Jump to content

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!

weera.jpg

சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

"சர்வதேச பொலிஸாருடன் (இண்டர்போல்) இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் இயங்குகின்றது. எனவே, நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாள முடியும்.

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/09/06/16405/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

இந்த விடயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

இந்தியாவை எவருமே தூண்டிவிடுவதில்லை. அதைச் செய்வது சிங்களவர்கள்தான். சீனாவின் பக்கம் சாய்வதாலேயே இந்தியா இலங்கைக்கு எதிராகச் செயற்படும் சந்தர்ப்பத்தினை சிங்களவர்களே செய்துகொண்டார்கள். தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களோ கேட்டுக்கொண்டதன்படி செயற்பட இந்தியா ஒன்றும் தமிழர்களின் நேச சக்தி கிடையாது. தனக்குத் தேவையென்றால் எதையுமே செய்யக்கூடிய ஒரு நாசகார சக்திதான் இந்தியா. கூடவிருந்தே குழிபறித்த தூரோகத்தாலும், இந்தியாவின் உதவிகளாலும் வீழ்த்தப்பட்ட நாம் எமது எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.  ஒரு இனக்கொலையாளன் தமிழ்த் தலைமைகள் என்று அவனே சித்தரிக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொக்கரிக்கிறான் என்றால், அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில்த்தான் நாம்  இருக்கிறோம். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா ஈடுபடு முன்னமே தமிழர்களைச் சிங்களவன் கொல்லத் தொடங்கிவிட்டான் என்பதை இன்று கொக்கரிக்கும் சிங்களவனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் சிலர் இலகுவாக மறந்துவிட்டனர்.

தமிழனைப் பொறுத்தவரையில் சிங்களவன் எதிரி, இந்தியா முதுகில் குத்திய துரோகி. இவர்கள் இருவரில் எவரை ஒருவர் ஆதரித்தாலும் அவர் தமது சொந்த நலன்களுக்காகவும், தமிழினத்தின் இருப்பிற்கு எதிராகவுமே செயற்படுகிறார்கள்  என்று பொருள், இதற்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலென்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சும்மாவே காவடி...

இப்ப இரண்டு கொம்பு....

அலம்பறை கூடப்போகுது....

Link to comment
Share on other sites

41 minutes ago, ரஞ்சித் said:

தமிழனைப் பொறுத்தவரையில் சிங்களவன் எதிரி, இந்தியா முதுகில் குத்திய துரோகி. இவர்கள் இருவரில் எவரை ஒருவர் ஆதரித்தாலும் அவர் தமது சொந்த நலன்களுக்காகவும், தமிழினத்தின் இருப்பிற்கு எதிராகவுமே செயற்படுகிறார்கள்  என்று பொருள், இதற்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலென்ன. 

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிங்களவர்களுக்குச் சோரம் போவதுதான் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

Link to comment
Share on other sites

13 minutes ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

 

10 minutes ago, ரஞ்சித் said:

சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிங்களவர்களுக்குச் சோரம் போவதுதான் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

பல்கலைக்கழகப். படிப்பும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பாதுகாப்பும் வசதிகளும் உள்ளவர்களால் இதற்கு மேலாக சிந்தித்து பயனுள்ள வகையில் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

 

பல்கலைக்கழகப். படிப்பும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பாதுகாப்பும் வசதிகளும் உள்ளவர்களால் இதற்கு மேலாக சிந்தித்து பயனுள்ள வகையில் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நான் நடப்பதைச் சொன்னேன் அண்ணோய்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ஹிந்தியாவுடன் சிரித்து மகிழ்ந்தாலும் ஹிந்தியனை கண்ணிலேயே காட்டமுடியாது சிங்களவனுக்கு , எமது கூத்தாடி கிங் சம்மு  13 இல் கைவைத்தால் தெரியும்  ஹிந்தியனின் ஆட்டம் என்று டான் கணக்கில் டயலொக் விட்டு சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி விட்டிருக்கிறார், பாவம் ஹிந்தியனின் கையாலாகாத்தனம் தெரிந்தும் அது  ஐயாவின் கறல் கட்டிய மூளையில் ஏறவில்லை போல, ஏற்கனவே நாறி நச நசத்து போன 13 ஐ பாடையில் ஏற்றும் போது பாடி ஓவராக டேமேஜ் ஆகாமல் பார்த்து ஏத்துங்கோ என்று சொல்ல 
ஒரு விசேட தூதுவரை ஏற்பாடு செய்திருக்கிறான் ஹிந்தியன், ஒரு கட்டத்திற்கு மேல் அது இலங்கையின் இறைமை என்று பின் பக்கத்தை தட்டிவிட்டு நிண்ட இடத்திற்கும் விசலம் சொல்லாமல் ஆள்மாறிடுவான்
நம்மாள் அடுத்த இலவம் பஞ்சிற்கு நாக்கை தொங்கப்போடவேண்டியது தான் அடுத்த தபா வரை ஆள் தாங்குமா ...?       

