Jump to content

இலங்கையில் தனது இராணுவதளத்தை உருவாக்க சீனா முயற்சி- பென்டகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியனும், சீனனும்... ஒப்பிட்டு பார்த்தால்...
ஒன்று... முட்டாள் பீஸு, 
மற்றது... முரட்டு  பீஸு...
அம்புட்டுதேன்...

மீசையை... முறுக்கிக் கொண்டு, நிப்பாங்களே தவிர,
சண்டை.. மட்டும் பிடிக்க மாட்டாங்கள். லூசுப் பயலுகள். :grin: 🤣

1987 -1989 அனுபவம் எனக்கும் இருக்கிறதே..... 😂

சத்தியமா சொல்லுறன், எந்தக் காய்தலும் உவர்தலும் இல்லாமல், எந்த ஒரு கொமன் சென்சும் இல்லாதது இந்தியப் படைகள் ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சீனன் சுறண்டின ஒரு நாட்டைக் காட்ட முடியுமா, உங்களால்

நான் வேறு எங்கும் போக விரும்பேல்ல, அது எனது பிரச்சனையுமில்லை. விரும்பினால் நீங்கள் தேடிப்பாருங்கள், அவன் எந்த நாட்டைச் சுரண்டினான் என்கிற விபரத்தை.  நான் என் நாட்டைத் தான் காட்ட முடியும். இலங்கையில் சீனாவின் அபிவிருத்திகள், கட்டுமானங்கள், கடன்கள் எல்லாம் அளப்பரியவை. இந்தியாவைவிட, இலங்கை கேட்டதை விட அதிகம். ஆனல் புள்ளிவிபரங்களின் படி ஒன்றோ, இரண்டோ இலட்சத்துக்கு மேல் சீனத் தொழிலாளரை நியமித்திருக்கிறார்கள். எதுக்கு? களை எடுக்கவா? ஏன் நம் நாட்டுக்காரருக்கு வேலை தெரியாதா? இல்லை வேலை செய்ய மாட்டேன் என்று சொன்னார்களா?  நம் தமிழருக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று சொன்னீர்கள், சரி. மாண்டு மாண்டு வேலை செய்யும் சிங்களவருக்குமா விருப்பமில்லை? கடன் கடன்தான் இலங்கைக்கு. ஊதியம் என்கிற பெயரில் சீனா அதற்கு மேலால் தன் நாட்டுக்கு அனுப்பிவிடுவான்.  சீனன் நாட்டைச் சுரண்ட, சிங்களவன் தமிழனைச் சுரண்டுகிறான். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

ஆனால் 1962  ஆம் ஆண்டு திபத்திய அகதிகளில்  இருந்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பிரிவிலிருந்துதான் தற்பொழுது முன்னரங்க போர் முனையில் வெற்றியீட்டியுள்ளதாக சொல்கின்றனர்....கிட்ட தட்ட 50 வருடம் காத்திருந்து அனுப்பிருக்கிறது இந்தியா தனது அகதிகளிலிருந்து உருவாக்கிய படைப்பிரிவை

 

ஈழம்படைப்பிரிவை உருவாக்கி வைத்திருப்பார்களோ?

பில்டப்பை சகிக்க முடியவில்லை. இவன் சொல்றதைப்பார்த்தால் இந்தியா இன்று அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை காட்டிலும் அதி செயல்த்திறன் மிக்க, சுற்றியிருக்கும் எதிரிகள் அஞ்சி நடுநடுங்கும் ராணுவ, புலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். சுத்தமான மோடி சங்கிப்பொலத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

பில்டப்பை சகிக்க முடியவில்லை. இவன் சொல்றதைப்பார்த்தால் இந்தியா இன்று அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை காட்டிலும் அதி செயல்த்திறன் மிக்க, சுற்றியிருக்கும் எதிரிகள் அஞ்சி நடுநடுங்கும் ராணுவ, புலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். சுத்தமான மோடி சங்கிப்பொலத் தெரிகிறது.

