Jump to content

திலீபனின் நினைவுதினம் அனுஸ்டிக்க அனுமதி மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தியாகத்தின் புனிதம் காப்போம்; தியாகி திலீபனின் நினைவு தினம் | Virakesari.lk

எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்விடயம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.https://www.virakesari.lk/article/89570

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. மகிந்த கோத்தா கும்பலிடம் போய் மனித உரிமைகள் பற்றிப் பேசுவது போல் மடமை ஏதும் இல்லை. 

என்ன இந்தக் கும்பலால்.. சிங்களவர்கள்.. பஞ்சப் பரதேசி ஆகும் வரை.. அவர்கள் மூளைக்குள் திணிக்கப்பட்டுள்ள.. சிங்கள பெளத்த பேரின வெறி அடங்கிப் போகும் வரை..  இந்தக் கும்பலை அவ்வளவு இலகுவாக அரசியல் களத்தில் இருந்து அகற்ற முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சர்வதேசம் இவர்களையெல்லாம் நம்பி பயனில்லை. பேசாமல் சிங்களவரோடு  சேர்ந்து வாழ்வதே ஒரே வழி என கொள்கை முழக்கம் செய்யும் “நவீன தமிழ் தேசியவாதிகள்” கவனத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இந்தியா, சர்வதேசம் இவர்களையெல்லாம் நம்பி பயனில்லை. பேசாமல் சிங்களவரோடு  சேர்ந்து வாழ்வதே ஒரே வழி என கொள்கை முழக்கம் செய்யும் “நவீன தமிழ் தேசியவாதிகள்” கவனத்துக்கு.

இதெல்லாம் கொஞ்சம் பழையதாகவும் போராடிகிறதாகவும் இருக்கு 
தயவு செய்து இவற்றை வேறு அடைமொழி கொண்டு மாற்ற முடியாதா?

டிஜிட்டல் தமிழ் தேசியவாதிகள் 
 
அப்படி ஏதும் மாற்றி தூற்றினால் எமக்கும் கொஞ்சம் 
புதுமையாய் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விருப்படி மாற்றுங்கள். ஆனால் கருத்தை மறுதலிக்க முடியவில்லையே?

ஆமா / இது உங்க சைஸ் தொப்பி இல்லையே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

இந்தியா, சர்வதேசம் இவர்களையெல்லாம் நம்பி பயனில்லை. பேசாமல் சிங்களவரோடு  சேர்ந்து வாழ்வதே ஒரே வழி என கொள்கை முழக்கம் செய்யும் “நவீன தமிழ் தேசியவாதிகள்” கவனத்துக்கு.

ஆமாம் நீங்கள் எப்போதில் இருந்து தேசியவாதி ஆனீர்கள் :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

“நவீன தமிழ் தேசியவாதிகள்”

யாரைச் சொல்கிறீர்கள்? விக்கியையும், கஜேந்திரனையுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

ஆமாம் நீங்கள் எப்போதில் இருந்து தேசியவாதி ஆனீர்கள் :unsure:

 

நான் எப்போதும் தமிழ் தேசியவாதிதான்.

1. பிறப்பு-2009 - சில விடயங்களில் புலிகள் பிழைவிட்டாலும், அவர்களின் தேசியத்தின் மீதான பற்றுருதி, அவர்களை விட செயல்திறன் உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் - அப்போ என் நிலை “மூடிட்டு” இருந்த சைலன்ட் தேசியவாதி. ஆனால் யுத்த நிறுத்தம் கோரிய லண்டன் போராட்ங்களில் ஒரு சகதமிழானாக பங்கெடுத்தேன். அப்போதும் புலி ஆதரவாளனாய் அல்ல. தமிழ் தேசிய வாதியாய்.

2. 2009-2013 குழப்பம் மிஞ்சிய காலம். 

3. 2013- விக்கியின் வருகை. சம்-சும்-விக்கி தேசியத்தை முன்னெடுப்பார்கள் என்ற நப்பாசை துளிர்விட. அவர்களை ஆதரித்த தமிழ் தேசியாவாதி. அப்போதும் தனி மனித அரசியலால் ஈர்க்கப்ட்டல்ல. அந்த நிலையில் அவர்கள்தான் சரியான தெரிவாக தென்பட்டனர். இலக்கு எப்போதும் போல தமிழ் தேசியம்தான்.

