Jump to content

சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர்

இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசிய வரலாறு தெரிந்த வெளிநாடு ஆய்வலர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைக்க வேண்டும்.

தீவில் உள்ள பௌத்த சின்னங்கள், தமிழ் பவுத்தர்களுடையதா, சிங்கள பவுத்தர்களுடையதா என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்க்கொள்ளப்படவேண்டும். சிங்கள மொழியின் வரலாறுக்கும், பௌத்தத்தின் வரலாறுக்கும் பாரிய இடைவெளி உள்ளதால், தமிழ் பௌத்தத்தினை வெறுமனே, சிங்கள பௌத்தமாக கூறி நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல.

சிங்கள மொழி தோன்றிய காலப்பகுதியும், தீவுக்கு பௌத்தம் வந்த காலப்பகுதியும் ஒன்றாக இல்லாததால், இது குறித்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். சிங்களமொழியின் ஆரம்பம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அதுகுறித்து தெளிவுகள் தரப்படவேண்டும். 

குறித்த இடத்தில், பண்டைய பொருட்கள் இருந்தால், அவை தமிழ் பௌத்தத்துக்கு உரியதாக இருந்தால், அதனை தமிழர்கள் தான் முன்னெடுக்கவேண்டும் அன்றி வேறு யாரும் அல்ல என்பதைனை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

வழமைபோல, அசந்து போன சிங்களவர்கள், கிளம்பி விட்டார்கள்.... 'அப்போதே சொன்னேன் பார்த்தாயா, இவர் இனவாதி, இவருக்கு வேண்டும் தமிழ் ஈழம்'.... தொடங்கி விட்டார்கள்.

மெதுவாக, ஆனால் உறுதியாக ஐயா வைக்கும் ஆப்பு, சிலரை சங்கடப்படுத்தவே செய்கிறது.

அவர் சொல்ல வருவது, கிறிஸ்துவுக்கு முன் மகிந்தவும், சங்கமித்தையும் ஊடாக பௌத்தம் வந்தது தமிழர்களிடம். கிறிஸ்துவுக்கு பின் 6ம் நூறாண்டில் சிங்கள மொழி உருவானது. ஆகவே வரலாறில் தெளிவு வேண்டும் என்கிறார். மேலும் சிங்கள மக்கள், மகாவம்சத்தினை நம்பாமல், தமது வரலாறு குறித்து ஆய்வு செய்து சரியான தகவல்களை எடுத்துக் கொள்ளவேண்டும், என்பதனை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்காவது தில்லு முதுகெலும்பு இருக்குது என்று சந்தோஷப்படுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ragaa said:

ஒருத்தருக்காவது தில்லு முதுகெலும்பு இருக்குது என்று சந்தோஷப்படுவோம்

அதுதான் விக்கி ஐயா, பார்ப்போம் பொறுத்திருந்து, இந்த கயிறு இழுந்தல் போட்டியை,

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அதுதான் விக்கி ஐயா, பார்ப்போம் பொறுத்திருந்து, இந்த கயிறு இழுந்தல் போட்டியை,

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

நியாயமான பயம். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013 இல் இவர் வரவை ஆதரித்து எழுதிய போது விக்கியிடம் நான் எதிர்பார்த்தது

1. ஊழல் இன்மை ✔️

2. உண்மையை துணிந்து பேசல்✔️

3. தமிழ் தேசியத்தின் மீது பற்று✔️

4. 2009 போரின் பின்னான கையறு நிலையில் நின்ற எமது மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒரு கெளரவமான தீர்வை எடுக்கும் நயம் அல்லது இராசதந்திரம்

4ம் விடயமும் அவரிடம் இருக்கிறது என்பதை அவர் காட்ட இன்னும் கால அவகாசம் உண்டு.

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும். 

