Jump to content

மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா... கடும் எதிர்ப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா கமகே கடும் எதிர்ப்பு

spacer.png
மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது, மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றதொரு கருத்தை அவர் கூறியிருந்தார்.

அத்தோடு, வடக்குக் கிழக்கில் பௌத்தர்கள் இல்லாத காரணத்தினால், புத்தர் சிலைகளை நிறுவி வழிப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவரது இவ்வாறான கருத்தை நாம் கவணத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், மகாவம்சத்தை பௌத்தர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதனை உலகமே அங்கிகரித்துள்ளது. அத்தோடு, இது பௌத்த நாடு என்ற வகையில், புத்தர் சிலைகளை இலங்கையின் எந்த பாகத்தில் வைக்கவும், விகாரைகளை அமைக்கவும் எமக்கு உரிமையுள்ளது.

இது எமக்கான மத உரிமையாகும். பௌத்தத்திற்கு மட்டுமல்லாமல் ஏனைய மதங்களுக்கும் இதே உரிமை உள்ளது” என கூறினார்.

http://athavannews.com/மகாவம்சத்தை-ஏற்றுக்கொள்/

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டயானா தேவையில்லாமல் கதைச்சு நாறப்போறார்.

மாகாவம்சத்தை ஏற்பது என்றால், சிங்கத்துக்கும், மனிதப் பெண்ணுக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, சிங்கவல்லி..... அவர்களினால் வந்ததே சிங்களவர்கள் என்ற கதையை ஏற்றுக்கொள்வீர்களா என்றால்.... கதை கந்தல்...

Link to comment
Share on other sites

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

சும்மா எடுத்துவிடுறதுக்கெல்லாம் ஆதாரம்  தேடவோ, கேட்கவோ கூடாது. எழுபது வருடமாய் சொன்னதையே  இப்பவும் சொல்கிறோம்,  இன்று மட்டும் யாராவர், கேள்வி ஆதாரம் கேட்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 17:59, Nathamuni said:

சிங்கத்துக்கும், மனிதப் பெண்ணுக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, சிங்கவல்லி

 

பகிடி விடுகிறீர்கள் ஆதாரமில்லாமல்.

இதுக்கு அந்தக்கால  சிங்கத்தின் விந்தணுவை, அந்தக்கால ஓர் பெண்ணின் கரு முட்டையுடன் சேர்த்து என்ன வருகிறது (இல்லை வரவில்லை) என்பதை கண்டால் தான் நாங்கள் ஆதாரம் என்போம். 

We are damn freaking serious about. Are you kidding? 

அந்தக்கால  சிங்கத்தின் விந்தணுவை, அந்தக்கால ஓர் பெண்ணின் DNA உம்  இல்லை, மறு ஆக்கம் செய்து கூட பரிசோதனை  செய்வதற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 17:59, Nathamuni said:

சிங்கத்துக்கும், மனிதப் பெண்ணுக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, சிங்கவல்லி

கேள்வி, மகாவம்சம் சொல்வதை, விஞ்ஞானம் என்று வாய் கிழிய கத்தும் British Historians, மகாவம்சத்தை சிங்களவரின் வரலாறு என்று ஏற்றுக் கொண்டதை , இங்கு ஆதாரம் கேட்போரின் நிலைப்பாடு என்ன?

12 minutes ago, Kadancha said:

 

பகிடி விடுகிறீர்கள் ஆதாரமில்லாமல்.

இதுக்கு அந்தக்கால  சிங்கத்தின் விந்தணுவை, அந்தக்கால ஓர் பெண்ணின் கரு முட்டையுடன் சேர்த்து என்ன வருகிறது (இல்லை வரவில்லை) என்பதை கண்டால் தான் நாங்கள் ஆதாரம் என்போம். 

We are damn freaking serious about. Are you kidding? 

அந்தக்கால  சிங்கத்தின் விந்தணுவை, அந்தக்கால ஓர் பெண்ணின் DNA உம்  இல்லை, மறு ஆக்கம் செய்து கூட பரிசோதனை  செய்வதற்கு. 

🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 18:12, nunavilan said:

எந்த உலகம் மகாவம்சத்தை அங்கீகரித்துள்ளது?