4. 2015 பின்- சுமந்திரன் அந்த விசயத்துகு சரிப்படார் என புரிந்தது. விக்கி செயல் முடங்கி நின்றார். மீண்டும் குழப்ப நிலை. ஆனாலும் கொள்கை தமிழ் தேசியம்தான்.

5. நான் ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் தமிழ்தேசியத்தை முந்தள்ளுவார்கள் என நான் நினைக்கிறேனோ அவர்கள் பின்னால் நிற்கிறேன்.

6. இதுவரைக்கும் டக்லஸ், கருணா, பிள்ளையான், அங்கயன், இதர அரசியல்வாதிகள் எவரையும் ஆதரித்து எழுதியதுமில்லை, மிக கடுமையாக விமர்சித்துள்ளேன்.

இப்போ சொல்லுங்கள் நான் தேசியவாதியா இல்லையா?

20 minutes ago, ரஞ்சித் said:

யாரைச் சொல்கிறீர்கள்? விக்கியையும், கஜேந்திரனையுமா? 

இல்லை. விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. 

கஜேந்திரகுமார் -the jury is still out.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

நான் எப்போதும் தமிழ் தேசியவாதிதான்.

1. பிறப்பு-2009 - சில விடயங்களில் புலிகள் பிழைவிட்டாலும், அவர்களின் தேசியத்தின் மீதான பற்றுருதி, அவர்களை விட செயல்திறன் உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் - அப்போ என் நிலை “மூடிட்டு” இருந்த சைலன்ட் தேசியவாதி. ஆனால் யுத்த நிறுத்தம் கோரிய லண்டன் போராட்ங்களில் ஒரு சகதமிழானாக பங்கெடுத்தேன். அப்போதும் புலி ஆதரவாளனாய் அல்ல. தமிழ் தேசிய வாதியாய்.

2. 2009-2013 குழப்பம் மிஞ்சிய காலம். 

3. 2013- விக்கியின் வருகை. சம்-சும்-விக்கி தேசியத்தை முன்னெடுப்பார்கள் என்ற நப்பாசை துளிர்விட. அவர்களை ஆதரித்த தமிழ் தேசியாவாதி. அப்போதும் தனி மனித அரசியலால் ஈர்க்கப்ட்டல்ல. அந்த நிலையில் அவர்கள்தான் சரியான தெரிவாக தென்பட்டனர். இலக்கு எப்போதும் போல தமிழ் தேசியம்தான்.

4. 2015 பின்- சுமந்திரன் அந்த விசயத்துகு சரிப்படார் என புரிந்தது. விக்கி செயல் முடங்கி நின்றார். மீண்டும் குழப்ப நிலை. ஆனாலும் கொள்கை தமிழ் தேசியம்தான்.

5. நான் ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் தமிழ்தேசியத்தை முந்தள்ளுவார்கள் என நான் நினைக்கிறேனோ அவர்கள் பின்னால் நிற்கிறேன்.

6. இதுவரைக்கும் டக்லஸ், கருணா, பிள்ளையான், அங்கயன், இதர அரசியல்வாதிகள் எவரையும் ஆதரித்து எழுதியதுமில்லை, மிக கடுமையாக விமர்சித்துள்ளேன்.

இப்போ சொல்லுங்கள் நான் தேசியவாதியா இல்லையா?

இல்லை ...நானும் தான் 2009 யில் பாராளுமன்றத்தில் முன்னால் போய் போராட்டங்களில் பங்குபற்றினேன் ...நான் என்ன தேசியவாதியா?
தற்போதும் புலிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கிறேன்...தற்போது உள்ள நிலையில் மக்களை யார் தூக்கி விடுகிறார்களோ அவர்களை நான் ஆதரிக்கிறேன் ...அது டக்கியாய் இருந்தாலும் சரி ,கருணாவாய்  இருந்தாலும் சரி.
முதலில் தேசியம் என்றால் என்ன?
உங்கள் 6வது பதிலில் சொன்னவர்களை விமர்சிப்பதை விடுத்து நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்களோ அவர்களை விமர்சித்து இருக்கலாம் ...செய்ய மாட்டீர்கள்....ஏன் அவர்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு சரி ....அவர்கள் தேசியம் கதைக்கிறார்கள் ...வாய் மூலம் தமிழ் ஈழம் எடுத்து தருவார்கள் இல்லையா கோசான்?
 இவர்கள் துரோகிகள் என்றால் இவர்களை விமர்சிப்பதன் மூலம் என்னத்தை கண்டீர்கள்?
இவ்வளவு அழிவுக்கு பின்னும் யார் இன்னும் உசுப்பேத்துவான் , மக்களை வைத்து உணர்ச்சி அரசியல் செய்வான் என்று பார்த்து தான் நீங்களே ஆதரிக்கிறீர்கள்....கவலையான விசயம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

இல்லை. விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. 

