Jump to content

ஈழத்துக்கே உரிய உறைப்பான பொரித்த சம்பல்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிகே நன்றி பகிர்வுக்கு. இடி சாம்பல் மிகவும் எனக்கும் பிடிக்கும். இப்பவெல்லாம் அரைசம்பல்தான்.

இடி சம்பல் கேட்டால் எனக்குதான் இடி🤫

ஊர்பெடியள அருவி வெட்டும் போது இடி சம்பலுடன் தோசைகள் கொண்டுவருவார்கள், வயலில் பூவரச நிழலுக்குள் இருந்து சாப்பிட்ட சுவை இன்னும் மனதைவிட்டு அகழவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரைத்த சம்பலை விட இடித்த சம்பல் தனி ருசி.

Link to comment
Share on other sites

10 hours ago, உடையார் said:

நிகே நன்றி பகிர்வுக்கு. இடி சாம்பல் மிகவும் எனக்கும் பிடிக்கும். இப்பவெல்லாம் அரைசம்பல்தான்.

இடி சம்பல் கேட்டால் எனக்குதான் இடி🤫

ஊர்பெடியள அருவி வெட்டும் போது இடி சம்பலுடன் தோசைகள் கொண்டுவருவார்கள், வயலில் பூவரச நிழலுக்குள் இருந்து சாப்பிட்ட சுவை இன்னும் மனதைவிட்டு அகழவில்லை.

அது என்னவோ உண்மைதான்.தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சம்பலில் கூட மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது...

10 hours ago, ஈழப்பிரியன் said:

அரைத்த சம்பலை விட இடித்த சம்பல் தனி ருசி.

எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் இடித்த சம்பல்தான் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 03:30, nige said:

சுவைப்பிரியன் நீங்கள் சொன்ன சம்பல் போட்டாச்சு 

இது அழகு.சம்பலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இடித்த சம்பல் இல்லையே.

தண்ணி விடாத சட்னி போலை தானே இருக்குது. சட்னிக்கு தான் தாளிதம் செய்வார்கள். வேறு எந்த சம்பலுக்கும் இல்லை.

முக்கியமா, இடித்த சம்பளத்துக்கு, வெங்காயம் பொரிக்காமல், நொறுவலாக இருக்கவேணும்.

மிளகாய், கறிவேல்பிள்ளை மட்டும் சாடையா கொஞ்சம் எண்ணி காட்டி, வாட்டி எடுத்து, (நல்லா பொரியக்கூடாது), சின்னவெங்கயாம், உப்பு சேர்த்து இடித்து, அதனுடன் தேங்காய்பூ சேர்த்து இடித்தால், இடித்த சம்பல். 

சிலர் பழபுளி விடுவர்.... நம்ம வீட்டில் விடுவதில்லை. 

 

Link to comment
Share on other sites

23 hours ago, Nathamuni said:

இது இடித்த சம்பல் இல்லையே.

தண்ணி விடாத சட்னி போலை தானே இருக்குது. சட்னிக்கு தான் தாளிதம் செய்வார்கள். வேறு எந்த சம்பலுக்கும் இல்லை.

முக்கியமா, இடித்த சம்பளத்துக்கு, வெங்காயம் பொரிக்காமல், நொறுவலாக இருக்கவேணும்.

மிளகாய், கறிவேல்பிள்ளை மட்டும் சாடையா கொஞ்சம் எண்ணி காட்டி, வாட்டி எடுத்து, (நல்லா பொரியக்கூடாது), சின்னவெங்கயாம், உப்பு சேர்த்து இடித்து, அதனுடன் தேங்காய்பூ சேர்த்து இடித்தால், இடித்த சம்பல். 

சிலர் பழபுளி விடுவர்.... நம்ம வீட்டில் விடுவதில்லை. 

 

உங்கள் கருத்திற்கு நன்றி  உணவு தயாரிக்கும் முறை இடத்துக்கு இடம் மனிதருக்கு மனிதர் மாறுபடுவதுண்டு. எங்கள் வீட்டில் தாளித்த தோசைக்கு இப்படித்தான் சம்பல் செய்வது வழக்கம். நீங்கள் சொன்ன சம்பலும் நாங்கள செய்வதுண்டு. ஆனால் அது பாண் அல்லது  இடியப்பத்திற்குதான் அப்படி செய்வம். இவைதான் எனக்கு தெரிந்த முறை. ஒவ்வொருவரது கைப்பக்குவமும் வித்தியாசமானது.பிரதேசத்திற்கு பிரதேசம் அது மாறுபட்டதும் கூட. எங்கள் ஊரில்  தோசை என்றால் அதற்கு தாளித்த சம்பல்தான்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

