Jump to content

ஆற்றல் மிகு தமிழ்த் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாழ்வும் காலமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டி.பி.எஸ்.ஜெயராஜ்

(This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020)

அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது.

002-Copy.jpg

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்(26 ஆகஸ்ட் 1927 – 13 ஜூலை 1989)

நான்கு தசாப்த காலம் நீடித்த சிறப்பு மிகு அரசியல் வாழ்வில் அமிர்தலிங்கம் 20வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினதும் தமிழ் ஐக்கிய விடுதலை கூட்டணியினதும் முக்கியமான தலைவர் அவர். 1956 – 1970வரை வட்டுக்கோட்டை தொகுதியில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 – 1983 வரை காங்கேசன்துறை தொகுதியின் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தார். 1977 – 1983 வரை இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த அமிர்தலிங்கம் 1989 ஜுலை 13 விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டபோது அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

அமிர்தலிங்கமும் மங்கையர்க்கரசியும்

அமிர்தலிங்கமும் அவரது துணைவியார் மங்கையர்க்கரசியும் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் பிரிக்க முடியாத இணையராக விளங்கினர். மங்கையர்க்கரசியின் வாழ்வு அவரது கணவரின் அரசியல் வாழ்வுடன் என்றுமே விடுவிக்க முடியாத பிணைப்பாக இருந்தது. அவரை பற்றிக் குறிப்பிடாமல் அமிர்தலிங்கத்தை பற்றி எழுத முடியாது. சிவபெருமானும் பார்வதியும்போல அமிர்தலிங்கம் சிவமாகவும் மங்கையர்க்கரசி சக்தியாகவும் வாழ்ந்தனர். இலட்சிய வேட்கை கொண்ட ஆயிரக்கணக்காக தமிழ் இளைஞர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்களாக இந்த அரசியல் தம்பதியர் விளங்கிய ஒரு காலம் இருந்தது. அந்த இணையருக்கு அமிர்தலிங்கம் அமிர் அண்ணா மங்கையர்க்கரசி மங்கை அக்கா. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் பிரபலமான ஒரு பேச்சாளராகவும் பாடகியாகவும் தன்சொந்த திறமையினாலேயே ஒரு தமிழ்த் தலைவியாக விளங்கியவர். அரசியல் மேடைகளில் அவர் தமிழ்த் தேசியவாத கீதங்களை இசைத்ததை மக்கள் கூட்டம் வெகுவாக வரவேற்று ரசித்தது. கணவர் செல்லுமிடமெல்லாம் அவர் கூடவே செல்வார்.

unnamed2.jpg

திரு திருமதி அமிர்தலிங்கம்

1983இல் அமிர்தலிங்கமும் மங்கையர்க்கரசியும் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்தபோது தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை நினைவுகூர விரும்புகிறேன். பாரிஸில் தமிழர்கள் நிறைந்து வாழ்கின்ற லா சப்பலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது தமிழ் இளைஞர் ஒருவர் அமிர்தலிங்கத்தை நோக்கி ‘நீங்கள் செல்லுமிடமெங்கும் உங்களது மனைவியையும் ஏன் கூட்டிக்கொண்டு திரிகிறீர்கள்? பாரிஸ{க்கு உங்களுடன் ஏன் கூட வந்திருக்கிறார்?’ என்று கேட்டார். அமிர்தலிங்கம் எந்தவிதமான குழப்பமும் அடையாமல் சிரித்த வண்ணம் ‘எனது சொந்த மனைவியுடன் கூடத் திரிவதில் என்ன தவறு இருக்கிறது? எனது மனைவியை தவிர வேறொரு பெண்ணுடன் சென்றால் மாத்திரமே அது தவறாகும். அதுமட்டுமல்ல, பாரிஸ் போன்ற இடங்களுக்கு மாத்திரமல்ல, பனாகொட இராணுவ முகாமுக்கும் என்னுடன் எனது மனைவி கூட வந்தவர். நாம் இருவரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்’ என்று பதிலளித்தார்.

அமிர்தலிங்கத்தின் அந்த பதில் சபையிலிருந்தோரை வாயடைக்கச் செய்தது. கேள்வி கேட்ட இளைஞன் மௌனமானார். 1961ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியில் 74சத்தியாக்கிரகிகள் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் ஆறு மாதங்களாக பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்ட நேரத்தை பற்றியே அமிர்தலிங்கம் அவ்வாறு குறிப்பிட்டார். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மங்கையர்க்கரசி மாத்திரமே ஒரேயொரு பெண்மணி.

அமிர்தலிங்கத்தினதும் மங்கையர்க்கரசியினதும் பெயர்கள் சிறுபராயத்திலிருந்தே எனக்கு பரிச்சயமாகியிருந்தன. அமிர்தலிங்கம் சட்டக் கல்லூரியில் எனது தந்தையின் சமகாலத்தவர். எமது வீட்டில் தமிழர் அரசியலைப் பற்றி கலந்துரையாடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் அமிர்தலிங்கத்தையும் மற்றும் அவரது மனைவியையும் பற்றி குறிப்பிடப்படும். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நான் கல்விப் பொதுதராதர உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது அமிர்தலிங்கம் தம்பதியினருடனான எனது தனிப்பட்ட ஊடாட்டம் தொடங்கியது. யாழ்ப்பாணக் கல்லூரியின் ஹவ்லான்ட் விடுதியில் நான் தங்கியிருந்தேன். அமிர்தலிங்கம் அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. 1970 பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஆ. தியாகராஜாவினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

வட்டுக்கோட்டை சந்தி பஸ் நிலையத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களை அமிர்தலிங்கம் காணும்போது தனது வாகனத்தில் இடமிருந்தால் அவர்களையும் எப்போதும் ஏற்றிக்கொண்டு செல்வார். அந்தவேளையில், அமிர்தலிங்கத்தின் மகன்களான காண்டீபனும் பகீரதனும் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள். அந்தக் கல்லூரியின் சில மாணவர்கள் அரசியல் நிலைவரங்கள் குறித்து கதைப்பதற்கு மூளாய் பகுதியிலுள்ள அவர்களது வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

திருமதி அமிர்தலிங்கம் அந்த நாட்களில் விருந்தோம்பும் பண்புடைய அன்புள்ள ஒரு குடும்பத்தலைவியாக நடந்துக்கொள்வார். குறிப்பாக என்னைப்போன்ற கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தாய்மார்கள் சமைத்த உணவு கிடைக்காமல் விடுதியில் சாப்பிடுவார்கள் என்பதற்காக அவர்களை மிகுந்த பரிவுடனும் பெருந்தன்மையுடனும் நோக்குவார். காண்டீபனும் பகீரதனும் கல்லூரியில் எனக்கு இளையவர்கள் என்றாலும் அவர்களுடன் நான் மிகுந்த சிநேகம் கொண்டிருந்தேன். பின்னரான வருடங்களில் நான் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தபோது தொழில்சார் தேவையின் நிமித்தம் அமிர்தலிங்கத்துடன் பழகத் தொடங்கினேன்.