ரஞ்சித்...  அவர்,  இந்தியாவுக்கு.... கொம்பு சீவி, 
சீன,  போர்க்களத்துக்கு அனுப்ப... ஆயத்தப் படுத்துகிறார்.   
ஒருக்கால்... போய்த்தான்...  பார்க்கட்டுமே.

அவரின்... ஆசையை, தடை செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1987 -1989 அனுபவம் எனக்கும் இருக்கிறதே..... 😂

சத்தியமா சொல்லுறன், எந்தக் காய்தலும் உவர்தலும் இல்லாமல், எந்த ஒரு கொமன் சென்சும் இல்லாதது இந்தியப் படைகள் ☹️

இந்திய அமைதிப் படை... என்னும் பெயரில்,  ஈழ மண்ணில்  நுழைந்து...
புலிகளிடம்... அடி,  வாங்கிக் கொண்டு போன ஆட்கள். 
இவர்களை...  மறக்க  மாட்டோம், மன்னிக்க  மாட்டோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

நான் வேறு எங்கும் போக விரும்பேல்ல, அது எனது பிரச்சனையுமில்லை. விரும்பினால் நீங்கள் தேடிப்பாருங்கள், அவன் எந்த நாட்டைச் சுரண்டினான் என்கிற விபரத்தை.  நான் என் நாட்டைத் தான் காட்ட முடியும். இலங்கையில் சீனாவின் அபிவிருத்திகள், கட்டுமானங்கள், கடன்கள் எல்லாம் அளப்பரியவை. இந்தியாவைவிட, இலங்கை கேட்டதை விட அதிகம். ஆனல் புள்ளிவிபரங்களின் படி ஒன்றோ, இரண்டோ இலட்சத்துக்கு மேல் சீனத் தொழிலாளரை நியமித்திருக்கிறார்கள். எதுக்கு? களை எடுக்கவா? ஏன் நம் நாட்டுக்காரருக்கு வேலை தெரியாதா? இல்லை வேலை செய்ய மாட்டேன் என்று சொன்னார்களா?  நம் தமிழருக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று சொன்னீர்கள், சரி. மாண்டு மாண்டு வேலை செய்யும் சிங்களவருக்குமா விருப்பமில்லை? கடன் கடன்தான் இலங்கைக்கு. ஊதியம் என்கிற பெயரில் சீனா அதற்கு மேலால் தன் நாட்டுக்கு அனுப்பிவிடுவான்.  சீனன் நாட்டைச் சுரண்ட, சிங்களவன் தமிழனைச் சுரண்டுகிறான். அவ்வளவுதான்.

தப்பி ஓடாதீர்கள் சாத்தான்..... சிரிப்பு தாள  முடியவில்லை 😂😂

சீனன் சுறண்டினான் என்று குற்றச்சாட்டை முன்வைத்தது நீங்கள். அப்படியா..... சுறண்டிய ஒரு நாட்டைக் காட்டுங்கள் என்றவுடன்....நீயே தேடிப்பார் என்கிறீர்கள்..... 😀

போங்கள் சாத்தான்... உங்கள் குசும்பு தாங்க முடியவில்லை 😂😂

கடனுக்கும் சுறண்டலுக்கும் வித்தியாசம் தெரியாத ஆளா நீங்கள் .. 😀

அது சரி ... எப்போது இலங்கை உங்கள் நாடானது .... 🤔

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இராவணன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சீனனிடம் உங்கள் நாடு (எனக்கும்தான் 😜) பட்ட  கடனுக்கு கலங்குகிறீர்களோ ... 😂😂

அதுசரி...

நீங்கள் என்னிடம் வேண்டிய கடனை எப்போது (வட்டியும் முதலுமாய்) அடைக்கப்போகிறீர்கள். சந்தடிசாக்கில அத மறந்துபோகவேண்டாம்..... ..

😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ராணுவதளம் அமைக்க அமெரிக்கா மட்டும் ஒருபோதும் முயற்சி செய்ததில்லையாக்கும்?