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களோ கேட்டுக்கொண்டதன்படி செயற்பட இந்தியா ஒன்றும் தமிழர்களின் நேச சக்தி கிடையாது. தனக்குத் தேவையென்றால் எதையுமே செய்யக்கூடிய ஒரு நாசகார சக்திதான் இந்தியா. கூடவிருந்தே குழிபறித்த தூரோகத்தாலும், இந்தியாவின் உதவிகளாலும் வீழ்த்தப்பட்ட நாம் எமது எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.  

தமிழர் மூச்சோடு கலந்திருக்கும் இராசையா பார்த்திபன் எனப் பெயர்கொண்ட எங்கள் திலீபனும், பூபதி கணபதிப்பிள்ளை எனப் பெயர்கொண்ட எங்கள் அன்னை பூபதி அவர்களும், இந்தியா. கூடவிருந்தே குழிபறிக்கும் தூரோக நாடு என்பதை உலகமே ஐயமின்றி அறிவதற்கான வலுவான சாட்சிகளாக உள்ளனர்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த விடயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார்

இந்தியா இலங்கைத் தமிழர்களை தூண்டிவிடுவதாக  கூறமுடியாதல்லவா 😂 ஆதலால் கத்தியை மறுவளமாகப் போட்டிருக்கிறார். 

அம்புட்டுதே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

இருந்தா தனே... இன்னமும் ஜெர்மனி நாசிக்களை எதிர்த்து     பிரான்ஸ் மக்கள்  போராட வேண்டுமா இல்லையா என்பதற்கு அண்ணாச்சி இன்னமும் பதில் சொல்லவில்லை; இதுக்குள்ள புதிசா கேள்வி கேட்டு குடைய வேண்டாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

இவை சரியான வழிகாட்டல்.  கொழும்பில் உள்ள Majestic City போன்ற பாரிய முதலீடுகள் தமிழருடையதே. இந்த கட்டடத்  தொகுதியின் ஆரம்பகாலத்தில் நானும் முதலிட்டு அண்மைக்காலம் வரை எனது பங்குகளை வைத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேலதிக முதலீடுகளை வடக்கு-கிழக்கில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செய்வது பற்றி கலந்துரையாடிய போது, அங்கே வணிகங்கள் வன்முறை குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போரால் செய்யப்படுவதாக அறியக்கிடைத்தது. இவர்களில் சிலர் அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். புதிய வணிகம் தமக்கு போட்டியானது என இவர்கள் நினைத்தால் அழித்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.  போட்டியாக இல்லாவிட்டாலும் வணிகம் சிறப்பாக வளர்ந்தால் அதை அவர்கள் தமதாக்க விரும்புகிறார்கள்.  இந்த நிலமைகளை எவ்வாறு கையாளலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

இதைத்தான் பலரும் செய்து  கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இதைவிட சிங்களவனிடம் நாம் உங்கள் அடிமைகள் 

எந்த நிலையிலும் இந்த  நாட்டில்  உரிமை கொண்டாடமாட்டோம் என சரணடைதல் முன்னேற சுலபமான  வழி  என்று

பல்கலைக்கழகங்களில்  படித்து பட்டம்  பெற்றவர்கள்  என்று தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்கள் முன்னுக்கு நிற்கிறார்களே?

யாம் என்ன  பண்ணும்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா இனப்படுகொலை அரசு.. ஒரு இனத்தை அதன் அரசியல் விடுதலை தொடர்பான முயற்சிகளை முன்னிட்டு இன்ரபோலை தவறாக வழிநடத்தி.. அந்த இனக்குழும மக்களை பழிவாங்கவோ.. இன அழிப்புச் செய்யவோ அனுமதிக்கக் கூடாது.

புலம்பெயர் தமிழ் இளையோர் அமைப்புக்கள்.. இது தொடர்பில் இன்ரபோல்.. மற்றும் சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழ் இளையோர் இன்ரபோல்.. மற்றும் சர்வதேச உளவு அமைப்புக்களில் குறிப்பாக மேற்கு நாட்டு உளவு அமைப்புக்களில்.. தம்மை இணைத்துக் கொள்வதையும் அதிகரிக்க வேண்டும்.. இந்த சிங்களச் சவால்களை எதிர்கொள்ள. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

இவை சரியான வழிகாட்டல்.  கொழும்பில் உள்ள Majestic City போன்ற பாரிய முதலீடுகள் தமிழருடையதே. இந்த கட்டடத்  தொகுதியின் ஆரம்பகாலத்தில் நானும் முதலிட்டு அண்மைக்காலம் வரை எனது பங்குகளை வைத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேலதிக முதலீடுகளை வடக்கு-கிழக்கில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செய்வது பற்றி கலந்துரையாடிய போது, அங்கே வணிகங்கள் வன்முறை குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போரால் செய்யப்படுவதாக அறியக்கிடைத்தது. இவர்களில் சிலர் அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். புதிய வணிகம் தமக்கு போட்டியானது என இவர்கள் நினைத்தால் அழித்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.  போட்டியாக இல்லாவிட்டாலும் வணிகம் சிறப்பாக வளர்ந்தால் அதை அவர்கள் தமதாக்க விரும்புகிறார்கள்.  இந்த நிலமைகளை எவ்வாறு கையாளலாம்?