வீரகேசரி, த ஐலண்ட் மற்றும் த இந்து போன்ற செய்திப் பத்திரிகைகளுக்காக நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது முக்கியமான ஒரு அரசியல் தொடர்பாக அமிர்தலிங்கத்துடன் உறவுகளை வளர்த்துக் கொண்டேன். அவரை நான் பாராளுமன்றத்திலும் சிராவஸ்திக்கு அண்மையாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலும் சந்திப்பது வழக்கம். யாழ்ப்பாணத்தில் நான் இருந்தவேளைகளிலெல்லாம் மூளாயிலுள்ள அவரது வீட்டுக்கு சென்று சந்திப்பேன். 1983 ஜூலை இன வன்முறையையடுத்து தமிழ்நாட்டுக்கு சென்ற பிறகு அவர் தங்கியிருந்த சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசு விருந்தினர் விடுதியிலும் அவரை சந்தித்து பேட்டிகளை எடுத்தேன்.

அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளுக்காக அமிர்தலிங்கம் கொழும்பு வந்தபோது எம்பிரஸ் ஹோட்டலிலும் பழைய தப்ரபேன் ஹோட்டலிலும் (கிரேண்ட் ஒரியன்ட் ஹோட்டல்) அவரை சந்திப்பதும் வழக்கம். பிறகு 1989 ஜூலையில் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது நான் கனடாவில் இருந்தேன். இலங்கையிலிருந்து 1988ஆம் ஆண்டு நான் கனடா சென்று விட்டேன். இந்த பின்புலத்தில் தான் நான் அமிர்தலிங்கத்தை பற்றி (ஏற்கனவே நான் எழுதியிருந்த கட்டுரைகளில் உள்ள தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு) எழுதுகிறேன்.

இலங்கை தமிழரசுக் கட்சி

அமிர்தலிங்கம் மலேசியாவில் பிரிட்டிஷ் ரயில்வேயில் ஒரு ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய அப்பாப்பிள்ளையின் மகனாவார். 1927 ஆகஸ்ட் 26 பிறந்த அமிர்தலிங்கம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் ஒரு விவேகமான மாணவன். அந்தக் கல்லூரியிலிருந்து முதன்முதலாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவரும் அவரேயாவார். கலைமாணி படிப்பை முடித்துக்கொண்ட அமிர்தலிங்கம் பிறகு சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஒரு வழக்கறிஞராக வெளியேறினார். தனது இளமை காலத்தில் அமிர்தலிங்கம் பிரபலமான ரொட்ஸ்கியாவாதியான கலாநிதி என்.எம். பெரேராவின் ஆர்வமிக்க சீடனாக விளங்கினார்.

நாட்டின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் சர்வரோக நிவாரணியாக விஞ்ஞான சோஷலிச கோட்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவராக விளங்கினார். பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் சமஷ்டி கோரிக்கையை நியாயப்படுத்தி சுதந்திரன் பத்திரிகையில் கட்டுரைகளை அமிர்தலிங்கம் எழுதியபோது அவர் தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.பி.செல்வநாயகத்தினால் கவரப்பட்டார். அந்த நேரத்தில் மிகுந்த செல்வாக்கு கொண்ட தமிழ் அரசியல் கட்சியாக விளங்கிய ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸிலிருந்து 1949 டிசம்பரில் பிரிந்து சென்ற செல்வநாயகம் சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அமிர்தலிங்கத்துக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதிய செல்வநாயகம் புதிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக வந்தார்.

அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் அரசியலில் ஆர்வ சுறுசுறுப்புடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவன்மை கொண்ட அவர், நாவலர் என்ற புனைப்பெயருடனும் அழைக்கப்பட்டார். டெய்லி மிரர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான ரெஜி மைக்கல் அமிர்தலிங்கத்தை பற்றி ஒருதடவை நகைச்சுவையாக ‘மக்கள் கூட்டத்தை நெகிழ வைக்கவும் மக்கள் கூட்டத்தினால் நெகிழ்ந்து போகவும் கூடிய ஒரு மனிதர்’(A man who could both move crowds as well as be moved by crowds) என்று வர்ணித்து எழுதினார்.

பார்கின்ஸன் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த செல்வநாயகம் சுறுசுறுப்பாக செயற்பட முடியாதவராக தன்னை உணர்ந்துகொண்டதும் கட்சிக்காக சளைக்காமல் உழைக்க வேண்டியது இளம் அமிர்தலிங்கத்தின் பொறுப்பாகியது. இதன் காரணமாக அவர் தளபதி என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் பழைய தலைவர்கள் மறைந்துபோக செல்வநாயகத்தின் அரசியல் வாரிசாக மாறிய அமிர்தலிங்கம் நாளடைவில் தலைமைத்துவப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். வெவ்வேறு காலகட்டங்களில் தமிழரசுக் கட்சியில் செயலாளராகவும் தலைவராகவும் இருந்த அவர் கட்சியின்; பல பதவிகளை வகித்தார். 1978ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமாக வந்த அவர் 1989இல் மரணமடையும் வரை அதே பதவியை தொடர்ந்தார்.

துணிச்சலான செயற்பாட்டாளர்

தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப நாட்களிலிருந்தே துணிச்சலான ஒரு செயற்பாட்டாளராக விளங்கிய அமிர்தலிங்கம் அஹிம்சை மார்க்கத்திலான பல போராட்டங்களில் பங்கேற்று தலைமை தாங்கினார். இவற்றில் கறுப்புக்கொடி போராட்டம், ஆர்ப்பாட்ட போராட்டம், சத்தியாக்கிரகங்கள், உண்ணாவிரதங்கள், ஒத்துழையாமை நடவடிக்கைகள் பலவாகும். பல சந்தர்ப்பங்களில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பனாகொடை இராணுவ முகாமில் அவர் மனைவி மங்கையர்க்கரசியுடன் 1961இல் தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு, கிழக்கில் சகல அரசாங்க நடவடிக்கைகளையும் ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு பிறகே இது நடந்தது.

இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஒத்துழையாமை இயக்கத்தின் ஓர் அங்கமாக ‘சட்டவிரோத தபால் சேவைக்காக’ அன்றைய தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவசிதம்பரம் அமிர்தலிங்கத்துடன் கூடவே தபால் சேவகர்களாக பணியாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1956ஆம் ஆண்டில் சிங்களத்தை நாட்டின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக கொண்டுவரும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கொழும்பு கோட்டையில் பழைய பாராளுமன்றத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்தியது. அமைதியான முறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சமூக விரோத கும்பல்களினால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதேவேளை, அதில் தலையிட்டு தடுக்க வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அமிர்தலிங்கம் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் தாக்கப்பட்டார்கள், கல்வீச்சுக்கு இழக்கானார்கள். அந்த தினத்தில் (ஜூலை 5) தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் பென்டேஜுடன் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக ஒரு நாடகபாணி உணர்ச்சி ஆர்வத்துடன் பிரவேசித்தார். ‘போரின் காயங்களே’ (Wounds of war) என்று கூறி பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அமிரை கேலி செய்தார். அடங்கா தமிழரான சி.சுந்தரலிங்கம் உடனே திருப்பி ‘போரின் கௌரவ காயங்களே’ (Honourable Wounds of war) என்று கூறினார்.

