Jump to content

யாழ்.நாவற்குழி விகாரை வளாகத்தில் புதிதாக கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! தமிழ் அரசியல்வாதிகளை துாக்கத்திலிருந்து எழுப்புங்கள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நாவற்குழி விகாரை வளாகத்தில் புதிதாக கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

119117058_690274661841358_58961938515324 

தமிழ் அரசியல்வாதிகளை துாக்கத்திலிருந்து எழுப்புங்கள்..!

யாழ்.நாவற்குழி - விகாரை அமைந்துள்ள காணியில் பிறிதொரு கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றிருக்கின்றது.

119034002_232926948161915_78959393319555

விகாரைக்கு தேவையான கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காகவே இவ்வாறு கட்டிடம் அமைக்கப்பட்டதாக இன்று காலை இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

119038746_1328818237453846_8729530190548

ஏற்கனவே விகாரை அமைப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களும், அரசியல்வாதிகளும் மறந்த நிலையில் புதிதாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/20324

டிஸ்கி :

roflphotos-dot-com-photo-comments-201709

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ் அரசியல்வாதிகளை துாக்கத்திலிருந்து எழுப்புங்கள்..!

யாழ்.நாவற்குழி - விகாரை அமைந்துள்ள காணியில் பிறிதொரு கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றிருக்கின்றது.

  தமிழருக்கெதிரான பெரிய பெரிய   விடயங்கள் எல்லாம் முன்னெடுக்கப்பட்டு விட்டதாம். எந்த தமிழ் அரசியல்வாதியும் கவனமெடுத்ததாக தெரியவில்லையாம்.

விருந்துபசாரத்தில் கவனமெடுக்கிறார்கள் போல் உள்ளது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதியடிக் குத்தியருக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள் 

😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறவன் புலவுக்கு  மாட்டுக்கு பின்னால திரிய மட்டும் தான் இப்போ  நேரமிருக்கு போல 
இது மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்திருக்க வேண்டும் , காவிக்கொடியுடன் அமர்க்களம் பண்ணியிருப்பார் கொய்யா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கல் நாட்டுவது சொறீலங்கா பொலிஸ். அடிக்கல் எடுத்துக் கொடுப்பது சிங்கள பெளத்த பிக்கு.

ஆக மொத்தத்தில்.. சொறீலங்கா படை.. பொலிஸ் ஆக்கிரமிப்பின் நோக்கமே இது தான்.

என்ன இதனை நாங்கள் காட்டுக்கத்துக் கத்தி சொன்னாலும் நம்மவர்களுக்கும் ஏறுதில்லை.. சர்வதேசத்திற்கும் புரியுதில்லை... அதுதான் பரிதாபமானதாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

 

என்ன இதனை நாங்கள் காட்டுக்கத்துக் கத்தி சொன்னாலும் நம்மவர்களுக்கும் ஏறுதில்லை.. சர்வதேசத்திற்கும் புரியுதில்லை... அதுதான் பரிதாபமானதாக இருக்கிறது. 

யார் சொன்னது புரியாதென்று. திட்டம் போட்டு கொடுப்பதே அவர்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மறவன் புலவுக்கு  மாட்டுக்கு பின்னால திரிய மட்டும் தான் இப்போ  நேரமிருக்கு போல. தெரிஞ்சுகொண்டே கொடி பிடிக்கிறார், அதற்குள் சிங்களத்தின் திட்டமிட்ட வேலைகளை கச்சிதமாய் மறைத்து விடுவேன் என்று நம்புகிறார். சிங்களத்துக்கு கொடி தூக்குபவர்; தன் மானம், இனம், மொழி, மதம், எதிர்கால தன் சந்ததி எல்லாவற்றையும் அடகு வைத்து சுயநலத்துக்குக்காக தூக்கிறார்கள். சுத்த சோம்பேறிகள். வாய் வீரம், போலி நிஞாயம் அவர்களது மூலதனம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.