Jump to content

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!

weera.jpg

சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

"சர்வதேச பொலிஸாருடன் (இண்டர்போல்) இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் இயங்குகின்றது. எனவே, நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாள முடியும்.

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/09/06/16405/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

இந்த விடயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

இந்தியாவை எவருமே தூண்டிவிடுவதில்லை. அதைச் செய்வது சிங்களவர்கள்தான். சீனாவின் பக்கம் சாய்வதாலேயே இந்தியா இலங்கைக்கு எதிராகச் செயற்படும் சந்தர்ப்பத்தினை சிங்களவர்களே செய்துகொண்டார்கள். தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களோ கேட்டுக்கொண்டதன்படி செயற்பட இந்தியா ஒன்றும் தமிழர்களின் நேச சக்தி கிடையாது. தனக்குத் தேவையென்றால் எதையுமே செய்யக்கூடிய ஒரு நாசகார சக்திதான் இந்தியா. கூடவிருந்தே குழிபறித்த தூரோகத்தாலும், இந்தியாவின் உதவிகளாலும் வீழ்த்தப்பட்ட நாம் எமது எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.  ஒரு இனக்கொலையாளன் தமிழ்த் தலைமைகள் என்று அவனே சித்தரிக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொக்கரிக்கிறான் என்றால், அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில்த்தான் நாம்  இருக்கிறோம். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா ஈடுபடு முன்னமே தமிழர்களைச் சிங்களவன் கொல்லத் தொடங்கிவிட்டான் என்பதை இன்று கொக்கரிக்கும் சிங்களவனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் சிலர் இலகுவாக மறந்துவிட்டனர்.

தமிழனைப் பொறுத்தவரையில் சிங்களவன் எதிரி, இந்தியா முதுகில் குத்திய துரோகி. இவர்கள் இருவரில் எவரை ஒருவர் ஆதரித்தாலும் அவர் தமது சொந்த நலன்களுக்காகவும், தமிழினத்தின் இருப்பிற்கு எதிராகவுமே செயற்படுகிறார்கள்  என்று பொருள், இதற்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலென்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சும்மாவே காவடி...

இப்ப இரண்டு கொம்பு....

அலம்பறை கூடப்போகுது....

Link to comment
Share on other sites

41 minutes ago, ரஞ்சித் said:

தமிழனைப் பொறுத்தவரையில் சிங்களவன் எதிரி, இந்தியா முதுகில் குத்திய துரோகி. இவர்கள் இருவரில் எவரை ஒருவர் ஆதரித்தாலும் அவர் தமது சொந்த நலன்களுக்காகவும், தமிழினத்தின் இருப்பிற்கு எதிராகவுமே செயற்படுகிறார்கள்  என்று பொருள், இதற்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலென்ன. 

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிங்களவர்களுக்குச் சோரம் போவதுதான் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

Link to comment
Share on other sites

13 minutes ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

 

10 minutes ago, ரஞ்சித் said:

சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிங்களவர்களுக்குச் சோரம் போவதுதான் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

பல்கலைக்கழகப். படிப்பும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பாதுகாப்பும் வசதிகளும் உள்ளவர்களால் இதற்கு மேலாக சிந்தித்து பயனுள்ள வகையில் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

 

பல்கலைக்கழகப். படிப்பும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பாதுகாப்பும் வசதிகளும் உள்ளவர்களால் இதற்கு மேலாக சிந்தித்து பயனுள்ள வகையில் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நான் நடப்பதைச் சொன்னேன் அண்ணோய்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ஹிந்தியாவுடன் சிரித்து மகிழ்ந்தாலும் ஹிந்தியனை கண்ணிலேயே காட்டமுடியாது சிங்களவனுக்கு , எமது கூத்தாடி கிங் சம்மு  13 இல் கைவைத்தால் தெரியும்  ஹிந்தியனின் ஆட்டம் என்று டான் கணக்கில் டயலொக் விட்டு சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி விட்டிருக்கிறார், பாவம் ஹிந்தியனின் கையாலாகாத்தனம் தெரிந்தும் அது  ஐயாவின் கறல் கட்டிய மூளையில் ஏறவில்லை போல, ஏற்கனவே நாறி நச நசத்து போன 13 ஐ பாடையில் ஏற்றும் போது பாடி ஓவராக டேமேஜ் ஆகாமல் பார்த்து ஏத்துங்கோ என்று சொல்ல 
ஒரு விசேட தூதுவரை ஏற்பாடு செய்திருக்கிறான் ஹிந்தியன், ஒரு கட்டத்திற்கு மேல் அது இலங்கையின் இறைமை என்று பின் பக்கத்தை தட்டிவிட்டு நிண்ட இடத்திற்கும் விசலம் சொல்லாமல் ஆள்மாறிடுவான்
நம்மாள் அடுத்த இலவம் பஞ்சிற்கு நாக்கை தொங்கப்போடவேண்டியது தான் அடுத்த தபா வரை ஆள் தாங்குமா ...?       

