Jump to content

கிழக்கு தொல்பொருள் செயலணியில் இணைய தயார் - மருத்துவர் முரளி பகிரங்க அறிவிப்பு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தொல்பொருள் செயலணியில் இணைய தயார் - மருத்துவர் முரளி பகிரங்க அறிவிப்பு.!

murali.jpg

கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழ் புத்திஜீவிகள் இணையத் தயாரில்லை என கூறப்பட்ட நிலையில் தாம் இணைந்து செயற்பட தயராக இருப்பதாக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளியல் துறையை நான் சாராதவனாக இருந்த போதிலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் தொல்பொருளியல் துறை சாராத மகப்பேற்றியல் நிபுணர் கபில குணவர்தன உட்பட பலர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் சமுதாய மருத்துவ நிபுணராக கடமையாற்றிவரும் எனக்கு ஒரு துறை சார் நிபுணராக செயலணியில் கடமையாற்ற முழுமையான தகுதி இருக்கிறது. இதை விட நான் கட்சி அரசியலுக்கு அப்பால் பட்டவன் என்பதையும் 2015 யாழ் மருத்துவச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் வட மாகாண சபையினால் மறைக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து மாசடைந்த உண்மைகளை அம்பலப் படுத்தியவன் என்பதையும் அப்போது இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அமைச்சர் நன்றாக அறிவார்.

மேலும் நான் கிழக்கை சாராதவனாக இருப்பதானால் நல முரண்பாடுகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் நடுநிலையாக சிந்திக்க முடியும். நான் தொடர்ச்சியாக மருத்துவத்துக்கும் அப்பாலும் ஆய்வுகளை மேற்கொண்டுவருவதும் கிழக்கில் கூட கடந்த காலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு துறைசார் நிபுணராக கல்குடாவில் மதுபானசாலை இயங்குவதற்கு போதுமான நீர்வளம் அங்கு காணப்படவில்லை என்று தெரிவித்து இருந்ததையும் அனைவரும் அறிவர். இந்தப் பின்புலத்தில் அமைச்சரின் சாதகமான முடிவையும் நியமனக் கடிதத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன் .

 நன்றி.

Dr முரளி வல்லிபுரநாதன்
MBBS (Jaffna), PGD (Population Studies), MSc (Community Medicine), MD (Community Medicine), FCCP (Sri Lanka), FRSPH (UK)
சான்றளிக்கப்பட்ட சமுதாய மருத்துவ நிபுணர்
வருகை நிலை விரிவுரையாளர், யாழ் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/83034/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிழக்கு தொல்பொருள் செயலணியில் இணைய தயார் - மருத்துவர் முரளி பகிரங்க அறிவிப்பு.!

முரளி இந்த வேலையை செவ்வன செய்யக்கூடியவர். நியமிப்பார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முரளி. இதுக்கு என் கிழக்கில் இருந்து இன்னும் ஒருவர் கூட வரவில்லை என்று பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.

உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, யாழ் பல்கலைக்கழகழகத்தில் இருந்து  நிச்சயம் உதவுவார்கள்.

முதலில், இங்கு கிழக்கு பாடும் பதிவாளர்கள் பதில் சொல்லுங்கள். 

இங்கே கிழக்கு, கிழக்கு என்றும், தமது சொந்த நலனுக்கு கிழக்கு போராளிகளை பலியாடு ஆகியும் உள்ளவராகின் உறவு என்று சொல்பர்களுக்கு கிழக்கை பற்றி கதைப்பதத்திற்கு   அருகதை இனி இல்லை.

ஏன் கிழக்கின் தமிழர்களில் படித்தவர்கள் அமரும் புத்தி ஜீவிகள் என்போருக்கும் அருகதை இல்லை.

அரசு நிறுவனமயப்படுத்தப்பட்ட அபகரிப்பு அங்கிருக்கும் தமிழ் மக்களின் நிலத்தின் இருப்புக்கு வருகிறது, கிழக்கு என்று கூவுவோர் கம் என்று அமசடக்கி கொண்டு இருக்கிறார்கள்.