செய்வாரா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

கடந்த கால வரலாறு எமக்கு அந்தப் பயத்தை ஏற்படுத்தினாலும், சிங்களவன் இனியொரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தன் தலையில்  தானே மண் அள்ளிக்கொட்ட மாட்டான். வேறுவழியில் செய்வான். விக்கினேஸ்வரன் ஐயாவைத் துலைக்கலாம், ரவிராஜுக்கு நடந்ததுபோல். அவருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நம்பிக்கை இழப்பு செய்யலாம். அதற்காக வாயை மூடிக்கொண்டிருந்தால் நாம் அடிமைகளாக இருக்க வேண்டியதே.? பிறகு எதற்கு சர்தேசம் போக வேண்டும்? அறிக்கைகள் விடவேண்டும்? போராட்டம் நடத்த வேண்டும்? மேடை போட்டு பேச வேண்டும்? தேர்தல் நடத்த வேண்டும்? உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும்?  சும்மா இருக்கலாமே? அவர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு குடைச்சல் கொடுத்து, குற்றச் சாட்டுகளை அடுக்கி அரசாங்கமும் அதன் முகவர்களும் அவரை வெளியில் அனுப்பிய காரணமும் அதே. அவர் வாய்மூடி ஞானியாக இருக்க மாட்டார் என்பதே.

 

6 hours ago, goshan_che said:

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும்.

 

சுமந்திரன் ஒரு நேர் காணலில் கூறியிருந்தார் தமிழ்கட்சிகள் பல உள்ளன, விக்கினேஸ்வரன் தனித்து இயங்க முடியாது அவர்களுடன் இணைந்தே செயற்படவேண்டும். மனோ கணேசன் கூறியது விக்கினேஸ்வரன் ஐயா பாராளுமன்றத்தில்  தெரிவித்தது அவரது சொந்தக்கருத்து. ஆக இவர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனாலேயே அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க முன்வரவில்லை. இவர்களோடு விக்கி ஐயா சேர்ந்தால் அவரால் இயல்பாக பேச முடியாது, முன் போல் ஓரங்கட்ட வாய்ப்புள்ளது. தனித்தும் செயற்பட முடியாது, மீண்டும் அவரை  குற்றவாளியாக்கி அவர் குரலை அடக்கவே சந்தர்ப்பம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

 

 

சுமந்திரன் ஒரு நேர் காணலில் கூறியிருந்தார் தமிழ்கட்சிகள் பல உள்ளன, விக்கினேஸ்வரன் தனித்து இயங்க முடியாது அவர்களுடன் இணைந்தே செயற்படவேண்டும். மனோ கணேசன் கூறியது விக்கினேஸ்வரன் ஐயா பாராளுமன்றத்தில்  தெரிவித்தது அவரது சொந்தக்கருத்து. ஆக இவர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனாலேயே அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க முன்வரவில்லை. இவர்களோடு விக்கி ஐயா சேர்ந்தால் அவரால் இயல்பாக பேச முடியாது, முன் போல் ஓரங்கட்ட வாய்ப்புள்ளது. தனித்தும் செயற்பட முடியாது, மீண்டும் அவரை  குற்றவாளியாக்கி அவர் குரலை அடக்கவே சந்தர்ப்பம் உண்டு.

நீங்கள் சொல்வது யதார்தமாகவே படுகிறது.

வரலாற்றை பற்றி சொல்வது அவரவர் பிரச்சனை. ஆனால் எல்லாரும் 13ஐ தக்கவைக்க வேண்டும் என்பதில் ஒரே கொள்கை நேர் கோட்டில் வருபவர்கள்தானே.

இந்த ஒரு விடயத்தை மட்டும் முன்னிறுத்தியாவது ஒரு குறைந்த பட்ச வேலைதிட்டத்தில் இணைந்து செயல்படவேண்டும். 

