Jump to content

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • செர்மைன் லீ
  • பிபிசி
மணி நேரங்களுக்கு முன்னர்
முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

நம்முடைய உறவு மேலும் நீடிக்காது என்று ஜியார்ஜிடம் யேன்ஸ் கூறியபோது, அவளுடைய கன்னத்தில் கண்ணீர் வடிந்தது. ஹாங்காங்கை சேர்ந்த 28 வயது அந்த பெண், நிம்மதிப்பெருமூச்சுடன் வீடு நோக்கி உடைந்த்க இதயத்துடன் மெதுவாக நடந்தாள்.

இரண்டு மாதங்களில் இருவரும் பிரிவது இது மூன்றாவது முறை. இந்த முறை அதில் இருந்து பின்வாங்குவதில்லை என்று யேன்ஸ் கூறினாள்.

நான் அவனை மிகவும் மிஸ் செய்கிறேன் மேலும் தொடர்ச்சியாக எங்களுடைய மகிழ்ச்சியான நினைவுகளை அசைபோடுகிறேன் என்று யேன்ஸ் தங்களுடைய முந்தைய ப்ரேக் அப்களை பற்றி சொல்கிறார். தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களுக்கான ஏக்கம் விரைவில் அவளைச் சிறப்பானவளாக்கியது "அதனால் நான் மீண்டும் மீண்டும் சென்றேன். ஆனால் தொடங்கும் போதே எங்களின் மனநிலைகள் மிகவும் வேறுபட்டவை, அது மாறவில்லை. எனது எல்லா சமூக ஊடகங்களிலும் அவனை பற்றி நான் நீக்கிவிட்டேன், நாங்கள் ஒன்றாக இருக்கும் கடைசி நேரம் இது தான் என்று எனக்குத் தெரியும். "

ஒரு பழைய உறவை மீண்டும் துளிர்க்க செய்வதற்கான விருப்பம் நம் வாழ்நாளில் மிகவும் பொதுவானதாகும். கல்லூரி மாணவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் மீண்டும் முடிந்துபோன உறவுகளை அவ்வப்போது வைத்திருக்கிறார்கள், பாதி பேர் பிரிந்த பின்னரும் பாலியல் உறவைத் தொடருவார்கள்.

உறுதி எடுத்துக்கொண்ட பின்னரும், அவ்வப்போதான உறவுகள் தொடர்கிறது. இணைந்த தம்பதிகளில் மூன்றில் ஒரு பங்கினர், திருமணமான தம்பதிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தங்களது தற்போதைய உறவில் முறிவு மற்றும் புதுப்பிப்பை அனுபவித்திருக்கிறார்கள்.

எண்ணற்ற பாடல்கள், நாவல்கள், நாடகங்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களில் காணப்படும் ஒரு உணர்வு - பிரிந்து பின்னர் மன்னிப்பு கோருவது. இது ஆச்சரியப்படத்தக்க வகையில் நம் உளவியலில் வேரூன்றியுள்ளது. ஆனால் தோல்வியுற்ற ஒரு உறவை நாம் ஏன் மறுபரிசீலனை செய்பவர்களாக உள்ளோம்?

கின்சி இன்ஸ்டிடியூட்டின் நரம்பியல் நிபுணரான ஹெலன் ஃபிஷர், கூறுகையில், உறவு முறிவு முதலில் நிகழும்போது ஒரு "எதிர்ப்பு" கட்டத்தை அடைகின்றனர். இதன் மூலம் மக்கள், அந்த நேரத்தில் நிராகரிக்கப்பட்ட நபர், விட்டு விலகிய நபரை வென்றெடுப்பதில் வெறி கொள்கிறார்.

ஃபிஷர் மற்றும் விஞ்ஞானிகள் குழு சமீபத்தில், அன்பானவர்களால் நிராகரிக்கப்பட்ட 15 பேரின் மூளையை ஃபங்ஷனல் மேக்னடிக் ரெசனான்ஸ் இமேஜிங் (எஃப்எம்ஆர்ஐ) பயன்படுத்தி ஸ்கேன் செய்தது.. அவர்களின் முன்னாள் காதலி அல்லது காதலரின் உருவத்தைப் பார்க்கும்படி அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்களின் மூளையில் இழப்பு ஏங்குதல் மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை ஆகியவற்றுடன் தொடர்புடைய பகுதிகள் செயல்பட்டன, இது காதல் மற்றும் அன்புக்கான மூளையின் பகுதிகளாகும்.

