Jump to content

பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு - சச்சிதானந்தன்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு; - சச்சிதானந்தன்.!

1599633050_br%20copy.jpg

பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமரை பாராட்டுவதாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார் .

சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.

இலங்கைச் சைவர்கள் அனைவரும் இதனால் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் எமது நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து போராட்டங்கள் நடத்தி பல்வேறு பிரதேச சபைகள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் தடுத்து முயன்று போராடி வந்தது சிவசேனை அமைப்பு மேலும் இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் நிறைவேற்ற கோரியிருந்தது.

இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் தற்போது முன் மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் கடந்த வெறும் ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்கு சென்றார்.

மலையகச் சைவத் தமிழ் மக்கள் , மேற்கு மாகாண , வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்  , கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் , வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த ராஜபட்சே அவர்களின் பசு வதைத் தடை முயற்சியை பாராட்டுகிறார்கள்.. போற்றுகிறார்கள்.

பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும் , மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்காலத்தில் முயற்சிப்பார் . அதற்கு இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பர் என்றுள்ளது.

http://aruvi.com/article/tam/2020/09/09/16530/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🐂 மாடு🐄  களவு போவதையும், தடுக்க கடினமான சட்டம் கொண்டு வரவேணும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு மனிதவதைக்கும் ஒரு பாராட்டுத் தெரிவித்து விடுங்கள் ஐயா. எதுக்கு யாரை பாராட்டுவது என்று தெரியாமல் தொங்குதுகள். சைவ ஆலயங்களையும், தேங்காய் உடைக்கிற கல்லைக்கூட சொந்தம் கொண்டாடி விகாரை கட்டப்போறான். இவர் வேறு ஒன்றைப்பற்றி பாராட்டி, அவன் செய்வதை மறைத்து ஊக்குவிக்கிறார் போலுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால, 

கொடுக்கிற காசுக்கு மேலாலயே கூவுறார். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொட்டிக்கு பாணுக்கும் மதம் மாறுகிறார்கள் 
என்று வெட்கமில்லாமல் போஸ்டர் பிடிக்கும் இவர்கள் 

அந்த ரொட்டி கூட உங்கள் மதம் கொடுக்கவில்லை 
என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ரொட்டிக்கு பாணுக்கும் மதம் மாறுகிறார்கள் 
என்று வெட்கமில்லாமல் போஸ்டர் பிடிக்கும் இவர்கள் 

அந்த ரொட்டி கூட உங்கள் மதம் கொடுக்கவில்லை 
என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் 

உண்மை அதுவல்ல மருது. பாணையும் , ரொட்டியையுமே உழைத்து வாங்கி சாப்பிட முடியாத சோம்பேறிகள்! இலவசங்கள் எப்போதுமே கிடைக்காது. அதுவும் ஒரு குறுக்கியகாலம் மட்டும்தான் என்று உணராதவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மனித வதையை.. தமிழர் வதையை தொடரலாம்.. என்கிறாரோ.. காவிச் சச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

உண்மை அதுவல்ல மருது. பாணையும் , ரொட்டியையுமே உழைத்து வாங்கி சாப்பிட முடியாத சோம்பேறிகள்! இலவசங்கள் எப்போதுமே கிடைக்காது. அதுவும் ஒரு குறுக்கியகாலம் மட்டும்தான் என்று உணராதவர்கள் 

இவ்வளவு காலமும் இந்த மதத்தில் தொங்கியதால் கூட 
அவர்கள் சோம்பேறிகள் ஆக்கப்பட்டு இருக்கலாம்.
அவர்களுக்கான சமூக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு இருக்கின்றன 
இவ்வளவு காலமும் சோம்பேறிகளாக அவர்களை வைத்திருக்கும் 
ஒரு மத சமூக கட்ட்டமைப்பில் ஏன் தொடர்ந்தும் தொங்க வேண்டும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இவ்வளவு காலமும் இந்த மதத்தில் தொங்கியதால் கூட 
அவர்கள் சோம்பேறிகள் ஆக்கப்பட்டு இருக்கலாம்.
அவர்களுக்கான சமூக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு இருக்கின்றன 
இவ்வளவு காலமும் சோம்பேறிகளாக அவர்களை வைத்திருக்கும் 
ஒரு மத சமூக கட்ட்டமைப்பில் ஏன் தொடர்ந்தும் தொங்க வேண்டும்? 

