும் `மழை மரம்...' வித்தியாசமான விழிப்புணர்வில் அசத்தும் கரூர் விவசாயி!

மழை மரம்

 

சும்மா, 'மரம் வளர்த்தால், மழை பெய்யும்'னு சொன்னா, மக்களுக்கு அது அவ்வளவு தீவிரத்தை ஏற்படுத்தாது. அதனால், மரம் மூலம் மழைபொழிய வைத்து, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு நினைச்சேன்.

வேலம் மரக்கிளைகளில் பிளாஸ்டிக் குழாய் மூலம் கனெக்ஷன் ஏற்படுத்தி, சென்சார் முறையில் மழை பொழிவதுபோல் அமைப்பை செய்து, மரங்களின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர்.

வேலம் மரத்தில் சென்சார்
 
வேலம் மரத்தில் சென்சார் நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது கணக்குப் பிள்ளைபுதூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது வீட்டைச் சுற்றி இயற்கைச் சூழலை செம்மைப்படுத்தியிருக்கிறார். அதோடு, வீட்டைச் சுற்றி மூலிகைச் செடிகள், தேனி வளர்ப்பு, சிறிய அளவிலான உணவுக்காடு என்று ஒரு மாடல் பண்ணைபோல் அமைத்துள்ளார். இதைப் பார்க்க, பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் எனப் பலரும் வருகை தருகின்றனர்.

 

அப்படி, தனது பண்ணையைப் பார்க்க வருகைதரும் மாணவர்களுக்கு, மழை வழங்குவதில் மரங்களின் அவசியம் குறித்து உணர்த்த, வித்தியாசமான முயற்சியை செய்திருக்கிறார். தனது வீட்டின் அருகில் உள்ள, 25 ஆண்டுகள் பழைமையான வேலம் மரக்கிளைகளில், பிளாஸ்டிக் குழாய்களை அமைத்திருக்கிறார். அதோடு, மரத்தின் மேற்கு பக்கம் சென்சார் ஒன்றையும் அமைத்திருக்கிறார்.

மரக்கிளைகளில் பிளாஸ்டிக் டியூப்,
 
மரக்கிளைகளில் பிளாஸ்டிக் டியூப், நா.ராஜமுருகன்

மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை, தண்ணீர் டேங்கில் இணைத்துள்ளார். மாணவர்கள் அந்த மரத்தில் இருக்கும் சென்சாரை கிராஸ் செய்யும்போது, ஆட்டோமேட்டிக்காக டேங்கில் இருந்து பம்ப் ஆகும் தண்ணீர், மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் வழி சென்று, அந்த குழாய்களில் போடப்பட்ட நுண்ணிய துளைகளின் வழியாக, மழைபெய்வதுபோல் கீழே விழுகிறது.

மாணவர்கள் சென்சாரைவிட்டு அகன்றாலும், 10 நொடிகள் வரை தண்ணீர் மழைபோல் கீழே பொழிகிறது. அந்த மரத்தைச் சுற்றி வெய்யில் அடிக்க, மரத்தின் அடியில் மட்டும் திடீரென மழை பெய்வதால், ஒருகணம் மாணவர்கள் நிஜ மழையோ என்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகிறார்கள். இதன்மூலம், மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துவதாக செல்லமுத்து சொல்கிறார்.

 

இதுகுறித்து, செல்லமுத்துவிடம் பேசினோம்.

"நான் 30 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு வர்றேன். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக க.பரமத்தி பகுதியே வறட்சியான பகுதியா மாற ஆரம்பித்து, இப்போது 110 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் அளவுக்கு கொடுமையான வறட்சி பகுதியா மாறிடுச்சு. கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியா, க.பரமத்தி பகுதி மாறிடுச்சு. மழையும் இங்கு அதிகம் பெய்யாது. அதற்கு காரணம், இங்கு அதிகமாக கல்குவாரிகள் இயங்கி வருவதும் மரங்களின் அளவு குறைந்துபோனதும்தான். அதனால், என் பண்ணையைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்த நினைத்தேன். சும்மா, 'மரம் வளர்த்தால், மழை பெய்யும்'னு சொன்னா, அவங்களுக்கு அது அவ்வளவு தீவிரத்தை ஏற்படுத்தாது.