இந்த நேரத்தில், நிராகரிக்கப்பட்ட காதலர்களுக்கு உயர்ந்த அளவிலான டோபமைன் மற்றும் நியூரோட்ரான்ஸ்மிட்டர் நோர்பைன்ப்ரைனை அனுபவிக்கின்றனர், இது மன அழுத்த நிலைகளை உயர்த்துவதற்கும், உதவி கோருவதற்கான ஆசையை கொண்டுள்ளது என்று பிஷர் கூறுகிறார். இதனை "விரக்தி ஈர்ப்பு" என்று கூறுகிறார். அதனால்தான், அதிக உணர்ச்சிகளின் போது ஒன்றுடன் மீண்டும் ஒன்றிணைவதற்காக பல வியத்தகு சைகைகளை வெறுக்கப்பட்டவர்கள் செய்கிறார்கள்.

நிராகரிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் நியூக்ளியஸ் அக்யூம்பன்ஸ் ஆக்டிவ்வாக உள்ளது. இது போதைப்பொருளுடன் தொடர்புடைய ஒரு முக்கிய மூளைப் பகுதியாகும். ஃபிஷர்ஸ் ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்களை நிராகரித்தவர்களை பற்றி "வெறித்தனமாக" சிந்தித்து, அவருடன் உணர்ச்சி ரீதியான ஒற்றுமையை விரும்பினர்.

"பிரிதல் என்பது ஒரு நாய்க்குட்டியை அதன் தாயிடமிருந்து எடுத்து சமையலறையில் தனியாக வைப்பது போன்றது: அது சுற்றி சுற்றி ஓடுகிறது, குரைக்கின்றது, புலம்புகின்றது. " என்று ஃபிஷர் மேலும் கூறுகிறார். "பல முறை பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் தம்பதிகள் இன்னமும் ஒருவருக்கொருவர் வேதியியல் ரீதியாக அடிமையாகிறார்கள். எனவே அந்த [போதை] தீரும் வரை அவர்களால் சுத்தமாக பிரிக்க முடியாது."

நமது மூளையில் உள்ள வேதியியல் வினைகள் நடப்பதால், மக்கள் முறிந்த உறவுகளை புதுப்பிக்க முனைகிறார்கள். ஒருவர் உறவு முறிவுக்கு பிறகு புதியவருடன் டேட்டிங் செய்தால், பழைய உணர்வுகளை அழிப்பதை விரைவுபடுத்துகிறது, மேலும் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். மற்றவர்கள் பிரிந்த பிறகு அதிக உணர்ச்சிகளை அனுபவிக்கும் அதே வேளையில், மன்னிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்,

உறவில் முன் தீர்மானிக்கப்படாத உணர்வு கூட்டாளர்களை மீண்டும் முயற்சிக்க தூண்டக்கூடும் என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் அவ்வப்போது தொடரும் உறவுகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் ரெனே டெய்லி கூறுகிறார்.

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

இந்த ஜோடிகள் பிரிந்த காலத்தில் நிறைய மோதல்களை அனுபவிக்கக்கூடும், ஆனால் அவர்களது கூட்டாளருடன் இணைந்திருப்பதாகவோ அல்லது அன்பாகவோ உணரலாம், "என்கிறார் டெய்லி.

"எனவே மோதலை நிர்வகிக்கவோ அல்லது தீர்க்கவோ முடியாமல் போவது பற்றியதாக இருக்கலாம். முறிவுகள் தெளிவற்றதாக இருந்தால், மக்கள் உறவில் சாதகமான மாற்றங்களைச் செய்ததைப் போல உணரலாம், மீண்டும் முயற்சிக்கலாம் என்கிறார். "

உளவியலின் பிரபலமான இணைப்புக் கோட்பாடு, மற்றும் ஊடகங்களில் விவாதித்த விஷயமான டேட்டிங்கில் பொருந்தக்கூடிய சில பகுதிகளை அதிகம் விளக்கப்பட்டுள்ளது ஆனால் காதல் நல்லிணக்கத்தை விளக்கவில்லை என்றும் டெய்லி கூறுகிறார்.

