Jump to content

யாழில் 1,000 பேருக்கு தடல்புடல் விருந்தளிக்கிறார் சுமந்திரன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார்.

 

கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பெரும் எண்ணிக்கையில் ஆதரவாளர்களை திரட்டி, கட்சிக்குள் எதிர்தரப்பிற்கு தமது பலத்தை காண்பிப்பதில் சுமந்திரன் தரப்பு மும்முரமாக உள்ளனர்.

https://www.pagetamil.com/144079/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் வால்  சுமத்திரன் செய்தால் யாரும் தட்டி கேட்கமாட்டினம் ஆக்கும் .

அன்னதான கந்தன் சன்னிதியிலே  அன்னதானம் கொடுக்கமுடியாது நல்லூரில் நிலைமை அப்படி சிறு கோவில் திருவிழாக்களே சாப்பாடு தேநீர் கூட கொடுக்க கூடாது எனும் நிபந்தனையின் அடிப்படையில் கொவிட்  பிரச்சனை காரணமாக திருவிழாக்கள் ஒன்று கூடல்கள் இவருக்கு மாத்திரம் எப்படி 1000 பேருக்கு விருந்து கொடுக்கும் அனுமதி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

யாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார்.

 

கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பெரும் எண்ணிக்கையில் ஆதரவாளர்களை திரட்டி, கட்சிக்குள் எதிர்தரப்பிற்கு தமது பலத்தை காண்பிப்பதில் சுமந்திரன் தரப்பு மும்முரமாக உள்ளனர்.

https://www.pagetamil.com/144079/

ஆடு வெட்டி விருந்து நடக்குது போல.... எப்பிடியும் சாராயமும் இருக்கும் தானே? 😎

2 hours ago, பெருமாள் said:

கோத்தாவின் வால்  சுமத்திரன் செய்தால் யாரும் தட்டி கேட்கமாட்டினம் ஆக்கும் .

அன்னதான கந்தன் சன்னிதியிலே  அன்னதானம் கொடுக்கமுடியாது நல்லூரில் நிலைமை அப்படி சிறு கோவில் திருவிழாக்களே சாப்பாடு தேநீர் கூட கொடுக்க கூடாது எனும் நிபந்தனையின் அடிப்படையில் கொவிட்  பிரச்சனை காரணமாக திருவிழாக்கள் ஒன்று கூடல்கள் இவருக்கு மாத்திரம் எப்படி 1000 பேருக்கு விருந்து கொடுக்கும் அனுமதி ?

ஊருக்கு உபதேசம் செய்யுற கூட்டம் தானே அது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்து ஓராவது ஆளாக என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆயிரத்து ஓராவது ஆளாக என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். 😀

நீங்கள் இல்லாமல் காட்சி ஏது 😁 சு.பி😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

ஆயிரத்து ஓராவது ஆளாக என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். 😀

கபித்தன்  அண்ணெய்க்கு  ஒரு புரியாணி பாசலும்  ஒருகுவாட்டரும்  (ஆங் சொல்லி யாச்சு  சார் ) சுமத்திரனை  பொறுத்தவரை அங்குள்ளவர்களை குடிகாரர்களை உருவாக்குவதே குறிக்கோள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

26.jpg

குவாட்டறும் புறியாணியும் எண்டாங்கள் ஒண்டயும் காணேல்ல.. 🤔

முடிஞ்சுதோ அல்லது இனிமேல்தானோ ? 😀

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

குவாட்டறும் புறியாணியும் எண்டாங்கள் ஒண்டயும் காணேல்ல.. 🤔

முடிஞ்சுதோ அல்லது இனிமேல்தானோ ? 😀

மாவையை பார்க்கும் போது எல்லாவற்றையும் அவரே விழுங்கிவிட்டது போல தெரிகிறது. 😄

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

கபித்தன்  அண்ணெய்க்கு  ஒரு புரியாணி பாசலும்  ஒருகுவாட்டரும்  (ஆங் சொல்லி யாச்சு  சார் ) சுமத்திரனை  பொறுத்தவரை அங்குள்ளவர்களை குடிகாரர்களை உருவாக்குவதே குறிக்கோள் .

மது, சினிமா, தமிழ் இன அழிப்பு, சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திரவிட அரசியல் கற்று கொடுத்தவை; அதே வழிமுறைகளை இப்ப தமிழர் தாயகத்திலும் செய்ற்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதே போல் தமிழ் தேசியம் கதைக்க வேண்டிய யாழ் இணையம் இப்ப திராவிட தேசியம் கதைக்க தொடங்கியிறுப்பது ஏனோ...!!!!
 