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களோ கேட்டுக்கொண்டதன்படி செயற்பட இந்தியா ஒன்றும் தமிழர்களின் நேச சக்தி கிடையாது. தனக்குத் தேவையென்றால் எதையுமே செய்யக்கூடிய ஒரு நாசகார சக்திதான் இந்தியா. கூடவிருந்தே குழிபறித்த தூரோகத்தாலும், இந்தியாவின் உதவிகளாலும் வீழ்த்தப்பட்ட நாம் எமது எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.  

தமிழர் மூச்சோடு கலந்திருக்கும் இராசையா பார்த்திபன் எனப் பெயர்கொண்ட எங்கள் திலீபனும், பூபதி கணபதிப்பிள்ளை எனப் பெயர்கொண்ட எங்கள் அன்னை பூபதி அவர்களும், இந்தியா. கூடவிருந்தே குழிபறிக்கும் தூரோக நாடு என்பதை உலகமே ஐயமின்றி அறிவதற்கான வலுவான சாட்சிகளாக உள்ளனர்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த விடயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார்

இந்தியா இலங்கைத் தமிழர்களை தூண்டிவிடுவதாக  கூறமுடியாதல்லவா 😂 ஆதலால் கத்தியை மறுவளமாகப் போட்டிருக்கிறார். 

அம்புட்டுதே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

இருந்தா தனே... இன்னமும் ஜெர்மனி நாசிக்களை எதிர்த்து     பிரான்ஸ் மக்கள்  போராட வேண்டுமா இல்லையா என்பதற்கு அண்ணாச்சி இன்னமும் பதில் சொல்லவில்லை; இதுக்குள்ள புதிசா கேள்வி கேட்டு குடைய வேண்டாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

இவை சரியான வழிகாட்டல்.  கொழும்பில் உள்ள Majestic City போன்ற பாரிய முதலீடுகள் தமிழருடையதே. இந்த கட்டடத்  தொகுதியின் ஆரம்பகாலத்தில் நானும் முதலிட்டு அண்மைக்காலம் வரை எனது பங்குகளை வைத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேலதிக முதலீடுகளை வடக்கு-கிழக்கில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செய்வது பற்றி கலந்துரையாடிய போது, அங்கே வணிகங்கள் வன்முறை குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போரால் செய்யப்படுவதாக அறியக்கிடைத்தது. இவர்களில் சிலர் அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். புதிய வணிகம் தமக்கு போட்டியானது என இவர்கள் நினைத்தால் அழித்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.  போட்டியாக இல்லாவிட்டாலும் வணிகம் சிறப்பாக வளர்ந்தால் அதை அவர்கள் தமதாக்க விரும்புகிறார்கள்.  இந்த நிலமைகளை எவ்வாறு கையாளலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

இதைத்தான் பலரும் செய்து  கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இதைவிட சிங்களவனிடம் நாம் உங்கள் அடிமைகள் 

எந்த நிலையிலும் இந்த  நாட்டில்  உரிமை கொண்டாடமாட்டோம் என சரணடைதல் முன்னேற சுலபமான  வழி  என்று

பல்கலைக்கழகங்களில்  படித்து பட்டம்  பெற்றவர்கள்  என்று தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்கள் முன்னுக்கு நிற்கிறார்களே?

யாம் என்ன  பண்ணும்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா இனப்படுகொலை அரசு.. ஒரு இனத்தை அதன் அரசியல் விடுதலை தொடர்பான முயற்சிகளை முன்னிட்டு இன்ரபோலை தவறாக வழிநடத்தி.. அந்த இனக்குழும மக்களை பழிவாங்கவோ.. இன அழிப்புச் செய்யவோ அனுமதிக்கக் கூடாது.

புலம்பெயர் தமிழ் இளையோர் அமைப்புக்கள்.. இது தொடர்பில் இன்ரபோல்.. மற்றும் சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழ் இளையோர் இன்ரபோல்.. மற்றும் சர்வதேச உளவு அமைப்புக்களில் குறிப்பாக மேற்கு நாட்டு உளவு அமைப்புக்களில்.. தம்மை இணைத்துக் கொள்வதையும் அதிகரிக்க வேண்டும்.. இந்த சிங்களச் சவால்களை எதிர்கொள்ள. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

இவை சரியான வழிகாட்டல்.  கொழும்பில் உள்ள Majestic City போன்ற பாரிய முதலீடுகள் தமிழருடையதே. இந்த கட்டடத்  தொகுதியின் ஆரம்பகாலத்தில் நானும் முதலிட்டு அண்மைக்காலம் வரை எனது பங்குகளை வைத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேலதிக முதலீடுகளை வடக்கு-கிழக்கில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செய்வது பற்றி கலந்துரையாடிய போது, அங்கே வணிகங்கள் வன்முறை குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போரால் செய்யப்படுவதாக அறியக்கிடைத்தது. இவர்களில் சிலர் அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். புதிய வணிகம் தமக்கு போட்டியானது என இவர்கள் நினைத்தால் அழித்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.  போட்டியாக இல்லாவிட்டாலும் வணிகம் சிறப்பாக வளர்ந்தால் அதை அவர்கள் தமதாக்க விரும்புகிறார்கள்.  இந்த நிலமைகளை எவ்வாறு கையாளலாம்?