இலங்கையில் சீனாவால் ஒருபோதும் வெளிப்படையான ஒரு ராணுவதளம் அமைக்கவே முடியாது ...

அப்படி முடிந்தால் இலங்கையின் அரசியல், பொருளாதாரம், நிம்மதி, வளர்ச்சி அனைத்தையுமே இந்தியாவால் கெடுக்க முடியும்.

ஒருகாலம் சிங்கள தேசத்தின் நிம்மதியை கெடுக்க தமிழர்மேல் பாசம் கொண்டதுபோல்  தனது பிராந்திய நலனை காக்க ஆயுதமும் அழுத்தமும் கொடுத்த ஹிந்தியா,

பின்பு அதே ஆதரவை முடக்கி தமிழர்கள் ஆயுத அரசியல்  போராட்டங்களை நாசகாரம் பண்ணி சிங்களவன் கையை பலபடுத்திய ஹிந்தியா,

சீனதளம் ஒன்று தன் கொல்லை புறத்தில் வருகிறது என்றால்..

தனது பிராந்திய நலன் பாதிக்கபடுகிறது என்றால்,மறுபடியும் தமிழர்கள் தலையை பகடை காய் ஆக்கி, திடீர் பாசம் காட்டி  உருட்டி விளையாடி தன் காரியத்தை சாதிக்க முனையும்.

தமிழர் தேசத்துக்கு பக்கத்தில் சிங்களவர்கள் என்ற ஒரு இனமும் ,

இந்தியா என்ற ஒரு நாடும் இருக்கும்வரை,

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெற்றியும், நிம்மதியும், தோல்வியும் எப்போதுமே நிரந்தரமில்லை என்பதே  கசப்பான யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனிசி, இந்திரா காந்தி இருக்கேக்க, பங்களாதேஸ் பிரிச்சு விட்டுது... இலங்கைக்குள்ள அமேரிக்கன் வரப்போறான் எண்டு புலிகளை உருவாக்கி, இண்டைக்கு சுருண்டு படுக்க, அமேரிக்காகாரன், வந்த சீனாக்காரன் இங்க சுருண்டு படுத்திருக்கப்போறான் எண்டு கத்துறான்.

சங்கிகள்.... சிங்கி அடித்துக் கொண்டு ஓடப்போகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், அப்படித்தான் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு அறிக்கை அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு சொல்கிறது.

main-qimg-b1efd39707f054a8c14a1c4b3c82ec41

அச்செய்திக்குறிப்பின் விபரங்களை கீழே பார்க்கலாம்.

இலங்கையுட்பட இன்னும் சில நாடுகளில் தனது ராணுவத் தளங்களை நிறுவும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் ( சீனா ராணுவத்தின் உத்தியோகபூர்வ பெயர்) தனது நெடுந்தூர ராணுவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவும், போர் ஆரம்பிக்கும் பட்சத்தில் தனது படைகளுக்கான வழங்கல்களை தடையின்றி அனுப்பவும் தனது நாட்டிற்கு வெளியேயான ராணுவத்தளங்களை நிறுவும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அவ்வறிக்கை மேலும் குறிப்பிடும்பொழுது, விரைவான, தங்குதடையின்றிய போருக்கான ஏவுதளங்களையும், வழங்கற் தளங்களையும் நெடுந்தூர நாடுகளில் நிறுவுவதன்மூலம் சீன ராணுவம் போரில் தனக்குச் சாதகமான நிலையினை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகிறது.

main-qimg-f6e20d418acb2c1821a8a5be44cc60f2

ஜிபூட்டியில் அமைந்திருக்கும் சீன தளமும், உள்ளூர் கடற்படையுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடும் சீன வீரனும்