1952 பாராளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் அமிர்தலிங்கம் முதல் தடவையாக போட்டியிட்டார். அப்போது சமஷ்டி கோரிக்கைக்கு பெரும் ஆதரவு இருக்கவில்லை. அமிர்தலிங்கம் தோல்வி கண்டார். தெற்கில் எழுச்சிபெற்ற சிங்கள தேசியவாத அலை அதற்கு பிரதிபலிப்பாக தமிழ்ப் பகுதிகளில் தமிழ்த் தேசியவாத அலையை ஏற்படுத்தியது. 1956இல் முதன்மையான தமிழ்க் கட்சியாக வந்த தமிழரசுக் கட்சி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி அமைக்கப்படும் வரை (1976) அவ்வாறே தொடர்ந்து விளங்கியது. 1956, 1960(மார்ச்சிலும் ஜூலையிலும்) மற்றும் 1965இலும் வட்டுக்கோட்டை தொகுதியிலும் அமிர்தலிங்கம் வெற்றிப் பெற்றார். 1970 பொதுத் தேர்தலில் குழப்பகரமான ஒரு முடிவில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஆ. தியாகராஜாவினால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

இந்த தோல்வி தமிழ் தேசியவாதத்துக்கு பெரிய நன்மையாக போய்விட்டது. அந்த பொதுத் தேர்தலில் தனது கோட்டையாக விளங்கிய உடுப்பிட்டி தொகுதியில் தமிழ்க் காங்கிரஸின் எம்.சிதம்பரமும் தோல்விகண்ட நிலையில், அவரும் அமிர்தலிங்கமும் 1970 – 1977 காலகட்டத்தில் தமிழரின் ஐக்கியத்துக்காக கடுமையாக பாடுபட்டனர். 1972ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய கூட்டணி அமைக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டில் அது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாக மாறியது. தமிழர்களின் அரசியல் கோரிக்கை சமஷ்டியிலிருந்து பிரிவினைக்கு மாறியது. பிரிவினைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தமைக்காக அமிர்தலிங்கமும் வேறு மூன்று தமிழ்த் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர். ஜூரர்கள் இன்றி மூன்று நீதிபதிகளின் அமர்வில் ட்ரயல் அட்பார் விசாரணைகளின் கீழ் அந்த நால்வருக்கு எதிராக குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அமிர்தலிங்கம் அதில் முதலாவது பிரதிவாதி. அந்த விசாரணை அரசியல் மற்றும் சட்டத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. ஆறு இராணி வழக்கறிஞர்கள் (கிவ்.சி); உட்பட 67 வழக்கறிஞர்கள் அமிர்தலிங்கத்துக்காக ஆஜரான அதேவேளை, அரசின் சார்பில் சட்டமா அதிபர் சிவா பசுபதி வழக்கை நடத்தினார். புகழ்பெற்ற வழக்கறிஞர் ஜி.ஜி.பொன்னம்பலம் எந்த சட்ட ஏற்பாடுகளின் கீழ் அமிர்தலிங்கம் குற்றம் சாட்டப்பட்டாரோ அந்த ஏற்பாடுகள் அரசியலமைப்பை மீறுவதாக இருந்தன என்று வாதாடி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார். இன்னொரு தலைசிறந்த வழக்கறிஞரான முருகேசன் திருச்செல்வம் தமிழர்களின் இறையாண்மையையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தும் அறிவாழம் மிக்க வாதங்களை முன்வைப்பதற்காக அந்த ட்ரயல் அட்பார் விசாரணையை பயன்படுத்தினார்.

முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக சுயாதிபத்தியம் கொண்ட மதசார்பற்ற தமிழீழ அரசொன்றை அஹிம்சை வழியில் அமைப்பதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கேட்டு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. வடக்கில் மகத்தான வெற்றி பெற்ற கூட்டணி கிழக்கில் அதைவிட சற்று குறைவான ஆசனங்களை கைப்பற்றியது. தமிழர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட 19 தொகுதிகளில் 18 தொகுதிகளை அது வென்றபோதிலும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட எந்தவொரு தொகுதியிலும் வெற்றிப்பெற தவறியது. செல்வநாயகம் தேர்தலுக்கு முன்னரே காலமாகிவிட்டதால் தனது சொந்த வட்டுக்கோட்டை தொகுதிக்கு பதிலாக அரசியல் ஆசானின் கோட்டையாக விளங்கிய காங்கேசன் துறை தொகுதியில் அமிர்தலிங்கம் போட்டியிட்டார். அந்த தொகுதியில் 31ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 26ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியை அமிர்தலிங்கம் பெற்றார்.

அந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை படுமோசமாக தோற்கடித்த ஐக்கிய தேசியக் கட்சி 168 பாராளுமன்ற ஆசனங்களில் 141ஆசனங்களை கைப்பற்றியது. சுதந்திரக் கட்சிக்கு வெறுமனே 8ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. அதனால், பாராளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக 18ஆசனங்களுடன் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி விளங்கியதால் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் வந்தார்.

இது ஒரு தனித்துவமான இணையற்ற தோற்றப்பாடாக இருந்தது. ஏனென்றால், வழமையான சூழ்நிலைகளில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வருபவர் மாற்று அரசாங்கத்தின் தலைவராகவே கருதப்படுவார். ஆனால், இங்கு அமிர்தலிங்கத்தின் விடயத்தை பொறுத்தவரை நாட்டு பிரிவினையை விரும்புகின்ற கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்தார். என்றாலும், அமிர்தலிங்கம் தமிழர்களின் இலட்சியத்தை மேம்படுத்தி சர்வதேச மயப்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தினார்.

இது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து விவாதித்தார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு எதிரான படுமோசமான இனவெறியரான சிறில் மத்தியூ கன்னியமான பண்புகள் என்று சொல்லக்கூடியவை சகலவற்றையும் மீறி அமிர்தலிங்கத்துக்கு எதிராக தனிப்பட்ட முறையில் கடுமையான பேச்சொன்றை நிகழ்த்தியதன் மூலம் பாராளுமன்றத்தின் நடத்தைகளில் என்றுமே இல்லாத கீழ்நிலைக்கு சென்றார்.

ஆனால், அமிர் அந்த பாராளுமன்றத்தில் தனது முத்திரையை பதிக்க தவறவில்லை. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பை விமர்சித்து அமிர்தலிங்கம் ஆற்றிய உரையை கேட்டுக்கொண்டிருந்த அன்றைய சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், அத்தகைய தலைசிறந்த உரையை கேட்பதற்கு தான் கொடுத்து வைத்தவன் என்று கூறி ஒரு குறிப்பை அவருக்கு அனுப்பினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமைகளை பாராளுமன்றம் பறித்த தினத்தில் அவரை சூழ்ந்து ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் வசைமாறி பொழிந்து துன்புறுத்த முயன்று கொண்டிருந்தவேளையில், சபையை விட்டு துணிச்சலுடன் ஒய்யாரமாக அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமுமே அம்மையாரை அழைத்துச் சென்றனர்.

இந்தியாவின் நண்பன்

பெரும்பாலான இலங்கை மிதவாத தமிழ்த் தலைவர்களை போன்று அமிர்தலிங்கமும் இந்தியாவின் ஒரு உறுதியான நண்பன். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அவர்களில் பலர் இந்தியாவின் உதவிக்காக அவா கொண்டிருந்தனர். 1972ஆம் ஆண்டில் 70 வயதுகளில் இருந்த செல்வநாயகத்துடன் அமிர்தலிங்கமும் துணைவியார் மங்கையர்க்கரசியும் இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அந்த விஜயம் அனுதாபத்தை பெற்ற போதிலும் தமிழர் இலட்சியத்துக்காக இந்திய தலைவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. தேசிய மட்டத்திலும் தமிழ்நாடு மாநில மட்டத்திலும் இந்திய தலைவர்களுடன் அமிர்தலிங்கம் நல்லுறவுகளை பேணி வந்தார். இது தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில் தனது மனதிலுள்ளதை வெளிப்படையாக அமிர்தலிங்கம் கூறுவதை தடுக்கவில்லை. 1978ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய், தமிழர் பிரச்சினை குறித்து அலட்சியம் காட்டினார். அமிர்தலிங்கம் இதனால் சோர்ந்துபோகவில்லை. உணர்வுபூர்வமாக ஆனால் அதேவேளை, இசைவிணக்கமான தொனியில் பதிலளித்தார். அதையடுத்து தேசாயின் நிலைப்பாடு கனிசமான அளவுக்கு தளர்ச்சி கண்டது.

amirthalingam_indira_gandhi.jpg

இந்திய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருயுடன்

1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பழித்துரைத்து பேசினார். அமிர்தலிங்கம் மரியாதையை பேணிய வண்ணமே அவருடன் முரண்பட்டு எம்.ஜி.ஆரின் பெரும்பாலான வாதங்களை மறுதலித்தார். புவிசார் அரசியல் யதார்த்த நிலைகளையும் புரிந்துகொண்டவரான அமிர்தலிங்கம், திருகோணமலை இந்தியாவுக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கக்கூடிய முறையில் வேறு சக்திகளிடம் விழுவதை தமிழர்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று பல தடவைகள் கூறினார்.

