Jump to content

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக்கட்டுப்பாடும் சீனா வசம்! அரசாங்கம் கவலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழு கட்டுப்பாட்டையும் இழந்ததற்கு அரசாங்கம் இன்று கவலை வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு ஒரு சொத்து என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஏனைய நாடுகளின் முக்கிய துறைமுகங்கள் போன்ற உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஏனைய நட்பு நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். எனினும், ஒரு முக்கியமான துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இழப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் ஒப்படைக்க கடந்த அரசு எடுத்த முடிவு குறித்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்கவும் கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தார்.

சீனாவுடன் 2017 டிசம்பரில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் ஆகியவற்றிற்கு ஒப்படைக்கப்பட்டன.

https://www.tamilwin.com/parliment/01/255617?ref=home-top-trending

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு நாட்டையும் அடகு வைத்தாச்சு, இதில் துறைமுகம் ஒரு பகுதியே

Link to comment
Share on other sites

இந்த அரசு ஒரு சீன சார்பு அரசு. வெளியில் இப்படி பேசினாலும் , கவலையை வெளிப்படுத்தினாலும் உள்ளுக்குள் சந்தோசமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா. ஏன் கவலைப்பட வேணும்.. இந்தியன் தான் கவலை பட வேணும் ..

542200_245448642252644_912529970_n.jpg?_ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்போதே சொல்லி இருந்தேன், Lara என்ற பெயரில் வந்த பதிவாளருடன் வாதம் பண்ணும் போது.

அது மதுவுமல்ல, 99 வருட குத்தகை, ஆனால் யதார்த்தத்தில் காலாவதியாகாத குத்தகை. கரணம், அந்த இரு நிறுவங்களின் பங்கீட்டு அமைப்பின் பெரும்பான்மையை வைத்திருப்பது சீன அரசு நிறுவனங்கள்.

எனவே, சீன விரும்பபினால் அன்றி, குத்தகை முடிவில் இரத்து செய்யப்பட முடியாது.

ஓர் வழி உண்டு. தமிருக்கு செய்வது போல பறித்து எடுக்கலாம், எவராவது உதவி செய்தால், விளைவுகளையும் சந்திக்க தயார் என்றால்.

ஆனால் ஒன்று, துறைமுகம் பிரச்னை அல்ல (அதாவது ஹிந்தியை , அமெரிக்கா சொன்னது போல் வர்த்தக அடிப்படையில் காற்றுப் போன பலூன் (dud) அல்ல.), அது யாரின் கட்டுப்பாட்டில் இருப்பது என்கிறதே பிரச்னை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை கொட்டல்களில் மெனுகார்டே சைனாவும்  ஆங்கிலமும்தானாம் சிங்களம் மருந்துக்கு கூட இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவலைப்பட எதுவுமில்லை,

அண்மையில் காஸ்மீரில் இந்தியா தனது பலத்தைப் பாவித்து அதனால் ஏற்பட்ட சர்வதேச விமர்சனங்களையும் சமாளித்து தவிர மலேசியாவுடன் முரண்டுபிடித்து, அதைத் தவிர பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கிக்க்கொடுத்து இவையாவும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேறியது ஆனால் இலங்கைத் தமிழர் விடையத்தில் எதையுமே இந்தியா உருப்படியாகச் செய்யவில்லை. இதில் ஏன் இப்படிச்செய்தது என்பது புதிராக இருக்கு.

சரி இலங்கையில் தொடர்ந்தும் ஒரு தலையிடியாக விடுதலைப்புலிகள் இருந்துவிட்டுப்போகட்டும் எனும் குறைந்தபட்ச நிலைப்பாடே இல்லாது மொத்தமாகக் கையறு நிலையில் இந்தியா ஏன் இராஜீய வங்குரோத்து நிலைக்குப் போனது என்பதில் மர்மம் மட்டுமே.

இலங்கைத் தீவில் தமிழர்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும் வித்தை முள்ளிவாய்க்கலுக்குப் பின்பு இந்தியாவால் முடியாமல் போய்விட்டது. இனிமேல் இந்தியா தமிழர்களுக்கிடையில் எத்தனை அரசியல் குழுக்களை உருவாக்கினாலும் சிங்களத்தை அடக்கி சீனாவின் அச்சுறத்தலிலிருந்து மீழமுடியாது என்பதே தற்போதைய நிதர்சனம்.

இந்தியா தோத்துப்போன நாடு
இலங்கை விடையத்தில்
கடந்த தேர்தலின் பின்பு நிலைமை இன்னமும் இறுக்கமடைந்துவிட்டது. 
தமிழர்கள் இதிலாவது சந்தோசப்படலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.