Jump to content

யாழில் 1,000 பேருக்கு தடல்புடல் விருந்தளிக்கிறார் சுமந்திரன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார்.

 

கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பெரும் எண்ணிக்கையில் ஆதரவாளர்களை திரட்டி, கட்சிக்குள் எதிர்தரப்பிற்கு தமது பலத்தை காண்பிப்பதில் சுமந்திரன் தரப்பு மும்முரமாக உள்ளனர்.

https://www.pagetamil.com/144079/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் வால்  சுமத்திரன் செய்தால் யாரும் தட்டி கேட்கமாட்டினம் ஆக்கும் .

அன்னதான கந்தன் சன்னிதியிலே  அன்னதானம் கொடுக்கமுடியாது நல்லூரில் நிலைமை அப்படி சிறு கோவில் திருவிழாக்களே சாப்பாடு தேநீர் கூட கொடுக்க கூடாது எனும் நிபந்தனையின் அடிப்படையில் கொவிட்  பிரச்சனை காரணமாக திருவிழாக்கள் ஒன்று கூடல்கள் இவருக்கு மாத்திரம் எப்படி 1000 பேருக்கு விருந்து கொடுக்கும் அனுமதி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

யாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார்.

 

கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பெரும் எண்ணிக்கையில் ஆதரவாளர்களை திரட்டி, கட்சிக்குள் எதிர்தரப்பிற்கு தமது பலத்தை காண்பிப்பதில் சுமந்திரன் தரப்பு மும்முரமாக உள்ளனர்.

https://www.pagetamil.com/144079/

ஆடு வெட்டி விருந்து நடக்குது போல.... எப்பிடியும் சாராயமும் இருக்கும் தானே? 😎

2 hours ago, பெருமாள் said:

கோத்தாவின் வால்  சுமத்திரன் செய்தால் யாரும் தட்டி கேட்கமாட்டினம் ஆக்கும் .

அன்னதான கந்தன் சன்னிதியிலே  அன்னதானம் கொடுக்கமுடியாது நல்லூரில் நிலைமை அப்படி சிறு கோவில் திருவிழாக்களே சாப்பாடு தேநீர் கூட கொடுக்க கூடாது எனும் நிபந்தனையின் அடிப்படையில் கொவிட்  பிரச்சனை காரணமாக திருவிழாக்கள் ஒன்று கூடல்கள் இவருக்கு மாத்திரம் எப்படி 1000 பேருக்கு விருந்து கொடுக்கும் அனுமதி ?

ஊருக்கு உபதேசம் செய்யுற கூட்டம் தானே அது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்து ஓராவது ஆளாக என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆயிரத்து ஓராவது ஆளாக என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். 😀

நீங்கள் இல்லாமல் காட்சி ஏது 😁 சு.பி😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

ஆயிரத்து ஓராவது ஆளாக என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். 😀

கபித்தன்  அண்ணெய்க்கு  ஒரு புரியாணி பாசலும்  ஒருகுவாட்டரும்  (ஆங் சொல்லி யாச்சு  சார் ) சுமத்திரனை  பொறுத்தவரை அங்குள்ளவர்களை குடிகாரர்களை உருவாக்குவதே குறிக்கோள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

26.jpg

குவாட்டறும் புறியாணியும் எண்டாங்கள் ஒண்டயும் காணேல்ல.. 🤔

முடிஞ்சுதோ அல்லது இனிமேல்தானோ ? 😀

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

குவாட்டறும் புறியாணியும் எண்டாங்கள் ஒண்டயும் காணேல்ல.. 🤔

முடிஞ்சுதோ அல்லது இனிமேல்தானோ ? 😀

மாவையை பார்க்கும் போது எல்லாவற்றையும் அவரே விழுங்கிவிட்டது போல தெரிகிறது. 😄

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

கபித்தன்  அண்ணெய்க்கு  ஒரு புரியாணி பாசலும்  ஒருகுவாட்டரும்  (ஆங் சொல்லி யாச்சு  சார் ) சுமத்திரனை  பொறுத்தவரை அங்குள்ளவர்களை குடிகாரர்களை உருவாக்குவதே குறிக்கோள் .

மது, சினிமா, தமிழ் இன அழிப்பு, சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திரவிட அரசியல் கற்று கொடுத்தவை; அதே வழிமுறைகளை இப்ப தமிழர் தாயகத்திலும் செய்ற்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதே போல் தமிழ் தேசியம் கதைக்க வேண்டிய யாழ் இணையம் இப்ப திராவிட தேசியம் கதைக்க தொடங்கியிறுப்பது ஏனோ...!!!!
 

