Jump to content

வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் – மட்டுநகர் திவா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் – மட்டுநகர் திவா

Thirumankalai-22-696x464.jpg

அதிகாலை 4 மணிக்கு அம்மா போட்டு தந்த தேனீரை அருந்திவிட்டு நல்ல குளிர் தாங்கக் கூடிய சேட்டும், அந்த நேரம் கொறோனா என்றதால முகக்கவசமும் போட்டுகொண்டு பகத்து வீட்டு சக்தி அண்ணாவையும் அழைத்துக்கொண்டு மூதூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தேன்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை – நாவலடி சந்தி – வாகரை – செருவில தாண்டி திருகோணமலை பக்கம் வாருகிற நேரம் மூதூர்க்கு செல்ல முதல் நீலாபொல என்று ஒரு பெயர் பலகையோட ஒரு சந்தி வரும்.

முதல் பாரதி புரம் என்று தான் அந்த இடத்தில் பெயர் பலகை இருந்தது. அதை அகற்றிவிட்டு இப்ப கொஞ்ச நாளாக தான் நீலாபொல என்ற சிங்கள ஊர் பெயர் பலகையை வைத்தார்களாம். (ஊர் மக்கள் தெரிவித்தார்கள்)

நீலாபொல சந்தியில ஒரு உணவகம் உள்ளது செருவில கடந்து வருகிற நேரம் திறந்து இருந்தது அந்த கடை மட்டும் தான்.

அங்க தேனீர் அருந்தி 3 பரோட்டாவும் சாப்பிட்டோம், அப்போ அந்த நேரம் அதிகம் பசிக்கவில்லை அதிகாலை நேர பிரயாணம் என்றதால களைப்பும் இருக்கவில்லை எனினும் காட்டுக்குள்ள போன பிறகு பசி எடுத்தால் என்ன செய்வது என்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க நேரம் 7 மணியை அண்மித்துவிட்டது.

மேலதிகமாக 3 மரக்கறி ரொட்டியும் வாங்கி கொண்டு நீலாபொல வீதியால போய்க்கொண்டு இருந்தோம்.

வீதிக்கு அருகாக பெரிய வாய்காலும் அது நிறைய தண்ணீரும் நீண்ட தூரம் வரை எங்களுடன் வந்துகொண்டே இருந்தது.

Thirumankalai-11.jpg

அப்போ சக்தி அண்ணா கூறினார் “இன்னும் 8 மணி கூட ஆகல்ல, காட்டு மிருகங்கள்ட நடமாட்டம் குறைந்திருக்காது, நாம எப்படியாச்சும் எட்டு மணி வரைக்கும் காத்திருக்கவேணும்.” என்று.

ஓம் அண்ணா எனக்கும் அதுதான் சிந்தனையாக இருக்கு என நான் கூறமுதல் நீங்களே கூறீட்டீங்கள்.

அங்கே என்னென்ன மிருகங்கள் இருக்கும்.. அவைகளிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று நிறைய பயம் கலந்த கதைகளை பேசிக்கொண்டே போய்க் கொண்டிருந்தோம்.

போகும்போது கங்குவேலி எனுமிடத்தில் 8 மணி வரை நேரத்தை செலவிட்டுவிட்டு லிங்கபுரம் காட்டு பகுதியின் எல்லையில் உள்ள அணைக்கட்டில் உந்துருளியில் பயணித்தவாறு காட்டுக்குள் இறங்குவதற்கு வழியை தேடிக்கொண்டே 2-3 கிலோமீட்டர்கள் பயணம் செய்தோம்.

காட்டுக்குள் செல்வதற்கென பிரதான வழிகள் ஏதும் இல்லை என்பதால் சரியான பாதையை கண்டுபிடிப்பதும் பின்னர் போன வழியால் திரும்பிவந்து ஊருக்குள் சேருவது என்பதும் மிகவும் கடினமான வேலை.

அணைக்கட்டிலிருந்து காட்டுக்குள் உந்துருளியை இறக்க முடியாதவாறு யானை வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இறுதியாக யானை வேலி முடிவடையும் இடத்தில் காட்டுக்குள் ஆட்கள் சென்று வந்த அடையாளங்களுடன் ஒரு வழிப் பகுதியைக் கண்டு பிடித்தோம்.