கருணாநிதி முள்ளிவாய்க்காலை தடுக்காமல் இருக்க காரணம் பதவியோ பணமோ அல்லது 2ஜி ஊழல் வழக்கோ அல்ல; அது அதை விட மோசமான தமிழ் தேசிய விரோதத்தை திசை திருப்ப பயன்படுத்தப்பட்ட யுக்தி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை. சோத்துக்க சேர்ந்த கூட்டம்.சோறு போட்டால் மாவையைரும் போவார்.சோறா சுதந்திரமா? என்றால் சோறு முக்கியம் பாஸ் .பசிக்குமுல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டங்கள் விரைவில் நடைபெற இருக்கிறது.இங்கு பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்பட இருக்கிறது.
      ஆகையினால் எல்லா இடங்களிலும் சாப்பாடு பாட்டி நடக்கிறது.
       நக்குண்டார் நாவிழந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் ஏன் இப்படிக் கூனிக் குறுகிப்போயிட்டார்! 

மாவயைரை மாலைபோட்டு அழைத்துச்செல்லும் படத்தைப் பார்க்கும்போது கீரிமலைக் கவுணாவத்தை வயிரவர் கோவில் வேள்விக்கு நல்லா நீண்டு உயர்ந்த, எல்லுப்புண்ணாக்குத் தீத்தி வளர்த்த கீரிமலை விசாளியினது மகன் வளர்க்கும் கிடாய் ஆட்டுக்கு மாலை போட்டு லான்ட் மாஸ்ரரில் கொண்டுபோறது நினைவுவருகுது, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில பெரும் சனநாயக நாடுகளில் கூட.. இப்படியான வெட்டிக் கூத்து நடந்ததில்லை. இன விடுதலைக்காக பெரும் உயிர்த்தியாகங்கள் செய்து.. போராடிய இனத்தை இந்த சம்மை விட இப்படிக் கேவலப்படுத்த வேறு யாராலும் முடியாது.

மக்களுக்கு எவ்வளவோ தேவைகள் இருக்குமிடத்தில்.. இந்த அநாவசிய செயல் எதற்கு. தாங்களும் களத்தில் இருக்கம் என்று காட்டிறவைக்கு காட்டவோ..??! வெட்டி வெள்ளை வேட்டிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக்த்தில் இதெல்லாம் சகஜம் ....வெளிநாடுகளில் வெள்ளைகார எம்.பி கள் தெரிவு செய்தால் எங்கன்ட கோவிலுக்கு அழைத்து வந்து விருந்து வைச்சு அட்டாகாச்ம் பண்ணலாம் ஆனால் ஊரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட MP விருந்து வைப்பது தப்பே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

ஜனநாயக்த்தில் இதெல்லாம் சகஜம் ....வெளிநாடுகளில் வெள்ளைகார எம்.பி கள் தெரிவு செய்தால் எங்கன்ட கோவிலுக்கு அழைத்து வந்து விருந்து வைச்சு அட்டாகாச்ம் பண்ணலாம் ஆனால் ஊரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட MP விருந்து வைப்பது தப்பே

இதில பொன்னாடை போர்த்தல் வேற. வெள்ளைக்கு என்ன போர்க்கிறாங்கள் என்றே தெரியாது.. ஒப்புக்கு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால்.. இத்தனைக்கும் பிரதமர் கூட... சைக்கிளில் சாதாரணமாகவே போய் வருகிறார். வெள்ளையள் ஏன் நாயே என்றும் கவனிக்கிறதில்லை.. தாங்களும் தங்கட அலுவலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு அவசர அவசரமாய் விருந்து கொடுத்து, புகழ்ந்து தான் செய்த துரோகத்தை மறக்கச் செய்யவும், கட்சியின் செயலாளருக்கு   அடுத்து தனக்கு எதிராக எடுக்க இருக்கும் நடவடிக்கையை தடுக்கவும்,  பேச்சாளர்  பதவியை தக்க வைக்கவும் எடுக்கும் யுக்தி. புகழுக்கு அடிபணியாத மாவையரா? எல்லாவற்றையும் கலட்டிக்கொடுத்துப்போடுவார். சிங்களவரை  முருங்கையிலை ஏத்தினவர் இப்போ தமிழரை ஏத்த முயற்சிக்கிறார்.  ஏமாந்தத்துகள், வேலையில்லாததுகள் ஒருபோதும் இல்லாத வினோத விழா கொண்டாடுகினம். அதுவும் இந்த அபாய சூழ்நிலையில்.  இனி  தான் தான் பெரிய அறிவாளி, நேர்மையாளன் சொன்னதை செய்யவேண்டும் என்கிற கொள்கை உள்ளவன் அதையே செய்தேன் என்று அறிக்கை விடுவார்.  மாவையோடு கூட  இருந்து காரியம் சாதித்தவர், அவருக்கு தெரியும் எப்படி மாவையை வீழ்த்தலாம் என்பது.  "போலீசுக்கு திருப்பி அடித்த மாவை" உண்மையோ பொய்யோ என்று கூட ஆராயாமல் எடுத்து விடுகிறார். மாவையை  எப்படி எல்லாம் பாப்பா மரத்தில ஏத்துறாங்கள் குப்புற விழுத்துறதுக்கு . சுமந்திரனின் தந்திரத்தை சமாளித்து எழுந்து நிற்பாரா விழுவாரா? பொறுத்திருந்து பாப்போம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. சிங்களக் கட்சியில்  தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் போக சுமந்திரனால் முடியும் என்று சிலர் சவால் விடடார்கள், அவரோ வீட்டைப் பூட்டாமல்போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.  முடிந்தால் த. தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று  வென்று காட்டட்டும் என்று விக்கினேஸ்வரன் ஐயாவுக்கும் சவால் விட்டார்கள். நேர்மையுள்ளவன் எங்கும் நேர்மையாய் இருப்பான். ஏமாற்றுகிறவனால் ஏமாந்த கூட்டத்தையே ஏமாற்ற முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் மகனுக்கு சுமத்திரனின் பாதுகாப்பு படை போட்டு சாத்தியும் வெட்கமில்லாமல் சாப்பிட முன்னுக்கு போய் இருக்கிறார் 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு  வேறு வழியில்லை. பாருங்கள்! இரண்டுபேரும் கோவக்காரர் போல வெல்வேறு பக்கம் பாத்துக்கொண்டிருக்கிறார்கள். கஷ்ரப்பட்டு நடிக்க முயற்சிக்கிறார்கள்.  ஒருநாள்  வெடிக்கும்.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாயாசம் வச்சினமா .. கேளுங்கவென்..!..👍