குழந்தைகளுக்கான நடத்தை அவர்களின் வயதுவந்த வாழ்க்கையில் அவர்களின் இணைப்பு பாணியை வடிவமைக்கிறது என்று இணைப்புக் கோட்பாடு அறிவுறுத்துகிறது - அவர்கள் பிற்காலத்தில் மற்ற பெரியவர்களிடம் பாதுகாப்பாகவும், ஆர்வமாகவும் அல்லது அவர்களை தவிர்க்கவும் முடியும். ஒரு பாதுகாப்பான இணைப்பு பாணி ஆரோக்கியமான உணர்ச்சிபூர்வமான தகவல்தொடர்புகளைக் குறிக்கிறது, அதே நேரத்தில் ஆர்வத்துடன் இணைந்த நபர்கள் தங்கள் சுய மதிப்பை சந்தேகிக்கிறார்கள் மற்றும் அருகாமையில் இருக்க பலவற்றை முயற்சி செய்கிறார்கள். மூன்றாவது குழு, தவிர்க்கக்கூடிய இணைப்பு உள்ளவர்கள், இவர்கள் உணர்ச்சிவசமாக இல்லாதவர்களாகவும், தற்காப்பு மூலம் தன்னிறைவு பெற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

இந்த கோட்பாட்டின் படி, ஆர்வமுள்ள மற்றும் தவிர்க்க நினைக்கும் கூட்டாளர்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவதாகவும், நிரந்தரமாக உறவு முறிவு கடினம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சி இதை ஆதரிக்கவில்லை என்று தோன்றுகிறது.

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

 

"இணைப்பு கவலை மற்றும் தவிர்ப்பதில் ஆன்-ஆஃப் மற்றும் கூட்டாளர்களிடையே மிகக் குறைந்த வேறுபாடுகளைக் கண்டறிந்தோம், அல்லது அத்தகைய கூட்டாளர்களுக்கான தரத்துடன் இந்த இணைப்பு நோக்குநிலைகள் எவ்வாறு தொடர்புடையவை என்பதில் வேறுபாடுகள் இல்லை. இணைப்புக் கோட்பாடு ஒரு நல்ல விளக்கமாகத் தோன்றினாலும், இதுபோன்றதை நாங்கள் கண்டறியவில்லை, "என்கிறார் டெய்லி.

யேன்ஸை போலவே, மன்னிப்புக்கு ஏக்கம் மற்றும் தனிமை ஆகியவை பங்களிப்பை கொண்டுள்ளன. "ஒரு முன்னாள் நபருடன் அவர்கள் நன்றாக நடந்துகொள்ளாவிட்டாலும் கூட அவர்கள் மீண்டும் ஒன்றிணைக்க விரும்புவதைக் காணும்போது, இது பொதுவாக தனிமை உணர்வுகளுடன் தொடர்புடையது, உறவைப் பற்றிய நேர்மறையான விஷயங்களைக் காணவில்லை, மற்றும் இழப்பு மற்றும் வருத்தத்தின் உணர்வுதான் என்கிறார் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் பாலியல் ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் கிறிஸ்டன் மார்க். தற்போதைய உறவுகளின் தரம் பாதிக்கப்படத் தொடங்கும் போது கடந்தகால உறவுகளுக்கான ஏக்கம்தான் பெரும்பாலும் முதலில் வெளிப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

இது தற்போதைய நிலைப்படி யேன்ஸின் நடத்தையையும் விளக்கக்கூடும். கொரோனா வைரஸ் பரவிய போது தனிமையாக உணர்ந்ததாக அவர் கூறுகிறார், இது தனது முந்தைய காதலரை அணுகவும், அவர்களின் உறவை சரிசெய்ய முயற்சிக்கவும் தூண்டியது.