நட்சத்திர மரங்கள் முன்பு செல்லமுத்து
 
நட்சத்திர மரங்கள் முன்பு செல்லமுத்து நா.ராஜமுருகன்

அதனால், மரம் மூலம் மழை பொழிய வைத்து, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு நினைச்சேன். அதற்காகத்தான், வேலம் மரத்தில் இந்த ஏற்பாட்டை செய்தேன். உண்மையில் மாணவர்களிடம் இது பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கு. 'நாங்க எங்க பள்ளி, வீட்டு வளாகங்களில் மரங்களை வளர்க்கப்போறோம்'னு சொல்லிட்டுப் போறாங்க. அதேபோல், இந்த வேலம் மரத்தைச் சுற்றி, புல்லை நட்சத்திர வடிவில் அமைச்சு, மரத்தைச் சுற்றி அரசு, வன்னி, ஈட்டி, கருங்காலி, சக்கைபலானு 27 நட்சத்திர மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறேன். இதைச் சுற்றி வந்தால், 27 நட்சத்திரங்களையும் சுற்றிய பலன் கிடைக்கும்னு சொல்றாங்க. இப்படி, பல்வேறு வகையில் மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திட்டு வர்றேன்" என்றார்.

 

https://www.vikatan.com/news/environment/karur-farmer-spreads-awareness-by-creating-artificial-rain-in-a-tree

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்றும் திட்டம்; நிழல் மரக்கன்றுகள் நடுகை ஆரம்பம்

 

(மன்னார் நிருபர்)

மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்று நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வழிகாட்டலில் ‘குணரத்தினம் பவுண்டேசனின்’ அனுசரணையுடன் மாவட்ட ரீதியில் 3 அயிரம் நிழல் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

IMG-20201130-WA0010-300x225.jpg IMG-20201130-WA0012-300x229.jpg IMG-20201130-WA0013-300x249.jpg  IMG-20201130-WA0019-300x247.jpg
மாவட்டத்திலுள்ள பாடசாலைகள்,பொது இடங்கள் உள்ளடங்கலாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருகின்றன.

IMG-20201130-WA0015.jpg
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை(30) மடு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் குறித்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது மடு வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட பலர் பலந்து கொண்டனர்.

குறித்த திட்டத்தின் ஊடாக இது வரை 2500 நிழல் கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/94375

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பத்தூரில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு அகற்றி மறுநடவு: ஆட்சியரின் முயற்சிக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு

tree-transplanting-in-tirupathur மரங்களை மறுநடவு செய்யும் பணியை பூஜை போட்டு ஆட்சியர் சிவன் அருள் தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதால், அங்குள்ள மரங்களை வேரோடு அகற்றி, மறுநடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிகக் கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூரின் மையப்பகுதியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில், தரைத்தளத்துடன் 7 மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு ரூ.109.71 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 
 

இதைத் தொடர்ந்து, வனச்சரகர் அலுவலகத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இடம் அளவீடு செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் அமையவுள்ள இடத்தில் பழமை வாய்ந்த மரங்கள் நூற்றுக்கணக்கில் இருந்ததால் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளுக்காக மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையறிந்த, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மரங்களை வெட்டாமல் வேருடன் அகற்றி, மற்றொரு இடத்தில் மரங்களை மறுநடவு செய்யப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு இடையூறாக உள்ள மரங்கள் வேருடன் அகற்றி வேறு இடத்தில், மரங்கள் மறுநடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (டிச.4) தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 'ட்ரீ டிரான்ஸ் பிளான்ட்டிங்' முறையில் மரங்கள் மறுநடவு செய்யப்படுகிறது. இதற்காக பிரத்யேக வாகனத்தை அம்மாநிலத்தவர்கள் பயன்படுத்துகின்றனர். அதற்கு நிறைய செலவும் ஆகிறது.

அதற்கு மாறாக, மணல் அள்ளும் இயந்திரம், கிரேன் மூலம் மரங்களை மறுநடவு செய்தால் குறைந்த செலவாகும் என்பதால், திருப்பத்தூரில் புதிய முயற்சியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சில ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, மரங்களைச் சுற்றி இடைவெளி விட்டு குழி தோண்டி, பெரிய வேர்கள், மரக்கிளைகளை அகற்றிவிட்டு மீதமுள்ள வேர்களில் மண் ஒட்டி இருக்கும்படி மரங்களை வேரோடு தோண்டி எடுத்து, வேறு இடத்தில் 5 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்ட குழியில் மரங்களை மறுநடவு செய்து, அந்தக் குழிக்குள் இயற்கை உரம், மருந்துக் கரைசலைத் தெளித்தால் மரங்களின் வேர்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் மண்ணில் உள்ள உரத்தால் சில நாட்களில் மரங்கள் துளிர்த்து வளரத் தொடங்கிவிடும்.