இது எனது ஆசை, நப்பாசை. வெகு விரைவில் ஆகக்கூடும் நிராசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

விக்கினேஸ்வரன் ஐயாவைத் துலைக்கலாம், ரவிராஜுக்கு நடந்ததுபோல். அவருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நம்பிக்கை இழப்பு செய்யலாம். அதற்காக வாயை மூடிக்கொண்டிருந்தால் நாம் அடிமைகளாக இருக்க வேண்டியதே.? பிறகு எதற்கு சர்தேசம் போக வேண்டும்? அறிக்கைகள் விடவேண்டும்? போராட்டம் நடத்த வேண்டும்? மேடை போட்டு பேச வேண்டும்? தேர்தல் நடத்த வேண்டும்? உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும்?  சும்மா இருக்கலாமே? அவர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு குடைச்சல் கொடுத்து, குற்றச் சாட்டுகளை அடுக்கி அரசாங்கமும் அதன் முகவர்களும் அவரை வெளியில் அனுப்பிய காரணமும் அதே. அவர் வாய்மூடி ஞானியாக இருக்க மாட்டார் என்பதே.

தோழர்..

கூட்டணி கும்பல் சேர்த்தால் தனிபட்ட கருத்து/சொந்த கருத்து என்டு பஞ்சாயத்து பண்ணி பாதி நேரம் தாவு தீர்ந்துவிடும் ..👌

விக்கி ஐயா கூட்டணி என்டு கும்பல் சேர்க்காமல்  சொந்த கட்சியில் இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்ட தலைவர்களை , இளம் தலைமுறையினரை அவர்க்கு பின் கொள்கை பிடிப்புடன் வளர்த்தெடுக்க வேண்டும் .. செய்வாரா .. விடுவார்களா.? காலம் முடிவு செய்யும் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

2013 இல் இவர் வரவை ஆதரித்து எழுதிய போது விக்கியிடம் நான் எதிர்பார்த்தது

1. ஊழல் இன்மை ✔️

2. உண்மையை துணிந்து பேசல்✔️

3. தமிழ் தேசியத்தின் மீது பற்று✔️

4. 2009 போரின் பின்னான கையறு நிலையில் நின்ற எமது மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒரு கெளரவமான தீர்வை எடுக்கும் நயம் அல்லது இராசதந்திரம்

4ம் விடயமும் அவரிடம் இருக்கிறது என்பதை அவர் காட்ட இன்னும் கால அவகாசம் உண்டு.

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும். 

செய்வாரா?

கோசான் அண்ணை 
2ம் , 3ம் இருந்தால் 4 சரிவராது 
4 வது  இருந்தால் 2ம் ,3ம் செட் ஆகாது 
இரண்டும் எதிரெதிர் துருவங்கள், ரெண்டிற்கும் நடுவில் நிற்கப்போனால் ஐயா தனது தனித்தன்மையை இழக்கவேண்டிவரும் ,அத்துடன் செயல்படா நிலைக்கு போய் மக்களின் எதிர்ப்பையும் சந்தித்து காணாமல் போவார், கூத்தமைப்பிற்கு நடந்ததும் இதுவே   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் சிங்கள பவுத்தர்களின் சரித்திரத்தையே கேள்விக்குறியாக்கி விக்கி ஐயா புதிய களமுனையை திறந்திருக்கிறார். இனி வரும் காலங்களில் நிச்சயம் தமிழினம் அவருக்கு பின்னால் அணிதிரண்டு பேராதரவை வழங்குவர். திராணியற்ற பெரும் பெரும் ஜாம்பவான் தமிழ் அரசில்வாதிகளுடன் எதிரணியில் நிற்பதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஐயாவின் கட்சியில் தனியாளாய் நாடாளுமன்றத்திற்கு தெரிவான பின்னரும் சளைகாமல் தனது கடமையை சரிவர செய்வதாகவே தெரிகிறது. வாழா வெட்டியாக நாடாளுமன்றம் சென்றுவரும் சம்சும் கோஷ்டிக்கு இவர் மிகபெரிய சவால். பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது யதார்தமாகவே படுகிறது.

