Jump to content

புதிய திருத்ததிற்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது - ஹர்ஷ டி சில்வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(செ.தேன்மொழி)

20 ஆவது அரசியலமைப்பு சீர் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியினால் ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சர்வாதிகார செயற்பாடுகளை தடுப்பதற்காகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்பட்டது. இதனை நீக்குவதால் மீண்டும் அந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கும். தனி நபரொருவரிடத்தில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் கூறுவதைப் போன்று தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதற்காக மக்களின் உரிமைகளை நீக்க முயற்சிப்பது ஜனநாயக கொள்கைமிக்க செயற்பாடு கிடையாது.

ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற சட்டமூலம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அடிப்படை உரிமைமீறல்களை செய்தால் இவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்யமுடியும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும். அதனை 20 ஆவது திருத்தத்தில் மாற்ற முயற்சித்துள்ளனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியினால் ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலைமை ஏற்படும்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்வாங்கப்பட்டிருந்த அரசியலமைப்பு பேரவையை நீக்கி பாராளுமன்ற பேரவையை ஸ்தாபிக்கவும் எண்ணியுள்ளனர். இந்நிலையில் இந்த பாராளுமன்ற பேரவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக விளங்குவதுடன் , இதற்கு சிவில் உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்பட மாட்டார்கள். இதேவேளை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளதாக புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் , அதற்கான நியமனத்தை ஜனாதிபதி வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளது. இல்லாத ஆணைக்குழு ஒன்றுக்கு எவ்வாறு ஜனாதிபதி நியமனம் வழங்குவார்?

உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் பிரதம நீதியரசரை நியமிக்கும் பொறுப்பும் ஜனாதிபதிக்கே ஒப்படைக்கப்படவுள்ளது. அமைச்சரவை நியமனத்திற்கு வழங்கப்பட்டிருந்த கட்டுபாடு நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி விரும்பினால் 150 அமைச்சுகளை கூட அவரால் நிமிக்க முடியும். ஏன் இதனை மாற்றினார்கள். அமைச்சுகளின் குறைப்பு என்ற விடயத்துக்கு நாட்டு மக்களும் ஆதரவளித்திருந்தனர் அல்லவா. இதேவேளை ஆளும் தரப்பினர் தங்களது ஆட்சியில் செலுவுகளை குறைப்பதாக தெரிவித்திருந்தனர். அமைச்சுகளை அதிகரிப்பதினால் செலவுகளை குறைக்க முடியுமா?

ஜனாதிபதி , அமைச்சர்கள் அல்லது இராஜாங்க அமைச்சர்கள்  விரும்பினாரல் பிரதமரை பதவியிலிருந்து விலக்க முடியும்.பாராளுமன்றத்தின்கான பொது செயலாளர் நியமனத்தையும் ஜனாதிபதியே வழங்க முடியும்.  இந்நிலையில் ஒரு வருடத்தில் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியும். மக்களின் விருப்பத்தின் பேரிலே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படுகின்றார்கள். இந்நிலையில் ஜனாதிபதியால் மாத்திரம் எப்படி மக்கள் வழங்கிய தீர்மானத்திற்கு புறம்பாக ஒரு வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.

அவசரகால சட்டத்தை கொண்டுவருவதென்றால் வர்தமானியில் அறிவித்ததன் பின்னர் இருவாரம் கழித்தே அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்ற சட்டம் நீக்கப்பட்டுள்ளது.  இந்த சட்டம் நிறைவவேற்ற பட்டதற்கு காரணம் பிரதமர் மஹிந்ந ராஜபக்ஷ அவரது ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இந்த அவசரகால சட்டத்தின் ஊடாகவே கொண்டுவந்தார். அதனால் அதனை மீள்பரி சோதனை செய்யவோ தெளிவுப் பெறுவதற்கோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.இதனால் தான் இரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது.அதனையும் இல்லாமலாக்க முயற்சித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகத்தில் இடம்பெறும் செலவினங்கள் தொடர்பில் கணக்காய்வு அதிகாரிகள் பரிசீலனை செய்ய முடியாது என்ற விடயமும் 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/89262

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.