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜிபூட்டியில் அமைந்திருக்கும் சீன பெருந்தளத்திற்கு மேலதிகமாக தனது கடல், வான் மற்றும் தரைப்படைகளுக்கான ஏவுதளங்கள், விநியோகத் தளங்கள் ஆகியவற்றை இந்நாடுகளில் அமைக்க சீனா தயாராகிவருகிறது என்று இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

main-qimg-dd4e73bda11bce6fb423d5711608cede

மக்கள் சீனக் குடியரசின் 2020 ஆம் ஆண்டிற்கான ராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள் எனும் தலைப்பில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வருடாந்த அறிக்கையில் சீனா இலங்கை, மியன்மார் (பர்மா), தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாக்கிஸ்த்தான், ஐக்கிய அரபு ராச்சியம், கென்யா, சீஷெல்ஸ் தீவுகள், டன்சானியா, அங்கோலா, டஜிக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இதற்கான தளங்களை நிறுவும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறியிருக்கிறது.

main-qimg-f1addc7c66ecf65f228a1cb1c2fd567f

இந்தியாவைச் சுற்றி இறுக்கும் சீனாவின் ராணுவத் தளங்கள்

பென்டகனின் இந்த அறிக்கையின் பிரகாரம் சீனாவின் இந்த ராணுவ விரிவாக்கம் அமெரிக்காவின் உலக ராணுவ செயற்திட்டங்களுக்குச் சவாலாக மாறிவருவதாகவும், அமெரிக்காவுடனான போர் ஒன்றின்பொழுது சீனாவுக்கு இந்தத் தளங்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.

சீனாவின் தேசிய நலன்களை விரிவாக்கும் எண்ணத்துடன் செயற்பட்டுவரும் சீன கம்மியூனிஸ்ட் கட்சி தனது ராணுவத்தை தனது நாட்டிற்கு வெளியே தொலைவான இடங்களில் தளங்களையும், வலையமைப்புக்களையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் நிறுவுமாறு பணித்திருக்கிறதென்றும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

மக்கள் சீன ராணுவத்தின் இந்த புதிய முன்னெடுப்புக்கள் தரை, வான், கடல் போர்முனைகளுக்கப்பால் இலத்திரணியல் துறையிலும், விண்வெளித்துறையிலும் முழுமூச்சுடன் வியாப்பித்து வருகின்றன. உதாரணத்திற்கு மூலோபாய காப்புப் படை ( Strategic Support Force) மற்றும் மக்கள் சீன ராணுவத்தின் வளர்ச்சியடைந்துவரும் சைபர், விண்வெளி மற்றும் இலத்திரணியல் போர்த்திறன் ஆகியவை மூலம் எதிரிநாடுகளை பலமுனைகளில் எதிர்கொள்ளும் ஆற்றலை சீன ராணுவம் வளர்த்து வருகிறது. இத்துடன், சீனாவின் படைகள் தாயகத்திலிருந்து நெடுந்தூரத்துக்கப்பால் திறக்கக்கூடிய போர்க்களங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆற்றல்களையும் இத்திட்டம் கொண்டிருக்கிறது.

main-qimg-b012ae799cddabd9902aff7fd044a124

மக்கள் சீன ராணுவத்தின் மூலோபாயவாதிகள் சீனாவுக்கு வெளியே, தொலைவான முனைகளில் வான், கடல், தரைப் போர்களில் தமது கையோங்குவதற்கான திட்டங்களைப்பற்றித் தொடர்ச்சியாக சிந்தித்தும் செயற்பட்டும் வருகிறார்கள். இந்துசமுத்திர நாடுகள் மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் நிலைவைக்கப்படும் சீனத் துருப்புக்களை முன்னோடிகளாகக் கொண்டு திறக்கப்படும் களங்களில் சீனாவின் மேலதிக துருப்புக்கள் இணைந்துகொள்ளும் வழிமுறைகள் பற்றியும் சீன ராணுவம் ஆரய்ந்துவருகிறது.

பென்டகனின் அறிக்கைப்படி இவ்வாறான வெற்றிகரமான ராணுவ செயற்பாட்டிற்கு அனுபவம் மிக்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையொன்றினை உருவாக்குவதன் மூலம் சீனாவுக்கு வெளியிலான செயற்பாட்டுத்தளங்களையும், மத்திய ராணுவ கமிஷனையும், போர்க்களங்களுக்கான கட்டுப்பாட்டு நிலைகளையும் விநியோகத்தையும் அவதானிப்பதற்கு சீனா திட்டமிட்டு வருகிறதென்றும் கூறியிருக்கிறது.