நீங்கள்  ஜேசு பௌத்த துறவி எனும் திரியை வாசிக்கவில்லை. அல்லது உங்களுக்கு புரியவில்லை.      

இங்கு ஆதாரம் கேட்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள்.

தமிழ் முதலில் வந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் (முதலில் வந்தா இல்லயா என்பதை விடுங்கள்). அது எஞ்ஞான வாதம் என்பதையும் விட்டு விடுங்கள்.

அதே வாதத்தின் படி, மகாவம்சத்தை மறுப்பவர்கள் தான் முதலில் நிரூபிக்க வேண்டும் அந்தக்கால சிங்கத்தின் விந்தணு, அந்த கால மனித பெண்ணின் கரு முட்டையுடன் சேர்ந்து, ஓர் உயிர்கருவை ஆக முடியாது என்று.

அவர்கள் சொல்லுகிறார்கள் அது விஞ்ஞானம் என்று. 

அது உண்மையானால், எதுக்கும் முதல், இந்தக்காலத்தில் இதை ( சிங்கத்தின் விந்தணு,  மனித பெண்ணின் கரு முட்டையுடன்) பரிசோதனை செய்வதற்கான சாத்தியத்தை ஆராய்வது ஆக  குறைந்தது வாதத்தை முன்னைநகர்த்த உதவும்.

நாம் ஆயுதப் போராடத்திற்கு செலவழித்த பணத்தில் மட்டும், ஓர் இம்மியான கடுகளவி கடுகான பணத்தை (மட்டும்), ஆப்பிரிக்காவில் உள்ள எதாவது ஓர் அரசுக்கு இலஞ்சம் கொடுத்தாவது இதை செய்து இருந்தால், இவ்வளவு இழப்பை  தாவிற்த்து இருக்கலாமோ என்று இந்த தோன்றுகிறது.

      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அரைவேக்காட்டுதனம்.

மஹாவம்சம் ஒரு வரலாற்று புரட்டு என்பதை நாம் இங்கே 2013 இல் இருந்து பல தடவை எழுதியாயிற்று.

மஹாவம்சத்தை போல் தாங்களும் தமிழர் தொன்மையை பற்றி அரைவேக்காட்டு ஆராய்சிகளை (ஒன்லைனில்) செய்து, அதை நாம் கேள்வி கேட்டால்?

நீ ஏன் மகாவம்சத்தை கேள்வி கேட்கல்ல என்று நம்மள பார்த்தே சிரிகாம சீரியஸ்சா கேள்வி கேட்கிறாங்க🤣

மஹாவம்சம், 

குமரி கண்டம்

15,000 ஆண்டு பழைய துறைமுகத்தை கண்டு பிடிச்சட்டோம். 

இது எல்லாமே “குபீர் சிரிப்பு” பகுதியில் சேர்கவேண்டிய விடயங்கள்.

கொஞ்ச காலம் - இந்திய வெளியுறவு துறை எனக்கு மட்டும் ரகசியமா சொன்ன செய்தியின் படி,

மோடி முடிவெடுத்திட்டர், ராஜபக்சேக்கு சேதி சொன்னார் என்ற டுபாக்கூர் கதைகளை அள்ளி விட்டார்கள்.

அதெல்லம் சப் என்றாகிவிட்டதால் இப்போ வரலாறு. 

கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

மஹாவம்சம் ஒரு வரலாற்று புரட்டு என்பதை நாம் இங்கே 2013 இல் இருந்து பல தடவை எழுதியாயிற்று.

நீங்கள் சொன்னதின் படி, சிங்கத்துக்கும், மனித பெண்ணிற்கும் உயிரணு தோன்றமுடியாது என்பதை நிரூபிக்க வேண்டும்.

அதன் பின்பே,  அதை மறுக்க முடியும்.    

விஞ்ஞான அடிப்படை மாறாது. 

உங்களுக்கு மகாவம்சத்தை பற்றி மற்றவர்கள் செய்த ஆய்வு தெரியாது என்பதை இதன் மூலம் தெரியாமலே கூறி விட்டீர்கள். 

14 minutes ago, goshan_che said:

குமரி கண்டம்

நான் சொல்லவில்லை.