அல்லது இந்த அபகரிப்பில், வெளி பயிரை மேய்ந்தது போல, அவர்களின் அனுபவத்தில் (கிழக்கு போராளிகளையும் மக்களையும் பாலிடாது ஆக்கியது) முன்பு போல காசு, பதவி  பார்க்க காத்திருக்கிறார்கள் போலும், இதில் கிழக்கு துறை சார் படித்தவர்கள், புத்தி ஜீவிகளும்  அடக்கம்.  

முஸ்லிம்களுக்கு பூர்விகம் இல்லை, மற்றும் பற்றும் இல்லை, ஏனெனில் அவர்கள் அகதிகளாக வந்த பொது தமிழ் மன்னர்கள், அவர்களின் நிலையை கண்டு அபாயம் அளித்தும், நன்றி இல்லை. மேலேயும் நிலம் அவர்களை பொறுத்தவரை பணப் பெறுமதியுடன் முடிந்து விடுகிறது.  
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

முரளி இந்த வேலையை செவ்வன செய்யக்கூடியவர். நியமிப்பார்களா? 

உங்களுக்கு இவரை தெரியுமா நில்மினி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

நன்றி முரளி. இதுக்கு என் கிழக்கில் இருந்து இன்னும் ஒருவர் கூட வரவில்லை என்று பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.

உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, யாழ் பல்கலைக்கழகழகத்தில் இருந்து  நிச்சயம் உதவுவார்கள்.

முதலில், இங்கு கிழக்கு பாடும் பதிவாளர்கள் பதில் சொல்லுங்கள். 

இங்கே கிழக்கு, கிழக்கு என்றும், தமது சொந்த நலனுக்கு கிழக்கு போராளிகளை பலியாடு ஆகியும் உள்ளவராகின் உறவு என்று சொல்பர்களுக்கு கிழக்கை பற்றி கதைப்பதத்திற்கு   அருகதை இனி இல்லை.

ஏன் கிழக்கின் தமிழர்களில் படித்தவர்கள் அமரும் புத்தி ஜீவிகள் என்போருக்கும் அருகதை இல்லை.

அரசு நிறுவனமயப்படுத்தப்பட்ட அபகரிப்பு அங்கிருக்கும் தமிழ் மக்களின் நிலத்தின் இருப்புக்கு வருகிறது, கிழக்கு என்று கூவுவோர் கம் என்று அமசடக்கி கொண்டு இருக்கிறார்கள்.

அல்லது இந்த அபகரிப்பில், வெளி பயிரை மேய்ந்தது போல, அவர்களின் அனுபவத்தில் (கிழக்கு போராளிகளையும் மக்களையும் பாலிடாது ஆக்கியது) முன்பு போல காசு, பதவி  பார்க்க காத்திருக்கிறார்கள் போலும், இதில் கிழக்கு துறை சார் படித்தவர்கள், புத்தி ஜீவிகளும்  அடக்கம்.  

முஸ்லிம்களுக்கு பூர்விகம் இல்லை, மற்றும் பற்றும் இல்லை, ஏனெனில் அவர்கள் அகதிகளாக வந்த பொது தமிழ் மன்னர்கள், அவர்களின் நிலையை கண்டு அபாயம் அளித்தும், நன்றி இல்லை. மேலேயும் நிலம் அவர்களை பொறுத்தவரை பணப் பெறுமதியுடன் முடிந்து விடுகிறது.  

கிழக்கில் இருக்கிறார்கள் ஆனால் கலந்துகொள்ள பயப்படுவார்கள் சில நேரம்  பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலையில் கூட இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு இவரை தெரியுமா நில்மினி....

நல்லாவே பழக்கம் குமாரசாமி அண்ணா. எனது brother in law வின் பள்ளிக்கால நண்பன். அமெரிக்கா வரும்போதெல்லாம் தங்கை வீட்டில்தான் தங்குவார். எமது வீட்டுக்கும் வந்துள்ளார்.  WhatsApp இல் அடிக்கடி தொடர்பு கொள்வதுண்டு. நல்ல மனிதர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது செய்து துளையட்டும் என்று விடும் காலமல்ல.