கருணாநிதி முள்ளிவாய்க்காலை தடுக்காமல் இருக்க காரணம் பதவியோ பணமோ அல்லது 2ஜி ஊழல் வழக்கோ அல்ல; அது அதை விட மோசமான தமிழ் தேசிய விரோதத்தை திசை திருப்ப பயன்படுத்தப்பட்ட யுக்தி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை. சோத்துக்க சேர்ந்த கூட்டம்.சோறு போட்டால் மாவையைரும் போவார்.சோறா சுதந்திரமா? என்றால் சோறு முக்கியம் பாஸ் .பசிக்குமுல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டங்கள் விரைவில் நடைபெற இருக்கிறது.இங்கு பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்பட இருக்கிறது.
      ஆகையினால் எல்லா இடங்களிலும் சாப்பாடு பாட்டி நடக்கிறது.
       நக்குண்டார் நாவிழந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் ஏன் இப்படிக் கூனிக் குறுகிப்போயிட்டார்! 

மாவயைரை மாலைபோட்டு அழைத்துச்செல்லும் படத்தைப் பார்க்கும்போது கீரிமலைக் கவுணாவத்தை வயிரவர் கோவில் வேள்விக்கு நல்லா நீண்டு உயர்ந்த, எல்லுப்புண்ணாக்குத் தீத்தி வளர்த்த கீரிமலை விசாளியினது மகன் வளர்க்கும் கிடாய் ஆட்டுக்கு மாலை போட்டு லான்ட் மாஸ்ரரில் கொண்டுபோறது நினைவுவருகுது, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில பெரும் சனநாயக நாடுகளில் கூட.. இப்படியான வெட்டிக் கூத்து நடந்ததில்லை. இன விடுதலைக்காக பெரும் உயிர்த்தியாகங்கள் செய்து.. போராடிய இனத்தை இந்த சம்மை விட இப்படிக் கேவலப்படுத்த வேறு யாராலும் முடியாது.

மக்களுக்கு எவ்வளவோ தேவைகள் இருக்குமிடத்தில்.. இந்த அநாவசிய செயல் எதற்கு. தாங்களும் களத்தில் இருக்கம் என்று காட்டிறவைக்கு காட்டவோ..??! வெட்டி வெள்ளை வேட்டிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக்த்தில் இதெல்லாம் சகஜம் ....வெளிநாடுகளில் வெள்ளைகார எம்.பி கள் தெரிவு செய்தால் எங்கன்ட கோவிலுக்கு அழைத்து வந்து விருந்து வைச்சு அட்டாகாச்ம் பண்ணலாம் ஆனால் ஊரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட MP விருந்து வைப்பது தப்பே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

ஜனநாயக்த்தில் இதெல்லாம் சகஜம் ....வெளிநாடுகளில் வெள்ளைகார எம்.பி கள் தெரிவு செய்தால் எங்கன்ட கோவிலுக்கு அழைத்து வந்து விருந்து வைச்சு அட்டாகாச்ம் பண்ணலாம் ஆனால் ஊரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட MP விருந்து வைப்பது தப்பே

இதில பொன்னாடை போர்த்தல் வேற. வெள்ளைக்கு என்ன போர்க்கிறாங்கள் என்றே தெரியாது.. ஒப்புக்கு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால்.. இத்தனைக்கும் பிரதமர் கூட... சைக்கிளில் சாதாரணமாகவே போய் வருகிறார். வெள்ளையள் ஏன் நாயே என்றும் கவனிக்கிறதில்லை.. தாங்களும் தங்கட அலுவலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு அவசர அவசரமாய் விருந்து கொடுத்து, புகழ்ந்து தான் செய்த துரோகத்தை மறக்கச் செய்யவும், கட்சியின் செயலாளருக்கு   அடுத்து தனக்கு எதிராக எடுக்க இருக்கும் நடவடிக்கையை தடுக்கவும்,  பேச்சாளர்  பதவியை தக்க வைக்கவும் எடுக்கும் யுக்தி. புகழுக்கு அடிபணியாத மாவையரா? எல்லாவற்றையும் கலட்டிக்கொடுத்துப்போடுவார். சிங்களவரை  முருங்கையிலை ஏத்தினவர் இப்போ தமிழரை ஏத்த முயற்சிக்கிறார்.  ஏமாந்தத்துகள், வேலையில்லாததுகள் ஒருபோதும் இல்லாத வினோத விழா கொண்டாடுகினம். அதுவும் இந்த அபாய சூழ்நிலையில்.  இனி  தான் தான் பெரிய அறிவாளி, நேர்மையாளன் சொன்னதை செய்யவேண்டும் என்கிற கொள்கை உள்ளவன் அதையே செய்தேன் என்று அறிக்கை விடுவார்.  மாவையோடு கூட  இருந்து காரியம் சாதித்தவர், அவருக்கு தெரியும் எப்படி மாவையை வீழ்த்தலாம் என்பது.  "போலீசுக்கு திருப்பி அடித்த மாவை" உண்மையோ பொய்யோ என்று கூட ஆராயாமல் எடுத்து விடுகிறார். மாவையை  எப்படி எல்லாம் பாப்பா மரத்தில ஏத்துறாங்கள் குப்புற விழுத்துறதுக்கு . சுமந்திரனின் தந்திரத்தை சமாளித்து எழுந்து நிற்பாரா விழுவாரா? பொறுத்திருந்து பாப்போம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. சிங்களக் கட்சியில்  தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் போக சுமந்திரனால் முடியும் என்று சிலர் சவால் விடடார்கள், அவரோ வீட்டைப் பூட்டாமல்போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.  முடிந்தால் த. தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று  வென்று காட்டட்டும் என்று விக்கினேஸ்வரன் ஐயாவுக்கும் சவால் விட்டார்கள். நேர்மையுள்ளவன் எங்கும் நேர்மையாய் இருப்பான். ஏமாற்றுகிறவனால் ஏமாந்த கூட்டத்தையே ஏமாற்ற முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் மகனுக்கு சுமத்திரனின் பாதுகாப்பு படை போட்டு சாத்தியும் வெட்கமில்லாமல் சாப்பிட முன்னுக்கு போய் இருக்கிறார் 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு  வேறு வழியில்லை. பாருங்கள்! இரண்டுபேரும் கோவக்காரர் போல வெல்வேறு பக்கம் பாத்துக்கொண்டிருக்கிறார்கள். கஷ்ரப்பட்டு நடிக்க முயற்சிக்கிறார்கள்.  ஒருநாள்  வெடிக்கும்.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாயாசம் வச்சினமா .. கேளுங்கவென்..!..👍