 

15 minutes ago, goshan_che said:

15,000 ஆண்டு பழைய துறைமுகத்தை கண்டு பிடிச்சட்டோம். 

மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கனா சுட்டி.
 

17 minutes ago, goshan_che said:

இது எல்லாமே “குபீர் சிரிப்பு” பகுதியில் சேர்கவேண்டிய விடயங்கள்.

கிந்தியாவின்  nio செய்த வயது ஆய்வை (7500) மறுப்பதற்கும் விடவா?

 

19 minutes ago, goshan_che said:

மஹாவம்சத்தை போல் தாங்களும் தமிழர் தொன்மையை பற்றி அரைவேக்காட்டு ஆராய்சிகளை (ஒன்லைனில்) செய்து, அதை நாம் கேள்வி கேட்டால்?

Online உசாத்துணையாக. ஆனால் அவற்றில் மூலம், எல்லாமே ஏதோ ஓர் விதத்தில் field research.

Cladwell இன் Dravidian முக்கியமான மைல் கல் தமிழின் வரலாற்றை திருப்பியதில், அது புறக்கணிகப்பட்டது.  

அதே போல, இலங்கை தீவில் நடந்து ஒருவருக்குமே (அதற்குள்  இருப்பவர்களை தவிர) தெரியாத விடயமும் தரப்பட்டது. 

ஆனால் உங்களின் உங்களின் அறிவுக்கு அப்பாமையால் என்பதால் கருத்தில் எடுக்கவில்லை.

 

42 minutes ago, goshan_che said:

கொஞ்ச காலம் - இந்திய வெளியுறவு துறை எனக்கு மட்டும் ரகசியமா சொன்ன செய்தியின் படி,

மோடி முடிவெடுத்திட்டர், ராஜபக்சேக்கு சேதி சொன்னார் என்ற டுபாக்கூர் கதைகளை அள்ளி விட்டார்கள்.

நான் அறிந்தவற்றை சொன்னேன் ஓர் நிபந்தனையுடன், கிந்தியா வெளிப்படையான கால எல்லை விதிக்காவிட்டால் ஒன்றுமே கருத்தில் எடுக்கப்பட முடியாது என்பது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மஹாவம்சம் ஒரு வரலாற்று புரட்டு என்பதை நாம் இங்கே 2013 இல் இருந்து பல தடவை எழுதியாயிற்று.

விக்கி சொல்ல முதல் அத்தக்காதவை பற்றி நீங்கள் அறியவில்லை என்பது வெளிப்படை. இப்போதும் உங்களுக்கு தெரியாது என்பது உங்களின் பதிலில் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் species (இனம்) என்றால் அதன் விஞ்ஞான வரைவிலக்கணம் என்ன என்பதை ஒரு ஆண்டு 10 புத்தகத்தில் படியுங்கள். சிங்கம் ஒரு இனம். மனிதன் இன்னொரு இனம். வேறு வேறு family. வேறு, வேறு phylum. இரெண்டும் இனகலப்பில் ஈடுபட்டு சந்ததி உருவாக முடியாது. இது அடிபடை விஞ்ஞானம். 

ஆண்டு 10 படித்தாலே மாஹாவம்சம் அம்புலிமாமா கதை என்பது விளங்கும். ஆராய்சி எல்லாம் தேவையில்லை.

 

15,000 ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு எதற்கையா ஆதாரம்- அது எல்லாருக்கும் தெரியுமே🤣

நான் அந்த திரியில் சொன்னது குமரி கண்டம் கடலில் அமிழ்ந்திருக்க கூடிய வாய்ப்புள்ள 12,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர், தமிழ் உருவாகி விட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. என்பது மட்டுமே.

அதை மறுக்கிறேன் பேர்வழி என வெளிகிட்டு, எதை எதை எல்லாமோ இணைத்து கடைசியில் அந்த திரியை வாழைபழ காமெடி ஆக்கி விட்டீர்கள்.

மகாவம்சம் பற்றி விக்கி சொல்லமுதலே இதே யாழில் பலவாறு அலசபட்டாகிவிட்டது. தேவைபட்டால் பழைய திரிகளை பாருங்கள். 