இதுபோன்ற முயற்சி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது முதன்முறையாக செய்யத் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு மரத்துக்கும் மறு உயிர் கொடுக்கும் முயற்சியை எடுக்கும்படி ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகள் முடிய ஓரிரு வாரங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

இங்கிருந்து அகற்றப்படும் மரங்களைப் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பயணியர் விடுதி வளாகத்தில் மறுநடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். சில மரங்கள் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகே ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்" என்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளின் 'மரங்கள் மறுநடவு' ஆலோசனைக்கு சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/608184-tree-transplanting-in-tirupathur-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுழற்றி அடிக்கும் புயல்களும் காலநிலை மாற்றமும்: பூமிக்கு அடிக்கும் எச்சரிக்கை மணியா?

cyclones-and-climate-change-earth-is-giving-warning  

கடந்த சில வாரங்களாக நாம் அதிகம் கேட்கும், பார்க்கும், உச்சரிக்கும் வார்த்தைகள் புயல்.. கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு... மக்கள் அவதி என்பதாகவே இருக்கின்றன. தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்ளும் இயற்கை, புயல், மழை, வெள்ளம் என்ற இயல்புச் சங்கிலியிலும் மாற்றத்தைக் காண்பித்து வருகிறது..

கடலில் புயல் ஏற்படுவது இயற்கைதான் என்றாலும் தற்போது உருவாகும் புயல்களின் எண்ணிக்கையும் அவற்றின் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே வருவது சூழலியாளர்களைக் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்பு வரை அபூர்வமாய் ஏற்பட்ட புயல், இப்போது ஆண்டுதோறும் ஒரு புயல் என மாற்றிக்கொண்டு விட்டது.

2005-ல் ஃபர்னூஸ் புயல், 2008-ல் நிஷா புயல், 2010-ல் ஜல், 2011-ல் தானே, 2016-ல் வர்தா, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒக்கி, கஜா, 2020-ல் நிவர், புரெவி எனத் தொடர்ச்சியான புயல்கள் தமிழகத்தைச் சுழற்றி அடிக்கின்றன.

இதற்குக் காலநிலை மாற்றம் முக்கியமான, பிரதானக் காரணம் என்கிறார் ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இதுகுறித்து அவர் விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

16071728142484.jpg பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

’’பொதுவாகக் கடலில் புயல்கள் உருவாக முக்கியக் காரணங்கள் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம். மனிதர்கள் பசுமை இல்ல வாயுக்களை எரித்து வெளியிடக்கூடிய கார்பனைப் பெருங்கடல்கள் கிரகித்துக் கொள்கின்றன. இதனால் கடல் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த அதிகரிப்பால், அதிலுள்ள நீர் ஆவியாகி மேலே செல்கிறது. இதனால் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இவற்றால் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, புயலாக மாறுகிறது.

புயல்கள் உருவாகக் காலநிலை மாற்றத்துக்கு நேரடித் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டாலும் புயல்களின் தீவிரத்தன்மை, அவற்றின் எண்ணிக்கைகள் அதிகரிப்பு மற்றும் கணிக்க முடியாத தன்மைக்குக் காலநிலை மாற்றமே முக்கியக் காரணம். உதாரணத்துடன் விளக்கினால், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் வழக்கமாக 4 முதல் 7 நாட்களுக்குள் கரையைக் கடந்துவிடும். ஆனால் ஃபானே புயல் 11 நாட்களை எடுத்துக் கொண்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருமாற 40 மணி நேரம் ஆகும். ஆனால் ஒக்கி புயல் வெறும் 6 முதல் 9 மணி நேரத்தில் புயலாக மாறியது நினைவிருக்கலாம்.

காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் இயற்கைக்கு எதிரான செயல்கள் அங்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. பல்வேறு இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள், அவற்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. பேரிடர், பாதிப்பு, நிவாரணம், புயலுக்குப் பிந்தைய வறட்சி, அதற்கான நிவாரணம் எனத் தொடர் சங்கிலியாகச் சென்று கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

16071732402484.jpg

உண்மையில் சுற்றுச்சூழலால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. சூழலைப் பாதுகாப்பதன் மூலமே நீடித்த, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்’’ என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தால் நீரியல் சுழற்சியில் ஏற்படும் இடையூறே புயல்களின் தீவிரத்தன்மைக்குக் காரணம் என்கிறார் நீரியல் துறை பேராசிரியர் ஜனகராஜன்.