IMG-20200906-142601.jpg

பாயாசம் எங்கடா.? ☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்கறியோட பாயாசம் வைக்கிறேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

மது, சினிமா, தமிழ் இன அழிப்பு, சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திரவிட அரசியல் கற்று கொடுத்தவை; அதே வழிமுறைகளை இப்ப தமிழர் தாயகத்திலும் செய்ற்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதே போல் தமிழ் தேசியம் கதைக்க வேண்டிய யாழ் இணையம் இப்ப திராவிட தேசியம் கதைக்க தொடங்கியிறுப்பது ஏனோ...!!!!
 

கருணாநிதி முள்ளிவாய்க்காலை தடுக்காமல் இருக்க காரணம் பதவியோ பணமோ அல்லது 2ஜி ஊழல் வழக்கோ அல்ல; அது அதை விட மோசமான தமிழ் தேசிய விரோதத்தை திசை திருப்ப பயன்படுத்தப்பட்ட யுக்தி.

 

 

நல்லதொரு  கருத்து. 👍

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

நல்லதொரு  கருத்து. 👍

நான் அண்மையில் Twitterல் பார்த்த விடயம்; அதாவது திராவிடத்தின் ஊது குழல் ஒருவர்; வெளிப்ப்டையாகவே ஈழ தமிழர்களுக்கு அறிவில்லை என விமர்சித்தவர்; அவர் குறிப்பிடுகிறார் 2024 இல் யாழ்ப்பாணத்தில் சாதி சண்டை நடக்குமாம். அதெப்படி அவருக்கு தெரியும்....? இதிலிருந்து இவர்களது தீய எண்ணங்கள் வெளிப்ப்டவில்லையா..... அதாவது ஈழ தமிழன் சாதி சண்டை பிடிக்க வேணும் என்பது தான் இவர்களது ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

மது, சினிமா, தமிழ் இன அழிப்பு, சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திரவிட அரசியல் கற்று கொடுத்தவை; அதே வழிமுறைகளை இப்ப தமிழர் தாயகத்திலும் செய்ற்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல் தமிழ் தேசியம் கதைக்க வேண்டிய யாழ் இணையம் இப்ப திராவிட தேசியம் கதைக்க தொடங்கியிறுப்பது ஏனோ...!!!!

கருணாநிதி முள்ளிவாய்க்காலை தடுக்காமல் இருக்க காரணம் பதவியோ பணமோ அல்லது 2ஜி ஊழல் வழக்கோ அல்ல; அது அதை விட மோசமான தமிழ் தேசிய விரோதத்தை திசை திருப்ப பயன்படுத்தப்பட்ட யுக்தி.

நல்ல கருத்துக்கள் , தமிழ் தேசியமென்றால் என்னவென்று கேட்கும் நிலையில் யாழ் இப்ப

ஏதிர்பார்த்திராத வெற்றி, அதை இப்படி கொண்டாடி அடிமை முறையை வளர்க்கின்றார்; 

ஏழை எளிய மக்களுக்கு கொடுத்திருதாலும் பாராட்டியிருக்கலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.