லாக்டவுன் காலத்தில் தனிமையாக உணரும் மக்கள், ஊடகங்களால் மோசமாக பாதிக்கப்படக்கூடும். ஏனெனில் ஒருவர் தங்கள் முன்னாள் காதலர்களை பார்ப்பதை எளிதாக்குகிறது. நியூயார்க் பிரஸ்பைடிரியன் மருத்துவமனை வெயில்-கார்னெல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மனநல மருத்துவத்தின் இணை பேராசிரியர் கெயில் சால்ட்ஸ் கருத்துப்படி, எல்லா வகையிலும் தனிமையைத் தவிர்ப்பதற்கான விருப்பம் உள்ள மக்கள், தங்கள் முன்னாள் துணைவர்களிடம் சென்று சேரக்கூடும் என்கிறார்.

தங்களுடைய பழைய அன்பான நபர்களை கண்டறியவும் அவர்களை மீண்டும் இணைக்கவும் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்களின் கண்டுபிடிப்பு உதவுகிறது என்கிறார் சால்ட்ஸ். நாம் கடந்த கால உறவுகளை தேவையை விட அதிக அழகாக பார்க்க விரும்புகிறோம் என்றும், மக்கள் காலத்திற்கு ஏற்ப மாறுவார்கள் என்பதை மறந்து விடுகிறோம் என்றும், உறவை முறித்து முன்னோக்கி செல்வதை சமூக ஊடகங்கள் கடினமாக்குகின்றன என்றும், பழைய காதலன் அல்லது காதலியின் பதிவேற்றங்களை திருட்டுத்தனமாக பார்ப்பது ஆரோக்கியமற்றது என்கிறார்.

சமூக ஊடகங்கள் பிரிவை கடினமாக்குவதால் எதிர்மறையான முறிவு நடத்தைகளால் பாதிக்கப்படக்கூடும் என்பது ஆச்சரியமல்ல என்று மியாமி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெரிட் ப்ரோகார்ட் கூறுகிறார். இவர் உணர்ச்சிகளின் தத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் காதல் புனைவு பற்றிய பல புத்தகங்களை எழுதியவர்.

"காதல் இருக்கும் வரை காதல் முறிவு தொடர்பான மோசமான நடத்தைகளும் இருக்கும் என்று " என்று ப்ரோகார்ட் கூறுகிறார். "ஆனால் அது மிகவும் பரவலாகிவிட்டது, அவை வகைப்படுத்தப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன -கோஸ்டிங், சப்மரைனிங், , பெஞ்சிங், ப்ரெட் க்ரம்பிங் ஆர்பிடிங் , ஜாம்பியிங் என பல வகையாக உள்ளன."

இளைய தலைமுறையினரின் கவலை மற்றும் மனச்சோர்வுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன மற்றும் பழைய தலைமுறையை காட்டிலும் சமூக ஒப்புதலை மிகவும் வலுவாக நம்பியுள்ளனர். எனவே அவர்கள் இந்த உறவுகளின் பாதிப்புக்கு ஆளாகக்கூடும், என்று ப்ரோகார்ட் மேலும் கூறுகிறார்.

இளம் தலைமுறையினரின் கைகளில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளுடன் பிறந்தால், அவர்கள் ஆன்லைனில் டேட்டிங் தீர்வுகளைத் தேடுவார்கள். இதன் விளைவாக, அமெரிக்காவில் மட்டும் தனிப்பட்ட பயிற்சி வணிகங்கள் 2018 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டன, மேலும் இவர்களுக்கான ஒரு முக்கிய சந்தை உருவாகத் தொடங்கியது. பிரேக்-அப் பயிற்சியாளர்கள் இப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது முன்னாள் காதலை தொடர அல்லது மீண்டும் புத்துயிர் பெற உதவுவதாக உறுதியளிக்கிறார்கள். பலர் தங்கள் வலைப்பதிவுகள், யூடியூப் வீடியோக்கள் மற்றும் பாட்காஸ்ட்களில் உத்திகளை வழங்குகிறார்கள், அதனை மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளார்கள்.