தமிழர்களுக்கு எதிராக நாடு பூராகவும் கட்டவிழ்த்துவிடப்பட்ட 1983 ஜூலை இனவன்முறைகளையடுத்து பிரிவினை கோருவதை சட்டவிரோதமானதாக்கும் அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட காரணத்தினால் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க வேண்டியேற்பட்டது. அதன் விளைவாக கூட்டணியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை துறந்தனர். ஜே.ஆர்.ஜெயவர்தனா அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் நேரடியாக பேசுவதற்கு மறுத்ததால் இணக்க தீர்வு ஒன்றை காண்பதற்கு மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா அதன் நல்லெண்ணத்தை பயன்படுத்த முன்வந்தது. அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் உட்பட பல கூட்டணி தலைவர்கள் இந்தியாவிலேயே வசித்து வந்தார்கள். அரசியல் விவரத்துடனான அணுகுமுறைக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து அமிர்தலிங்கம் பெரும் பாராட்டுகளை பெற்றார்.

ஆகஸ்ட் 15ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின வரவேற்பு உபசாரத்துக்காக இந்திரா காந்தியினால் அழைக்கப்பட்டதை பற்றி நினைவுபடுத்தி சொல்வதில் அமிர்தலிங்கம் எப்போதும் பெரும் விருப்பு கொண்டவர். அந்த வரவேற்பு உபசாரத்துக்கு 20நிமிடங்கள் தாமதித்து வருமாறு அமிர்தலிங்கத்திடம் இந்திரா காந்தி வேண்டிக் கொண்டார். வழமையாக எந்தவொரு வைபவத்துக்கும் நேரம் தவறாமல் செல்கின்ற வழக்கத்தை கொண்ட அமிர்தலிங்கம் இந்திரா காந்தியின் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். அமிர் பிரவேசித்தபோது அந்த மண்டபத்துக்கு குறுக்காக நடந்துசென்று இந்திரா காந்தி அவரை வரவேற்றது அங்கிருந்த எல்லோரையும் கவரும் விதத்தில் பெரும் காட்சியாக அமைந்தது. அதற்கு பிறகு அவர் அங்கு வருகைத்தந்திருந்த முக்கியமான விருந்தினர்களுக்கு அமிர்தலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்தார். தமிழர்களின் பிரச்சினை மீது கூடுதல்பட்ச கவனத்தை திருப்பக்கூடியதாகவே அமிர்தலிங்கத்தின் வருகையை இந்திரா காந்தி திட்டமிட்டு அவ்வாறு ஏற்பாடு செய்திருந்தார். அந்த சம்பவத்தை அமிருக்கு இந்திரா காந்தியே பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருக்கிறார்.

unnamed-1.jpg

மக்கள திலகம் எம்.ஜி.ஆர் உடன்

1983 – 1989 வரையான வருடங்களில் சென்னை சேம்பாக்கம் அரச விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து அமிர்தலிங்கம், தமிழ்நாடு அரசு விருந்தோம்பலில் வசித்து வந்தார். அந்தக் காலகட்டத்தை அவர் வெவ்வேறு அபிப்பிராயங்களையும் கொள்கைகளையும் பிரதிபலிக்கின்ற அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், கருத்துருவாக்கிகளுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தினார். அமிர்தலிங்கத்துடனான ஊடாட்டங்கள் காரணமாக தமிழ்த்தேசியவாதம் குறித்து தனது அபிப்பிராயம் மாறியதாக இந்தியாவின் முன்னணி பத்திரிகை ஒன்றில் ஆசிரியர் என்னிடம் கூறினார். அந்த ஆசிரியர் தமிழ்நாட்டில் திராவிட கோட்பாடுகளை பேசுகின்ற அரசியல்வாதிகளினால் பெரு ஏமாற்றமும் விரக்தியும் அடைந்து தமிழ்த் தேசியவாதத்துக்காக குரல்கொடுப்பவர்களைப் பற்றி எதிர்மறையான விம்பம் ஒன்றையே தனது மனதில் வளர்த்துக் கொண்டதாக அவர் கூறினார். ‘அமிர்தலிங்கத்துடனான சந்திப்புக்கு மாத்திரமே தமிழ்த் தேசியவாதிகள் நியாயபூர்வமானவர்களாகவும் நல்லறிவும் நேர்மையும் கொண்டவர்களாகவும் இருக்க முடியும் என்று உணர்ந்துகொண்டேன்’ என்றும் அவர் சொன்னார்.

அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரும் இலங்கை இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இந்திய முயற்சிகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினார்கள். அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு கிடைக்கக்கூடிய எந்த சந்தர்ப்பத்தையும் இலங்கையிலுள்ள தமிழ்த் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கவில்லை என்பதால் இது ஒன்றும் புதிதல்ல. அரசியல் கோரிக்கைகளும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் உச்சபட்ச தீர்வை வேண்டி நின்றவையாக இருந்தபோதிலும் தங்களது அடிப்படை கோரிக்கைகளுக்கு குறைவானதாகவும் அமையக்கூடிய விட்டுக்கொடுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு ஜனநாயக தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கீழான பிராந்திய சபைகளும் டட்லி சேனாநாயக்காவின் கீழான மாவட்ட சபைகளும் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் கீழான மாவட்ட அபிவிருத்தி சபைகளும் இதற்கு பெறுமதியான உதாரணங்களாக இருக்கின்றன.