IMG-20200906-142601.jpg

பாயாசம் எங்கடா.? ☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்கறியோட பாயாசம் வைக்கிறேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

மது, சினிமா, தமிழ் இன அழிப்பு, சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திரவிட அரசியல் கற்று கொடுத்தவை; அதே வழிமுறைகளை இப்ப தமிழர் தாயகத்திலும் செய்ற்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதே போல் தமிழ் தேசியம் கதைக்க வேண்டிய யாழ் இணையம் இப்ப திராவிட தேசியம் கதைக்க தொடங்கியிறுப்பது ஏனோ...!!!!
 

கருணாநிதி முள்ளிவாய்க்காலை தடுக்காமல் இருக்க காரணம் பதவியோ பணமோ அல்லது 2ஜி ஊழல் வழக்கோ அல்ல; அது அதை விட மோசமான தமிழ் தேசிய விரோதத்தை திசை திருப்ப பயன்படுத்தப்பட்ட யுக்தி.

 

 

நல்லதொரு  கருத்து. 👍

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

நல்லதொரு  கருத்து. 👍

நான் அண்மையில் Twitterல் பார்த்த விடயம்; அதாவது திராவிடத்தின் ஊது குழல் ஒருவர்; வெளிப்ப்டையாகவே ஈழ தமிழர்களுக்கு அறிவில்லை என விமர்சித்தவர்; அவர் குறிப்பிடுகிறார் 2024 இல் யாழ்ப்பாணத்தில் சாதி சண்டை நடக்குமாம். அதெப்படி அவருக்கு தெரியும்....? இதிலிருந்து இவர்களது தீய எண்ணங்கள் வெளிப்ப்டவில்லையா..... அதாவது ஈழ தமிழன் சாதி சண்டை பிடிக்க வேணும் என்பது தான் இவர்களது ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

மது, சினிமா, தமிழ் இன அழிப்பு, சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திரவிட அரசியல் கற்று கொடுத்தவை; அதே வழிமுறைகளை இப்ப தமிழர் தாயகத்திலும் செய்ற்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல் தமிழ் தேசியம் கதைக்க வேண்டிய யாழ் இணையம் இப்ப திராவிட தேசியம் கதைக்க தொடங்கியிறுப்பது ஏனோ...!!!!

கருணாநிதி முள்ளிவாய்க்காலை தடுக்காமல் இருக்க காரணம் பதவியோ பணமோ அல்லது 2ஜி ஊழல் வழக்கோ அல்ல; அது அதை விட மோசமான தமிழ் தேசிய விரோதத்தை திசை திருப்ப பயன்படுத்தப்பட்ட யுக்தி.

நல்ல கருத்துக்கள் , தமிழ் தேசியமென்றால் என்னவென்று கேட்கும் நிலையில் யாழ் இப்ப

ஏதிர்பார்த்திராத வெற்றி, அதை இப்படி கொண்டாடி அடிமை முறையை வளர்க்கின்றார்; 

ஏழை எளிய மக்களுக்கு கொடுத்திருதாலும் பாராட்டியிருக்கலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.