அவர் மேலும் கூறும்போது, ’’நீரியல் சுழற்சி (நிலத்தில் இருந்து தண்ணீர் கடலுக்குச் சென்று, நீராவியாக மாறி, மழையாக மீண்டும் நிலத்தை அடையும் தொடர்ச்சியான நிகழ்வு) தொடர்ந்து சீராக நடக்கும் வரையில் வட கிழக்குப் பருவமழை, தென் மேற்குப் பருவமழை, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புயல் என்பது வழக்கமாக இருந்தது. அதில் இடையூறு ஏற்படும்போதுதான் திடீர் புயல், வெயில், குறைவான நேரத்தில் பெருமழை, வரலாறு காணாத வறட்சி ஏற்படுகிறது. இவையனைத்தும் முன்பே ஏற்பட்டிருந்தாலும் அதன் தீவிரம் தற்போதுதான் அதிகரித்து வருகிறது.

பூமியின் வெப்பநிலை உயர்வாலும் லட்சக்கணக்கான ஏக்கர் காடுகளை அழிப்பதாலும் நீரியல் சுழற்சியில் இடையூறு ஏற்படுகிறது.

16071727982484.jpg எஸ்.ஜனகராஜன், நீரியல் துறை முன்னாள் பேராசிரியர், எம்ஐடிஎஸ்

கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, தொழிற்சாலை வாயுக்கள் வெளியேற்றம் ஆகியவற்றால் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தண்ணீர் நீராவியாகும் அளவு அதிகரித்து, அதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும், சில இடங்களில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக மாறலாம். அதேநேரத்தில், கடற்கரையைத் தவிர்த்த பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வறட்சி ஏற்படவும் சாத்தியமுள்ளது’’ என்று தெரிவித்தார்.

ஆய்வாளர் சுஜாதா பைரவன், காலநிலை மாற்றம்

’’வழக்கமாகப் புயல் ஒரே இடத்தில் நிலைகொண்டு இன்னும் வலிமை பெற்றதாக உருமாறும். ஆனால் கடந்த மாதத்தில் உருவான நிவர் புயல் புதன்கிழமை கரையைக் கடக்கும், வியாழக்கிழமை காலையில், மாலையில் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டு என நள்ளிரவில் வலிமை பெற்ற புயலாக மாறி கரையைக் கடந்தது. இதற்கு முக்கியக் காரணம் வெப்பநிலை உயர்வே. இந்த உயர்வு கடல் நீரோட்டங்கள், ஆற்றல் சுழற்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் புயல்கள் ஏற்படுகின்றன.

16071730532484.jpg

புயலுக்குப் பிறகான வறட்சி

காலநிலை மாற்றம் பருவ மழைப் பொழிவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதைச் சேமித்து வைக்க நாம் முறையான வசதிகளை மேற்கொள்ளாததால் அனைத்து நீரும் வீணாகி விடுகிறது. மீண்டும் பருவ மழை பெய்யாது என்பதால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, வறட்சி சூழல் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.’’

மேலும் இவற்றைத் தடுக்கஎன்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து சுஜாதா பைரவன் கூறும்போது, ’’மழைநீர் சேகரிப்பு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரல் ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும். அதேபோல உரங்கள் தவிர்த்த இயற்கை விவசாயத்தை (natural farming- உரங்கள் தவிர்த்து ஒரே நிலத்தில் மரங்கள், பயிர்கள், காய்கறிகள் பயிரிடப்படும் முறை)நோக்கி மக்கள் நகர அரசு ஊக்குவிக்க வேண்டும்.

16071731032484.jpgஆய்வாளர் சுஜாதா பைரவன்

காலநிலை மாற்றத்திற்கான தேசிய, மாநிலச் செயல் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றைத் தனியாக மேற்கொள்ளாமல், பொதுவான வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்துச் செய்ய வேண்டும். அரசுகள் புறம்போக்கு நிலங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. பதிலாக அந்த நிலங்களில் நகர்ப்புற விவசாயம், காய்கறி பயிரிடல், மியாவாக்கி வன உருவாக்கம் ஆகியவற்றைச் மேற்கொள்ளலாம்.

இவற்றை வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் நீட்டித்து கடற்கரை வரை ஒருங்கிணைத்து, பசுமை மண்டலமாக உருவாக்கலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பும் உருவாகும். கரியமில வாயு வெளியேற்றப்படுவதும் குறையும். இவற்றில் தமிழகத்தைக் காட்டிலும் மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

16071730382484.jpg

பூவுலகு சுந்தர்ராஜன் கூறும்போது,

* புதிதாக அணுமின் நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்கக் கூடாது. ஏற்கெனவே உள்ள அணுமின் நிலையங்களையும் மூடத் திட்டமிட வேண்டும்.

* பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.

* கடல், கடற்கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும்.

* சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களை அதிகரிக்க வேண்டும்..

* வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

பொதுவாகக் கூற வேண்டுமெனில் நீடித்த, நிலைத்து நிற்கக் கூடிய வளர்ச்சி என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அரசுகள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் வேறு வகையில் நமக்கே திரும்பி வரும். இந்தப் புயல்களையும் அதற்கான எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு இனியாவது மானுட சமூகம் விழித்துக்கொள்வது நமக்கு நல்லது, இயற்கைக்கும் அவசியமானது.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

https://www.hindutamil.in/news/tamilnadu/608560-cyclones-and-climate-change-earth-is-giving-warning-7.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

``குறைவே நிறைவு''! ஒரு தேவதையின் ‘பழைய பாசம்’!

குறைவே நிறைவு

குறைவே நிறைவு

#Entertainment

பிரீமியம் ஸ்டோரி

‘குறைவே நிறைவு!’ - என்பதைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு வெற்றிகரமான யூடியூபராக மட்டுமல்ல; தன் கொள்கைகளால் வாழ்க்கையையும் வென்றிருக்கிறார் இந்த இளம்பெண். வடக்கு அட்லான்டிக் பகுதியின் செழிப்பான தீவான அயர்லாந்தில் வசிக்கிறார். இவரது சேனலின் பெயர் ஃபேரிலேண்டு காட்டேஜ் (Fairyland cottage). நாம் ஒவ்வொருவரும் வாழ ஆசைப்படும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைத் தேடி அமைத்துக்கொண்டிருக்கிறார் இவர்.

“இந்தப் பூமியிடமிருந்து வளங்களைப் பறித்துக்கொள்வதற்குப் பதில் அதன் காயங்களைக் குணப்படுத்துகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் வேளாண் மக்களோடு வாழ்ந்தபோது நிலைத்த வேளாண்மை (Permaculture) என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்.

மினிமலிசம், ஸீரோ வேஸ்ட், இயற்கையோடு வாழ்க்கை போன்றவற்றில் ஈடுபாடு அதிக மாகவே கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் என் குடும்பத்துக்குச் சொந்தமான, அவர்கள் பயன்படுத்தாமல் விட்டிருந்த நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்யத் திட்டமிட்டேன். அந்த நிலத்தைப் பண்படுத்தி இயற்கை முறையில் பழங்கள், காய்கறிகள் பயிரிட்டு சோலையாக மாற்றியிருக்கிறேன். இந்த அழகான வாழ்க்கையை அனைவருக்கும் பயனுள்ளதாக்கவே இந்தச் சேனலைத் தொடங்கினேன்” என்பவர் 2012-ம் ஆண்டு முதல் இதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்தப் பெண்ணின் பெயரை எங்கு தேடினாலும் கண்டறிய முடியாது. உலகம் முழுமைக்கும் `ஃபேரிலேண்டு காட்டேஜ்' என்ற அவரது வீட்டின் பெயரிலேயே அறியப்படுகிறார். வீடியோவில் முகம்காட்டிப் பேசுபவர் பெயரை மட்டும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

``குறைவே நிறைவு''! ஒரு தேவதையின் ‘பழைய பாசம்’!
 

“நகர்ப்புறத்தில் வாழ்ந்தபோது என் வாழ்க்கையை வாழ நான் அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்தக் கிராமப்பகுதிக்கு வந்த பிறகுதான் ஏற்கெனவே என்னிடம் நிறைய இருக்கிறது; அதற்கு மேல் வாங்கிக் குவிப்பது வீண் என்ற தெளிவு ஏற்பட்டது. இந்தக் கிராமத்தில் இயற்கையின் மடியில் கிடைக்கும் செல்வங்களை நம்பி வாழ ஆரம்பித்த பிறகு, வாழ்க்கைத் தரம் அதிகரித்து, வாங்கும் செலவு குறைந்தது” என்பவர் எந்தப் பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த வீடியோக்களை அதிகமாக வெளியிட்டிருக்கிறார்.

“இந்த வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத் ததுக்குப் பிறகு, பல பொருள்களை வாங்கு வதை அடியோடு நிறுத்திவிட்டேன். உதாரணத்துக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரெட், ஜாம், சாஸ், பட்டர், டீ பேக் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். என் செல்போன் இணைப் பைக்கூட ப்ரீபெய்டாக மாற்றிவிட்டேன். தேவை ஏற்பட்டால் மட்டும் ரீசார்ஜ் செய்கிறேன். ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தையும் செகண்டு ஹேண்டில்தான் வாங்கிப் பயன்படுத்துகிறேன்” என்பவர் அவருக் கான அழகு சாதனப் பொருள்களான டியோடரண்ட், டூத்பேஸ்ட், சோப்பு என அனைத்தையும் சமையல் அறை பொருள்களைப் பயன்படுத்தியே தயாரித் துக்கொள்கிறார்.

