Jump to content

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் எவ்வித அச்சமும் இன்றி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வாருங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image_812ee6d962.jpg

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றி
எம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“எமது அரசாங்கம், உங்களுக்ளுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன், உங்களிடம் யாராவது தரகுப் பணம் அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால், நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாகத் தெரியப்படுத்தலாம்.

“வெயில் - பனி என்று பாராமல் உங்களை வருத்தி, நீங்கள் உழைக்கும் பணத்தை, உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன் முதலீடு செய்வதற்கு, எமது அரசாங்கம் என்றும் உங்களுக்குப் பக்கபலமாகச் செயற்படும்.

“எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை, உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பன்மடங்கு அழகிய மற்றும் வளம் கொழிக்கும்; உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு, நாம் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம்” என, புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம், பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

https://www.madawalaenews.com/2020/09/blog-post_410.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நிபந்தனைக்கு உட்பட்டு, எங்கள் கண்காணிப்பில், அனுசரணையோடு எங்கள் பெயரில் முதலிடுங்கள். வரி அதிகம், இலாபத்தில் பங்கு நேரடியாக அறவிடப்படும். காலை விட்டிட்டு பிறகு உயிரை திருப்பித்தா என்று கேட்கக்கூடாது.

அபிவிருத்தி என்று புலுடா விட்டாச்சு, ஒரு நாடும் கடன் கொடாது, வாங்கிய கடனை கட்டியாக வேண்டும். புலம் பெயர்ந்தவர்களுக்கு  வலைவீசுகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் முன்னர் பட்ட கடனை எல்லாம் திருப்பிக்கொடுக்கும் தவணை 2020ல் ஆரம்பமாகிறது அதற்கு வட்டியைத்தானும் கட்டித்தீரவேண்டும்.

கொரோணா தீவில் இருந்த கொஞ்சநஞ்ச உள்ளூர் உற்பத்தியையும் இல்லாதொழித்துவிட்டது அனைத்தையும் இறக்குமதி செய்யவேண்டும் தேயிலை ரப்பர் வாசனைத்திரவியங்கள் என நாம் மாணவர் சூழல் வாசகத்தில் படித்தவை எல்லாம் இலங்கையைப் பொறுத்தமட்டில் பழைய கதை அவைக்கான சந்தை வாய்ப்புகள் அனைத்தும் வேறுநாடுகள் பங்குபோட்டுவிட்டன. அப்படி இருந்தாலும் தேயிலைத் தோட்டம் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் கைகளுக்கும் போய்விட்டன அவை கொண்டுபோனது போக மிஞ்சுவது யானைக்குச் சோளப்பொரிபோல்.

இனிமேல் மாட்டிறச்சியையும் இறக்குமதி செய்யவேண்டும் தமிழர்களில் அதுவும் சைவக்காரர்கள் யாழ் குடாநாட்டிலேயே அதிகமானவர்கள் மாடு சாப்பிடத்தொடங்கிவிட்டினம். அவர்களுக்கும் சேர்த்து இறக்குமதி செய்யவேணும்.

வெளிநாட்டு அபிவிருத்திநிதி உதவி மற்றும் கடஙள் எல்லாம் எதிர்காலத்தில் இறக்குமதிக்கே செலவுசெய்யவேண்டும் உள்ளூர் உற்பத்தி மற்றும் அந்நிய செலவாணிக் கையிருப்பு இவை இல்லாது கடதாசிக் காசை அளவுக்கு அதிகமாக அச்சடித்து அரசாங்க உதவித்திட்டம் புதிய அரச வேலைவாய்ப்பு இவைகளுக்கான கொடுப்பனவை நிறைவேற்றுகிறார்கள். சந்தையில் பொறுதளுக்கான கேள்வி அதிகம் வழங்கள் சமனானதாக இல்லை ஆதலால் பணவீக்கம் முன்னை விட இப்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இது குரோணா காலத்தினால் அதிகரித்துள்ளது என்பதில் உண்மையில்லை. 

ஆக அரசாங்கம் வங்குரோத்து நிலையில் உள்ளது  

புலம்பெயர் தமிழர்கள் உறவுகளுக்கு உதவும் வாழ்வாதார உதவியத் தவிர ஏனய பணக்கொடுக்கல்வாங்கல்களை ஓரிரு வருடம் நிறுத்தினால் இன்னமும் ஈடாடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

இனிமேல் மாட்டிறச்சியையும் இறக்குமதி செய்யவேண்டும் தமிழர்களில் அதுவும் சைவக்காரர்கள் யாழ் குடாநாட்டிலேயே அதிகமானவர்கள் மாடு சாப்பிடத்தொடங்கிவிட்டினம். அவர்களுக்கும் சேர்த்து இறக்குமதி செய்யவேணும்.

மாட்டிறைச்சி விலையெண்டால் கோழி உடன் பதுங்குவினம் .

மாடு சாப்பிடுவது குலத்துக்கு நாசம் எண்டு தெரிந்தும் யாழ் முழுக்க மாட்டு கறி  கடைகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

மாடு சாப்பிடுவது குலத்துக்கு நாசம் எண்டு தெரிந்தும் யாழ் முழுக்க மாட்டு கறி  கடைகள் .

அண்ணை இது உங்கள் நம்பிக்கையோ ....?
மாட்டிறைச்சியை செம கட்டு கட்டியே  மூனாக்கள் குடித்தொகை பெருக்கத்தில் நம்மை விஞ்சிட்டினம் 
ஒரு குலமும் அழிந்ததாக தெரியவில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

F9490906-DE0-F-4-A0-A-83-E8-20-CA1-FEB67

இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, colomban said:

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றி
எம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வாங்கோ வந்து முதலை வாய்க்குள் தலையை விடுங்கோ 
தம்பி பசிலே மிஸ்டர் twenty பெர்சன்ட் என்று கமிசனடித்து பெயரெடுத்தவர் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.