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் எண்டு டாவின் சொல்லியிருக்கிறார். அதனால்தான் ம(ர)தத்திற்கு ம(ர)தம் தாவுகிறான் போல. ஒரு ம(த)ரத்தில் பழங்கள் முடிந்தவுடன் இன்னொரு ம(த)ரத்திற்கு தாவுகிறான். திரும்பவும் தாவுவான். ஆனால் மர(த)த்தைவிட்டு கீழே மட்டும் இறங்கமாட்டான், பயத்தில். 😂

Link to comment
Share on other sites

இங்கு இந்த சடடம் நடைமுறைப்படுத்தப்படும்போது மக்களின் வாழவாதாரம்தான் பாதிக்கப்படப்போகின்றது. இன்று தமிழர்களாக இருக்கட்டும், சிங்களவர்களாக இருக்கட்டும் அவர்களதான் மட்டுப்பண்ணை தொழிலை செய்கிறார்கள். இது இஸ்லாமியரை இலக்காக வைத்து செய்தாலும், பாதிக்கப்படப்போவது எல்லா மக்களுமே. குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மாடுகள் பால் கொடுக்காது. காளை மாடுகளின் தொகையும் அதிகரிக்கும். இதனை விற்று பிழைப்பவர்கள் தொழிலும் கேள்விக்குறியாகும். எனவே இங்கு சமநிலை பாதிக்கப்பட சந்தர்ப்பம் இருக்கிறது. வெளி  நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது விலைகள் அதிகரிக்கும். நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றப்படி சச்சி  நினைப்பதுபோல இவர்கள் ஒன்றயும் தடை செய்யவில்லை. வேணுமென்றால் வடக்கில் இன்னும் புத்த கோவில்களை அமைப்பார்கள். அதட்கும் இவர் வரவேட்பளிப்பாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

இவ்வளவு காலமும் இந்த மதத்தில் தொங்கியதால் கூட 
அவர்கள் சோம்பேறிகள் ஆக்கப்பட்டு இருக்கலாம்.
அவர்களுக்கான சமூக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு இருக்கின்றன 
இவ்வளவு காலமும் சோம்பேறிகளாக அவர்களை வைத்திருக்கும் 
ஒரு மத சமூக கட்ட்டமைப்பில் ஏன் தொடர்ந்தும் தொங்க வேண்டும்? 

மதத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் நேற்றும் ஊரில் அம்மாவுடன் கதைக்கும்போது வீட்டுவேலை செய்வதற்கு, மரம் வெட்டுவதற்கு, ஏன் மோட்டார் திருத்துதல், எலெக்ட்ரிக்கல் வேலைகள், plumbing வேலைகள் செய்ய வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக. யாருக்கும் இந்த வேலைகளை செய்ய விருப்பமிருப்பதாக தெரியவில்லை. எல்லாம் வெளிநாட்டு காசு செய்யும் வேலை!!

Link to comment
Share on other sites

6 hours ago, Eppothum Thamizhan said:

மதத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் நேற்றும் ஊரில் அம்மாவுடன் கதைக்கும்போது வீட்டுவேலை செய்வதற்கு, மரம் வெட்டுவதற்கு, ஏன் மோட்டார் திருத்துதல், எலெக்ட்ரிக்கல் வேலைகள், plumbing வேலைகள் செய்ய வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக. யாருக்கும் இந்த வேலைகளை செய்ய விருப்பமிருப்பதாக தெரியவில்லை. எல்லாம் வெளிநாட்டு காசு செய்யும் வேலை!!