முரளியின் முயல்வுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் இருக்கிறார்கள் ஆனால் கலந்துகொள்ள பயப்படுவார்கள் சில நேரம்  பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலையில் கூட இருக்கலாம். 

முதலாவது, வரலாறு, தொல்லியல் மற்றும் மானிடவியல் துறைகளில் துறைசார் நிபுணத்துவம் கிழக்கில் இருந்தால் அது அரும்பி, துளிர்க்கும்  நிலையிலேயே இருக்கிறது என்பதும், இதனால் பொதுவான மட்டத்தில் இந்த துறைகள் பற்றிய அக்கறை மற்றும் அவைகளின் வீச்சுகள், தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக இல்லை.

வடக்கில் இருக்கும் வரலாறு, தொல்லியல் மற்றும் மானிடவியல் துறை நிபுணத்துவத்துவமே  போதுமான அளவு  நிறுவனமயப்படுத்தப்பட்டதாக இல்லை. இதை சிங்களம் வேண்டுமென்றே அழுத்தி  வைத்து இருந்தாலும், வடக்கில் பல ஆபத்தான இடைவெளிகள் ஊடாக வளர்க்கப்படுகிறது. 

சிறு உதாரணம், இந்த யாழ் களத்தில் எத்தனை வரலாறு, தொன்மை பற்றிய வாதங்களில், தாம் கிழக்கு என்று அடையாள படுத்துவோர் பங்கேற்றப்பதில்லை, அல்லது அப்படி ஏற்றால் அது மிகவும் குறைவு. வரலாறு, தொல்லியல் மற்றும் மானிடவியல், எனது துறையும் அல்ல, அநேகமாக பங்கேற்றப்பவர்களின் துறையும் அல்ல. 

இது யதார்த்தம், கூட்டி குறைத்தோ, யாரவது பிரதேசவாதம் என்று அடையாளப்படுத்துவதற்கோ இங்கு இடமில்லை.

அப்படி இருந்தாலும், கிழக்கை பூர்விகமாக உள்ளவர்கள் தாமாக இதற்கு முன்வந்து இருக்க வேண்டும். வரலாறு, தொல்லியல் மற்றும் மானிடவியல் துறை சார் நிபுணத்துவம் வடக்கில் இருந்து தானாகவே (அனாமதேயமாக) வந்திருக்கும். 

சிங்களம் செய்வது,  இந்த நில அபகரிப்புக்கு நியாயாதிக்க (legitimacy) முகப்பை காட்டுவதற்காக என்பது வெளிப்படை.  ஆனல், அதை கேள்விக்கு உள்ளாக கூடிய வாய்ப்பை இது வழங்குகிறது.

அதை தவிர, இப்பொது இவை பற்றி பாராளுமன்றத்தில், தமிழரின் மரபுரிமை என்ற அடிப்படையில்,  வாதிப்பதற்கு  விபரம் அறிந்த, பயமற்ற குரல்களும் இருக்கிறது. 

இத்தகைய சந்தர்ப்பத்திலும், கிழக்கை பூர்விமாக கொண்டோர் எவராவது ஒருவருமே இதற்கு முன்வராததில், வேறு எதாவது சொந்த நலன்கள், அல்லது பக்சக்களின் கிழக்கு தமிழ் முகவர்களும் தடுக்கிறார்களா என்றும் எண்ண வேண்டி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு முரளி அவர்கள் கிழக்குக்கான தொல்லியல் துறையின் செயலணியில் இணைவாராக இருந்தால் அது தமிழ்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நியமனத்தை கிழக்குக்குக் கொடுத்ததைவிடச் சிறப்பானதாகும். 

நில்மினி நீங்களும் அவருக்கு உக்கமளியுங்கள். நல்லது நடக்கட்டும்.