வரலாற்றை பற்றி சொல்வது அவரவர் பிரச்சனை. ஆனால் எல்லாரும் 13ஐ தக்கவைக்க வேண்டும் என்பதில் ஒரே கொள்கை நேர் கோட்டில் வருபவர்கள்தானே.

இந்த ஒரு விடயத்தை மட்டும் முன்னிறுத்தியாவது ஒரு குறைந்த பட்ச வேலைதிட்டத்தில் இணைந்து செயல்படவேண்டும். 

இது எனது ஆசை, நப்பாசை. வெகு விரைவில் ஆகக்கூடும் நிராசை.

நீங்க சொல்லுறத ஏத்துக்கறத்துக்கு மனசு அடிச்சுக்குது எசமான்... ஆனா பளச புறட்டிப்பாத்தா மனசு ஏத்துக்க மாட்டேங்குதெ எசமா ஏத்துக்க மாட்டேங்குதே....🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கோசான் அண்ணை 
2ம் , 3ம் இருந்தால் 4 சரிவராது 
4 வது  இருந்தால் 2ம் ,3ம் செட் ஆகாது 
இரண்டும் எதிரெதிர் துருவங்கள், ரெண்டிற்கும் நடுவில் நிற்கப்போனால் ஐயா தனது தனித்தன்மையை இழக்கவேண்டிவரும் ,அத்துடன் செயல்படா நிலைக்கு போய் மக்களின் எதிர்ப்பையும் சந்தித்து காணாமல் போவார், கூத்தமைப்பிற்கு நடந்ததும் இதுவே   

அக்னி,

நீங்கள் சொல்வது உண்மையே. 

2,3 ஐ 4 உடன் பலன்ஸ் பண்ணி போவதுதான் இலங்கை தமிழ் அரசியலில் மக்களை வெல்ல வைப்பதற்க்கான சூட்சுமம்.

ஆனால் இது ஒரு impossible எதிர்பார்ப்பா?

விக்கி மட்டும் அல்ல யாராலேயும் முடியாத விடயமா?

எனக்கும் பதில் தெரியவில்லை.

1 hour ago, Kapithan said:

நீங்க சொல்லுறத ஏத்துக்கறத்துக்கு மனசு அடிச்சுக்குது எசமான்... ஆனா பளச புறட்டிப்பாத்தா மனசு ஏத்துக்க மாட்டேங்குதெ எசமா ஏத்துக்க மாட்டேங்குதே....🤔

குத்துங்க எசமான், குத்துங்க.

இந்த தமிழங்களே இப்படித்தான் எசமான்😡.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

இதனால் தான் இவர்கள் எல்லா விடயங்களிலும் இணைய வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். தற்போது இருக்கும் துரும்பான 13 இற்கு மட்டும் இணைந்து வாக்களிக்கலாம். மற்றபடி போர்க்குற்ற விசாரணைக்கு ஒருவர், வரலாற்றிற்கு ஒருவர், அபிவிருத்திக்கு ஒரு தரப்பு என சமாந்தரமாகச் செல்லட்டும். இந்த முறையில் ஒரு இழப்பும் இருக்காது தமிழர்களுக்கு! இந்த 13 விடயத்தில் பிள்ளையான் குழுவையும் எப்படியாவது இணைக்க முயற்சித்தால் இன்னும் சிறப்பு!

(வெள்ளிக் கிழமை எங்கள் இருவருக்கும் கனவு கூடிப் போய்ச்சுது!😁)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, முதல்வன் said:

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

 

45 minutes ago, Justin said:

இதனால் தான் இவர்கள் எல்லா விடயங்களிலும் இணைய வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். தற்போது இருக்கும் துரும்பான 13 இற்கு மட்டும் இணைந்து வாக்களிக்கலாம். மற்றபடி போர்க்குற்ற விசாரணைக்கு ஒருவர், வரலாற்றிற்கு ஒருவர், அபிவிருத்திக்கு ஒரு தரப்பு என சமாந்தரமாகச் செல்லட்டும். இந்த முறையில் ஒரு இழப்பும் இருக்காது தமிழர்களுக்கு! இந்த 13 விடயத்தில் பிள்ளையான் குழுவையும் எப்படியாவது இணைக்க முயற்சித்தால் இன்னும் சிறப்பு!