அத்தகைய இணக்கப்பாடுகளையும் ஏற்பாடுகளையும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் மதித்து நடக்க தவறி வந்திருக்கின்றன என்பது கடந்த காலத்தில் (இன்றும் கூட) தமிழர்களின் முக்கியமான கவலையாக இருந்து வந்தது. இணக்க தீர்வொன்றுக்கு மத்தியஸ்தம் செய்து உத்தரவாதம் அளிக்கவும் இந்தியா தயாராக இருந்த நிலையில், அமிர்தலிங்கம் போன்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்கள் மகிழ்ச்சியடைந்து சகதியிலிருந்து வெளியே வருவதற்கு வழியொன்றை கண்டார்கள். அதனால் அமிர்தலிங்கத்தின் கீழ் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி இந்திரா காந்தியுடனும் ராஜீவ் காந்தியுடனும் ஜி.பார்த்தசாரதி, ரொமேஸ் பண்டாரி, பி.சிதம்பரம், கே.நட்வாட்சிங், ஜே.என். தீக் ஷித் போன்ற பல்வேறு பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றது. அவர்கள் சர்வகட்சி மாநாடுகளிலும் அரசாங்கத்துடனான நேரடி பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்வதற்கு இலங்கைக்கு பல தடவைகள் விஜயங்களையும் மேற்கொண்டார்கள். 1985இல் திம்பு பேச்சுவார்த்தைகளின்போது ஐந்து ஏனைய தமிழ் தீவிரவாதக் குழுக்களுடன் பொதுவான நிலைப்பாட்டையும் கூட்டணி கடைபிடித்தது. 1987இல் இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையை சிலவகை ஐயப்பாடுகளுடன் என்றாலும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி வரவேற்றது.

unnamed-2.jpg

தந்தை செல்வா, கலைஞர் மு.கருணாநிதி உடன்

எவ்வாறெனினும், உடன்படிக்கையை வெற்றிப்பெறச் செய்வதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைக்க தீர்மானித்தது. கூட்டணி 1989 பெப்ரவரி பொதுத் தேர்தலில் ஏனைய தீவிரவாதக் குழுக்களுடன் சேர்ந்து அதன் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. அமிர்தலிங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தோல்வி கண்டார். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மொத்தமாக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலின் கீழ் ஒரு ஆசனத்தை மேலதிகமாக பெற்றது. அந்த ஆசனத்துக்கு நியமிக்கப்பட்ட அமிர்தலிங்கம் ஆறு வருடங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தில் மீண்டும் பிரவேசித்தார்.

படுகொலை

ஆனால், அவரது அந்த பாராளுமன்ற வாழ்க்கை குறுகியதாகவே இருந்தது. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினர் யோகேஸ்வரனை கொழும்பு புல்லஸ் ஒழுங்கையிலுள்ள அவர்களது வாசஸ்தலத்தில் சந்திக்க விசு, அலோசியஸ், அன்பு என்ற மூன்று விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் வந்தார்கள். தமிழர்களின் ஐக்கியம் குறித்து ஆராய்வதே நோக்கம் என்று அவர்கள் காட்டிக்கொண்டார்கள். யோகேஸ்வரனின் அறிவுறுத்தலின்பேரில் அந்த மூவரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் சோதனைக்குட்படுத்தப்படவில்லை. தங்களை சோதனைக்கு உட்படுத்துவது அவமதிப்பாக இருப்பதாக அவர்கள் கூறியதையடுத்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு யோகேஸ்வரன் அத்தகைய உத்தரவை விடுத்திருந்தார். தேநீரும் பிஸ்கட்டும் அவர்களுக்கு பரிமாறப்பட்டன. அதற்கு பிறகு அவர்கள் அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் நேருக்கு நேரே பிஸ்டலால் சுட்டார்கள். தோலில் ஒரு காயத்துடன் சிவசிதம்பரம் உயிர் தப்பினார். கொலையாளிகள் மூவரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அத்துடன் தனது மக்களின் மேம்பாட்டுக்காக ஜனநாயக வழிமுறைகளின் மூலமாக இடையறாது போராடிய ஒரு மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அமிர்தலிங்கத்தின் ஆற்றலையும் துணிச்சலையும் வெறுத்த சிங்கள இன வெறியர்களால் அவர் கொல்லப்படவில்லை. ஆனால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைகொண்ட இயக்கத்தை சேர்ந்த தனது சொந்த இனத்தவர்களாலேயே அவருக்கு மரணம் நேர்ந்தது பெரும் கவலைக்குரியதாகும்.

அமிர்தலிங்கத்தின் மரணத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் பற்றி கேள்விப்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா அந்த அவலத்தை மணிச்சுருக்கமாக கூறினார். அதாவது அவரின் கொலை பற்றி அவருக்கு, முன்னாள் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அறிவித்தபோது ‘கடவுளே… சிங்களவர் அமிர்தலிங்கத்தை கொல்லவில்லை’ என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

அமிர்தலிங்கம் மறைந்து மூன்று தசாப்தத்துக்கு அதிகமான காலம் கடந்து விட்டது. அவரது ஆளுமையும் பலமும் அவர் வகித்த ஆக்கப்பூர்வமான பாத்திரத்தின் முக்கியத்துவமும் அவரை தெரிந்து கொள்வதற்கும் நெருங்கி பழகுவதற்கும் பெரும் பேறை பெற்றவர்களின் மனதில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். அவரின் கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருந்த வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை. அத்தகையது அவரது ஆளுமையும் உயர்த்தியும். தனது மக்களை நேசித்ததுடன் அவர்களுக்கு சேவை செய்வதற்காக பலவகையான இடர்பாடுகளுக்கு முகம்கொடுத்த ‘தவறை’ மாத்திரமே செய்த அந்த மனிதனின் நினைவாக நான் எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன்.

ஆங்கில மூலம் : டெய்லி FT தமிழ் மொழி பெயர்ப்பு – வீ. தனபாலசிங்கம் நன்றி – வீரகேசரி

http://dbsjeyaraj.com/dbsj/archives/70201?fbclid=IwAR2O3ebrEa40IMM_Vps50hYn8LUzHbucvf6nboYrl5tUZHbzmq-peZHfY_M

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

😂😂😂

தங்களுக்காக மற்றவர்களை பலிகொடுப்பதற்குரிய மனனிலையைக் கொண்டிருப்பதற்கு உண்மையிலேயே ஆற்றல் தேவைதான் 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

அத்துடன் தனது மக்களின் மேம்பாட்டுக்காக ஜனநாயக வழிமுறைகளின் மூலமாக இடையறாது போராடிய ஒரு மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

நல்லத்தான் ஜெயராஜ் ஜிங்சாக் அடிக்கிறார் . 

14 hours ago, பெருமாள் said:

1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பழித்துரைத்து பேசினார்.

நாங்க கேள்விப்பட்ட கதையே வேறு  இங்கு தலைகீழா மாற்றி எழுதுகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு அமிர்தலிங்கம் அவர்களை விசு அவர்கள் கொல்வதற்கான திட்டத்துடன் செல்லவில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்குக்கியதைப்போல் அவ்வேளையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை அவ்வேளையில் தொடர்ந்து நடாத்தப்பட்டது விசு அமிர்தலிங்கம் அவர்களுடன் நேரடியாகப் பரீட்சையமானவராவர். சம்பவம் நடந்தவேளை விசு அவர்கள் மேலே அமிர்தருடன் பேசிக்கொண்டு நின்றார் ஆனால் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் கீழே நின்ற பாதுகாப்புப் பிரிவினர்க்கும் சிறிய தர்க்கம் அது அவர்களது ஆயுதங்களைச் சோதனைபோடுவதுபற்றியதாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தோற்றுவிக்கப்பட்ட ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகள் முகவும் இறுக்கமாகவே நடைபெற்றது அவ்வேளையில் மன்னாரில் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் வேறுசிலரையும் புலிகளது கரும்புலி அணிக்கு இணையான ஒரு குழு கிட்டத்தட்ட சிறை பிடித்ததுபோலவே வைத்திருந்து பேச்சுவார்தைகளில் ஈடுபட்டது. அதன் பின்னரே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவாகியது.

அதேபோன்ற ஒருசூழலே அமிர் அவர்களது கொலைக்கு முன்னமும் இருந்தது ஒத்துவராதுவிட்டால் போட்டுத்தள்ளுவது என்பதே தீர்மானம் எனினும் கொலைசெய்யப்பட்ட அன்றையநாளில் அப்படியான எந்தத்தீர்மானமும் இல்லை. 