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

சில பிரபலமானவர்களில், நோ காண்டாக்ட் ரூல் எனப்படும் "தொடர்பு இல்லா விதி" (30 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை, சிலர் இது எல்லையற்றதாகக் கூட கூறுகிறார்கள்) என்பது ஒரு பொதுவான தந்திரமாகும். இந்த நேரத்தை அவர்கள் சுய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தங்களுக்கு கிடைத்த நல்ல நேரங்களை நினைவூட்டுவதற்கும், இந்த காலகட்டத்தில் எவ்வாறு மாறிவிட்டன என்பதைக் காண்பிப்பதற்கும் பலர் தங்கள் முன்னாள் காதலர்களுக்கு இதனை அனுப்ப பரிந்துரைக்கின்றனர்.

நரம்பியல் நிபுணரும் மானுடவியலாளருமான ஹெலன் ஃபிஷர் "தொடர்பு இல்லா விதி" நன்மை பயக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார். போதைப்பொருட்களைத் தவிர்ப்பதற்கு குறைந்தது 90 நாட்களுக்கு ஒரு காலம் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். ஆனால் இது உறவுகளுக்கு இது வேலை செய்யுமா?

"உடைந்த இதயத்தை சரிசெய்வதற்கான வழி போதைக்கு சிகிச்சையளிப்பதைப் போன்றது தான் - நீங்கள் அவர்களின் விஷயங்களை ஒதுக்கி வைக்கிறீர்கள், அவர்களின் சமூக ஊடகங்களைப் பார்ப்பதை நிறுத்துங்கள், அவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள் " என்று ஃபிஷர் கூறுகிறார்.

இந்த விதி "அறிவியலில் சில அடிப்படைகளைக் கொண்டுள்ளது" என்றும் ப்ரோகார்ட் கூறுகிறார். வலுவான உணர்ச்சிகளின் தீவிரம் என்பது கோபம், துரோகம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது - இது நேரம் ஆக ஆக குறைகிறது.

20 ஆவது வயதில் இருக்கும் மற்றொரு ஹாங்காங் நபரான லிலியன், பிரிந்த சில நாட்களுக்குப் பிறகு இணையத்தில் தனது முன்னாள் காதலனுடன் சமரசம் செய்வதற்கான வழிகளைத் தேடியநபராவார். இதற்காக இணையத்தை தேடிய நபர்களில் ஒருவர். அவர் சமூக ஊடகங்களில் டேட்டிங் பயிற்சியாளரின் வீடியோக்களை கண்டார்.

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

முன்னாள் காதலருடனான இடைவெளியை உருவாக்குவதற்கும் மறு ஈர்ப்பில் பணியாற்றுவதற்கும் பயிற்சியாளர் உதவிக்குறிப்புகளை வழங்கியதாக லிலியன் கூறுகிறார்.

"இது பிரிந்த பிறகு எனக்கு ஆறுதல் அளித்தது, ஆனால் அது என்னை மேலும் கவலையடையச் செய்தது. முன்னாள் காதலனை மீண்டும் தொடர்பு கொள்ள 30 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த முறை நான் சந்தித்தபோது நான் என்னை மேம்படுத்திக் கொண்டேன் என்பதைக் காட்டுவதற்காக என்னால் நீண்ட நேரம் காத்திருக்க முடியவில்லை, "என்று லிலியன் கூறினார்.

இதற்கு பிறகு உடனடி ஆறுதலாக வரக்கூடும் என்றாலும், அவர்களின் பரிந்துரைகள் விஞ்ஞான ரீதியாக நம்பத்தகுந்ததாக இருக்காது. "உறவு முறிந்த முன்னாள் காதலர்களுக்கான நரம்பியல், உளவியல், அறிவாற்றல் அறிவியல், தத்துவம் அல்லது சமூக பணி போன்ற தொடர்புடைய துறைகளில் சரியான பயிற்சி - சுய பயிற்சி அல்லது கல்வி - இல்லை" என்று ப்ரோகார்ட் கூறுகிறார்.

பொருத்தமான பயிற்சி தொடர்பாக மற்றவர்களிடம் இருந்து கூட திருடுகிறார்கள் என்று உளவியலாளர் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் தகவல்களை உண்மையாக சரிபார்க்க முடியவில்லை.