மூலம் : கொழும்பு கசெட்ட்
தமிழாக்கம் : ரஞ்சித்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஆம், அப்படித்தான் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு அறிக்கை அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு சொல்கிறது.

main-qimg-b1efd39707f054a8c14a1c4b3c82ec41

அச்செய்திக்குறிப்பின் விபரங்களை கீழே பார்க்கலாம்.

இலங்கையுட்பட இன்னும் சில நாடுகளில் தனது ராணுவத் தளங்களை நிறுவும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் ( சீனா ராணுவத்தின் உத்தியோகபூர்வ பெயர்) தனது நெடுந்தூர ராணுவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவும், போர் ஆரம்பிக்கும் பட்சத்தில் தனது படைகளுக்கான வழங்கல்களை தடையின்றி அனுப்பவும் தனது நாட்டிற்கு வெளியேயான ராணுவத்தளங்களை நிறுவும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அவ்வறிக்கை மேலும் குறிப்பிடும்பொழுது, விரைவான, தங்குதடையின்றிய போருக்கான ஏவுதளங்களையும், வழங்கற் தளங்களையும் நெடுந்தூர நாடுகளில் நிறுவுவதன்மூலம் சீன ராணுவம் போரில் தனக்குச் சாதகமான நிலையினை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகிறது.

main-qimg-f6e20d418acb2c1821a8a5be44cc60f2

ஜிபூட்டியில் அமைந்திருக்கும் சீன தளமும், உள்ளூர் கடற்படையுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடும் சீன வீரனும்

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜிபூட்டியில் அமைந்திருக்கும் சீன பெருந்தளத்திற்கு மேலதிகமாக தனது கடல், வான் மற்றும் தரைப்படைகளுக்கான ஏவுதளங்கள், விநியோகத் தளங்கள் ஆகியவற்றை இந்நாடுகளில் அமைக்க சீனா தயாராகிவருகிறது என்று இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

main-qimg-dd4e73bda11bce6fb423d5711608cede

மக்கள் சீனக் குடியரசின் 2020 ஆம் ஆண்டிற்கான ராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள் எனும் தலைப்பில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வருடாந்த அறிக்கையில் சீனா இலங்கை, மியன்மார் (பர்மா), தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாக்கிஸ்த்தான், ஐக்கிய அரபு ராச்சியம், கென்யா, சீஷெல்ஸ் தீவுகள், டன்சானியா, அங்கோலா, டஜிக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இதற்கான தளங்களை நிறுவும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறியிருக்கிறது.

main-qimg-f1addc7c66ecf65f228a1cb1c2fd567f

இந்தியாவைச் சுற்றி இறுக்கும் சீனாவின் ராணுவத் தளங்கள்

பென்டகனின் இந்த அறிக்கையின் பிரகாரம் சீனாவின் இந்த ராணுவ விரிவாக்கம் அமெரிக்காவின் உலக ராணுவ செயற்திட்டங்களுக்குச் சவாலாக மாறிவருவதாகவும், அமெரிக்காவுடனான போர் ஒன்றின்பொழுது சீனாவுக்கு இந்தத் தளங்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.

சீனாவின் தேசிய நலன்களை விரிவாக்கும் எண்ணத்துடன் செயற்பட்டுவரும் சீன கம்மியூனிஸ்ட் கட்சி தனது ராணுவத்தை தனது நாட்டிற்கு வெளியே தொலைவான இடங்களில் தளங்களையும், வலையமைப்புக்களையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் நிறுவுமாறு பணித்திருக்கிறதென்றும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