நல்ல காலம் உங்கள் பெற்றோரிடம் வாளிக் கக்கூஸ் இல்லை, இல்லாவிடில் வாரக்கணக்கில்  காத்து இருக்க வேண்டும் கக்கூஸ் அள்ளுகின்ற ***( சுய தணிக்கை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

மதத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் நேற்றும் ஊரில் அம்மாவுடன் கதைக்கும்போது வீட்டுவேலை செய்வதற்கு, மரம் வெட்டுவதற்கு, ஏன் மோட்டார் திருத்துதல், எலெக்ட்ரிக்கல் வேலைகள், plumbing வேலைகள் செய்ய வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக. யாருக்கும் இந்த வேலைகளை செய்ய விருப்பமிருப்பதாக தெரியவில்லை. எல்லாம் வெளிநாட்டு காசு செய்யும் வேலை!!

மனிதருக்குள் ஏற்ற தாள்வை 
தொழில் அடிப்படையில் எமது மதம் உருவாக்கியது 
அன்று விதைத்தது இன்று விளைகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைச்சிக்காக மாடு வெட்டுவதை தடைசெய்யும் தீர்மானம் 1 மாதம் ஒத்திவைப்பு..!

பூரணமான பிரேரணையை சமர்பிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ..
1359993980_Rajapakse.jpg 

இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யும் ஆளுங்கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை அமைச்சரவை 1 மாத காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரான ஹெகலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றார். 

அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றிருந்தது. இதன்போதே ஹெகலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

குறித்த தடை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காகவே இந்த ஒத்திவைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யும் வகையில் ஆளுங்கட்சி சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒரு பிரேரணையை முன் வைத்துள்ளார். 

அதனை ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு அங்கீகரித்திருக்கின்றது. மேலும் கட்சி கூட்டத்திலும் பிரதமர் இந்த பிரேரணையை முன்மொழிந்து பலருடைய பாராட்டை பெற்றுள்ளார். எனினும் பிரதமர் உத்தியோகபூர்வமான திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. 

ஆனாலும் விரைவில் அதனை சமர்பிக்கவுள்ளார். அது எப்போது.? எப்படி.? என்பது பிரதமருக்கு மட்டுமே தொியும் என ஹெகலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றார். 

https://jaffnazone.com/news/20338 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நல்ல காலம் உங்கள் பெற்றோரிடம் வாளிக் கக்கூஸ் இல்லை, இல்லாவிடில் வாரக்கணக்கில்  காத்து இருக்க வேண்டும் கக்கூஸ் அள்ளுகின்ற ***( சுய தணிக்கை).

நக்கல்!! நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்? ஏன்  நான் மேலே கூறிய வேலைகள் அவ்வளவு அருவருப்பானவையா ? இவற்றைத்தானே பலர் வெளிநாடுகளில் செய்துகொண்டு இருக்கிறார்கள்!!

1 hour ago, Maruthankerny said:

மனிதருக்குள் ஏற்ற தாள்வை 
தொழில் அடிப்படையில் எமது மதம் உருவாக்கியது 
அன்று விதைத்தது இன்று விளைகிறது 

இதை மதம் உருவாக்கவில்லை. எமது சமூகம் உருவாக்கியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நக்கல்!! நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்? ஏன்  நான் மேலே கூறிய வேலைகள் அவ்வளவு அருவருப்பானவையா ? இவற்றைத்தானே பலர் வெளிநாடுகளில் செய்துகொண்டு இருக்கிறார்கள்!!

உண்மையில் அவருக்கு நாட்டு நிலமை மட்டுமல்ல புலத்திலுள்ளோரின் நிலமையும் தெரியவில்லை ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 05:19, Eppothum Thamizhan said:

உண்மை அதுவல்ல மருது. பாணையும் , ரொட்டியையுமே உழைத்து வாங்கி சாப்பிட முடியாத சோம்பேறிகள்!

 

10 hours ago, Eppothum Thamizhan said:

மதத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் நேற்றும் ஊரில் அம்மாவுடன் கதைக்கும்போது வீட்டுவேலை செய்வதற்கு, மரம் வெட்டுவதற்கு, ஏன் மோட்டார் திருத்துதல், எலெக்ட்ரிக்கல் வேலைகள், plumbing வேலைகள் செய்ய வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக. யாருக்கும் இந்த வேலைகளை செய்ய விருப்பமிருப்பதாக தெரியவில்லை. எல்லாம் வெளிநாட்டு காசு செய்யும் வேலை!!