உங்கள் கருத்திற்கு நன்றி  உணவு தயாரிக்கும் முறை இடத்துக்கு இடம் மனிதருக்கு மனிதர் மாறுபடுவதுண்டு. எங்கள் வீட்டில் தாளித்த தோசைக்கு இப்படித்தான் சம்பல் செய்வது வழக்கம். நீங்கள் சொன்ன சம்பலும் நாங்கள செய்வதுண்டு. ஆனால் அது பாண் அல்லது  இடியப்பத்திற்குதான் அப்படி செய்வம். இவைதான் எனக்கு தெரிந்த முறை. ஒவ்வொருவரது கைப்பக்குவமும் வித்தியாசமானது.பிரதேசத்திற்கு பிரதேசம் அது மாறுபட்டதும் கூட. எங்கள் ஊரில்  தோசை என்றால் அதற்கு தாளித்த சம்பல்தான்..

 

தாங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள முடியுமா?

அடுத்தது, 'தாளித்த' என்றாலே, அது சட்னி தானே....

ஆகவே, உங்கள் ஊரில் தோசைக்கு சட்னி செய்து சாப்பிடுகிறார்கள்.... அதில் தவறு இல்லையே....

சம்பல் என்பது பெரும்பாலும், சமைக்காதது.....

சிங்களவர்கள் கூட, தேங்காய்ப்பூவினுள், வெங்காயம், மிளகாய்த்தூளை போட்டு, தேசிக்காய் புளி விட்டு கையினால் பிசைந்து சம்பல் என்கின்றனர். லுணுமிரிஸ், கட்டசம்பல் தேங்காய்ப்பூ இல்லாதவை.

நம்மிடம், 

மிளகாய் பொரித்து இடித்த சம்பல் (மிளகாயினை மட்டும் வாட்டி எடுப்பது.)
மிளகாய் பொரியாமல்  இடித்த சம்பல்,  
அரைத்த செத்தல் மிளகாய் சம்பல்
அரைத்த பச்சை மிளகாய் சம்பல்
சட்னி (அரைத்த செத்தல் மிளகாய் சம்பலை தாளிதலுக்குள் போட்டு ஒரு கொதிக்க வைத்தல்)

என்று பல வகையறாக்கள்.

இதனை தவிர, கருவாட்டு சம்பல், றால் சம்பல், மீன் சம்பல்... பல.....

ஊரில் மாலை வேளைகளில் சூட்சுமம் தெரிந்தவர்களின்  கடை போய் வடை சாப்பிட்டால், இந்த செத்த மிளகாய், பச்சை மிளகாய் கலந்த ஒரு சம்பல் போடுவார்கள்.... 

அப்படியே ஒரு டசின் வடை.... பிளைன் டி உடன் உள்ள போகும்....

Link to comment
Share on other sites

51 minutes ago, Nathamuni said:

தாங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள முடியுமா?

அடுத்தது, 'தாளித்த' என்றாலே, அது சட்னி தானே....

ஆகவே, உங்கள் ஊரில் தோசைக்கு சட்னி செய்து சாப்பிடுகிறார்கள்.... அதில் தவறு இல்லையே....

சம்பல் என்பது பெரும்பாலும், சமைக்காதது.....

சிங்களவர்கள் கூட, தேங்காய்ப்பூவினுள், வெங்காயம், மிளகாய்த்தூளை போட்டு, தேசிக்காய் புளி விட்டு கையினால் பிசைந்து சம்பல் என்கின்றனர். லுணுமிரிஸ், கட்டசம்பல் தேங்காய்ப்பூ இல்லாதவை.

நம்மிடம், 

மிளகாய் பொரித்து இடித்த சம்பல் (மிளகாயினை மட்டும் வாட்டி எடுப்பது.)
மிளகாய் பொரியாமல்  இடித்த சம்பல்,  
அரைத்த செத்தல் மிளகாய் சம்பல்
அரைத்த பச்சை மிளகாய் சம்பல்
சட்னி (அரைத்த செத்தல் மிளகாய் சம்பலை தாளிதலுக்குள் போட்டு ஒரு கொதிக்க வைத்தல்)

என்று பல வகையறாக்கள்.

இதனை தவிர, கருவாட்டு சம்பல், றால் சம்பல், மீன் சம்பல்... பல.....