கஜேந்திரகுமார் -the jury is still out.

அப்பன், அப்போ யார்தான் நீங்கள் குறிப்பிடும் " நவீன தமிழ்த் தேசியவாதிகள்"? இவர்களை ஆதரிக்கும் எம்போன்றவர்களைச் சொல்கிறீர்களோ? நான் எப்போதுமே தேசியத்தை ஆதரித்துத்தானே வருகிறேன், இதில் நவீனம் ஏதுமில்லையே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

 

இல்லை. விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. 

கஜேந்திரகுமார் -the jury is still out.

ஓம் விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி தான் ...அரசியல் செய்யும் போது மட்டும் தமிழ் கதைப்பார் ...அவற்ற வீட்டை போனால் பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகளோட சிங்களத்தில கூடிக் குலாவுவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

இல்லை ...நானும் தான் 2009 யில் பாராளுமன்றத்தில் முன்னால் போய் போராட்டங்களில் பங்குபற்றினேன் ...நான் என்ன தேசியவாதியா?
தற்போதும் புலிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கிறேன்...தற்போது உள்ள நிலையில் மக்களை யார் தூக்கி விடுகிறார்களோ அவர்களை நான் ஆதரிக்கிறேன் ...அது டக்கியாய் இருந்தாலும் சரி ,கருணாவாய்  இருந்தாலும் சரி.
முதலில் தேசியம் என்றால் என்ன?
உங்கள் 6வது பதிலில் சொன்னவர்களை விமர்சிப்பதை விடுத்து நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்களோ அவர்களை விமர்சித்து இருக்கலாம் ...செய்ய மாட்டீர்கள்....ஏன் அவர்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு சரி ....அவர்கள் தேசியம் கதைக்கிறார்கள் ...வாய் மூலம் தமிழ் ஈழம் எடுத்து தருவார்கள் இல்லையா கோசான்?
 இவர்கள் துரோகிகள் என்றால் இவர்களை விமர்சிப்பதன் மூலம் என்னத்தை கண்டீர்கள்?
இவ்வளவு அழிவுக்கு பின்னும் யார் இன்னும் உசுப்பேத்துவான் , மக்களை வைத்து உணர்ச்சி அரசியல் செய்வான் என்று பார்த்து தான் நீங்களே ஆதரிக்கிறீர்கள்....கவலையான விசயம் 
 

1. மேலே எழுதியதை தயவு செய்து வாசியுங்கள். 2015 க்கு பின் நான் யாரையும் ஆதரிப்பதில்லை. விக்கியின் அணுகுமுறையை நான் இப்போ ஆதரிக்கவில்லை. 2013 இல் விக்கி,சம்,சும் 3 பேரிடமும் நான் சிலதை எதிர்பார்தேன். நடக்கவில்லை. ஆனால் இந்த மூவரில் விக்கி தமிழ் தேசிய கொள்கைக்கு நேர்மையாக இருப்பது தெரிகிறது. மற்றைய இருவரும் அதை பாவித்து அரசியல் மட்டுமே செய்கிறார்கள்.

2. நான் தமிழ் ஈழம் கோரியவனும் இல்லை. தமிழ் ஈழம் ஒரு போதும் சாத்தியபடாது என்பது எனக்கு  ஒரு 16 வயதிலேயே புரிந்து விட்டது. அப்பவே கோராதவன் இப்பவா கோருவேன்? நான் யாரையும் உசுபேத்தவும் இல்லை. 

3. அப்போ நான் இப்போ எதிர்பார்க்கும் தமிழ் தேசிய அரசியல்தான் என்ன? 3 தமிழ் தேசிய கட்சிகளும் இணந்து 13 ஐயாவது தக்கவைக்க வேண்டும்.

