Jump to content

வீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் – எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் – எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு!

InShot_20200906_182706662-1-960x578.jpg?189db0&189db0

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தலைவராக, வீராப்புள்ள இராணுவத் தளபதியாக விளங்கினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நேர்மை அவரிடம் இருந்தது. எங்கெல்லாம் போர்நிறுத்தம் செய்தாரோ அங்கெல்லாம் அவர் தாக்குதல்கள் மேற்கொள்ளவில்லை – என்று தெரிவித்தார் நோர்வேயின் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

” உண்மையில் தலைவர் பிரபாகரன் அடிக்கடி சந்தித்த தமிழரல்லாத ஒருவன் நானாகத்தான் இருக்க வேண்டும். தலைவர் பிரபாகரன் போரின் இறுதிக்கட்டம் வரை வீராப்புள்ள ஒரு தலைவராக செயற்பட்டார். உலகிலேயே சொந்த விமானப்படையையும், கடற்படையையும் நிறுவிய அரசு அல்லாத தரப்பாக விடுதலைப் புலிகளே இன்று வரை உள்ளனர்.

normal_10.jpg?189db0&189db0gettyimages-637672614_web-1.jpg?189db0&1

ஆனால், துரதிஷ்டவசமாக அவரின் அரசியல் விளக்கப்பாடு இதைவிட பெரிதும் குறைவானதாகவே இருந்தது. இந்தியா மற்றும் வெளியுலகம் குறித்த இணக்கப்பாடு பெரிதாக இல்லை. புலம்பெயர்ந்த சமூகத்தில் இருந்த பலர் அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். இதுவே தீர்வொன்றைக் காணாது தொடர்போராட்டத்துக்கு வழிவகுத்தது.

அவரது படைகள் குறித்து அவருக்கு முழுமையான கட்டுப்பாடு இருந்தது. பாலசிங்கம் தான் அவருக்கு முழுமையான ஆலோசகராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் விளங்கனார். பாலசிங்கத்தின் அறிவுரைகள்படி நடக்கும் வரை அனைத்தும் சரியாகவே நடந்தது. ஆனால், அவரின் ஆலோசனைகளைக் கேட்காத நேரத்தில் எல்லாம் பிழையாகிப் போனது.

பாலசிங்கம் நல்ல சமையல்காரர். நானும், பாலசிங்கமும் ஒன்றாக இருந்து நல்ல உணவு உட்கொண்டிருக்கிறோம். நாம் முன்வைத்த யோசனையின்மூலம் அந்த நேரத்தில் பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும் என நம்பினேன். எமது யோசனையை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகியன ஆதரித்தன.

ஆயினும் அது ஒரு வலிமையான யோசனை. நீங்கள் போரில் வலுவிழந்து கொண்டு போகிறீர்கள். வெற்றி பெற எந்த வழியுமில்லை என தலைவர் பிரபாகரனிடம் கூறினோம். ஒவ்வொரு போராளியும் பதிவு செய்யப்பட்டு தெற்குக்கு அல்லது வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதே எமது யோசனை ஆகும்.

சரணடைந்த பின் எவருமே கொடுமைப்படுத்தப்பட மாட்டர்கள் என்பதற்கு அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஆதரவு கிடைத்தது. இந்த யோசனை நிறைவேறும் என நானும், அன்ரன் பாலசிங்கமும் நம்பிக்கையுடன் தான் இருந்தோம்.

எனினும், 2009 ஏப்ரலில் தலைவர் பிரபாகரன் அதனை நிராகரித்து விட்டார்” என்றார்.

 

https://newuthayan.com/வீராப்புடைய-தலைவர்தான்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான முயற்சியின் போது சிறீலங்கா அரசே தன்னை அதிகம் பலப்படுத்திக் கொண்டது – எரிக் சொல்கெய்ம்

solhei-696x553.jpg

 

விடுதலைப்புலிகள் அதி உச்ச பலமாக இருந்தபோதே பேச்சக்களில் ஈடுபட்டனர், போர்நிறுத்த காலத்தில் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளை விட அதிகமாக தன்னை பலப்படுத்திக்கொண்டது என நோர்வே தலைமையிலான சமாதான தூதுக்குழுவின் பிரதிநிதி எரிக் சொல்கெய்ம் அவர்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு இந்த வாரம் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு:

இந்த சமாதான முயற்சியின் போது நாம் எந்த தரப்பிடம் இருந்தும் நன்மைகளையோ அன்பளிப்புக்களையோ பெறவில்லை. அது தென்னிலங்கையில் நிலவும் தவறான கருத்து. சமாதான காலத்தில் சிறீலங்கா படையினரே தம்மை அதிகம் பலப்படுத்திக் கொண்டனர் விடுதலைப்புலிகள் அல்ல.