இன்னுமொரு விடையம் சிங்களம் இந்தவிடையத்தில் ஏற்கனவே சில முடிவுகளை எடுத்துவிட்டே அதாவது கிழக்குடன் வடக்கின் சிலபாகங்களையும் தம் கைவசப்படுத்தும் திட்டத்துக்கான காய் நகர்த்தலே தொல்பொருள் ஆய்வும் அதற்கான செயலணியும். ஆகவே நாம் யாராக இருந்தாலும் சிலவேளை இவ்விடையத்தில் தோற்றுப்பொக இடமுண்டு எனினும் முயன்று தோற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் பல்கலைக்கழகம் இருக்கிறதே, அதில் உள்ள விரிவுரையாளர்களும் முன் வரவில்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

சிங்களம் இந்தவிடையத்தில் ஏற்கனவே சில முடிவுகளை எடுத்துவிட்டே அதாவது கிழக்குடன் வடக்கின் சிலபாகங்களையும் தம் கைவசப்படுத்தும் திட்டத்துக்கான காய் நகர்த்தலே தொல்பொருள் ஆய்வும் அதற்கான செயலணியும். ஆகவே நாம் யாராக இருந்தாலும் சிலவேளை இவ்விடையத்தில் தோற்றுப்பொக இடமுண்டு எனினும் முயன்று தோற்போம்.

உண்மை. தொல் பொருளாராய்ச்சியின் குறிக்கோளே, தமிழன் இந்தப் பூமிக்கு சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதே. அது நடக்கும். விக்கினேஸ்வரன் ஐயாவின் பேச்சும், முரளியோடு சேர்ந்து அவருக்கு உதவியாக யாழ், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்கள், தமிழ் அறிவாளர், இங்கு வரலாறு கதைக்கும் விரிவுரையாளர்கள் செயற்பட்டால்; சிங்களவரின் திட்டத்தை முறியடிக்கலாம். யார் மூத்த குடிகள், எது பழமையான மொழி என்பதை அவர்கள் வாயாலேயே வேறு வழி இன்றி ஏற்றுக்கொள்ள வைக்கலாம். இல்லையாயின் தமிழ் தே. கூட்டமைப்பு போல நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று வாயைப்பொத்தி, கண்ணை மூடிக்கொண்டு பாழுங்கிணற்றில் விழுவோம். எழுந்திருக்க முயன்று பாத்து விழுவதில் அவமானம் ஒன்றும் இல்லை. 

முரளியின் துணிச்சலுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். முரளி துணிவோடு இயங்க வேண்டுமானால், அவர் கையோடு பல கைகள் இணைய வேண்டும். இல்லையாயின் அவர் கை முடக்கப்படும் சாத்தியமுமுண்டு. டக்கியர் அதிகாரம் எவ்வளவு   என்பதும் தெரியும். வாழ்க்கை என்பது போராட்டம் போராடித்தான் பாப்போமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

டொக்டர் முரளி உண்மையிலேயே அரசியல் சாராமல் இயங்குவாராயின் பாராட்டுக்கள் 

 

10 hours ago, putthan said:

கிழக்கில் பல்கலைக்கழகம் இருக்கிறதே, அதில் உள்ள விரிவுரையாளர்களும் முன் வரவில்லையா

 இணைத்துக் கொள்ள பட்டாலும் முடிவு எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு கிடைக்காது என்று நினைக்கிறார்கள் 
 

Link to comment
Share on other sites

இன்று அவர் டக்லஸை சந்தித்து பேசியதை முக புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

16 hours ago, nilmini said:

நல்லாவே பழக்கம் குமாரசாமி அண்ணா. எனது brother in law வின் பள்ளிக்கால நண்பன். அமெரிக்கா வரும்போதெல்லாம் தங்கை வீட்டில்தான் தங்குவார். எமது வீட்டுக்கும் வந்துள்ளார்.  WhatsApp இல் அடிக்கடி தொடர்பு கொள்வதுண்டு. நல்ல மனிதர். 