4. கருணா/அங்கயன் அரசியலை நான் பின்பற்ற முடியாது? ஏன் ஏனென்றால் இண்டைகு கிழக்கு செயளணிக்கு நடந்தது நாளைக்கே எங்கு நடக்கும். இவர்களால் சித்தாண்டி கோவில் தேங்காய் உடைக்கும் கல்லை கூட காப்பாற்ற முடியாது. ஆகவே இந்த அரசியலை நான் விமர்சிப்பேன். ஆனால் இதை துரோக அரசியல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அபிவிருத்தி அரசியல். செய்யுங்கள். மக்கள் ஏற்றால் சரி. ஆனா இதை தமிழ் தேசிய அரசியல் என்று சொல்ல வேண்டாம். நீங்களும் சொல்வதில்கைதான்.

 

6 minutes ago, ரதி said:

ஓம் விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி தான் ...அரசியல் செய்யும் போது மட்டும் தமிழ் கதைப்பார் ...அவற்ற வீட்டை போனால் பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகளோட சிங்களத்தில கூடிக் குலாவுவார் .

நான் 2013 எழுதியபோதே இதை பலர் எழுதி நான் விளக்கமும் கொடுத்துவிட்டேன்.

தமிழ் தேசியாவாதி சிங்கள பெண்ணை கட்டமாட்டான், பிள்ளைகளை சிங்கள வீட்டில் கொடுக்க மாட்டான் என்பதெல்லாம் இல்லை.

தமிழ் தேசியம் என்பது எமது இனத்தின் அரசியல் உரிமை பற்றியது. ஒவ்வொரு தமிழனதும் தனி வாழ்வு பற்றியது அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவிட வேலிக்கு வண்ணப்பூச்சு!

received_355646352238723-960x443.jpeg?189db0&189db0

 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு திலீபனின் நினைவிடத்தை அழகுபடுத்தும் ஆரம்ப கட்ட வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திலீபனின் நினைவு தூபியை சுற்றியுள்ள கம்பி வேலி இன்று (09) இரவு வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/தியாக-தீபம்-திலீபனின்-நி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

அப்பன், அப்போ யார்தான் நீங்கள் குறிப்பிடும் " நவீன தமிழ்த் தேசியவாதிகள்"? இவர்களை ஆதரிக்கும் எம்போன்றவர்களைச் சொல்கிறீர்களோ? நான் எப்போதுமே தேசியத்தை ஆதரித்துத்தானே வருகிறேன், இதில் நவீனம் ஏதுமில்லையே? 

நாம் தமிழர் திரியில் மீதி கதையை காண்க🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாம் தமிழர் திரியில் மீதி கதையை காண்க🤣

உங்களுக்கு வேற வேலையில்லை.

2 hours ago, goshan_che said:

கருணா/அங்கயன் அரசியலை நான் பின்பற்ற முடியாது? ஏன் ஏனென்றால் இண்டைகு கிழக்கு செயளணிக்கு நடந்தது நாளைக்கே எங்கு நடக்கும். இவர்களால் சித்தாண்டி கோவில் தேங்காய் உடைக்கும் கல்லை கூட காப்பாற்ற முடியாது. ஆகவே இந்த அரசியலை நான் விமர்சிப்பேன். ஆனால் இதை துரோக அரசியல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அபிவிருத்தி அரசியல். செய்யுங்கள். மக்கள் ஏற்றால் சரி. ஆனா இதை தமிழ் தேசிய அரசியல் என்று சொல்ல வேண்டாம். நீங்களும் சொல்வதில்கைதான்.

இதை எங்கேயோ கேட்டமாதிரிக் கிடக்கே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவு தினப் பேரணியை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தடை

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரை பேரணியயான்றினை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்டவேளை அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன், இது தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளார் எனவும் தெரிவித்தார்.