மக்கள் சீன ராணுவத்தின் இந்த புதிய முன்னெடுப்புக்கள் தரை, வான், கடல் போர்முனைகளுக்கப்பால் இலத்திரணியல் துறையிலும், விண்வெளித்துறையிலும் முழுமூச்சுடன் வியாப்பித்து வருகின்றன. உதாரணத்திற்கு மூலோபாய காப்புப் படை ( Strategic Support Force) மற்றும் மக்கள் சீன ராணுவத்தின் வளர்ச்சியடைந்துவரும் சைபர், விண்வெளி மற்றும் இலத்திரணியல் போர்த்திறன் ஆகியவை மூலம் எதிரிநாடுகளை பலமுனைகளில் எதிர்கொள்ளும் ஆற்றலை சீன ராணுவம் வளர்த்து வருகிறது. இத்துடன், சீனாவின் படைகள் தாயகத்திலிருந்து நெடுந்தூரத்துக்கப்பால் திறக்கக்கூடிய போர்க்களங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆற்றல்களையும் இத்திட்டம் கொண்டிருக்கிறது.

main-qimg-b012ae799cddabd9902aff7fd044a124

மக்கள் சீன ராணுவத்தின் மூலோபாயவாதிகள் சீனாவுக்கு வெளியே, தொலைவான முனைகளில் வான், கடல், தரைப் போர்களில் தமது கையோங்குவதற்கான திட்டங்களைப்பற்றித் தொடர்ச்சியாக சிந்தித்தும் செயற்பட்டும் வருகிறார்கள். இந்துசமுத்திர நாடுகள் மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் நிலைவைக்கப்படும் சீனத் துருப்புக்களை முன்னோடிகளாகக் கொண்டு திறக்கப்படும் களங்களில் சீனாவின் மேலதிக துருப்புக்கள் இணைந்துகொள்ளும் வழிமுறைகள் பற்றியும் சீன ராணுவம் ஆரய்ந்துவருகிறது.

பென்டகனின் அறிக்கைப்படி இவ்வாறான வெற்றிகரமான ராணுவ செயற்பாட்டிற்கு அனுபவம் மிக்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையொன்றினை உருவாக்குவதன் மூலம் சீனாவுக்கு வெளியிலான செயற்பாட்டுத்தளங்களையும், மத்திய ராணுவ கமிஷனையும், போர்க்களங்களுக்கான கட்டுப்பாட்டு நிலைகளையும் விநியோகத்தையும் அவதானிப்பதற்கு சீனா திட்டமிட்டு வருகிறதென்றும் கூறியிருக்கிறது.

மூலம் : கொழும்பு கசெட்ட்
தமிழாக்கம் : ரஞ்சித்

நன்றி.
 

அந்த வரைபடத்தில் தெளிவாக தெற்கில் நிறமூட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

US military based around the world - Geoawesomeness

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலம்புங்கடா. புலிகள் இருந்தவரை சீனா,அமெரிக்கா ,இந்தியா உட்பட யாரும் உள்நுழைய முடியாது. புலிகளை அழிக்க உதவியதன் மூலம் தனக்குத்தானே ஆப்பை இறுக்கியது. இந்தியாவும் அமெரிக்காவும்.இப்பொழுது ஆபத்து இந்தியாவின் காலடியில் வந்து விட்டது. தமித்தேசத்தை அங்கீகரிப்பதன் மூலம் இப்பொழுதாவது ஆபத்தைத் தவிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2020 at 21:09, putthan said:

மருதடியான்.அட்டகிரியான் எல்லாம் யார்? சுத்த அம்பாந்தொட்ட சிங்களவர்கள்.... ...இடையில் வந்த தமிழ் குடியேற்ற வாசிகள் அவரை இந்துவாக மாற்றிவிட்டார்கள்...மருதடியானை    ஞானக்கொழுந்தானே  என சொல்லுகின்றோம் அதே போல புத்தரையும் ஞானக்கொழுந்தானே என சொல்கின்றோம் .....ஆகவே மருதடியான் சிங்கள் கடவுள் ......

தகவல் .....மானிப்பாய் மாகாநாயக்க தேரர் ரட்ணசிலி

ரட்ணசிலி அல்ல

சிலி (silly) ரட்னே 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.