Jump to content

அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

September 6, 2020

IMG_2985-1024x768.jpg

அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் (06)  காலை இடம்பெற்றது.

இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலாம் தவணை கொடுப்பனவுகளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் யாழ் அரச அதிபரும் யாழ் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், அரச அலுவலர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். #அனைவருக்கும்வீடு #வேலைத்திட்டம் #யாழ்ப்பாணம் #வருமானம் #அங்கஜன்

IMG_2960-1024x768.jpgIMG_2967-768x1024.jpgIMG_2970-1024x768.jpgIMG_2981-1024x768.jpgIMG_2983-916x1024.jpg

 


 

https://globaltamilnews.net/2020/149703/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். இந்தியா வீடு கட்டி கொடுக்கின்றது என்று காலத்துக்கு காலம் சொல்லி ஆசை காட்டினார்கள்.

வெளிநாட்டு உதவி இல்லாமல் அல்லது நல்ல வரும்படி இல்லாமல் சாதாரண நிலை குடும்பங்கள் வீடு கட்டுவது பெரும்பாடு. அனைத்தையும் அடகு வைத்தும், கடன்வாங்கியும் வீடு கட்ட தொடங்கி கடைசியில் வட்டியும் கட்டமுடியாமல் நாளாந்த வாழ்க்கையையும் ஓட்ட முடியாமல் அல்லலுறும் குடும்பங்கள் பல.

அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட பெரிய திட்டங்களை அரசு பாகுபாடின்றி செயல்படுத்துமா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்ச்சிகளோ கபடஅரசியல் நரித்தனங்கள் மூலம் மக்களை ஏமாற்றாவிடில் எவர் குற்றியும் அரிசி ஆனால் சரி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

வீட்டிற்காக அவர்ககள் கடனாளிகளாகக் கூடாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்கிறார் போல்  தெரிகின்றது.  உளமார செய்தால் வரவேற்பு என்றும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 இலட்சத்தில் வீடா..??! கொட்டில் போடவும் காணாதே..??! 

காசைக் கொடுக்காமல்... வீட்டை இவர்களே பூரணமாகக் கட்டி குடியேறக் கூடிய வசதிகளுடன்.. கொடுக்கலாமே..!! 

Link to comment
Share on other sites

வழக்கமாக இப்படியான நிகழ்வுகளில் வடக்கின்  அடாவடி மினிஸ்ட்டர் தான் முன்னுக்கு நின்றுகொண்டு புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி வழங்குவார்; அவர் வராதது ஒரு நல்ல விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

வழக்கமாக இப்படியான நிகழ்வுகளில் வடக்கின்  அடாவடி மினிஸ்ட்டர் தான் முன்னுக்கு நின்றுகொண்டு புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி வழங்குவார்; அவர் வராதது ஒரு நல்ல விடயம்.

யார்...பெரியவன் என்று,  இரண்டு பேரும்... முறுகல் நிலையில் உள்ளார்கள்.
அங்கஜனுக்கு.... மேலிடத்து செல்வாக்கு, அதிகம் உள்ளதால், 
டக்ளஸ்... பம்மிக் கொண்டு இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

6 இலட்சத்தில் வீடா..??! கொட்டில் போடவும் காணாதே..??! 

காசைக் கொடுக்காமல்... வீட்டை இவர்களே பூரணமாகக் கட்டி குடியேறக் கூடிய வசதிகளுடன்.. கொடுக்கலாமே..!! 

இராணுவம் கட்டிக்கொடுக்கும் பரவாயில்லையா

8 hours ago, சுவைப்பிரியன் said:

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

அதுதான் ஆனால் குறைந்த வருவாய் பெறும் குடும்பம் அதிகம் 

அண்மையில் இராணுவம் கட்டிய வீடு பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டது 

மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்

10 hours ago, MEERA said:

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

முடியாது ஆனால் அடுத்த முயற்சியில் அவர்கள் இறங்கினால் வீடு முழுமையாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இராணுவம் கட்டிக்கொடுக்கும் பரவாயில்லையா

மன்னாரில்.. வவுனியாவில்.. திருமலையில்.. நாவற்குழியில்.. சிங்கள மாதிரிக் கிராமங்களை அமைத்து.. வாழக் கூடிய குடிமனைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. 

அப்படி இருக்க தீவகம் உட்பட பல பகுதிகளில் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தான வீடமைப்புத் திட்டங்கள் சுவர் எழுந்து கூரையாக முடியாத நிலையில்.. பூண்டும் செடியும் கொடியும் படரும் இடங்களாக உள்ளனவே தவிர.. டக்கிளஸின் அடியாட்கள் வாழும் பகுதிகளில் மட்டும்.. கூரை எழுந்து நிற்கிறது.. மற்றைய இடங்களில் எல்லாம்.. என் கண்கண்ட சாட்சியமாக இதுவே நிலை.

வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கான இந்தத் திட்டத்தில் 6 இலட்சத்தை வீட்டைக் கட்டு என்று கொடுத்தால்.. கூலி யார் கொடுப்பார்.. மின்சார இணைப்பு யார் கொடுப்பார்.. பள்ளக் காணிகளை.. மற்றும் சுற்றயல் காணிகளை திருத்தி அமைக்க யார் கொடுப்பார்...??!

ஆனால்.. இராணுவத்திற்கு கடற்படைக்கு..  நீச்சல் தடாகங்கள்.. மாடி மனைகள்.. பூஞ்சோலைகள்.. விளையாட்டுத்திடல்களுடன் கூடிய பாரிய நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் செலவாகிற பணத்தை.. ஏன் முழுமையான வீட்டுத் திட்டமொன்றை சிங்களவர்களுக்கும் சிங்களப் படைகளுக்கும் அமைத்துக் கொடுப்பது போல்.. தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியவில்லை..??! இதனை எது தடுக்கிறது..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் உறவுகள் எத்தனை பேர் உண்மையாக வீடு கட்டப் போகினம்..தங்களின் பிற தேவைகளுக்கு எடுத்துட்டு மீளவும் ஒன்றுமேயில்லை என்று சொல்ல மாட்டார்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

இதில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் உறவுகள் எத்தனை பேர் உண்மையாக வீடு கட்டப் போகினம்..தங்களின் பிற தேவைகளுக்கு எடுத்துட்டு மீளவும் ஒன்றுமேயில்லை என்று சொல்ல மாட்டார்களா..?

இல்லை.அப்படி செய்ய முடியாது.ஒவ்வரு கட்ட வீடு கட்டுமானத்தை பொறுத்து தான் காசு கொடுப்பார்கள்.மேலதிகமாக நீங்கள் ஏதாவது வசதி வீட்டுக்கு செய்தால் அது உரிமையாளரின் செலவு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 00:37, nedukkalapoovan said:

மன்னாரில்.. வவுனியாவில்.. திருமலையில்.. நாவற்குழியில்.. சிங்கள மாதிரிக் கிராமங்களை அமைத்து.. வாழக் கூடிய குடிமனைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. 

அப்படி இருக்க தீவகம் உட்பட பல பகுதிகளில் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தான வீடமைப்புத் திட்டங்கள் சுவர் எழுந்து கூரையாக முடியாத நிலையில்.. பூண்டும் செடியும் கொடியும் படரும் இடங்களாக உள்ளனவே தவிர.. டக்கிளஸின் அடியாட்கள் வாழும் பகுதிகளில் மட்டும்.. கூரை எழுந்து நிற்கிறது.. மற்றைய இடங்களில் எல்லாம்.. என் கண்கண்ட சாட்சியமாக இதுவே நிலை.

வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கான இந்தத் திட்டத்தில் 6 இலட்சத்தை வீட்டைக் கட்டு என்று கொடுத்தால்.. கூலி யார் கொடுப்பார்.. மின்சார இணைப்பு யார் கொடுப்பார்.. பள்ளக் காணிகளை.. மற்றும் சுற்றயல் காணிகளை திருத்தி அமைக்க யார் கொடுப்பார்...??!

ஆனால்.. இராணுவத்திற்கு கடற்படைக்கு..  நீச்சல் தடாகங்கள்.. மாடி மனைகள்.. பூஞ்சோலைகள்.. விளையாட்டுத்திடல்களுடன் கூடிய பாரிய நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் செலவாகிற பணத்தை.. ஏன் முழுமையான வீட்டுத் திட்டமொன்றை சிங்களவர்களுக்கும் சிங்களப் படைகளுக்கும் அமைத்துக் கொடுப்பது போல்.. தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியவில்லை..??! இதனை எது தடுக்கிறது..??! 

எது தடுக்கும் யார் தடுப்பார்கள் என நீங்கள் ஊகிக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எது தடுக்கும் யார் தடுப்பார்கள் என நீங்கள் ஊகிக்கிறீர்கள்

இன்னும் சிங்களவனையும் சிங்கள அடிவருடிகளையும் நம்பி இருப்பது தான் எமது வறுமைக்கு முதன்மைக் காரணம். நீங்கள் பட்டினி கிடந்து செத்தாலும்.. இந்தக் கூட்டம்.. எதுவும் செய்யாது. வேடிக்கை மட்டும் பார்க்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 22:45, nedukkalapoovan said:

இன்னும் சிங்களவனையும் சிங்கள அடிவருடிகளையும் நம்பி இருப்பது தான் எமது வறுமைக்கு முதன்மைக் காரணம். நீங்கள் பட்டினி கிடந்து செத்தாலும்.. இந்தக் கூட்டம்.. எதுவும் செய்யாது. வேடிக்கை மட்டும் பார்க்கும். 

தவறு  கொரானாவால் பாதித்த காலத்தில் வறிய சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 10000 அரசாால் வழங்கி வைக்கப்பட்டது 

அதை கூட கொடுக்க மறுத்த நம்ம சமுர்த்தி ஊழியர்கள் இங்கே உண்டு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.