வீடு, கழிவறையைச் சுத்தம் செய் வதற்கான திரவங்களையும் அவரே இயற்கை முறையில் தயாரிக்கிறார்.

தனது ஹவுஸ் டூர் தொடங்கி, ஆரோக்கியமான ரெசிப்பிகள், அழகுக் குறிப்புகள், செலவுகளைக் குறைப் பதற்கான வழிமுறைகள், தோட்டமிடல் என அனைத்தையும் வீடி யோக்களின் மூலம் நம் கண்களுக்கு விருந் தாக்குகிறார். ஒவ்வொரு வீடியோவுக்கும் மில்லியன் கணக்கில் வியூஸ் கிடைப்பதில் ஆச்சர்யமில்லை.

வீடியோக்களுக்கு இவர் அளிக்கும் வாய்ஸ் ஓவர், அதில் தெரி விக்கும் தகவல்கள் என அனைத்தையும் கேட் பவர்கள் அவரைப் போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஓர் அடியாவது முன்னே எடுத்து வைப் பார்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புதிய வீடியோக்களை வெளியிடுகிறார்.

“எனக்கு ஓர் ஆசை இருக்கிறது. இந்த நிலத்தின் ஆரோக்கிய வாழ்வைத் திரும்பக்கொண்டு வர வேண்டும். இந்த உலகத்தை அனைவரும் வாழ உகந்த இடமாக மாற்ற வேண்டும்” என்று சிரிக்கிறார்.

உண்மையாகவே அது தேவதையின் வீடுதான்.

 

https://cinema.vikatan.com/women/fairyland-cottage-youtube-channel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 ஆண்டுகளில் ஸ்பெயினின் மொத்த பரப்பளவை விட அதிக அளவில் அமேசான் காடுகள் அழிப்பு.

18 ஆண்டுகளில் ஸ்பெயினின் மொத்த பரப்பளவை விட அதிக அளவில் அமேசான் காடுகள் அழிப்பு..

காடுகள் இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்று. ஆனால் மனிதர்களின் தேவை பெருகவே காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டன. 
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில், பெரு, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், கயானா ஆகிய நாடுகளில் அமேசான் மழைக்காடுகள் பரவியுள்ளது.

ஆனாலும், அமேசானின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் தான் உள்ளது. அதிக அளவில் ஆக்சிஜனையும் மழைப்பொழிவையும் தரும் அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. 


 
அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது. இந்த காட்டுத்தீயில் சிக்கி பல்லாயிரக்கணக்கான அரியவகை வன உயிரினங்கள், மரங்கள் ஆகியவை அழிந்தன. 

அமேசான் மழைக்காடுகளின் பெரும் பகுதி பிரேசிலில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் போல்சனரோ தலைமையிலான அரசு, காட்டை பாதுகாக்க தவறிவிட்டதாகவும்,  காட்டு அழிப்பை ஊக்குவிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், 2000 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகளில் அமேசானில் காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரங்களை அமேசான் அட்லஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி 2000 முதல் 2018 ஆம் ஆண்டுவரை மொத்தமாக 5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இவை காட்டுத்தீ, மனிதர்களால் மேற்கொள்ளப்படும் காடுகள் அழிப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் நிகழ்ந்துள்ளது.

5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் என்பது ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகம் ஆகும். ஸ்பெயினின் மொத்த பரப்பளவு 5 லட்சத்து 5 ஆயிரத்து 990 கிலோமீட்டர்கள் ஆகும்.

2000 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகளில் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவில் 8 சதவிகிதம் அழிக்கப்பட்டுள்ளது என்பது 
தெரியவந்துள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/10041905/2147669/Tamil-News-Amazon-Deforestation-Data-Released.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் இறப்புக்கள்!

 
1-72-696x452.jpg
 23 Views

உலகில் அதிக எண்ணிக்கையிலான யானையின் இறப்புக்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் மனித-யானை மோதலால் அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகள் பதிவாகும் நாடுகளின் பட்டியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மனித-யானை மோதலை சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தகவல்கள் குறித்து அரசாங்கக் கணக்குக் பற்றி அறியும் கோபா  குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

மனித – யானை மோதலால் இலங்கையில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் உயிரிழப்பதாக கூறப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு மாத்திரம் அந்த எண்ணிக்கை 407 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இப் பிரச்சினை காரணமாக ஆண்டுதோறும் சரசாரியாக 85 நபர்கள் உயிரிழப்பதாகவும் கடந்த ஆண்டு 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-அதிகரிக்கும-3/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரூர்: 25 சென்ட் நிலம், 11 வகையான காய்கறிகள்... ஊர் மக்களுக்காக சமுதாய காய்கறித் தோட்டம்!