"அவர்கள் ஒரு நல்ல தெரபிஸ்டை விட அதிக விலை கொண்டவர்களாக இருக்ககூடும், ஆனால் அவர்கள் அளிக்கும் அறிவுரைகள் சிறந்தவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல், நீங்கள் அவர்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கு உங்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கக்கூடும்" என்று அவர் கூறுகிறார்.

"அவர்களின் புத்தகங்கள் சில நேரங்களில் மிகவும் மலிவானவை, ஆனால் அவை மறுபரிசீலனை செய்யப்படவில்லை, அவை பெரும்பாலும் நடைமுறையில் பயனற்றவை."

இந்த துறையை பற்றி நிபுணர்கள் இன்னமும் சந்தேகம் வைத்திருக்கிறார்கள். அதில் எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை. பிரிந்து செல்லும் நபர்களுக்கு பயிற்சி வழங்கும் நபர்களுக்கு "ஆலோசனை வழங்குவதற்கான தகுதிகள் இல்லை" என்று ப்ரோகார்ட்டின் கருத்தை டெய்லி விவரிக்கிறார். அதே நேரத்தில் அது ஒரு 'ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதி' அல்ல என்று சால்ட்ஸ் கூறுகிறார்.

"யாரும் தங்களை ஒரு பயிற்சியாளர் என்று அழைக்கலாம். எனவே அது தொடர்பாக நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். இந்த நபருக்கு உண்மையில் எவ்வளவு தெரியும் , தீவிரமான அல்லது முறைப்படுத்தப்பட்ட பயிற்சியின் நிலை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பல நாள் அல்லது பல வார இறுதிப் படிப்பு என்பது சிகிச்சையாளரை உருவாக்காது. அவர்களுக்கு யார் பயிற்சி அளிக்கின்றனர் மேலும் என்ன வகை பயிற்சி? " சால்ட்ஸ் கேள்வி எழுப்புகிறார்.

பிரேக்-அப் பயிற்சிக்கு பணம் செலவழிப்பதற்குப் பதிலாக, கூகிள் ஸ்காலரில் உள்ள முறையான மூலங்களிலிருந்து உறவு முறிவுகள் மற்றும் உறவுகள் குறித்த இலக்கியங்களைப் படிக்குமாறு ப்ரோகார்ட் அறிவுறுத்துகிறார். ஆனால் ஒருவரை வாழ்க்கையில் மீண்டும் திரும்ப பெறுவதற்கு நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பது தொடர்பாக எச்சரிக்கிறார்.

"உங்கள் முன்னாள் காதலருடன் திரும்பிச் செல்ல நீங்கள் உங்கள் பாதையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தால், அவர்கள் உண்மையில் அதற்கு மதிப்புள்ளவர்களா?" என்று வினா எழுப்புகிறார்

நல்லிணக்கத்திற்கு "தந்திரங்கள்" எதுவும் இல்லை என்றும், ஆனால் நேர்மையுடன் தோல்வியுற்ற உறவில் என்ன தவறு ஏற்பட்டது என்பதைப் பற்றி பேசுங்கள் என்றும் அவர் கூறுகிறார்.

தங்களது முந்தைய காதலி அல்லது காதலருடனான விஷயங்களில் சமரசம் செய்ய முடியாதவர்களுக்கு, "எதிர்ப்பு" நிலைக்குப் பிறகு, அவர்களின் மூளை விரக்தி" நிலைக்குச் செல்லலாம், பின்னர் இறுதியாக ஏற்றுக்கொள்வது, அலட்சியம் மற்றும் வளர்ச்சி என்று அமையும் என்று ஃபிஷர் கூறுகிறார்.

"நீங்கள் மிகுந்த வலியையும் பதட்டத்தையும் அனுபவிக்கிறீர்கள், ஆனால் இறுதியாக மீட்கப்படுவீர்கள்" என்று ஃபிஷர் முடிக்கிறார். "உங்களைத் தூக்கி எறியும் நபரை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேறி, புதியவரை நேசிப்பீர்கள் என்கிறார்.https://www.bbc.com/tamil/global-54093257

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.