நானும் இவரை சந்தித்துள்ளேன் மிகவும் பணிவான மனிதர். அருமையான மனிதர், புகைபடங்கள் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த தொல்பொருள் செயலணியினால் கிழக்கில் மட்டும் குறைந்தது 650 தமிழரின் பூர்வீக மத, கலாசார இடங்களும் வணக்கஸ்த்தலங்களும் சிங்கள பெளத்தர்களுடையவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி தமிழ்நெட்டில் வெளிவந்த ஆக்கம் ஒன்றினை நான் இங்கே இணைத்தபோது கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்காகவே சிங்களவர்களுடன் சேர்கிறோம் என்று நியாயம் கற்பித்த எவருமே அதுபற்றிக் கரிசணை காட்டவில்லை. ஆனால், அப்படி நடப்பதை நியாயப்படுத்தி, பெளத்த நாடு, ஆகவே எதுவும் செய்யமுடியாது. சம்மந்தனும் சுமந்திரனும் செய்ய முடியாததை கருணாவோ பிள்ளையானொ செய்யப்போவதில்லை என்று எழுதினார்கள். அவர்களைப்பொறுத்தவரை இது முடிந்த விடயம் என்பதுதான். தாமும் முயல்வதுபற்றிச் சிந்திக்கவில்லை, மற்றையவர்களும் முயற்சிப்பதைத் தடுக்க முனைந்தார்கள். இதுபற்றிய அவர்களின் சில கருத்துக்கள் கீழே. 

1. "அப்போ அவர்களை அடிச்சு விரட்டலாம் என நினைக்கிறீர்களா இலங்கை பெளத்த தேசமெனவும் பெளத்தத்திற்கே முன்னுரிமை எனவும் அதற்கு அமைச்சும் நிறுவி மகிந்த  இருக்கிறார்  இப்படி காவிகள் சூழந்துள்ள இலங்கையை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது பதிலுக்கு நீங்கள் கேட்கலாம் ஏன் நீங்கள் ஆதரித்த பிள்ளையான் ,கர்ணாவால் கேட்க முடியாதா? என 

பழம் பெரும் அரசியல் வாதி சம்பந்தர் ஏன் சுமந்திரன் ஐயாவால் கூட கேட்கமுடியாது  மிகவிரைவில் வடக்கில் கிளிநொச்சியிலும் சின்ன விகாரை ஒன்று கண்டேன் , நைனாதீவு , யாழ்ப்பாணம்  திருகோணமலை இப்படி இடங்களிலும் அவர்கள் குடி கொள்ள தொடங்கி விட்டார்கள்."

 

2. "வேறு யார் காப்பாற்றி தருவார்கள் என்றாவது சொல்ல முடியுமா, தீபாவளி புஸ்வாணம் சம்மா...? 
இல்ல இனச்சுத்திகரிப்பு சும்மா...? இல்லை  வேட்டியும் சால்வையும் போட்டுகொண்டு இல்ல விழையாட்டு போட்டிகளில் மரதன் ஓடும் சீனியா...?, இல்ல இவர்களின் எசமான் இந்துத்துவ ஹிந்தியாவா...?  
 யாரவது சச்சியை கூப்பிடுங்கப்பா கிறிஸ்தவன் என்றால் மட்டும் தான் கொடிபிடிக்க நெஞ்சில மாஞ்சா இருக்கு போல ?" 

 

3. "இது சிங்கள நாடென எப்போதே அறிவித்துவிட்டார்கள் இப்ப திருகோணமலையும் அவங்கது ஏன் நாளைக்கு நல்லூரும் அவங்கது என்பார்கள் இது ஒரு புறம் இருக்க அங்கால முபாறக் அப்துல் மஜித் ராவணனன் முஸ்லீமாம் என்ற பிரச்சினையும் ஓடுது 

இந்த நாட்டில பிரச்சினை பிரச்சினையாவே எழுப்புறானுகள் . வடக்கு கிழக்கில் இதேதான் பிரச்சினை யாரும் கண்டுகொள்ளாத போது அம்மானுக்கும் மட்டும் வேண்டுதலா என்ன  அம்பாறையில் இனவிகிதாசாரத்தை கூட்டவே நிலப்பரப்பை அம்பாறைக்குள் அரசு எடுத்துவிட்டது ஆக அப்படிப்பட்ட அரசு தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி அது இது என ஆரம்பித்துள்ளது நாளை இன்னும் பல இடங்கள் கூட பறி போகலாம்  நாம கருத்து எழுதிக்கொண்டே இருப்போம் "