சமுதாயக் காய்கறித் தோட்டம்

சமுதாயக் காய்கறித் தோட்டம்

இந்த கிராமத்தில்தான் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகளை, ஏழ்மை நிலைமையில் உள்ள 25 குடும்பங்களுக்கு வழங்கி வருகிறார்கள்

தங்கள் கிராமத்தில் வசிக்கும், வாழ்வாதாரத்துக்கே சிரமப்படும் 25 குடும்பங்களுக்குச் சத்தான இயற்கை காய்கறிகளை இலவசமாக வழங்க ஏதுவாக, 25 சென்ட் இடத்தில் 12 பெண்கள் சேர்ந்து இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்திருப்பது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.

சமுதாயக் காய்கறித் தோட்டம்
 
சமுதாயக் காய்கறித் தோட்டம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது கருப்பத்தூர். இந்த ஊராட்சியில் உள்ள சிறிய ஊர், வேங்காம்பட்டி. இந்த கிராமத்தில்தான் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, ஏழ்மை நிலைமையில் உள்ள 25 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்கள் பெண்கள். கருப்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ரெங்கம்மாள்தான், 11 பெண்களை ஒன்றிணைத்து இந்த அற்புதப் பணியைச் செய்துவருகிறார். அருகிலுள்ள வீடுகளில் உள்ள கழிவுநீரைக் கொண்டு, இயற்கை முறையில் இந்த காய்கறித் தோட்டத்தை பராமரித்து வருகிறார்கள்.

 

மிளகாய், தக்காளி, கொத்தவரை, வெண்டை, சுரைக்காய், செடி அவரை, பீர்க்கன், பாகல், புளிச்சக்கீரை, தண்டுக்கீரை உள்ளிட்ட காய்கறி, கீரை வகைகளை இங்கே பயிர் செய்திருக்கிறார்கள். 12 பெண்களும், காய்கறித் தோட்டத்தை தினமும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை நடக்கும் காய்கறி, கீரை அறுவடைக்குப் பின், அதை 25 பங்குகளாகப் பிரித்து, அந்தக் குடும்பங்களுக்கு வழங்கிவருகிறார்கள்.

அதோடு, வேப்பங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த 'பசுமைக்குடி' என்ற இயற்கை தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழங்கிய துணிப் பைகளையும் மக்களுக்கு வழங்கி, ப்ளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

துணி பை பிரசாரம்
 
துணி பை பிரசாரம்

இந்த நல்ல முயற்சி பற்றி, கருப்பத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் ரெங்கம்மாளிடம் பேசினோம்.

"நான் ஊராட்சிமன்றத் தலைவராவதற்கு முன்புவரை, ஒரு என்.ஜி.ஓவில் பணிபுரிந்து வந்தேன். அந்த வகையில், புழுதேரியில் உள்ள கே.வி.கே-வோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது.

மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற ஆசை இருந்ததால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில், கருப்பத்தூர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றேன். என்னை நம்பி ஜெயிக்க வைத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தேன். நஞ்சான உணவை, நஞ்சான காய்கறிகளை உண்பதால், மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுது. அதைத் தடுக்க மக்களை இயற்கை விவசாயத்துக்கு திருப்ப முடியுமா என்று யோசித்து வந்தேன்.

 

இந்த நிலையில்தான், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, கே.வி.கே, ஏதாவது ஓர் ஊரில், மக்களுக்கு பொதுவாக பயன்படும் வகையில் சமுதாய காய்கறித் தோட்டம் அமைக்க முயல்வதாக சொன்னாங்க. உடனே நான், 'அதை எங்க ஊருல அமைக்கிறோம்' என்று சொன்னேன். வேப்பங்குடியில் ஏற்கனவே 'பசுமைக்குடி' அமைப்பு, தமிழகத்திலேயே முதன்முறையாக இப்படி ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக சமுதாயக் காய்கறித் தோட்டம் அமைச்சாங்க.

அதைப்பார்த்துட்டுதான், கே.வி.கே சார்பில், ஊராட்சிகளில் சமுதாயக் காய்கறித் தோட்டம் அமைக்க வெள்ளோட்டம் பார்ப்பதாக சொன்னாங்க. எங்க கிராமத்துல அமைக்க சம்மதம் சொன்னதால், கே.வி.கே-வில் இருந்து எல்லா விதைகளையும் கொடுத்தாங்க.