இவ்வாறான நிலமைகளை அரசியல்வாதியாகவும் வியாபாரியாகவும் சிந்தித்து புத்திசாலித்தனமாகக் கையாளவேண்டும். 

ஆடுற மாட்ட ஆடியும் பாடுற மாட்ட பாடியும் கறக்க வேண்டும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இதைத்தான் பலரும் செய்து  கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இதைவிட சிங்களவனிடம் நாம் உங்கள் அடிமைகள் 

எந்த நிலையிலும் இந்த  நாட்டில்  உரிமை கொண்டாடமாட்டோம் என சரணடைதல் முன்னேற சுலபமான  வழி  என்று

பல்கலைக்கழகங்களில்  படித்து பட்டம்  பெற்றவர்கள்  என்று தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்கள் முன்னுக்கு நிற்கிறார்களே?

யாம் என்ன  பண்ணும்????

உன்மையில் சரியான அரசியல் நகர்வை செய்தால் வெளிநாட்டு பணம் தங்கு தடையின்றி பாயும் எங்கு கதைக்கணுமோ அங்கு கதைக்காமல் இங்குவந்து சதிராடும் வேடதாரிகளை  என்ன செய்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

உன்மையில் சரியான அரசியல் நகர்வை செய்தால் வெளிநாட்டு பணம் தங்கு தடையின்றி பாயும் எங்கு கதைக்கணுமோ அங்கு கதைக்காமல் இங்குவந்து சதிராடும் வேடதாரிகளை  என்ன செய்வது ?

ஐயா பெருமாள், விசுகு, 

ஒரு விடயம் பிரயோசனமாய் கதைக்கும்போது எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைக் கொஞ்சம் தள்ளி வைத்தால் என்ன ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

நல்ல கருத்து, இதைதான் எம்மால் இப்ப செய்து முன்னேற்ற முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நல்ல கருத்து, இதைதான் எம்மால் இப்ப செய்து முன்னேற்ற முடியும்

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

Link to comment
Share on other sites

59 minutes ago, Kapithan said:

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

இடம் மற்றும் நபர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடாமல் உங்கள் திட்டம் பற்றி 
விபரிக்கலாமே மறவர்களும் பின்பற்ற கூடும் அவர்களுக்கு சரி என தோன்றினால் 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

வெற்றிபெற வாழ்த்துகள் கப்பிதான். ஏற்றுமதிக்கான உற்பத்தி செய்கிறீர்களா அல்லது உள்ளூர் பயன்பாட்டுக்கான பொருட்களா? பொதுநல நிறுவனங்களூடாக சைக்கிளில் இணைத்து இழுத்து செல்லத்தக்க பொருட்களை காவும் இணைப்பு வண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எரிபொருள் செலவில்லாமல் விவசாயிகளும் வியாபாரிகளும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் இல்லையா? இரண்டு அல்லது நாலு துவிச்சக்கர வண்டிகள் இழுத்து செல்லத்தக்கதாக அமைந்தால் மேலும் அதிக பொருட்களை காவி செல்ல முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

அறிவின்மையை இங்கு புலம்பெயர் தேசத்திலும் 
ஈழத்திலும் முதலில் போக்க வேண்டும் 

சரியான ஒரு வழிகாட்டல் பொது அறிவு இல்லாமல் 
கடந்த 40-50 வருடமாக எனோ தானோ என்று வாழ்ந்த ஒரு சமூகம் நாம் 

எங்களை மூளைச்சலவை செய்வது முட்டாள்தனமான எண்ணங்களை 
புகுத்துவது என்பது மிக இலகுவானது காரணம் நாம் ஒரு தற்காப்பு 
நிலைக்கே தள்ளாடிக்கொண்டு இருந்தவர்கள் ஆதலால்  எமக்கு உயரிய எண்ணமோ 
எதிர்பார்ப்போ தேவையற்று இருந்தது 

இதை நாம் செய்ய தவறின் எந்த பயிரும் விளையலாம் 
வீடு வந்து சேராது. 

எங்களிடம் போதிய பலம் வளம் எல்லாம் உண்டு 
பயன்படுத்த போதிய அறிவில்லாமையால் அழிந்துபோகிறோம் 
இதற்கு கடந்த 10 வருடத்தில் வான் நோக்கி வளர்ந்த ஆயிர கணக்கான 
கோவில்கள்தான் ஆதாரம்.
ஏன்? எதற்கு?
என்ற கேள்விக்கே வேலையில்லாத மனித மூளையை சுமக்கும் 
ஒரு சுமைதாங்கி வாழ்க்கையில் இருந்து முதலில் வெளியேற வேண்டும்.

சம நேரத்தில் எங்களுடைய எல்லா வளமும் சூறையாடபட்டு கொண்டு இருக்கிறது  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.