(வெள்ளிக் கிழமை எங்கள் இருவருக்கும் கனவு கூடிப் போய்ச்சுது!😁)

முதல்வன்,

இந்த கோணத்தில் நான் சிந்திக்கவில்லை ஆனால் நல்லாத்தான் இருக்கு.

கிட்டதட்ட 85-87 யாழ் குடாநாட்டை பல இயக்கங்கள் சேர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை போல.

ஜஸ்டின் சொல்வது போல் - தனி தனி specialism தை வைத்து கொண்டு - 13க்கான அழுத்தம் என்ற வகையில் அந்த ஒரு விடயத்தில் மட்டும் 3 கட்சியும் ஒன்றாய் பயணிக்கலாம்.

 அடுத்த கட்டமாக மனோ போன்றோரிடம் “வெளியில் இருந்து ஆதரவு” கோரலாம்.

அதற்கும் அடுத்த கட்டமாக பிள்ளயான் போன்றோரின் ஆதரவையும் கோரலாம். ஆனால் அவர் இணைவது உண்மையில் அவர் சுயமானவரா அல்லது அரசின் 100% பங்காளியா என்பதில் தங்கியுளது.

டக்லஸ், கருணா, அங்கயன், வியாழேந்திரன் இவர்களை இணைப்பது கடினம், இணையவும் மாட்டார்கள். ஆனால் அவர்கள் முடிந்தவை அபிவிருத்தியை செய்யலாம்.

#கனவு காணும் வாழ்கை யாவும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் சொன்ன "பல திசைகளில் வெடி கொழுத்திப் போட்டு காரியம் சாதிப்பது" என்பதை வாசித்த போது பிரெக்சிற் வெளியேற்றத்திற்கு உழைத்த டொமினிக் கம்மிங்ஸ் பற்றிய திரைப்படம் நினைவுக்கு வருகிறது! கம்மிங்ஸ் செய்தது அது தான், அங்கே ஒரு வெடி, ஊடகங்களும் எதிர் தரப்பும் அங்கே ஓடும், பிறகு இங்கே ஒரு கிரனைற் ஊடகங்களும் எதிர்தரப்பும் இங்கே ஓடி வரும்! 

A balding man in a blue jumper, his untidy shirt sticking out at the edges. He standings against a red background, with the word Brexit in large white letters.

டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வென்ற போது ஒரு ரஷ்ய பத்திரிகையாளர் பின்வருமாறு  எச்சரிந்திருந்தார்! "இவர் பல வெடிகளை மாறி மாறிப் போட்டு ஊடகங்களை மிக பிசியாக வைத்திருப்பார். திரைக்குப் பின் தனது கட்சியும் வாக்காளர்களும் எதிர்பார்த்த காரியங்களை சத்தமில்லாமல் முடித்து விடுவார். இந்த சத்தமில்லாத காரியங்களை நாம் கவனமாக அவதானித்து வெளிக்கொணர வேண்டும்". இதை பலர் கவனிக்கவில்லை. இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாரை தப்பட்டையோடு வந்தார்கள்! அவர்களுக்கு கீழ் இருக்கும் சமஷ்டி நீதிமன்றங்களில்  டசின் கணக்கில் இன்று ட்ரம்பின் பார்வை கொண்ட நீதிபதிகள் ஆரவாரமின்றி அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். ஒரு லிபரல் ஆதரவு தீர்ப்பைப் பெற வேண்டுமானால் கல்லில் நார் உரிக்க வேண்டும்! 