அது சரி, நீங்கள் ரகசியமா இந்திய வெளியுறவு துறையிடம் கேள்வி பட்ட “மோடி ராஜபக்சேக்கு கடும் தொனியில் சொன்ன செய்தி” என்னாவாச்சு🤣

அதுவும் “குபீர் சிரிப்பு” வகையா🤣

இதற்கு மேல் இந்த திரியில் எழுதினால் தேவையில்லாமல் நான் bullying குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டும் என்பதால். 

இத்தோடு விடை பெறுகிறேன். 

பிகு: ஒரு திரியில் தர்க தோல்வி அடைந்தால் அதை இன்னொரு திரியில் தொடர்வது கள விதிக்கு முரணானது. நாகரிகமும் இல்லை.

39 minutes ago, Kadancha said:

நீங்கள் சொன்னதின் படி, சிங்கத்துக்கும், மனித பெண்ணிற்கும் உயிரணு தோன்றமுடியாது என்பதை நிரூபிக்க வேண்டும்.

அதன் பின்பே,  அதை மறுக்க முடியும்.    

விஞ்ஞான அடிப்படை மாறாது. 

உங்களுக்கு மகாவம்சத்தை பற்றி மற்றவர்கள் செய்த ஆய்வு தெரியாது என்பதை இதன் மூலம் தெரியாமலே கூறி விட்டீர்கள். 

நான் சொல்லவில்லை.

 

மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கனா சுட்டி.
 

கிந்தியாவின்  nio செய்த வயது ஆய்வை (7500) மறுப்பதற்கும் விடவா?

 

Online உசாத்துணையாக. ஆனால் அவற்றில் மூலம், எல்லாமே ஏதோ ஓர் விதத்தில் field research.

Cladwell இன் Dravidian முக்கியமான மைல் கல் தமிழின் வரலாற்றை திருப்பியதில், அது புறக்கணிகப்பட்டது.  

அதே போல, இலங்கை தீவில் நடந்து ஒருவருக்குமே (அதற்குள்  இருப்பவர்களை தவிர) தெரியாத விடயமும் தரப்பட்டது. 

ஆனால் உங்களின் உங்களின் அறிவுக்கு அப்பாமையால் என்பதால் கருத்தில் எடுக்கவில்லை.

 

நான் அறிந்தவற்றை சொன்னேன் ஓர் நிபந்தனையுடன், கிந்தியா வெளிப்படையான கால எல்லை விதிக்காவிட்டால் ஒன்றுமே கருத்தில் எடுக்கப்பட முடியாது என்பது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்சம் விக்கியார் இருவரையும் பிறகு பார்ப்போம் 

யார் இந்த டயானா ஆன்டி?
அறிமுக நாளே ...
அமர்க்களம் ஆனார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

மகாவம்சம் விக்கியார் இருவரையும் பிறகு பார்ப்போம் 

யார் இந்த டயானா ஆன்டி?
அறிமுக நாளே ...
அமர்க்களம் ஆனார் 

🤣

ஆளப் பார்த்தால்....இன்னும் 30 வருசத்தில ஹிரு அண்ணி இப்படித்தான் இருப்பா என யோசிச்சன். 

இந்தா நீங்கள் வந்துட்டியள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

மகாவம்சம் விக்கியார் இருவரையும் பிறகு பார்ப்போம் 

யார் இந்த டயானா ஆன்டி?
அறிமுக நாளே ...
அமர்க்களம் ஆனார் 

அமர்களம் ஆவதற்கு இனவாதம் முக்கியம் என்பதை நன்கு அறிந்த ஆண்ரி.20 வருடத்தின் பின்பு இவர் தான் சிறிலங்கா மாதாவின் ஜனாதிபதி....‍ஹிரிணிக்கா அக்கா ஜனாதிபதியாக முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

அதை மறுக்கிறேன் பேர்வழி என வெளிகிட்டு, எதை எதை எல்லாமோ இணைத்து கடைசியில் அந்த திரியை வாழைபழ காமெடி ஆக்கி விட்டீர்கள்.

பதில் இல்ல விட்டால் பகிடி.