அதே வழியால் நாமும் சற்று தூரம் பயணிக்க கழுமரம் போன்ற அமைப்பில் கீழே பெரிய அளவான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட அமைப்பு ஒன்று எம்மை வரவேற்றது.

Thirumankalai-55.jpg

அதை கண்டதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி காட்டுக்குள் இறங்கி விட்டோம் எனும் பயம் இருந்தாலும் சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் என நினைத்து மகிழ்ச்சியில் இருந்தோம்.

சில நாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் ஏதோ சடங்கு நடைபெற்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். பூசைப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

அந்த இடத்திலும் நின்று வணங்கி விட்டு சில புகைப்படங்களும் எடுத்துவிட்டு வாகனங்கள் சென்று வந்த பாதையிலேயே தொடர்ந்து பயணத்தை லிங்கபுரம் காடு நோக்கி பயணித்தோம்.

மண்ணில் உரலை வைத்து வைத்து எடுத்ததுபோல பாதச்சுவடுகள் தெரியத் தொடங்குகிறது. அவ்வளவாக பயப்படவில்லை எது நடந்தாலும் சமாளிப்போம் இனி பின்வாங்க முடியாது என்ற நிலையில் அடி பார்ப்பதற்காக சக்தி அண்ணா இறங்கி சென்றார்.

நானும் அவர் பின்னாலே உந்துருளியை மெதுமெதுவாக எடுத்துக்கொண்டு சென்றேன். நாம் செல்லும் பாதையில் இருந்து யானையின் பாதம் விலகிச் சென்று கொண்டே இருப்பதால் அந்த யானை தற்போது இந்த இடத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் சற்று வேகமாகவும் அவதானமாகவும் சென்று கொண்டிருந்தோம்.

அடி பார்க்க தெரியாதவன் காட்டு வழியில் பயணிக்க தகுதியற்றவன் என கூறுவார்கள். காட்டு மணலில் பதிந்து இருக்கும் கால் தடங்களை வைத்தே என்னென்ன இடர்கள் என்னென்ன மிருகங்களால் வரும் என முன்கூட்டியே நாம் கணிக்க வேண்டும்.

அப்போதுதான் தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் சமாளிக்கும் சந்தர்ப்பம் நம்மிடம் இருக்கும்.

Thirumankalai-33.jpg

அனேகமான மிருகங்கள் மனிதரைப் போன்று எடுத்தவுடன் தாக்காது. எப்படியும் நம்மிடமிருந்து விலகிச் செல்லவே எத்தனிக்கும் அவை அவ்வாறு விலகிச்செல்ல இடம் கொடுப்பதே நம்மால் செய்யக்கூடிய முதலாவது வேலை.

அப்படி விலகிச்செல்ல முடியாவிடில் அவை தற்காப்புக்காக நம்மை தாக்கி விட்டுச் செல்லவே எத்தனிக்கும் அதற்கு இடம் கொடுக்காமல் காட்டு மிருகங்களை கண்டதும் நாம் அவற்றிடமிருந்து விலகிச் செல்வதே புத்திசாலித்தனம்.

நாம் போகும் வழியில் மரை, குரங்கு, மயில், உடும்பு, முயல் போன்றவையும் கண்ணில்ப்பட்டது. அவற்றை நாம் தொந்தரவு செய்யவில்லை எனினும் எம்மைக் கண்டவுடன் சற்று மறைவான இடத்தில் அவை சென்றுவிட்டன.

காட்டுக்குள் ஒரு மணி நேர பயணத்தின் பின் திருமங்களாய் சிவன் கோவிலை வந்தடைந்தோம்.

மட்டக்களப்பில் இருந்து அண்ணளவாக 90 மைல் தொலைவிலும் கிளிவெட்டி பிரதேசத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த லிங்கபுரம் என்ற காட்டு பகுதி உள்ளது.

முன்பு இந்த இடம் திருமங்களாய் என அழைக்கப்பட்டது. தமிழர்கள் செறிவாய் வாழ்ந்த இந்த பகுதி, 1964 இன் பின்னர் உருவான கலவரங்களால் அடர்ந்த வன பகுதியாய் மாறி காடுகளாக மாறியது என அறிய முடிந்தது.

திருமங்களாய் சிவன் கோவில் ஓர் மிக புராதன சிவன் கோவில் தான் என முதல் பார்வையிலேயே அறிய முடிந்தது.