இதனை நாம் போரின் இறுதி ஆண்டுகளான 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கண்டிருந்தோம். உலகில் உள்ள அத்தனை நாடுகளின் ஆதரவையும் சிறீலங்கா அரசு பெற்றிருந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அடங்கும். இந்த நாடுகள் சமாதனத்தை விரும்பின, அவர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன விடுதலைப்புலிகளா அல்லது சிறீலங்கா அரசா என்பதே. ஆனால் அவர்கள் சிறீலங்கா அரசின் பக்கம் சென்றதால் சிறீலங்கா அரசு தன்னை நன்கு பலப்படுத்திக் கொண்டது.

நாம் 2002 ஆம் ஆண்டு இந்த முயற்சியை ஆரம்பித்த போது, விடுதலைப்புலிகள் 11,000 இராணுவச் சிப்பாய்களைக் கொண்ட ஆனையிறவுத்தளத்தை வீழ்த்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நிலையில் இருந்தனர். யாழில் சிக்கியிருந்த படையினரை மீட்பதற்கு இந்திய உதவ முனவந்திருந்தது. பாகிஸ்தானின் உதவியால் யாழ்குடாநாட்டை சிறீலங்கா அரசு காப்பாற்றியபோதும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருந்தது.

அதாவது 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அதி உச்ச பலத்தில் இருந்தனர். அவர்கள் உச்சபலத்தில் இருந்தபோது தான் சமாதானத்திற்கு வந்தனர். அந்த பலத்தை விடுதலைப்புலிகள் முன்னர் எப்போதும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/சாமாதான-முயற்சியின்-போது/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

நாம் 2002 ஆம் ஆண்டு இந்த முயற்சியை ஆரம்பித்த போது, விடுதலைப்புலிகள் 11,000 இராணுவச் சிப்பாய்களைக் கொண்ட ஆனையிறவுத்தளத்தை வீழ்த்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நிலையில் இருந்தனர். யாழில் சிக்கியிருந்த படையினரை மீட்பதற்கு இந்திய உதவ முனவந்திருந்தது. பாகிஸ்தானின் உதவியால் யாழ்குடாநாட்டை சிறீலங்கா அரசு காப்பாற்றியபோதும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருந்தது.

அதாவது 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அதி உச்ச பலத்தில் இருந்தனர். அவர்கள் உச்சபலத்தில் இருந்தபோது தான் சமாதானத்திற்கு வந்தனர். அந்த பலத்தை விடுதலைப்புலிகள் முன்னர் எப்போதும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நீங்கள்  சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்ததே இதனால்தானே...
குரங்கு திரும்ப அப்பம் பிரிக்க வந்திருக்குதே என்னவாக இருக்கும் ...?
Mr. குரங்கு இம்முறை உங்களை அப்பம் பக்கத்திலேயே விடமாட்டினம் அப்பம் பூரா சப்ப மூக்கன்கள் வசம் 
தூர இருந்து பார்த்து  நாவில் வீணி வடிச்சுப்போட்டு நடையை கட்டவேண்டியதுதான்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

நீங்கள்  சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்ததே இதனால்தானே...
குரங்கு திரும்ப அப்பம் பிரிக்க வந்திருக்குதே என்னவாக இருக்கும் ...?
Mr. குரங்கு இம்முறை உங்களை அப்பம் பக்கத்திலேயே விடமாட்டினம் அப்பம் பூரா சப்ப மூக்கன்கள் வசம் 
தூர இருந்து பார்த்து  நாவில் வீணி வடிச்சுப்போட்டு நடையை கட்டவேண்டியதுதான்   

வெள்ளைக்காரனை நம்பி ஏமாந்து விட்டோம் 

வடிவேலுக்கு சொன்ன வசனம் ஞாபகத்திற்கு வருகிறது வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் எம்முடனேயே சேர்ந்து வளர்ந்துவருகிறார்கள். பிறகு ஏன் எமக்கு வெள்ளைக்காரனும், கறுப்பனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

சரணடைந்த பின் எவருமே கொடுமைப்படுத்தப்பட மாட்டர்கள் என்பதற்கு அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஆதரவு கிடைத்தது. இந்த யோசனை நிறைவேறும் என நானும், அன்ரன் பாலசிங்கமும் நம்பிக்கையுடன் தான் இருந்தோம்.