ஊரில் மாலை வேளைகளில் சூட்சுமம் தெரிந்தவர்களின்  கடை போய் வடை சாப்பிட்டால், இந்த செத்த மிளகாய், பச்சை மிளகாய் கலந்த ஒரு சம்பல் போடுவார்கள்.... 

அப்படியே ஒரு டசின் வடை.... பிளைன் டி உடன் உள்ள போகும்....

பொரித்து இடித்த சம்பலிற்கு தாளித்து யாரும் போடுவதில்லை என்று குறிப்பட்டிருந்தீர்கள்.ஆனால் யாழ்பாணத்தில் அந்த வழக்கம் உண்டு என்பதை இந்த recipe இல் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர வன்னிப் பிரதேசங்களிலும் இதே வழக்கம் உண்டு. என் அம்மா இப்படித்தான் செய்வதுண்டு. சம்பல் பற்றிய  மேலதிக தகவல்களிற்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nige said:

பொரித்து இடித்த சம்பலிற்கு தாளித்து யாரும் போடுவதில்லை என்று குறிப்பட்டிருந்தீர்கள்.ஆனால் யாழ்பாணத்தில் அந்த வழக்கம் உண்டு என்பதை இந்த recipe இல் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர வன்னிப் பிரதேசங்களிலும் இதே வழக்கம் உண்டு. என் அம்மா இப்படித்தான் செய்வதுண்டு. சம்பல் பற்றிய  மேலதிக தகவல்களிற்கு நன்றி. 

நீங்கள் சொன்னதில் தவறேதும் இல்லை.

தாளித்துக் கொட்டியதும், பேர் சட்னி ஆக மாறும். அவ்வளவு தான்.

சில பேர் சம்பல் எண்டே சொல்லுவினம்தான் தான்... அது குடும்ப, ஊர்வழமை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட தொல்லை தாங்க முடியேல்லை. சாப்பாட்டை தந்தால் அனுபவிச்சுச் சாப்பிட வேணும் ஆராயக் கூடாது. எனக்குச் சமைக்க அவ்வளவுக்கு வராது. ஆனால் நிறைய வாசிப்பேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் அ.முத்ததுலிங்கத்தின் "பார்வதி" சிறுகதையில் இருந்து ஒரு பகுதி, படித்துப் பாருங்கள். 

 

save.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, theeya said:

உங்கட தொல்லை தாங்க முடியேல்லை. சாப்பாட்டை தந்தால் அனுபவிச்சுச் சாப்பிட வேணும் ஆராயக் கூடாது. எனக்குச் சமைக்க அவ்வளவுக்கு வராது. ஆனால் நிறைய வாசிப்பேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் அ.முத்ததுலிங்கத்தின் "பார்வதி" சிறுகதையில் இருந்து ஒரு பகுதி, படித்துப் பாருங்கள். 

 

save.jpg

இதென்ன கரைசல் தீயா....

உது சாப்பிட்டு திரி... இப்படி தான் அடிபட்டு சாப்பிடுவம்...

நீங்கள் தனித்திரி தொடங்கி பதிய வேண்டியதை சம்பலுக்க பதியக்கூடாது....😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இதென்ன கரைசல் தீயா....

உது சாப்பிட்டு திரி... இப்படி தான் அடிபட்டு சாப்பிடுவம்...

நீங்கள் தனித்திரி தொடங்கி பதிய வேண்டியதை சம்பலுக்க பதியக்கூடாது....😁😁😁

 

பழக்கதோஷத்தில் பேசி விட்டேன். நீங்கள் தொடருங்கள்!😀

பழக்கதோஷம் - எங்கே போனாலும் இலக்கியம் பற்றியே பேச சொல்லுது.

 

 

save.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, theeya said:

 

2 hours ago, nige said:

பொரித்து இடித்த சம்பலிற்கு தாளித்து யாரும் போடுவதில்லை என்று குறிப்பட்டிருந்தீர்கள்.ஆனால் யாழ்பாணத்தில் அந்த வழக்கம் உண்டு என்பதை இந்த recipe இல் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர வன்னிப் பிரதேசங்களிலும் இதே வழக்கம் உண்டு. என் அம்மா இப்படித்தான் செய்வதுண்டு. சம்பல் பற்றிய  மேலதிக தகவல்களிற்கு நன்றி. 

இதிலை பாருங்கோ...

எங்கட ஊரிலை, சம்பல், தாளிதம் இல்லாமல் இருக்கும்...

ஆனால் தாளிதம் செய்து தோசைக்குள் ஊத்தி கலந்து சுடுவினம்.

எப்படியோ.... தாளிதம் உள்ள போயிடும் பாருங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.