திருகோணமலை வரலாற்றை கூறும் திருக்கரசை புராணம் என்ற வரலாற்று நூலில் திருமங்களாய் பற்றி பல குறிப்புகள் உள்ளன.

“இடைபிங் கலைஇம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை கடவும் பாலைவனம் கைகண்ட மூலம் படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே”

 

என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடும் தில்லைவனம் இந்த லிங்கபுரம் வணமாகவே இருக்க வேண்டும் என்பதும் ஒரு கதை. இது எவ்வளவு உண்மை என நிரூபிக்கும் அளவு அறிவு எனக்கில்லை. அறிந்தவற்றை ஒப்புவிக்கிறேன் அவ்வளவு தான். ஆர்வம் உள்ளவர்கள் ஆதாரத்தை தேடி எடுத்துக்கொள்ளலாம்.

கோவிலுக்கு வந்து சேர்ந்ததும் எல்லையற்ற மகிழ்ச்சி. இது கோவிலை கண்டதால் வந்த மகிழ்ச்சி என்பதை விட ஒரு விலங்கிடமும் நாம் மாட்டிக் கொள்ளவில்லை என்கின்ற மகிழ்ச்சி தான் எனலாம்.

வந்து இந்த இடத்தை பார்க்கும் போதே ஒரு வகை பயத்தையும் ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் என்னுள் உணர முடிந்தது.

ஏற்கனவே தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து முழுமையாக ஆராய்ச்சிகளை முடித்த இடம் என்பதால் அத்திவாரம் வெட்டிய குழிகள் போல இருந்த குழிகள் கண்ணில் பட்டது ஆச்சரியம் இல்லை. எனினும் அங்கு இருந்த பழைமை வியக்க வைத்தது.

கோவில் என சொல்லும் போது ஒரே ஒரு கட்டடம் தான் கட்டடம் போன்ற கட்டமைப்புடன் இருந்தது. மற்றவை எல்லாம் உடைந்து விட்டது.

 

புதிதாக யாரோ லிங்கம், நத்தி, பலிபீடம் என்பவற்றை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அவை மட்டும் அங்கே புதியவை என முதல் பார்வையிலேயே அறியக்கூடியதாக இருந்தது.

சுற்று வட்டாரத்தில் நேர்த்தியான பொழியப்பட்ட தூண்கள் மற்றும் குழிக்கற்கள் எவ்வளவு பிரம்மாண்டமான கோயில் அவ்விடத்தில் இருந்திருக்கும் என்பதை சான்று பகிர்கின்றன.

முற்றுமுழுதாக கருங்கல்லால் செதுக்கப்பட்ட கோமுகி ஒன்றினையும் என்னால் அங்கு அவதானிக்க முடிந்தது.

சோழர் காலத்து சிவன் கோயில் என்பதால் அவர்களது கட்டடக்கலையில் கோமுகிக்கு கொடுக்கும் இடம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை இது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

கோவிலின் முன்னால் சதுரவடிவ சுரங்கம் ஒன்றும் உள்ளது. எங்கு சென்று முடிகிறது என தெரியவில்லை. ஆனால் நிலத்துக்குக் கீழே வளைந்து செல்கிறது அதனுள் புற்கள் வளர்ந்துள்ளதால் மேலிருந்து கீழே என்ன இருக்கிறது என பார்க்க முடியவில்லை. எனினும் திருகோணமலை வரை சுரங்கம் செல்வதாக கதையொன்று உள்ளது இதற்கும் சான்றுகள் என்னிடம் இல்லை.

அண்மைய ஆய்வுகளில் இங்கு இங்கு 5 மிக பழமையான கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 3 கல்வெட்டுகள் கி.பி 10, 11 நூற்றாண்டுக்கு உரியவையும் ,மீதி ரெண்டு 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் கருதப்படுகிறது.

சுற்றவர முழுமையாகப் பார்த்துவிட்டு காட்டில் கிடைத்த பூக்களை வைத்து சிவலிங்கத்தை வணங்கி விட்டு ஒரு மணிநேரத்தின் பின் மீண்டும் நீலாப்பொல கிராமம் நோக்கி வந்த வழியே பயணத்தை தொடர்ந்தோம்.

அடுத்த பயணத்தில் சந்திப்போம்…

 

http://www.ilakku.org/வரலாற்று-புகழ்-மிக்க-திர/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.