Jump to content

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றுக்கு செல்ல முடியுமா? – தீர்ப்பு இன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1596192257-former-mp-premalal-jayasekara-sentenced-to-death.jpg

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றுக்கு செல்ல முடியுமா? – தீர்ப்பு இன்று

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளது.

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

அதனைத்தொடர்ந்து, குநித்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மரண-தண்டனை-விதிக்கப்பட்-5/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை கைதி தேர்தலில் போட்டியிடலாம் என்றால் பிறகு ஏன் பாராளுமன்றம் செல்லமுடியாது என்று தடை தேவை?

குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது என்று எதுவித விதிமுறைகளும் தேவை இல்லை போல 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் செல்ல மரண தண்டனை கைதிக்கு அனுமதி வழங்கி உத்தரவு!

1596192257-former-mp-premalal-jayasekara-sentenced-to-death-1.jpg?189db0&189db0

 

நாடாளுமன்றுக்கு தெரிவான மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

https://newuthayan.com/நாடாளுமன்றம்-செல்ல-மரண-த/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1599009155-premalaljayasekara-2.jpg

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதற்கமைய நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மரண-தண்டனை-விதிக்கப்பட்-6/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.