Jump to content

லெப்டினன்ட் அபிநயா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினன்ட் அபிநயா

Lieutenant-Abinaya.jpg

 

துள்ளித் திரிந்த சின்னப்புலி லெப்டினன்ட் அபிநயா.

அபிநயாவின் நெட்டையான, சற்றுக் குண்டான தோற்றம் அவ்வணியிலேயே அவளைத் தனியாக இனங்காட்டும. முகம் நிறையச் சிரிப்புடன் எந்நேரமும் துள்ளித்திரியும் இவள் பயிற்சியிலும் இதே ஆர்வத்துடன் செயற்படுவாள். அந்த அணியிலேயே சிறியவள் என்பதால் எல்லோருக்கும் விருப்பமுள்ளவளாக இருந்ததுடன், தனது குழந்தைத்தமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவாள்

1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அபிநயா சிறுவயதிலேயே சிங்கள மொழியில் கதைக்கத் தெரிந்திருந்தாள். சிலவேளைகளில் தனக்குத் தெரிந்த சிங்களப் பாடல்களைப் பாடி எல்லோரையும் சிரிக்க வைப்பாள். இவளுக்குக் கோபம் வந்தால் சிங்களத்தில்தான் ஏசுவாள். எதுவுமே விளங்காத மற்றவர்கள் கொல் என்று சிரிப்பதுடன் அவளது கோபமும் பறந்து விடும். தாக்குதல் பயிற்சிகளின்போது சிங்களத்தில் கத்திச் சண்டைப் பயிற்சி செய்வாள்.

தான் நன்றாகச் சண்டை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவளிடம் நிறையவே உண்டு. எதிரியை ஓடஓட விரட்டிய ஓயாத அலைகள் -03 சமரில் இவள் இரு காலிலும் காயமுற்றாள்.

எப்போதும் தான் ஒரு வேவு நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும் என பொறுப்பாளரிடம் அடம்பிடிப்பாள். இறுதியில் அவளின் திறமையும், ஆர்வமும் அப்பணிக்கு அவளைத் தெரிவாக்கியது தரையிறக்கச் சமரின் ஒரு கட்டமான இத்தாவில் பகுதி தாக்குதல் நடவடிக்கையில் வேவு அணியில் ஒருவராகச் செயற்படும் சந்தர்ப்பம் இவளுக்குக் கிடைத்தது. இறுதியில் 5 பேர் கொண்ட அணிக்குரிய வேவுப் பொறுப்பாளராக உயர வைத்தது.

சாவகச்சேரிப் பகுதியில் நின்ற அபிநயா வேவுக்குச் சென்று வந்த பின்பு தான் பார்த்தவற்றை துல்லியமாக குறிப்பிடுவதுடன் எதிரியின் உரையாடலையும் கேட்டு வந்து எமக்குத் தமிழாக்கம் செய்வாள். கேட்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கும். அதே நேரம் அவளது திறமையை எண்ணி மனம் வியக்கும் தனித் துணிவு என்பது அபிநயாவுடன் கூடப் பிறந்த ஒன்று.

சில நாட்களின் பின்னர் இவள் அரியாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டாள் . அதுவே அவளது இறுதிக் களமாகவும் அமைந்தது. நல்ல துணிச்சல்காரியாக, ஒரு நல்ல வேவுப்புலியாக, எல்லோருக்கும் நல்லவளாய், வல்லவளாய் மண்ணுக்காய் வாழ்ந்து வரலாறாகிப் போன அபிநயாவின் நினைவுடனும் நடக்கின்றோம் விடியலை நோக்கி.

நினைவுப்பகிர்வு: புரட்சி.
நன்றி – எரிமலை இதழ் (ஆடி, 2003).

 

https://thesakkatru.com/lieutenant-abinaya/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.   

Link to comment
Share on other sites

  • 11 months later...


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.