Jump to content

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்

 
இந்தியா - சீனா எல்லை பதற்றம்

ANI

இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

வியாழக்கிழமை அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இருவரும் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு லடாக் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்ததாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பல்வேறு தருணங்களில் சீனப் படைகள் நிகழ்த்திய அத்துமீறல் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ட்ஸோவின் தெற்கு கரைப்பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே சீன படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதியில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட கம்புகளுடன் துப்பாக்கி ஏந்திய சீன படையினர் நிற்கும் படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தன.

இந்நிலையில், "மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சீன துருப்புகள் ஆயுதங்களுடன் கூடியது குறித்து இந்தியா வலுவான கருத்தை பதிவு செய்தது. இவ்வாறு எல்லைப்பகுதியில் அதிகளவிலான சீன துருப்புகள் கூடுவது 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது. இதற்கு சீனத் தரப்பில் இருந்து சரியான விளக்கமும் தரப்படவில்லை. சீன துருப்புகளின் இந்த ஆத்திரமூட்டும் நடத்தை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகவும், விதிமுறைகளை மதிக்காமல் இருப்பதாகவும் கருதப்படுகிறது" என இந்திய தரப்பில் இருந்து பதிவு செய்யப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

1976ஆம் ஆண்டு தூதரக நிலையிலான இந்திய - சீன உறவுகள் மீண்டும் தொடங்கியது. 1981ல் நடந்த எல்லை பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் சில சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அமைதி நிலவியதாக தெரிவித்தார்.

spacer.png

Getty Images

மேலும், "இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண நேரமும் முயற்சியும் தேவைப்படும் என்றாலும், இருநாட்டு உறவுகள் மேம்பட, இதற்கு தீர்வு காண்பது அவசியமாகிறது. எனினும், சமீபத்தில் லடாக்கில் நிகழ்ந்த சம்பவங்கள் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இரு நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலைமைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்று சீன தரப்பிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாகவும் ஏஎன்ஐ செய்தி கூறுகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில் அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன

 

சீன தரப்பு கூறுவது என்ன? 

 

எல்லைப் பகுதியின் நிலை குறித்து சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சுட்டுக்காட்டினார். 

இருநாடுகளும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் துப்பாக்கி பிரயோகம், மற்றும் ஆபத்தான சூழல் நிலவுவதை உடனடியாக முடிக்க வேண்டும் எனவும் வாங் யி வலியுறுத்தியதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

spacer.png

Getty Images

"பதற்றத்தை குறைக்க, படைகளை பின்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் துருப்புகள் எல்லையில் இருந்து வெளியேற வேண்டும்" என்றும் சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணவும் விருப்பம் தெரிவித்துள்ள சீனா, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட, இந்திய தரப்புடன் ராஜீய ரீதியாகவும், ராணுவம் மூலமாகவும் தொடர்பில் இருக்கும் என்று கூறியுள்ளது.

சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய தரப்பின் கருத்துகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

"இந்தியா - சீனா உறவுகளின் வளர்ச்சி, எல்லை பிரச்சனையின் தீர்வைப் பொறுத்தது என்று இந்தியத் தரப்பு கருதவில்லை. இந்தியா பின்னோக்கிச் செல்ல விரும்பவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்கவும் அமைதியை நிலைநாட்டவும் இந்திய தரப்பு தயாராக இருக்கிறது" என்று சீனாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

பேச்சுவார்த்தையின் முடிவு என்ன?

 

இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்தியா மற்றும் சீனா இடையிலான வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாமல் பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களை பின்பற்றுவதோடு, உறவுகளை மேம்படுத்த இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

இந்தியா சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பாக தற்போது இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி, இந்தப் பிரச்சனை பெரிதாகாமல் அமைதியை பேண இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.bbc.com/tamil/global-54113182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் என்பார் நடக்கா...து. நடக்காதென்பார் நடந்துவிடும்.......😂

 

எதுக்கும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம்..... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்
 
கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்
 

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில், இந்தியாவின் முன்னேறிய நிலையை நோக்கி சீன துருப்புகள் கடந்த வாரம் முன்னேறின. ‘பிங்கர்-4’ என்ற மோதல் பகுதியில் நடந்த இந்த அத்துமீறல் முயற்சியை அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.


அதைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக ஆயுதங்களுடன் வந்த சீன துருப்புகள் பின்வாங்கி திரும்பிச் சென்றன. அப்போது அவர்கள் இந்திய படை வீரர்களை அச்சுறுத்துவதற்காக 100-200 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதை நேரில் கண்ட வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. சீனாவின் இந்த அத்துமீறல், மாஸ்கோவில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்பு நடந்ததாகும்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/17043139/Before-Moscow-pact-Indian-and-Chinese-troops-fired.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.