எல்லோருமே வெளிநாட்டுக்கு காசில் வாழ்கிறார்கள் என்றும், வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் உதவுகிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தின் நினைப்பும் அப்படியே வடகிழக்கில் உள்ளவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்காரர், அவர்களுக்கு வேலை தேவையில்லை நாடு தேவையில்லை. என்னவோ உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்கள் எல்லாம் உண்மையல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, satan said:

 

எல்லோருமே வெளிநாட்டுக்கு காசில் வாழ்கிறார்கள் என்றும், வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் உதவுகிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தின் நினைப்பும் அப்படியே வடகிழக்கில் உள்ளவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்காரர், அவர்களுக்கு வேலை தேவையில்லை நாடு தேவையில்லை. என்னவோ உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்கள் எல்லாம் உண்மையல்ல. 

என்னுடைய தம்பி ஒரு Quantity Surveyor. இன்று கதைக்கும்போது கூறினார். யாழில் ஒரு மேசனுக்கு 2500 ரூபாயும் தொழிலாளிக்கு 1800 ரூபாயும் நாள்க் கூலியாம். சீமெந்து வேலைக்கு ஆள் கிடைத்தாலும் மர வேலைக்கும் நிலக்கல் பதிக்கும் வேலைக்கும் தொழிலாளர்களைப் பிடிப்பது மகா கடினமாம். அதிலும் பொறுப்பான திறமையான ஆட்கள் கிடைப்பது முயற் கொம்புதானாம். இந்த நிலைதான் தொழில்நுட்ப வேலைகளுக்கும் என்றார்.. கொழும்பில் தற்போதைய கொறோனா சூழலால் மலையகத்திலிருந்து தொழிலாளர் வரவு மிக்வும் குறைவு என்றும் சொன்னார்.

உண்மையில் வடபகுதியில் நிலமை மகா மோசம். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மர வேலைக்கும் நிலக்கல் பதிக்கும் வேலைக்கும் தொழிலாளர்களைப் பிடிப்பது மகா கடினமாம். அதிலும் பொறுப்பான திறமையான ஆட்கள் கிடைப்பது முயற் கொம்புதானாம். இந்த நிலைதான் தொழில்நுட்ப வேலைகளுக்கும் என்றார்..

வெளிநாட்டுக்காரர் இதற்கான பயிற்சி கூடங்களை அமைத்து பயிற்சிகளை அளிக்கலாம் தாயக உறவுகளுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

வெளிநாட்டுக்காரர் இதற்கான பயிற்சி கூடங்களை அமைத்து பயிற்சிகளை அளிக்கலாம் தாயக உறவுகளுக்கு.

இவை சாதியுடன் தொடர்புடைய  தொழில்களாக காலம் காலமாக இருந்து வந்ததால் பலர் அதனைச் செய்யத் தயங்குகின்றனர். ஆனாலும் ஆங்காங்கே சிறிய மாற்றங்கள் தென்படுகின்றன. அந்த மாற்றங்கள் கூட அதிக கட்டணம் / வருமானம் என்பதால் ஏற்பட்டன. 

நிறுவனமயப்படுத்தப்பட்ட பெரும் முதலீடுகளுடன் கூடிய உற்பத்தித் தொழிற்சாலைகள் உ+ம் மரத் தளபாட உற்பத்தி நிலையங்கள், கல் அறுக்கும் தொழிற்சாலைகள் போன்றவற்றை நிறுவுலாம். மற்றும் மேற்கில் உள்ளது போன்று தொழில்களுக்கு உரிய மரியாதையையும் அதனுடன் கூடவே தொழிலாளர்களுக்கு தரக் கட்டுப்பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தல் போன்ற இன்னோரன்ன விடயங்கள் இத் தொழில்களின்பால் மரியாதையை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். 

இல்லாவிட்டால் தென்பகுதியிலிருந்துதான் தொழிலாளர்களை கொண்டுவரவேண்டி இருக்கும் ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.