Jump to content

மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை; புதிய அமைப்பு யாழில் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை; புதிய அமைப்பு யாழில் ஆரம்பம்

manivannan-500.png

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணனை அமைப்பில் இருந்து நீக்குவதாக அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார். ஆயினும் தானே அமைப்பின் தேசிய அமைப்பாளராகத் தொடர்ந்தும் செயற்படுவேன் என்று மணிவண்ணன் கூறினார்.

இதனை அடுத்து கட்சி உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாகச் செயற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் உட்பட பல மாநகர, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களும் இணைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.ilakku.org/மணிவண்ணன்-தலைமையில்-தமிழ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியில் இருந்து மணியை நீக்கிவிட்டோம் – கஜேந்தரகுமார்

Gajendrakumar.jpg?189db0&189db0

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

யாழிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,

“மணிவண்ணன் கட்சியின் கொள்கையை மீறியதுடன், கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டார். அதனால் அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனை நாம் கடிதம் மூலம் அறிவித்தோம். அதற்கு அவர் எழுத்து மூலமாக பதில் அனுப்பி இருந்தார். அதனை நாம் மத்திய குழுவில் ஆராய்ந்து அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் கருத்தில் கொண்டு அவரை நாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளோம். அது தொடர்பில் அவருக்கு அறிவித்துள்ளோம்.

இரண்டு கிழமைக்குள் அவர் பதில் அனுப்ப வேண்டும். உறுப்புரிமையை நீக்கப்பட்டதற்கு நிரந்தமாராக நீக்காது இருக்க அவர் பதில் அனுப்ப வேண்டும். அதன்பின்னர் இரண்டு கிழமைக்குள் பொதுகுழு அமைத்து விசாரணை முன்னெடுக்கப்படும். அந்த விசாரணையின் பின்னர் கட்சியின் உறுப்புரிமையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா? இல்லையா ? என தீர்மானிப்போம்.

இந்த கால கட்டத்தில் பொதுமக்களுக்கு அறியத்தருவது யாதெனில், இன்று முதல் கட்சியின் செயற்பாட்டில் மணிவண்ணன் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டாது. கட்சியின் பெயர் அல்லது சின்னத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளோம். அவர் கட்சியின் பெயரில் செயற்பட்டால் அது கட்சி ரீதியானது அல்ல. அது கட்சியை மீறியது என அறிய தருகின்றோம்.

ஒழுங்காற்று விசாரணைகள் முடிந்த பின்னர் மேலதிக தகவல்களை அறிவிப்போம். உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்பதனை மக்களுக்கும், எமது ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கின்றோம். மணிவண்ணனின் கருத்துக்களோ செயற்பாடுகளோ கட்சியின் செயற்பாடாக இனிவரும் காலங்களில் அமையாது.

மணிவண்ணன் தொடர்பில் நாம் இவ்வளவு காலமும் அமைதி காத்தமையினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.இனிவரும் காலங்களில் மணிவண்ணன் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர், தேசிய அமைப்பாளர் என ஊடகங்களில் பிரசுரிக்காதீர்கள்.

ஊடகவியலாளர்கள் செய்திகளில் பிரசுரிக்காமல் விட்டால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பாடாது. மக்களுக்கு உண்மைகளை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது” – என்றார்.

 

https://newuthayan.com/முன்னணியில்-இருந்து-மணிய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைஞ்ச பானையை மேலும் துண்டாக உடைச்சால் எப்படி பானையை ஒட்டுவது

இப்படி ஆளாளுக்கு பிரிஞ்சோடினால் கடைசியில் சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் தமிழ் ஒட்டுண்ணிகளுக்கும் தான் நன்மை. 

சரியோ பிழையோ உள்ளுக்குள இருந்து பிழைகளை தட்டிக்கேப்பதுதான் சரி. இது எல்லாருக்கம் பொருத்தும். பொதுப்பணிக்கு மக்களுக்காக போனால் இந்த உள்வீட்டு அரசியலை தாண்டித்தான் சாதக்க வேண்டும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி இப்படி ஆளாளுக்கு பிரிந்து கட்சி தொடங்கினால் சுப்பராய்  இருக்கும்tw_lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

இனிவரும் காலங்களில் மணிவண்ணன் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர், தேசிய அமைப்பாளர் என ஊடகங்களில் பிரசுரிக்காதீர்கள்.


👆🏿கஜேந்திரகுமார் இப்படிச் சொல்கின்றார்

 

மணிவண்ணன் இப்படிச் சொல்கின்றார்👇🏾

Quote

இந்த அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாகச் செயற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு கட்சியாகப் பதியப்படாமல் இருப்பதால் இருவரும் உரிமைகொண்டாடுகின்றார்கள் போலிருக்கு. பெறுமதி குறைந்து செல்லும் தமிழ்த் தேசியத்தை குத்தகைக்கு எடுக்க ஏன் அடிபடுகின்றார்கள்?🤔

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கட்சிக்குள் தொடரும் உட்பூசல் - நிபந்தனைகளுடன் உடன்படும் மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு சட்டத்தரணி வி.மணிவண்ணன் அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்.

ஆனால் இந்த விசாரணைகள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது ஒழுக்காற்று விசாரணையை நடத்தும் முன் அனுபவம் கொண்ட, கட்சி சாராத சுயாதீன அதிகாரியாக உள்ள குறைந்தது மூவர் கொண்ட குழு முன்னிலையில் விசாரணை நடத்தப்படவேண்டும்.

என் மீதான ஒழுக்காற்று விசாரணை பொது மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக இடம்பெற வேண்டும்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படவேண்டும் என அவர் பதில் அனுப்பியுள்ளார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/150926?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் மணிவண்ணன் நீக்கம்; கஜேந்திரகுமார் அறிவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய குழு இன்று கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தகவலை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மட்டக்களப்பை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் என்பவர் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

http://www.ilakku.org/முன்னணியின்-அடிப்படை-உறு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.