 

http://www.ilakku.org/திலீபனின்-நினைவு-தினப்-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாயில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்ய ஏற்பாடு!

thiliban-2.jpg?189db0&189db0

 

கோப்பாயில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இடத்தில், நினைவேந்தல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டத்தரணி வி.ணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு துறை பொறுப்பாளர் வீரா ஆகியோர் நேற்று மாலை ஊர் மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது அங்கு இந்த முறை நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு எற்படுகளை செய்து தருமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் ஊர் மக்களுடன் இணைந்து தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை அங்கு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் பிரிவு அறிவித்துள்ளது.

https://newuthayan.com/கோப்பாயில்-தியாக-தீபம்/

 

Link to comment
Share on other sites

 

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை ஆரம்பமாகவிக்கும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக 20 பேருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவ்வழக்கு இன்று நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நானும், சக சட்டத்தரணி சுகாசும் மன்றில் முன்னிலையாகியிருந்தோம். பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து, திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று சமர்ப்பணத்தை நாங்கள் மன்றில் செய்திருந்தோம்.

https://www.ibctamil.com/srilanka/80/150564

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் தலைமைகள் ஆழ ஊடுருவி வேலை செய்கிறது. காலங்காலமாய்த் தமிழனைக் கொண்டே தமிழனுக்கு ஆப்பு வைக்கும் வேலைகளில் கச்சிதமாக ஒன்று கூடிச் செயற்படுகிறார்கள். இந்தத் தீர்ப்பு ஒன்றை வைத்தே வருங்காலத்தில் வரும் எல்லா நிகழ்வுகளுக்கும் தடை வைக்கப் போகிறார்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 23:05, goshan_che said:

நான் எப்போதும் தமிழ் தேசியவாதிதான்.

1. பிறப்பு-2009 - சில விடயங்களில் புலிகள் பிழைவிட்டாலும், அவர்களின் தேசியத்தின் மீதான பற்றுருதி, அவர்களை விட செயல்திறன் உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் - அப்போ என் நிலை “மூடிட்டு” இருந்த சைலன்ட் தேசியவாதி. ஆனால் யுத்த நிறுத்தம் கோரிய லண்டன் போராட்ங்களில் ஒரு சகதமிழானாக பங்கெடுத்தேன். அப்போதும் புலி ஆதரவாளனாய் அல்ல. தமிழ் தேசிய வாதியாய்.

2. 2009-2013 குழப்பம் மிஞ்சிய காலம். 

3. 2013- விக்கியின் வருகை. சம்-சும்-விக்கி தேசியத்தை முன்னெடுப்பார்கள் என்ற நப்பாசை துளிர்விட. அவர்களை ஆதரித்த தமிழ் தேசியாவாதி. அப்போதும் தனி மனித அரசியலால் ஈர்க்கப்ட்டல்ல. அந்த நிலையில் அவர்கள்தான் சரியான தெரிவாக தென்பட்டனர். இலக்கு எப்போதும் போல தமிழ் தேசியம்தான்.

4. 2015 பின்- சுமந்திரன் அந்த விசயத்துகு சரிப்படார் என புரிந்தது. விக்கி செயல் முடங்கி நின்றார். மீண்டும் குழப்ப நிலை. ஆனாலும் கொள்கை தமிழ் தேசியம்தான்.

5. நான் ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் தமிழ்தேசியத்தை முந்தள்ளுவார்கள் என நான் நினைக்கிறேனோ அவர்கள் பின்னால் நிற்கிறேன்.

6. இதுவரைக்கும் டக்லஸ், கருணா, பிள்ளையான், அங்கயன், இதர அரசியல்வாதிகள் எவரையும் ஆதரித்து எழுதியதுமில்லை, மிக கடுமையாக விமர்சித்துள்ளேன்.

இப்போ சொல்லுங்கள் நான் தேசியவாதியா இல்லையா?

இல்லை. விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. 

கஜேந்திரகுமார் -the jury is still out.

அர்ச்சனை வேலை செய்ய தொடங்கிட்டுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடைவிதிக்கப்பட்டமை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை – கூட்டமைப்பு முடிவு

 
 

தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து பேச தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் இன்று மாலை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினர்

குறித்த கலந்துரையாடலில், தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை இம்முறை அனுஸ்டிப்பதற்கு நீதிமன்று தடை விதித்துள்ளமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு தமிழ் கட்சிகள் எவ்வகையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து, விரைவாக கூடி கலந்துரையாடி ஒரு முடிவு எடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

அதற்கு தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை குறித்த கலந்துலையாடலை நடாத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர்

மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களாட எஸ். சிறீதரன், த.சித்தார்த்தன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாதகரசபை பிரதி மேஜர் து.ஈசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், க.விந்தன், ஜனநாய போராளிகள் கட்சி உறுப்பினர் க.வேந்தன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

 

http://www.ilakku.org/தடைவிதிக்கப்பட்டமை-தொடர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் தடைகளைத் தாண்டி மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’

உலகின் ஜனநாயக விழுமியங்களை மதித்து தனது மக்களின் அடிப்படை அரசியல் மற்றும் ஜனநயக உரிமைகளை முன்வைத்து நீர் ஆகாரமின்றி உண்ணா நோன்பிருந்து தனது மக்களுக்காக மரணித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தீயாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இனவாத சிங்கள அரசு தடை விதித்துள்ளது.

விடுதலைக்காகப் போராடும் மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டும் என்றால், அவர்களின் மனங்களில் இருந்து அவர்களுக்காகப் பேராடியத் தலைவர்களின் நினைவுகளை அழித்துவிடுவதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரிடம் கடத்தப்படும் விடுதலை உணர்வகளை அழித்துவிடலாம் என எண்ணுகின்றது சிறீலங்கா அரசு. எனவேதான, தனது நீதி அதிகாரம், படைபலம் கொண்டு தமிழ் மக்கள் மீது இந்த வன்முறைகளை சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.

thileepan last wish: மாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்! - thileepan death anniversary september 26 | Samayam Tamil

ஆனால் சிறீலங்கா அரசின் இந்த அடக்குழுறைகளுக்கு நாம் அஞ்சிவிடாது அதனை உடைக்கும் வழிகளைத் தேடவேண்டும். எமது மக்களின் விடுதலை உணர்வைத் தக்கவைப்பதன் மூலம், இனத்தின் விடுதலைக்கானப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.

எனவே சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும். தமிழ் பல்கலைக்கழக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்கள் என்பன இதற்கானப் பங்களிப்புக்களை உடனடியாக வழங்க வேண்டும்.

கிராமம் கிராமமாக மக்கள் தீயாக தீபத்துக்கான நினைவேந்தல் நிகழ்வைத் தொடர் உண்ணாவிரத போராட்டமாக ஆரம்பித்து நடத்த வேண்டும். ஒவ்வொருக் கிராமத்திலும், ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு பாடசாலைகளிலும், ஒவ்வொரு சனசமூகநிலையங்களிலும், ஒவ்வொரு ஆலயங்களிலும் அதற்கான ஏற்பாடுகளை மக்களாக முன்வந்து மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்குரிய உதவிகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களும், மாணவர் அமைப்புக்களும், பொது அமைப்புக்களும், புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ் புத்திஜீவிகளும், தேசியச் செயற்பாட்டாளர்களும் வழங்க வேண்டும்.

தியாக தீபம் திலீபன் – நினைவலைகள் – ஈழம் செய்திகள்

தாயகத்து தமிழ் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு  தமிழக மக்களும் தமது ஆதரவுகளை வழங்கி, சிறீலங்கா அரசின் வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும்.

தீயாக தீபத்தின் பல இலட்சம் பதாதைகளை அச்சிடுவோம் அதனை மக்களிடம் வழங்கி, நினைவு எழுச்சியை மக்களிடம் இருந்து ஆரம்பிப்போம். சிங்கள அரசின் படைகள் எத்தனை மக்களை சிறையில் அடைக்க முடியும் என்பதை நாமும் பார்த்துவிடுவோம்.

செப் 17, 1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் மூன்றாம் நாள் – தமிழ் வலை

ஜனநாயக வழிகளில் நடக்கும் மக்கள் மீது, சிங்கள அரசு அடக்கு முறைகளை மேற்கொண்டால் அதனை அனைத்துலகத்தினதும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களினதும் கவனத்திற்கு கொண்டுவரும் பணிகளைத் தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளும், புலம்பெயர் அமைப்புக்களும் முன்னின்று செய்ய வேண்டும்.