அமிர் அவர்கள் புலிகளது இந்தத் திட்டத்துக்கு அனேகமாக இணங்கவில்லை காரணம் அவர் இந்திய நடுவண் அரசுடன் மிகவும் ஒட்டுறவாக இருந்தார்.

அது தற்போதைய கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகளைப்போலல்லாது மிகவும் இறுக்கமானதாக இருந்தது. கூறப்போனால் அமிர் அவர்கள் அவ்வேளையில் முழுநம்பிக்கையுடன் கூடிய சரணாகதியாகவே கருதலாம் ஆனால் அவ்வேளையில் அவரது முடிவு அவர்கள் மட்டில் சரியானதாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Elugnajiru said:

திரு அமிர்தலிங்கம் அவர்களை விசு அவர்கள் கொல்வதற்கான திட்டத்துடன் செல்லவில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்குக்கியதைப்போல் அவ்வேளையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை அவ்வேளையில் தொடர்ந்து நடாத்தப்பட்டது விசு அமிர்தலிங்கம் அவர்களுடன் நேரடியாகப் பரீட்சையமானவராவர். சம்பவம் நடந்தவேளை விசு அவர்கள் மேலே அமிர்தருடன் பேசிக்கொண்டு நின்றார் ஆனால் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் கீழே நின்ற பாதுகாப்புப் பிரிவினர்க்கும் சிறிய தர்க்கம் அது அவர்களது ஆயுதங்களைச் சோதனைபோடுவதுபற்றியதாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தோற்றுவிக்கப்பட்ட ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகள் முகவும் இறுக்கமாகவே நடைபெற்றது அவ்வேளையில் மன்னாரில் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் வேறுசிலரையும் புலிகளது கரும்புலி அணிக்கு இணையான ஒரு குழு கிட்டத்தட்ட சிறை பிடித்ததுபோலவே வைத்திருந்து பேச்சுவார்தைகளில் ஈடுபட்டது. அதன் பின்னரே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவாகியது.

அதேபோன்ற ஒருசூழலே அமிர் அவர்களது கொலைக்கு முன்னமும் இருந்தது ஒத்துவராதுவிட்டால் போட்டுத்தள்ளுவது என்பதே தீர்மானம் எனினும் கொலைசெய்யப்பட்ட அன்றையநாளில் அப்படியான எந்தத்தீர்மானமும் இல்லை. 

அமிர் அவர்கள் புலிகளது இந்தத் திட்டத்துக்கு அனேகமாக இணங்கவில்லை காரணம் அவர் இந்திய நடுவண் அரசுடன் மிகவும் ஒட்டுறவாக இருந்தார்.

அது தற்போதைய கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகளைப்போலல்லாது மிகவும் இறுக்கமானதாக இருந்தது. கூறப்போனால் அமிர் அவர்கள் அவ்வேளையில் முழுநம்பிக்கையுடன் கூடிய சரணாகதியாகவே கருதலாம் ஆனால் அவ்வேளையில் அவரது முடிவு அவர்கள் மட்டில் சரியானதாக இருந்தது.

இது முன்பு நடந்திருக்கலாம் 
சுட்ட அன்று விசு அவர்கள் சுடுவதுக்கு  என்றுதான் போனார் 
வழமையாக காவலாளிகள் இவரை பரிசோத்தித்து இவரிடம் இருக்கும் பிஸ்ட்டலை வாங்கிவிட்டுதான் 
உள்ளே அனுமதிப்பார்கள். அன்று இவர் இரண்டு பிஸ்ட்டல் கொண்டு  சென்றார் வளமை போல ஒன்றை 
கொடுத்துவிட்டு மற்றதை தன்னுடன் கொண்டு சென்றார். பேசிக்கொண்டு இருக்கும்போது சுட்டுவிட்டார். 

ஆனால் அப்போதைய கொழும்பு நிலையில் ஏன் இப்படி ஒரு 
முடிவை எடுத்தார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை 
அமிர்தலிங்கத்தை சுடுவது என்று எண்ணி இருப்பின் நானே ரோட்டில் வைத்து 
சுட்டிருக்க முடியும் அது மட்டுமல்ல தப்பி இருக்கவும் முடியும். 

விசுபோன்ற ஒரு முக்கிய போராளியை இழந்து அமிர்தலிங்கத்தை 
சுட வேண்டிய தேவை அப்போதைய சூழலில் கொழும்பில் இருக்கவில்லை.
இவர்களுக்கு பிராக்கும் பார்க்கும் நான்கு ஆயுதம் தாங்கிய போலீசு தவிர 
வேறு பாதுகாப்பு ஒன்றும் இருக்கவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் போட்டுத்தள்ளினார்கள் என்பது இங்கு யாழில் பல முறை எழுதி முடிஞ்சுது இனி திரும்ப திரும்ப அதை கிளறிக்கொண்டு இருக்க தேவை இல்லை. 
இவர்கள் களையாக  மட்டுமே இனி இருப்பார்கள் என்பது திம்பு பேச்சுவார்த்தை 
காலத்திலேயே புலிகளுக்கும் மற்றைய போராளி இயக்கங்களுக்கும்  புரிந்து இருக்க வேண்டும் அப்போதே போட்டிருந்தால் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் வேறு பாதையில் பயணித்து இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Elugnajiru said:

திரு அமிர்தலிங்கம் அவர்களை விசு அவர்கள் கொல்வதற்கான திட்டத்துடன் செல்லவில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்குக்கியதைப்போல் அவ்வேளையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை அவ்வேளையில் தொடர்ந்து நடாத்தப்பட்டது விசு அமிர்தலிங்கம் அவர்களுடன் நேரடியாகப் பரீட்சையமானவராவர். சம்பவம் நடந்தவேளை விசு அவர்கள் மேலே அமிர்தருடன் பேசிக்கொண்டு நின்றார் ஆனால் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் கீழே நின்ற பாதுகாப்புப் பிரிவினர்க்கும் சிறிய தர்க்கம் அது அவர்களது ஆயுதங்களைச் சோதனைபோடுவதுபற்றியதாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தோற்றுவிக்கப்பட்ட ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகள் முகவும் இறுக்கமாகவே நடைபெற்றது அவ்வேளையில் மன்னாரில் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் வேறுசிலரையும் புலிகளது கரும்புலி அணிக்கு இணையான ஒரு குழு கிட்டத்தட்ட சிறை பிடித்ததுபோலவே வைத்திருந்து பேச்சுவார்தைகளில் ஈடுபட்டது. அதன் பின்னரே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவாகியது.

அதேபோன்ற ஒருசூழலே அமிர் அவர்களது கொலைக்கு முன்னமும் இருந்தது ஒத்துவராதுவிட்டால் போட்டுத்தள்ளுவது என்பதே தீர்மானம் எனினும் கொலைசெய்யப்பட்ட அன்றையநாளில் அப்படியான எந்தத்தீர்மானமும் இல்லை. 

அமிர் அவர்கள் புலிகளது இந்தத் திட்டத்துக்கு அனேகமாக இணங்கவில்லை காரணம் அவர் இந்திய நடுவண் அரசுடன் மிகவும் ஒட்டுறவாக இருந்தார்.

அது தற்போதைய கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகளைப்போலல்லாது மிகவும் இறுக்கமானதாக இருந்தது. கூறப்போனால் அமிர் அவர்கள் அவ்வேளையில் முழுநம்பிக்கையுடன் கூடிய சரணாகதியாகவே கருதலாம் ஆனால் அவ்வேளையில் அவரது முடிவு அவர்கள் மட்டில் சரியானதாக இருந்தது.