எனினும், 2009 ஏப்ரலில் தலைவர் பிரபாகரன் அதனை நிராகரித்து விட்டார்” என்றார்.

பாலா அண்ணன் தான் 2005 இலேயே சாவை தழுவிவிட்டார். பிறகு இது எப்படி சாத்தியமாகும். 🤣 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முதல்வன் said:

பாலா அண்ணன் தான் 2005 இலேயே சாவை தழுவிவிட்டார். பிறகு இது எப்படி சாத்தியமாகும். 🤣 

 

சகோ 2006

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் எழுதும் முன் ஏதாவது எதிர்ப்பு வருகுதா என்டு நூல் விட்டு பார்க்கிறார் போல கிடக்கு  ..

ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாறியும் கருத்துகளை வெளியிடுகிறார் ..

70c48e88c3990b36d52a55e3dab11cf5.jpg

"சமாதானமும்.. போரும்" எரிக்கண்ணே தலைப்பு நல்லா இருக்கா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டிலையும் ஆட்டி ....

பிள்ளையையும் கிள்ளி.....

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேட்டியை சொல்ஹெய்ம் என்கிருந்து அளித்தார்? 

கொழும்பில் இருந்தா? அப்படி ஆயின் கொழும்பு வர காரணம் என்ன? 

நோர்வே சொறி சிங்களத்தின் கடல் எல்லையை அகட்டும் முயற்சியில் முன்னுக்கு நிக்கிறது.   
 
இந்த பேட்டியை, இவரே தேடித் சென்று கொடுத்ததாக தோற்றம் இருக்கிறது.

நோர்வேயை முதல் இறக்கியதும் கிந்தியாவே, சிங்களத்துக்கு மூச்சு வாங்க இடை வெளி கொடுப்பதற்கும், பலப்படுத்தவும், புலி அழிப்பின் பேரில் ஈழத்தமிழரை அழிக்கவும்.

இதில் என் பிரபா புகழ் புராணம் சொல்ஹெய்ம் க்கு? 

அண்மையில் நான் கேள்விப்பட்டது, தமிழ் நாடு தான் கூட இருந்த    கிந்தியாவின் கேந்திர கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உளவுப் பிரிவினர் குழிபறித்தததான உணர்வு மேலோங்கி வருவதை, இந்த   கேந்திர கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உளவுப் பிரிவினர் நாடி பிடித்து அறிந்துள்ளனர் என்றும் அதை எப்படியாவது தணித்து விட முயல்வதாகவும்.

இப்பொது youtube  இல் வரும் விடீயோக்கலின் பின்னாலும், இந்த தமிழ்நாட்டை தணிப்பு  என்பதே பின்னணியில் இருப்பதாக தோன்றுகிறது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முதல்வன் said:

பாலா அண்ணன் தான் 2005 இலேயே சாவை தழுவிவிட்டார். பிறகு இது எப்படி சாத்தியமாகும். 🤣 

 

விடுதலைப் புலிகளை, பொதுமக்களை பாதுகாப்பதற்கு இவர்கள் முன்வைத்த நிபந்தனைகள் என்ன என்பதை சூல்கெய்ம் (😏) கூறுவாரா ? அதற்கான துணிவும் நேர்மையும் இவருக்கு இருக்கிறதா ? 

இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை ☹️

1) அவர்கள் முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானது ""பொட்டரை இந்தியாவிடம் உயிருடன் ஒப்படைக்க வேண்டும்""

உண்மை முழுவதும் வெளியே கூறப்பட்டால் இந்தியாவையும் மேற்கையும் குறிப்பாக நோர்வேயையும் ஈழத் தமிழர் காறித் துப்புவர். 

😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.