இது போலத் தான் தமிழர்கள் இனி நடந்து கொள்ள வேண்டும்! என்னைப் பொறுத்த வரை எங்கள் தாயக அரசியலில் diversity is a blessing!

 

Link to comment
Share on other sites

12 hours ago, முதல்வன் said:

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

 

ஒருங்கிணைந்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்ற முடிவின் பின்னரே இந்த கனவு காணநேரிடுகின்றது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பலதரப்பட்ட இயக்கங்களின் தேற்றப்பாட்டை இது நினைவுபடுத்துகின்றது. தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து குழுக்களாக இயங்க தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட காலத்தில் சிங்கள அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் குழுக்கள் வந்துவிடும். தனித் தனியாக திரியும் போது பேரினவாத்தின் வேட்டைக்கு சுலபமாக இலக்காகும் நிலை ஏற்படும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒன்றிணைப்பது தமிழ்ச் சமூகத்தில் சாத்தியமற்றும் போகும். மேலும் பத்துக் குழுக்கள் பத்து கோரிக்கைகளை வைத்து முன்நகரும்போது அந்த பத்துக் குழுக்களுக்குள்ளும் முரண்பாடுகளை மூட்டிவிட்டு கோரிக்கைகளை பலவீனப்படுத்தவும் முடியும். 

ஒரு பொதுக் கருத்தில் உறுதியாக பத்துக் குழுக்கள் இருப்பது வேறுவிசயம். ஒரு பொது தலமையின் வழிநடத்தலின் கீழ் பத்துக் குழுக்கள் இயங்குவது வேறுவிசயம். ஆனால் பத்துக் குழக்கள் தன்னிச்சையாக இயங்குவது வேறு விசயம். ஒரு தேர்தலில் இந்த பத்து குழுக்களும் மூன்று சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் போவார்கள். மக்களின் வாக்கு பலம் சிதையும். 

தன்னிச்சையான குழுக்களை எதற்கு தலமை ஏற்கவேணும் என்பதை விரைவில் எதிர்த்தரப்பு தீர்மானித்து விடும். அதற்கு ஏற்ற சமூக முரண்பாடுகள் எம்மிடத்தில் உள்ளது. கருணா பிள்ளையான் கிழக்கு பிரதேசவாதத்திற்கு தலமை ஏற்பது போல. 

பொருளாதார ஆதாயம் சொத்துக் குவிப்பு நோக்கிலான அரசியல் ஈடுபாடு முன் எப்போதுமில்லாதளவுக்கு காணப்படுகின்றது என்பது கவனத்தில் எடுக்கவேண்டிய முக்கியமான விசயம். 

என் மனதில் பட்டவை மற்றபடி உங்கள் கனவை கலைக்க விரும்பவில்லை. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

ஒருங்கிணைந்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்ற முடிவின் பின்னரே இந்த கனவு காணநேரிடுகின்றது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பலதரப்பட்ட இயக்கங்களின் தேற்றப்பாட்டை இது நினைவுபடுத்துகின்றது. தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து குழுக்களாக இயங்க தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட காலத்தில் சிங்கள அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் குழுக்கள் வந்துவிடும். தனித் தனியாக திரியும் போது பேரினவாத்தின் வேட்டைக்கு சுலபமாக இலக்காகும் நிலை ஏற்படும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒன்றிணைப்பது தமிழ்ச் சமூகத்தில் சாத்தியமற்றும் போகும். மேலும் பத்துக் குழுக்கள் பத்து கோரிக்கைகளை வைத்து முன்நகரும்போது அந்த பத்துக் குழுக்களுக்குள்ளும் முரண்பாடுகளை மூட்டிவிட்டு கோரிக்கைகளை பலவீனப்படுத்தவும் முடியும். 