 

12 minutes ago, goshan_che said:

முதலில் species (இனம்) என்றால் அதன் விஞ்ஞான வரைவிலக்கணம் என்ன என்பதை ஒரு ஆண்டு 10 புத்தகத்தில் படியுங்கள். சிங்கம் ஒரு இனம். மனிதன் இன்னொரு இனம். வேறு வேறு family. வேறு, வேறு phylum. இரெண்டும் இனகலப்பில் ஈடுபட்டு சந்ததி உருவாக முடியாது. இது அடிபடை விஞ்ஞானம். 

ஆண்டு 10 படித்தாலே மாஹாவம்சம் அம்புலிமாமா கதை என்பது விளங்கும். ஆராய்சி எல்லாம் தேவையில்லை.

 

18 minutes ago, goshan_che said:

மகாவம்சம் பற்றி விக்கி சொல்லமுதலே இதே யாழில் பலவாறு அலசபட்டாகிவிட்டது. தேவைபட்டால் பழைய திரிகளை பாருங்கள். 

அப்படி என்றால், ஏன் அத்தகைதாவுக்கு அவ்வளளவு வெளியார் ஆய்வு.

அதை பற்றி அலசப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்பதே நீங்கள் சொல்வதை வைத்து ஊக்கி கூடியது.

அத்தகாதவும் அலசப்பட்டுள்ளது என்றால், ஒரேயொரு கேள்வி, அத்தக்காதவை  எந்த  அடைமொழியுடன்  அழைப்பார்கள்  என்பதை சொல்லுங்கள், ஓர் இடமும் தேடாமல்.

மிகுதிக்கு பதில் அளிக்கிறேன்.  

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

பதில் இல்ல விட்டால் பகிடி.

 

 

அப்படி என்றால், ஏன் அத்தகைதாவுக்கு அவ்வளளவு வெளியார் ஆய்வு.

அதை பற்றி அலசப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்பதே நீங்கள் சொல்வதை வைத்து ஊக்கி கூடியது.

அத்தகாதவும் அலசப்பட்டுள்ளது என்றால், ஒரேயொரு கேள்வி, அத்தக்காதவை  எந்த  அடைமொழியுடன்  அழைப்பார்கள்  என்பதை சொல்லுங்கள், ஓர் இடமும் தேடாமல்.

மிகுதிக்கு பதில் அளிக்கிறேன்.  

 

 

 

மேலேயே எழுதிவிட்டேன்.

இதற்கு மேல் இந்த திரியில் எழுதினால் தேவையில்லாமல் நான் bullying குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டும் என்பதால். 

உங்களுக்கு பதில் அளிக்க என்னால் முடியவில்லை.

மருதர்,

முடிஞ்சளவு முயற்சிகிறேன் பாத்துகோங்க்கோ 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்களுக்கு பதில் அளிக்க என்னால் முடியவில்லை.

ஒரே ஓர் அடை சொல். இவ்வளவு நேரம் தேவை இல்லை.

அத்தக்கதவையும் சேர்த்து இரண்டு சொற்கள்.

எனவே இங்கு முறையாக அலசப்படவில்லை என்பதை ஊகிக்க முடிகிறது.

அது தெரியாமல் இவரு அலசப்பட்டதாக சொல்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

ஒரே ஓர் அடை சொல். இவ்வளவு நேரம் தேவை இல்லை.

அத்தக்கதவையும் சேர்த்து இரண்டு சொற்கள்.

எனவே இங்கு முறையாக அலசப்படவில்லை என்பதை ஊகிக்க முடிகிறது.

அது தெரியாமல் இவரு அலசப்பட்டதாக சொல்கிறீர்கள்.

உங்கள் ஊகம் பிழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

உங்கள் ஊகம் பிழை.

சொல்லுங்கள் அந்த சொல்லை. அது தலைப்பு போன்றது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள கடஞ்சா, உங்களுக்கு விஞ்ஞானமுறையை விளக்குவது வீண் என்று வேறொரு இடத்தில் அறிந்தேன். எனவே  பதில் உங்களுக்கல்ல! ஏனையோருக்கு: சிங்கமும் மனிதனும் வேறு வேறு இனங்கள் (Species), எனவே கருக்கட்டல் நிகழ்ந்து சந்ததி வராது! அப்படியே வந்தாலும் அது மலடாக (sterile) இருக்கும் (எனவே சிங்கள வழித்தோன்றல்கள் பெருகியிருக்க இயலாது!) 