4. "அதைதான் எவன் மூலம் கிடைக்குமோ அவன் மூலம் பார்த்துக்கொள்கிறோம் என்று நாங்கள் சொல்கிறோம் 
ஆட்டுக்குள் கொண்டுவந்து மாட்டை ஓட்டியது நீங்கள் ... வக்கீல் இருக்கார் வச்சி செய்வார் என்று எண்டு டயலாக் விட்டுவிட்டு , இப்ப அவரிடம் கேக்கலாமா இவரிடம் கேக்கலாமா என்று கதையடிக்கிறீர்கள்,

கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வீதி பெயர் மாற்றம் தெரியுமா ...? கேபினட் அமைச்சராக இருந்த ஹாரிஸுக்கு இந்தவிடயத்தில்  காட்சட்டையில் மூச்சா போக வைத்தது யார் என்று தெரியுமா....?
யார் செய்து தனது பலத்தை காட்டினானோ அவனையே அந்த பிராந்திய மக்கள் தெரிவுசெய்வினம்" 

கருணா பிரிந்துசென்றபோது கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளர்கள் அச்சுருத்தப்பட்டார்கள் என்று ஒரு செய்திவந்தது. அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்தவரும் கிழக்குமாகாண விரிவுரையாளர் ஒருவரால் கருணாமூலம் பிரதியிடப்பட்டார். இப்படி வடக்கின் கல்விசார் நிபுணர்களை அகற்றிய கிழக்கு மாகாண புத்திஜீவிகள் தமது மாகாணத்தில் கலாசார பாரம்பரியம் மிக்க பொக்கிஷங்கள் சிங்களத்தால் காவுகொள்ளப்படும்போது அதை ஏற்றுக்கொண்டு வாளாவிருப்பது வேதனை. 

கிழக்கும் எமது தாயகமே. சிங்களவர்கள் எம்மைத் தமிழன் என்றுதான் பார்க்கிறானே ஒழிய வடக்கான் கிழக்கான் என்று பார்ப்பதில்லை. எமது கலாசார பொக்கிஷங்கள் எங்கிருப்பினும் அவை பாதுகாக்கப்படவேண்டும். அது கிழக்காக இருந்தாலென்ன, வடக்காக இருந்தாலென்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

இன்று இந்த தொல்பொருள் செயலணியினால் கிழக்கில் மட்டும் குறைந்தது 650 தமிழரின் பூர்வீக மத, கலாசார இடங்களும் வணக்கஸ்த்தலங்களும் சிங்கள பெளத்தர்களுடையவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி தமிழ்நெட்டில் வெளிவந்த ஆக்கம் ஒன்றினை நான் இங்கே இணைத்தபோது கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்காகவே சிங்களவர்களுடன் சேர்கிறோம் என்று நியாயம் கற்பித்த எவருமே அதுபற்றிக் கரிசணை காட்டவில்லை. ஆனால், அப்படி நடப்பதை நியாயப்படுத்தி, பெளத்த நாடு, ஆகவே எதுவும் செய்யமுடியாது. சம்மந்தனும் சுமந்திரனும் செய்ய முடியாததை கருணாவோ பிள்ளையானொ செய்யப்போவதில்லை என்று எழுதினார்கள். அவர்களைப்பொறுத்தவரை இது முடிந்த விடயம் என்பதுதான். தாமும் முயல்வதுபற்றிச் சிந்திக்கவில்லை, மற்றையவர்களும் முயற்சிப்பதைத் தடுக்க முனைந்தார்கள். இதுபற்றிய அவர்களின் சில கருத்துக்கள் கீழே. 