இவ்வாறான நிலமைகளை அரசியல்வாதியாகவும் வியாபாரியாகவும் சிந்தித்து புத்திசாலித்தனமாகக் கையாளவேண்டும். 

ஆடுற மாட்ட ஆடியும் பாடுற மாட்ட பாடியும் கறக்க வேண்டும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இதைத்தான் பலரும் செய்து  கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இதைவிட சிங்களவனிடம் நாம் உங்கள் அடிமைகள் 

எந்த நிலையிலும் இந்த  நாட்டில்  உரிமை கொண்டாடமாட்டோம் என சரணடைதல் முன்னேற சுலபமான  வழி  என்று

பல்கலைக்கழகங்களில்  படித்து பட்டம்  பெற்றவர்கள்  என்று தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்கள் முன்னுக்கு நிற்கிறார்களே?

யாம் என்ன  பண்ணும்????

உன்மையில் சரியான அரசியல் நகர்வை செய்தால் வெளிநாட்டு பணம் தங்கு தடையின்றி பாயும் எங்கு கதைக்கணுமோ அங்கு கதைக்காமல் இங்குவந்து சதிராடும் வேடதாரிகளை  என்ன செய்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

உன்மையில் சரியான அரசியல் நகர்வை செய்தால் வெளிநாட்டு பணம் தங்கு தடையின்றி பாயும் எங்கு கதைக்கணுமோ அங்கு கதைக்காமல் இங்குவந்து சதிராடும் வேடதாரிகளை  என்ன செய்வது ?

ஐயா பெருமாள், விசுகு, 

ஒரு விடயம் பிரயோசனமாய் கதைக்கும்போது எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைக் கொஞ்சம் தள்ளி வைத்தால் என்ன ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

நல்ல கருத்து, இதைதான் எம்மால் இப்ப செய்து முன்னேற்ற முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நல்ல கருத்து, இதைதான் எம்மால் இப்ப செய்து முன்னேற்ற முடியும்

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

Link to comment
Share on other sites

59 minutes ago, Kapithan said:

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

இடம் மற்றும் நபர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடாமல் உங்கள் திட்டம் பற்றி 
விபரிக்கலாமே மறவர்களும் பின்பற்ற கூடும் அவர்களுக்கு சரி என தோன்றினால் 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

வெற்றிபெற வாழ்த்துகள் கப்பிதான். ஏற்றுமதிக்கான உற்பத்தி செய்கிறீர்களா அல்லது உள்ளூர் பயன்பாட்டுக்கான பொருட்களா? பொதுநல நிறுவனங்களூடாக சைக்கிளில் இணைத்து இழுத்து செல்லத்தக்க பொருட்களை காவும் இணைப்பு வண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எரிபொருள் செலவில்லாமல் விவசாயிகளும் வியாபாரிகளும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் இல்லையா? இரண்டு அல்லது நாலு துவிச்சக்கர வண்டிகள் இழுத்து செல்லத்தக்கதாக அமைந்தால் மேலும் அதிக பொருட்களை காவி செல்ல முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

அறிவின்மையை இங்கு புலம்பெயர் தேசத்திலும் 
ஈழத்திலும் முதலில் போக்க வேண்டும் 

சரியான ஒரு வழிகாட்டல் பொது அறிவு இல்லாமல் 
கடந்த 40-50 வருடமாக எனோ தானோ என்று வாழ்ந்த ஒரு சமூகம் நாம் 

எங்களை மூளைச்சலவை செய்வது முட்டாள்தனமான எண்ணங்களை 
புகுத்துவது என்பது மிக இலகுவானது காரணம் நாம் ஒரு தற்காப்பு 
நிலைக்கே தள்ளாடிக்கொண்டு இருந்தவர்கள் ஆதலால்  எமக்கு உயரிய எண்ணமோ 
எதிர்பார்ப்போ தேவையற்று இருந்தது 

இதை நாம் செய்ய தவறின் எந்த பயிரும் விளையலாம் 
வீடு வந்து சேராது. 

எங்களிடம் போதிய பலம் வளம் எல்லாம் உண்டு 
பயன்படுத்த போதிய அறிவில்லாமையால் அழிந்துபோகிறோம் 
இதற்கு கடந்த 10 வருடத்தில் வான் நோக்கி வளர்ந்த ஆயிர கணக்கான 
கோவில்கள்தான் ஆதாரம்.
ஏன்? எதற்கு?
என்ற கேள்விக்கே வேலையில்லாத மனித மூளையை சுமக்கும் 
ஒரு சுமைதாங்கி வாழ்க்கையில் இருந்து முதலில் வெளியேற வேண்டும்.

சம நேரத்தில் எங்களுடைய எல்லா வளமும் சூறையாடபட்டு கொண்டு இருக்கிறது  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.