கடஞ்சாவுக்கு: சக்கரத்தை மீளக் கண்டு பிடிக்க ஆசையிருந்தால் எனக்கு ஒரு grant தாருங்கள்! நான் ஒரு வருடம் இதை ஆய்வு செய்து உங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறேன்! 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பழைய திரிகளில் தேடி பாருங்கள். சகலதும் எழுத்தில், தமிழில்தான் உள்ளது.

நான் உங்கள் காரியதரிசி அல்ல. இங்கே எனக்கு முதலே பலர் பலவிதமாக மஹாவம்சத்தை பற்றி எழுதி உள்ளார்கள். பல வருடங்களுக்கு முன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உங்கள் ஊகம் பிழை.

  நேரம் பொதும்.  மறக்க கூடிய சொல்ல அல்ல.  நான் சொல்கிறேன்.

அந்த அதைச் சொல் சிஹல.

Just now, goshan_che said:

யாழில் பழைய திரிகளில் தேடி பாருங்கள். சகலதும் எழுத்தில், தமிழில்தான் உள்ளது.

நான் உங்கள் காரியதரிசி அல்ல. இங்கே எனக்கு முதலே பலர் பலவிதமாக மஹாவம்சத்தை பற்றி எழுதி உள்ளார்கள். பல வருடங்களுக்கு முன்.

ஹல  அத்தக்காதா.

1 minute ago, goshan_che said:

யாழில் பழைய திரிகளில் தேடி பாருங்கள். சகலதும் எழுத்தில், தமிழில்தான் உள்ளது.

நான் உங்கள் காரியதரிசி அல்ல. இங்கே எனக்கு முதலே பலர் பலவிதமாக மஹாவம்சத்தை பற்றி எழுதி உள்ளார்கள். பல வருடங்களுக்கு முன்.

சிஹல  அத்தக்காதா.

மறக்க கூடிய சொல்ல அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

சிஹல  அத்தக்காதா.

இதன் பின்னே ஓர் வரலாறே உள்ளது. 

உங்கள் மகாவம்ச  புலமையை அல்லது நினைவை சோதிப்பது எனது நோக்கமல்ல.


மகாவம்சம் முறையாக அலசப்படத்தியின், இது வந்து இருக்க வேண்டும்.

ஆனால் அத்தகாதவில் அது குறிப்பிடப்படவில்லை.

அது வன்சத்தப்பகாசினி இல் குறிப்பிடப்படுகிறது.    

14 minutes ago, Justin said:

அன்புள்ள கடஞ்சா, உங்களுக்கு விஞ்ஞானமுறையை விளக்குவது வீண் என்று வேறொரு இடத்தில் அறிந்தேன். எனவே  பதில் உங்களுக்கல்ல! ஏனையோருக்கு: சிங்கமும் மனிதனும் வேறு வேறு இனங்கள் (Species), எனவே கருக்கட்டல் நிகழ்ந்து சந்ததி வராது! அப்படியே வந்தாலும் அது மலடாக (sterile) இருக்கும் (எனவே சிங்கள வழித்தோன்றல்கள் பெருகியிருக்க இயலாது!) 

சில வேளைகளில் நான் கற்க முடியாத என்று நினைக்கலாம், தவறு அல்ல.

நான் கற்றுக்  கொள்ள முடியாத நபர் என்று நினைபதே தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பரிசோதனை கருத்தில் இருந்து நீங்கள் முடிவை எடுத்தால், உங்கள் படித்த வட்டதிட்ற்குள் சிந்தனை குறுகிவிட்டது என்று அர்த்தம் என்றே நான் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. 

21 minutes ago, Justin said:

கடஞ்சாவுக்கு: சக்கரத்தை மீளக் கண்டு பிடிக்க ஆசையிருந்தால் எனக்கு ஒரு grant தாருங்கள்! நான் ஒரு வருடம் இதை ஆய்வு செய்து உங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறேன்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.