Jump to content

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்

 
இந்தியா - சீனா எல்லை பதற்றம்

ANI

இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

வியாழக்கிழமை அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இருவரும் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு லடாக் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்ததாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பல்வேறு தருணங்களில் சீனப் படைகள் நிகழ்த்திய அத்துமீறல் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ட்ஸோவின் தெற்கு கரைப்பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே சீன படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதியில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட கம்புகளுடன் துப்பாக்கி ஏந்திய சீன படையினர் நிற்கும் படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தன.

இந்நிலையில், "மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சீன துருப்புகள் ஆயுதங்களுடன் கூடியது குறித்து இந்தியா வலுவான கருத்தை பதிவு செய்தது. இவ்வாறு எல்லைப்பகுதியில் அதிகளவிலான சீன துருப்புகள் கூடுவது 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது. இதற்கு சீனத் தரப்பில் இருந்து சரியான விளக்கமும் தரப்படவில்லை. சீன துருப்புகளின் இந்த ஆத்திரமூட்டும் நடத்தை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகவும், விதிமுறைகளை மதிக்காமல் இருப்பதாகவும் கருதப்படுகிறது" என இந்திய தரப்பில் இருந்து பதிவு செய்யப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

1976ஆம் ஆண்டு தூதரக நிலையிலான இந்திய - சீன உறவுகள் மீண்டும் தொடங்கியது. 1981ல் நடந்த எல்லை பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் சில சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அமைதி நிலவியதாக தெரிவித்தார்.

spacer.png

Getty Images

மேலும், "இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண நேரமும் முயற்சியும் தேவைப்படும் என்றாலும், இருநாட்டு உறவுகள் மேம்பட, இதற்கு தீர்வு காண்பது அவசியமாகிறது. எனினும், சமீபத்தில் லடாக்கில் நிகழ்ந்த சம்பவங்கள் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இரு நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலைமைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்று சீன தரப்பிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாகவும் ஏஎன்ஐ செய்தி கூறுகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில் அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன

 

சீன தரப்பு கூறுவது என்ன? 

 

எல்லைப் பகுதியின் நிலை குறித்து சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சுட்டுக்காட்டினார். 

இருநாடுகளும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் துப்பாக்கி பிரயோகம், மற்றும் ஆபத்தான சூழல் நிலவுவதை உடனடியாக முடிக்க வேண்டும் எனவும் வாங் யி வலியுறுத்தியதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

spacer.png

Getty Images

"பதற்றத்தை குறைக்க, படைகளை பின்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் துருப்புகள் எல்லையில் இருந்து வெளியேற வேண்டும்" என்றும் சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணவும் விருப்பம் தெரிவித்துள்ள சீனா, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட, இந்திய தரப்புடன் ராஜீய ரீதியாகவும், ராணுவம் மூலமாகவும் தொடர்பில் இருக்கும் என்று கூறியுள்ளது.

சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய தரப்பின் கருத்துகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

"இந்தியா - சீனா உறவுகளின் வளர்ச்சி, எல்லை பிரச்சனையின் தீர்வைப் பொறுத்தது என்று இந்தியத் தரப்பு கருதவில்லை. இந்தியா பின்னோக்கிச் செல்ல விரும்பவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்கவும் அமைதியை நிலைநாட்டவும் இந்திய தரப்பு தயாராக இருக்கிறது" என்று சீனாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

பேச்சுவார்த்தையின் முடிவு என்ன?

 

இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்தியா மற்றும் சீனா இடையிலான வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாமல் பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களை பின்பற்றுவதோடு, உறவுகளை மேம்படுத்த இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

இந்தியா சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பாக தற்போது இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி, இந்தப் பிரச்சனை பெரிதாகாமல் அமைதியை பேண இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.bbc.com/tamil/global-54113182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் என்பார் நடக்கா...து. நடக்காதென்பார் நடந்துவிடும்.......😂

 

எதுக்கும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம்..... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்
 
கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்
 

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில், இந்தியாவின் முன்னேறிய நிலையை நோக்கி சீன துருப்புகள் கடந்த வாரம் முன்னேறின. ‘பிங்கர்-4’ என்ற மோதல் பகுதியில் நடந்த இந்த அத்துமீறல் முயற்சியை அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.


அதைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக ஆயுதங்களுடன் வந்த சீன துருப்புகள் பின்வாங்கி திரும்பிச் சென்றன. அப்போது அவர்கள் இந்திய படை வீரர்களை அச்சுறுத்துவதற்காக 100-200 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதை நேரில் கண்ட வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. சீனாவின் இந்த அத்துமீறல், மாஸ்கோவில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்பு நடந்ததாகும்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/17043139/Before-Moscow-pact-Indian-and-Chinese-troops-fired.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.