1. "அப்போ அவர்களை அடிச்சு விரட்டலாம் என நினைக்கிறீர்களா இலங்கை பெளத்த தேசமெனவும் பெளத்தத்திற்கே முன்னுரிமை எனவும் அதற்கு அமைச்சும் நிறுவி மகிந்த  இருக்கிறார்  இப்படி காவிகள் சூழந்துள்ள இலங்கையை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது பதிலுக்கு நீங்கள் கேட்கலாம் ஏன் நீங்கள் ஆதரித்த பிள்ளையான் ,கர்ணாவால் கேட்க முடியாதா? என 

பழம் பெரும் அரசியல் வாதி சம்பந்தர் ஏன் சுமந்திரன் ஐயாவால் கூட கேட்கமுடியாது  மிகவிரைவில் வடக்கில் கிளிநொச்சியிலும் சின்ன விகாரை ஒன்று கண்டேன் , நைனாதீவு , யாழ்ப்பாணம்  திருகோணமலை இப்படி இடங்களிலும் அவர்கள் குடி கொள்ள தொடங்கி விட்டார்கள்."

 

2. "வேறு யார் காப்பாற்றி தருவார்கள் என்றாவது சொல்ல முடியுமா, தீபாவளி புஸ்வாணம் சம்மா...? 
இல்ல இனச்சுத்திகரிப்பு சும்மா...? இல்லை  வேட்டியும் சால்வையும் போட்டுகொண்டு இல்ல விழையாட்டு போட்டிகளில் மரதன் ஓடும் சீனியா...?, இல்ல இவர்களின் எசமான் இந்துத்துவ ஹிந்தியாவா...?  
 யாரவது சச்சியை கூப்பிடுங்கப்பா கிறிஸ்தவன் என்றால் மட்டும் தான் கொடிபிடிக்க நெஞ்சில மாஞ்சா இருக்கு போல ?" 

 

3. "இது சிங்கள நாடென எப்போதே அறிவித்துவிட்டார்கள் இப்ப திருகோணமலையும் அவங்கது ஏன் நாளைக்கு நல்லூரும் அவங்கது என்பார்கள் இது ஒரு புறம் இருக்க அங்கால முபாறக் அப்துல் மஜித் ராவணனன் முஸ்லீமாம் என்ற பிரச்சினையும் ஓடுது 

இந்த நாட்டில பிரச்சினை பிரச்சினையாவே எழுப்புறானுகள் . வடக்கு கிழக்கில் இதேதான் பிரச்சினை யாரும் கண்டுகொள்ளாத போது அம்மானுக்கும் மட்டும் வேண்டுதலா என்ன  அம்பாறையில் இனவிகிதாசாரத்தை கூட்டவே நிலப்பரப்பை அம்பாறைக்குள் அரசு எடுத்துவிட்டது ஆக அப்படிப்பட்ட அரசு தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி அது இது என ஆரம்பித்துள்ளது நாளை இன்னும் பல இடங்கள் கூட பறி போகலாம்  நாம கருத்து எழுதிக்கொண்டே இருப்போம் "

4. "அதைதான் எவன் மூலம் கிடைக்குமோ அவன் மூலம் பார்த்துக்கொள்கிறோம் என்று நாங்கள் சொல்கிறோம் 
ஆட்டுக்குள் கொண்டுவந்து மாட்டை ஓட்டியது நீங்கள் ... வக்கீல் இருக்கார் வச்சி செய்வார் என்று எண்டு டயலாக் விட்டுவிட்டு , இப்ப அவரிடம் கேக்கலாமா இவரிடம் கேக்கலாமா என்று கதையடிக்கிறீர்கள்,

கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வீதி பெயர் மாற்றம் தெரியுமா ...? கேபினட் அமைச்சராக இருந்த ஹாரிஸுக்கு இந்தவிடயத்தில்  காட்சட்டையில் மூச்சா போக வைத்தது யார் என்று தெரியுமா....?
யார் செய்து தனது பலத்தை காட்டினானோ அவனையே அந்த பிராந்திய மக்கள் தெரிவுசெய்வினம்" 

தென் தமிழீழம் தொடர்பாக கருத்துக் கூறுவதை மிகப் பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன்.

தென் தமிழீழம் தொடர்பாக எதனைக் கதைத்தாலும் பிரதேசவாதம் என்ற கண்ணாடிக்குள்ளாலேயே பார்க்கிறார்கள். 

இறுதியில் மனக் கசப்பு மட்டுமே ஏற்படும் என்கின்ற பயம்.

☹️😢

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.