ஒரு பொதுக் கருத்தில் உறுதியாக பத்துக் குழுக்கள் இருப்பது வேறுவிசயம். ஒரு பொது தலமையின் வழிநடத்தலின் கீழ் பத்துக் குழுக்கள் இயங்குவது வேறுவிசயம். ஆனால் பத்துக் குழக்கள் தன்னிச்சையாக இயங்குவது வேறு விசயம். ஒரு தேர்தலில் இந்த பத்து குழுக்களும் மூன்று சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் போவார்கள். மக்களின் வாக்கு பலம் சிதையும். 

தன்னிச்சையான குழுக்களை எதற்கு தலமை ஏற்கவேணும் என்பதை விரைவில் எதிர்த்தரப்பு தீர்மானித்து விடும். அதற்கு ஏற்ற சமூக முரண்பாடுகள் எம்மிடத்தில் உள்ளது. கருணா பிள்ளையான் கிழக்கு பிரதேசவாதத்திற்கு தலமை ஏற்பது போல. 

பொருளாதார ஆதாயம் சொத்துக் குவிப்பு நோக்கிலான அரசியல் ஈடுபாடு முன் எப்போதுமில்லாதளவுக்கு காணப்படுகின்றது என்பது கவனத்தில் எடுக்கவேண்டிய முக்கியமான விசயம். 

என் மனதில் பட்டவை மற்றபடி உங்கள் கனவை கலைக்க விரும்பவில்லை. 

 

நீங்கள் சொல்லுவதிலும் உண்மை உண்டு. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதிலேயே காலம் நகர்ந்துவிடும். 

கட்சிகளை ஒன்றிணைப்பதை விட மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து கட்சி சாரா தலைமைத்துவம் வேண்டும்.

அந்த மக்கள் இயக்கம் கட்சிகளை வழிநடாத்த வேண்டும்.

இவற்றுக்கு எல்லாம் முதலில் மக்களுக்கு அரசியல் தெளிவு ஊட்டப்படவேண்டும். இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை.

இதுவும் இன்னும் பலவும் புலத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான தமிழ்தேசியம் விடுதலை குறித்த அரசியலில் பாரிய வெளியை உருவாக்கி நகர்கிறது. 

இங்கிருப்பவர்களால் பணத்தை மட்டுமே அனுப்பி அந்த இடைவெளியை நிரப்பமுடியாது.

இது காலம் செல்ல செல்ல அதிகரிக்கும். அதைவிட புலத்திலேயெ ஒற்றுமை இல்லை. 

இப்போ புலிகளை முன்னிறுத்தாத ஆனால் புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் ஞானம் எமது தாயக இளையோருக்கு ஊட்டப்படவேண்டும். 

அவர்களுக்கு வன்முறைபோதிக்காத வகையில் திரட்டி மக்கள் இயக்கமாக்க வேண்டும். அதை வைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவேண்டும். 

அதுவரை ஒரு குறிப்பிட்ட புரிதலுடன் பல்வேறு நிகழ்ச்சி நிரலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

விக்கியர் தானாக வரலாற்றை கையில் எடுத்தால், மற்றவர்கள் படுத்து தூங்காமல், அதே கடையை பக்கத்தில் போடாமல் தங்களுக்கு உரித்த அடுத்த கடையை போடவேண்டும்.

இதில் வருமானமே இலக்கு என்றால் அது தமிழ்மக்களின் சாபக்கேடு. எங்கள் போராட்டத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் ஏறி மிதித்து செய்யும் அரசியலாகவே அமையும். 

இவற்றை நான் கனவில் எழுதவில்லை, விழித்து நிதானமாக எழுதுகிறேன்.

அதுமட்டுமல்ல இந்த விடயம் குறித்து ஆககுறைந்த்தது யாழ்களத்தில் ஆவது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் அவசியம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை.

சீமானுக்கு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தவர்களில் தீவிரமான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை யாழ் இணையத்திலேயே பார்க்கின்றோம். தாயகத்தில் அப்படி இல்லை என்பது உண்மை தான் அதற்காக பெருமைபடுகிறேன்.😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.