திலீபன் வேண்டி நின்ற மக்கள் புரட்சி  இன்றே வெடிக்கட்டும் அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணையவேண்டும் என இலக்கு ஊடகம் தமிழ் மக்களை பணிவுடன் வேண்டி நிற்கின்றது.

http://www.ilakku.org/let-the-peoples-revolution-explode-beyond-the-barriers-of-sri-lanka/

தடை உத்தரவிலும் திலீபனின் நினைவேந்தல் இளைஞர்களினால் முன்னெடுப்பு

தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவு வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் பாதுகாப்பு படைகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் உணர்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு கிழக்கில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற பொலிஸ் தலைமையகத்தின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றங்கள் ஊடாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்க ஏற்பாடாகியிருந்த பகுதிகளில், நேற்று பொலிஸார் குவிக்கப்பட்டு காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் அனைத்தும் இரவோடிரவாக அகற்றப்பட்டிருந்தன.

 

இந்த நிலையிலேயே தடைகளைத் தாண்டி மேற்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இன்று காலை யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில்  தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது. சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு முடிவடைந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற கட்டளையைக் காணப்பித்து சிவாஜிலிங்கத்தை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.

பின்னர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை சுற்றி சிரமாதானப் பணியை முன்னெடுப்பதற்கு இளைஞர் குழுக்கள் அவ்விடத்தில் திடீரென ஒன்று கூடியிருந்தனர். அதை அவதானித்த பொலிஸார் அங்கிருந்த இளைஞர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

 

குறித்த பகுதியில் சிரமதானப்பணியை நிறைவு செய்த இளைஞர்கள் நல்லுார் கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வுக்கு சூழலியல் மேம்பாட்டு அமையத்தின் செயலாளர் கருநாகரன் நாவலன் தலைமைதாங்கியிருந்தார். இதில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும் இடம்பெற்றிருந்தன.

http://www.ilakku.org/தடை-உத்தரவிலும்-திலீபனின/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவேந்தல் தடை; அடுத்த நடவடிக்கை குறித்து ஆராய தமிழக் கட்சிகளுக்கு மாவை அழைப்பு

தியாகி திலீபனின் நினைவேந்தலைத் தடுக்கும் அரசின் நடவடிக்கையை குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ்க் கட்சிகள் கூடி ஆராயவுள்ளன. இதற்கான ஏற்பாட்டை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே மேற்கொண்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நகர்வை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அவரே நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தியாகி திலீபனின் நினைவேந்தலை தாயகமெங்கும் மக்கள் வழக்கமாக அனுஷ்டித்து வருகிறார்கள். இம்முறை தடை உத்தரவு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவா அல்லது வடக்கு பாதுகாப்பு தரப்பு எடுத்து நடவடிக்கையா என்பது தெரியவில்லை. அதையும் ஆராயவேண்டும்.

அரசின் கொள்கை முடிவென்றா லும், பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கை யென்றாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை, தமிழ்ச் சட்டத்தரணிகள் நீதிப்பொறிமுறையின் ஊடாகவே பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுப்பது பற்றியும் நாம்ஆராயவுள்ளோம்.

அது தவிர, யாழ். மாநகரசபை எல்லைக்குள் நினைவேந்தலை தடை செய்து நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளார்கள். இது தொடர்பாக இன்று மதியத்தின் பின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆராயவுள்ளோம். தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அநேகமான கட்சிகள் இன்று சந்திப்பில் கலந்து கொள்வார்கள்” என்றார்.

இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உள்ளிட்ட தரப்புக்கள் கலந்து கொள்ளவுள்ளன எனத் தெரியவருகின்றது.

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை நினைவு கூர்வதற்கு மீண்டும் தடைவிதித்தது யாழ் நீதிமன்றம்!

jaffna-court-560x373-1.jpg?189db0&189db0

 

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனுவை யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் இன்று(15) நிராகரித்துள்ளார்.

கடந்த 14ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று திருத்த மனுவை பரிசோதனை செய்த யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்வதாக அமைவதோடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய குற்றம் என தெரிவித்துள்ளார்.

குறித்த மன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கு.குருபரன் ஆகியோர் முன்னிலையாகிமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/திலீபனை-நினைவு-கூர்வதற்க/

 
 
2018 இல் அனுமதி கொடுத்த அந்தி நீதிபதி,  இப்ப ஏன் இந்த நீதிபதி கொடுக்க முடியாது😡
நீதி நீதிபதிக்கு நீதிபதி வேறு வேறா; இவர் வேற்று உலகில் இருந்து வந்த நீதிபதியா???
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கா தமிழ் காளை சிவாஜியால் திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.