சமுதாயக் காய்கறித் தோட்டம்
 
சமுதாயக் காய்கறித் தோட்டம்

அதோடு, விதை நேர்த்தி செய்வது, விதைப்பது, தோட்டத்தைப் பராமரிப்பது, உரம் இடுவது என்று பல விசயங்களையும் எங்க 12 பேருக்கும் சொல்லிக்கொடுத்தாங்க. கடட்த ஆகஸ்ட் மாதம் காய்கறித் தோட்டத்தை அமைத்தோம். குறைந்த இடத்தில் காய்கறித் தோட்டம் போட்டுள்ளதால், ஊராட்சியில் உள்ள மொத்த மக்களுக்கும் கொடுக்க முடியாது என்று நினைத்தோம்.

அதனால், மனக்கஷ்டம் ஏற்படும் என்று நினைத்தோம். அதனால், ஊரில் அன்றாடங்காய்ச்சிகளாக உள்ள ஏழை குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மட்டும் வழங்கி வருகிறோம். இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்துகிறோம். அடுத்த முயற்சியாக, ஊரில் விவசாயம் செய்யாமல் விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களில் பெரிய அளவில் காய்கறித் தோட்டத்தை அமைக்கப் போகிறோம். இதன்மூலம், ஊர் பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற இருக்கிறோம்" என்றார் மகிழ்ச்சியாக!.

வாழ்த்துகள் சகோதரி!

 

https://www.vikatan.com/health/women/karuppathur-panchayat-chairman-rengammal-set-up-an-organic-garden-for-poor-people

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரங்கள் வெட்டுவதைத் தடுக்க மோடி உருவத்தை வரையும் ஒடிசா கலைஞர்

odisha-artist-carves-pm-s-portrait-on-trees-urging-him-to-take-note-illegal-tree-cutting மரத்தில் மோடி உருவத்தை வரையும் ஒடிசா கலைஞர் சமரேந்திர பெஹெரா.
 

வனத்தில் மரங்கள் வெட்டுவதைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரங்களில் மோடி உருவத்தை ஒடிசா கலைஞர் ஒருவர் வரைந்து வருவது பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கலைஞர் சமரேந்திர பெஹெரா. இவர் தனது சித்திரங்கள் மூலம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவைச் சேர்ந்த மரங்களில் அண்மைக் காலத்தில் இவர் வரைந்த ஓவியங்கள் ஒடிசா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சிமிலிபால் வனத்திற்குள்ளும் வெளியேயும் உள்ள மரங்களில் இவர் பல்வேறு சித்திரங்களை வரைந்துள்ளார்.

இதுகுறித்து பெஹெரா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

''இந்த உருவப்படத்தின் மூலம் இந்த வனத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைக் கவனத்தில் கொள்ளுமாறு மோடிஜிக்கு ஒரு கோரிக்கையை அனுப்ப விரும்புகிறேன்.

நான் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கலைஞன். எனது மேன்மைமிக்க பிரதமரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

நாட்டின் சுகாதார மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அதனால்தான் நான் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வனத்தில் உள்ள மரத்தில் அவரது உருவத்தை வரைகிறேன். அத்துடன் நமது சூழலைக் காப்பாற்ற, சட்டவிரோதமாக மரங்களை வெட்ட வேண்டாம் என்ற ஒரு விழிப்புணர்வுச் செய்தியையும் அனுப்ப முயல்கிறேன்''.

இவ்வாறு சமரேந்திர பெஹெரா தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/india/611033-odisha-artist-carves-pm-s-portrait-on-trees-urging-him-to-take-note-illegal-tree-cutting-1.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23 சென்ட் நிலத்தில் பழமையான சோலைக்காடு.. சாதித்த தனிஒருவன்!

பல் மருத்துவரான தருண்சாப்ரா, மேற்கு தொடர்ச்சி மலைகள் மீதும், தோடர் பழங்குடிகள் மீதும் அளவற்ற ஈர்ப்பினைக் கொண்டவர். தோடர் பழங்குடிகளின் வாழ்வியலோடு இணைந்த தாவர வகைகள் அருகிவரும் நிலையில், ஊட்டியில் தனக்குச் சொந்தமான 23 சென்ட் நிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பூர்வீக தாவர வகைகளை நடவு செய்து, 300 ஆண்டுகளுக்கு முந்தைய சோலை மரக்காட்டையே உருவாக்கி அசத்தியுள்ளார்.
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.