அப்படியா? எனக்கும் சந்தேகம் தீர்ந்தது! புலிகள் மாற்றுக் கருத்துள்ள ஆட்களை போட்டதாக வரலாற்றில் வேறு பதிவுகளும் இல்லை! எனவே நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

ஏன் போட்டுத்தள்ளினார்கள் என்பது இங்கு யாழில் பல முறை எழுதி முடிஞ்சுது இனி திரும்ப திரும்ப அதை கிளறிக்கொண்டு இருக்க தேவை இல்லை. 
இவர்கள் களையாக  மட்டுமே இனி இருப்பார்கள் என்பது திம்பு பேச்சுவார்த்தை 
காலத்திலேயே புலிகளுக்கும் மற்றைய போராளி இயக்கங்களுக்கும்  புரிந்து இருக்க வேண்டும் அப்போதே போட்டிருந்தால் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் வேறு பாதையில் பயணித்து இருக்கலாம் 

 

அதிக  வாக்குகளால்  வென்ற காங்கேசன்துறையிலிருந்து   தொகுதி  மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டு

விரட்டப்பட்டபோதும்

மீண்டும்  பதவி ஆசையும் இந்திய தூண்டுதலையும் ஏந்தி

மட்டக்கிளப்பில் விகிதாரசார பிரதிநிதித்துவம் பெற்று

பாராளுமன்றம் சென்றபோதே நான் ஒரு சாதாரண தமிழ் மகன்

நினைத்தேன் இவர் கொல்லப்படணும்  என்று.

புலிகள்  அதைத்தான் செய்தார்கள்

அம்பை  நொந்தென்ன?????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

டி.பி.எஸ்.ஜெயராஜ்

(This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020)

அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது.

 

1970' களில் இருந்து தெரியும். எனது மாமா யாழ் மேயர் சின்னத்தம்பி நாகராஜாவின் நல்ல நண்பர். மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன். 1980' களில்  இலங்கையில்  இருந்து தமிழ்நாடு சென்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் மருத்துவத்தில் இருந்து என்ன உயர் கல்வி படிப்பதற்கு இடம் எடுத்துக்கொடுக்க திரு. அமிர்தலிங்கத்திலிருந்து நிறைய தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வேளையில் என்னை அப்பா கூட்டிக்கொண்டு போனதால் அப்பாவே   கல்லூரி அனுமதி எடுத்து என்னை விட்டுட்டு திரும்பி இலங்கை போய்விட்டார். ஆனால் நிறய  வட  கிழக்கு தமிழ் மாணவ மாணவியர் தனியாக இவர்களை மட்டும் நம்பி வந்து OFFER (Organisation for Eelam refugee rehabilitation) உதவியுடன் மேற்படிப்பு அனுமதி தேடிக்கொண்டு இருந்தார்கள். எனது அவதானிப்பிலும் பலரின் அனுபவத்திலும் நாங்கள் பார்த்தது என்னவென்றால் தமது பிள்ளைகள், உறவினர் நண்பர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவ மற்றும் அதி உயர் இடங்களை எடுத்துக்கொண்டு மற்றைய அவர்களின் பிள்ளைகளை காட்டிலும் மிகவும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு அவை மறுக்கப்பட்டன. அத்துடன் அவர்கள் எஊலோரும் தமிழ்நாட்டில் பல காலமாக ராஜ வாழ்க்கை வாழும்போது ஈழத்தில் இருந்து சென்ற மக்களுக்கு மிகவும் குறைவாகவே உதவி செய்ததாக பெரிதாக குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு அவர்கள் தமது மக்களுக்குத்தானே உதவுகிறார்கள் என்று கொடுத்த சலுகைகள் எல்லாம் அவரவரின் குடும்பம் , நண்பர்களுக்கு போனதை நானும் கவனித்தேன். இதைவிட கேவலமான சில விடயங்கள் வேறு சில தலைவர்களால் நடந்தது. நாம் எமது விடுதியில் இருந்து மொட்டை கடதாசி எல்லாம் போட்டு அவற்றை அம்பலப்படுத்தினோம். இங்கு சொல்லமுடியாத நிலை. 

1960 முடிவுகளில் இருந்து இவர்கள் கொழும்பில் என்ன  செய்தார்கள் பிறகு யாழில் வந்து மேடையேறி என்ன சொன்னார்கள் என்பதுபற்றியெல்லாம் அநேகமானவர்களுக்கு தெரிந்திருக்கும் 

Link to comment
Share on other sites

அமிர்தலிங்கம் ஆற்றல் மிக்கவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1980 களின்ஆ சரவசேச ஊடகங்னாகளுக்கு அவர்ல் அளித்த பேட்டிகள் சிறப்பானவை. 1983 கலவரங்களின் போது பி. பி. சி உலகசேவையில் அவர் அளித்த பேட்டிகள் உலகின் கவனத்தை கவர்ந்தது.

ஆனால்  அவரின் உள்ளூர் அரசியல் சிறப்பானதாக இல்லை. கட்சி அரசியலில் அவர் மீது பல நடைமுறை குற்றச்சாட்டுக்கள் உண்டு. 

அவரை சுட்டு கொன்றது புலிகள் இழைத்த மாபெரும்த தவறுகளில் ஒன்று என்பதே எனது பார்வை. அவரை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் தன் மீது தானே சேறு பூசிக்கொண்டது. 

அவரது கொலை அவருக்கோ அவரது குடும்பத்திற்கோ ஏற்படுத்திய இழப்பை விட ஈழப்போராட்டத்திற்கு ஏற்படுத்திய இழப்பு பெரியது என்பதை புலிகளே பின்னாளில் உணர்ந்திருந்தனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

அவரை சுட்டு கொன்றது புலிகள் இழைத்த மாபெரும்த தவறுகளில் ஒன்று என்பதே எனது பார்வை. அவரை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் தன் மீது தானே சேறு பூசிக்கொண்டது. 

புலிகள் உரிமை கோரவில்லை உரிமை கோராத விடயத்தை கதைப்பது பயனற்றது .

Link to comment
Share on other sites

4 hours ago, பெருமாள் said:

புலிகள் உரிமை கோரவில்லை உரிமை கோராத விடயத்தை கதைப்பது பயனற்றது .

ஶ்ரீலங்கா அரசாங்கம் உரிமை கோராத கொலைகளைப் பற்றி கதைப்பதும் பயன்ற்றதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

அமிர்தலிங்கம் ஆற்றல் மிக்கவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1980 களின்ஆ சரவசேச ஊடகங்னாகளுக்கு அவர்ல் அளித்த பேட்டிகள் சிறப்பானவை. 1983 கலவரங்களின் போது பி. பி. சி உலகசேவையில் அவர் அளித்த பேட்டிகள் உலகின் கவனத்தை கவர்ந்தது.

ஆனால்  அவரின் உள்ளூர் அரசியல் சிறப்பானதாக இல்லை. கட்சி அரசியலில் அவர் மீது பல நடைமுறை குற்றச்சாட்டுக்கள் உண்டு. 

அவரை சுட்டு கொன்றது புலிகள் இழைத்த மாபெரும்த தவறுகளில் ஒன்று என்பதே எனது பார்வை. அவரை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் தன் மீது தானே சேறு பூசிக்கொண்டது. 

