Jump to content

யாழ் சங்குபிட்டி கோர வீதி விபத்தில் பெண் பரிதாப மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய சங்குபிட்டி கோர வீதி விபத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான, முன்னாள் பெண் போராளி மீரா (வயது 47) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

யாழ்.சாவகச்சேரி - தனங்களப்பு - அறுகுவெளி - ஐயனார்கோவிலடியில் நேற்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

ஒரு காலை போரில் இழந்த நிலையில் வாழ்க்கையில் போராடி வாழ்ந்த பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் போராளியான துசாந்தி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார்.

பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/srilanka/01/255371?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீதியில் அண்மையில் தான் டிப்பருக்கு ஒரு பல்கலைக்கழக மாணவனும் பலியானான். 

தமிழர் பகுதிகளில் விபத்துக்களை வேடிக்கை பார்க்கிறார்களே தவிர.. தவிர்க்க முறையான நடைமுறைகளை அமுல்படுத்தாத தன்மை தான்.. இந்த அநியாயச் சாவுகளுக்கு முக்கிய காரணம். 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

இந்த வீதியில் அண்மையில் தான் டிப்பருக்கு ஒரு பல்கலைக்கழக மாணவனும் பலியானான். 

தமிழர் பகுதிகளில் விபத்துக்களை வேடிக்கை பார்க்கிறார்களே தவிர.. தவிர்க்க முறையான நடைமுறைகளை அமுல்படுத்தாத தன்மை தான்.. இந்த அநியாயச் சாவுகளுக்கு முக்கிய காரணம். 

உங்களின் இந்த அரிய கண்டுபிடிப்பை எங்கள் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான சலுகைகளை பெற்றுத்தர ஆவன செய்வார்கள் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.