அவரது கொலை அவருக்கோ அவரது குடும்பத்திற்கோ ஏற்படுத்திய இழப்பை விட ஈழப்போராட்டத்திற்கு ஏற்படுத்திய இழப்பு பெரியது என்பதை புலிகளே பின்னாளில் உணர்ந்திருந்தனர். 

இது நம்பும் படியாக இல்லை ...
இதனால்தான் புலிகள் பின்னாளில் வந்த பேச்சுவார்த்தைகளில் 
ஒரு நேரான பாதையில் செல்ல வழி  வகுத்தது என்று சொல்ல முடியும் 
இவர்கள் இருந்து இருப்பின் இன்னொரு முஸ்லீம் கடசிகள்போல 
எமக்கும் சமஅந்தஸ்து வேண்டும் என்று பேச்சுவார்த்தை மேசையில் வெறும் 
குழப்பம் உண்டுபண்ண அரசு பாவித்து இருக்கும் என்பதே திண்ணம். 

90 களில் இது நடந்தது 
புலிகள் செயல்பாட்டு அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்தபோது 
ஆனந்தசங்கரி அவர்கள் தாமும் (தமிழர் விடுதலை கூட்டணி) தமிழ் பிரதேசத்தில் வந்து அலுவலகம் திறக்க 
அனுமதி வேண்டும் என்று கேட்டார் எனபதை விட ... புலிகளின் கொழும்பு 
அலுவலகத்துக்கு ஆப்பு வைக்க முனைந்தார் என்பதுதான் உண்மை 
புலிகள் தாராளமாக வாருங்கள் என்று கூறினார்கள் ... யாரும் வரவில்லை. 

திம்புவில் இவர்களும் புளட்டுமே குழப்பி அடித்தது 
மறைமுகமாக வெடி வீழும் என்று டெலோ எச்சரித்த பின்புதான் 
ஓரளவுக்கு அடக்கி வாசிக்க தொடங்கினார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

அமிர்தலிங்கம் ஆற்றல் மிக்கவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1980 களின்ஆ சரவசேச ஊடகங்னாகளுக்கு அவர்ல் அளித்த பேட்டிகள் சிறப்பானவை. 1983 கலவரங்களின் போது பி. பி. சி உலகசேவையில் அவர் அளித்த பேட்டிகள் உலகின் கவனத்தை கவர்ந்தது.

ஆனால்  அவரின் உள்ளூர் அரசியல் சிறப்பானதாக இல்லை. கட்சி அரசியலில் அவர் மீது பல நடைமுறை குற்றச்சாட்டுக்கள் உண்டு. 

அவரை சுட்டு கொன்றது புலிகள் இழைத்த மாபெரும்த தவறுகளில் ஒன்று என்பதே எனது பார்வை. அவரை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் தன் மீது தானே சேறு பூசிக்கொண்டது. 

அவரது கொலை அவருக்கோ அவரது குடும்பத்திற்கோ ஏற்படுத்திய இழப்பை விட ஈழப்போராட்டத்திற்கு ஏற்படுத்திய இழப்பு பெரியது என்பதை புலிகளே பின்னாளில் உணர்ந்திருந்தனர். 

இதுதான் விடயமே.. 😀

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாயெல்லோ இருக்குது உங்கள் பேச்சு......🤔

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஶ்ரீலங்கா அரசாங்கம் உரிமை கோராத கொலைகளைப் பற்றி கதைப்பதும் பயன்ற்றதா? 

உங்களில் மரியாதை வைத்திருப்பவன் அதை கெடுக்காதிங்க தயவு செய்து .

உங்களிடமிருந்து தரமான கருத்தை எதிர்பார்த்து இருந்தன்  இப்படி குதர்க்கமாய் எழுதி ...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

புலிகள் உரிமை கோரவில்லை உரிமை கோராத விடயத்தை கதைப்பது பயனற்றது .

முடியல்ல பெருமாள் நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

முடியல்ல பெருமாள் நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் 

உங்களுக்கு தலதா  மாளிகை தாக்குதல் பற்றி எதுவும் தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு தலதா  மாளிகை தாக்குதல் பற்றி எதுவும் தெரியுமா ?

ஏன் கேட்க்கிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஏன் கேட்க்கிறீர்கள்

இல்லை அந்த தாக்குதல் பற்றி உங்கள் ஞாபகத்தில்  இருப்பதை இங்கு சொல்லுங்கள் மிகுதியை நான் சொல்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

இல்லை அந்த தாக்குதல் பற்றி உங்கள் ஞாபகத்தில்  இருப்பதை இங்கு சொல்லுங்கள் மிகுதியை நான் சொல்கிறேன் .

எனக்கு சரியாய் நினைவில் இல்லை ...நான் நினைக்கிறேன் அந்த நேரம் வன்னியில் கடுமையான சண்டை நடந்து கொண்டு இருந்தது ...புலிகளுக்கு இழப்பு அதிகம் ...அதை திசை திருப்ப நடந்த தாக்குதல்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

எனக்கு சரியாய் நினைவில் இல்லை ...நான் நினைக்கிறேன் அந்த நேரம் வன்னியில் கடுமையான சண்டை நடந்து கொண்டு இருந்தது ...புலிகளுக்கு இழப்பு அதிகம் ...அதை திசை திருப்ப நடந்த தாக்குதல்? 

திசை திருப்ப சிங்கள அப்பாவி பொதுமக்கள் அருகில் இருக்க அதிக ரிஸ்க் உடைய தலதா  மாளிகையை எந்த அறிவாளியாவது தெரிவு செய்வானா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

திசை திருப்ப சிங்கள அப்பாவி பொதுமக்கள் அருகில் இருக்க அதிக ரிஸ்க் உடைய தலதா  மாளிகையை எந்த அறிவாளியாவது தெரிவு செய்வானா ?

இந்த தாக்குதலை புலிகள் செய்து இருக்க மாட்டார்கள் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்டது ...அதையா சொல்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்புக்கு சப்பாணியான பாதுகாவர்களினால் அமிரை  சுட்டவர்களை எப்படி அச்சொட்டா  சுட முடிந்தது அன்று ?

Just now, ரதி said:

இந்த தாக்குதலை புலிகள் செய்து இருக்க மாட்டார்கள் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்டது ...அதையா சொல்கிறீர்கள் 

ஏன் செய்து இருந்து இருக்க மாட்டார்கள் என்று கதைத்தார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

ஒப்புக்கு சப்பாணியான பாதுகாவர்களினால் அமிரை  சுட்டவர்களை எப்படி அச்சொட்டா  சுட முடிந்தது அன்று ?

ஏன் செய்து இருந்து இருக்க மாட்டார்கள் என்று கதைத்தார்கள் ?

அமீரை சுட போனவர்களில் ஒருவர் தப்பி வந்திட்டார் என்று கேள்விப்பட்ட நினைவு பொய்யா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அமீரை சுட போனவர்களில் ஒருவர் தப்பி வந்திட்டார் என்று கேள்விப்பட்ட நினைவு பொய்யா ?

இல்லை அனைவருமே 

பலருக்கு விளங்காத புதிர் இலங்கையரசால் எப்போதுமே தமிழர் தரப்பால்  உறுதியான தமிழர் தலைமையை உருவாகுவதை அவர்கள் விரும்புவதில்லை  உடைப்பதே அவர்களின் குறிக்கோள்  உதாரணம் வெள்ளைக்கொடி நடேசன் ஏன் அந்த கோணத்தில் யாரும் சிந்திக்க மாட்டிர்களாம் ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.