Jump to content

நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ.

ஜூன் 06, 2007

சென்னை: எனக்கு 59 வயதாகிறது. எனது வாழ்நாளில் ஒருமுறை கூட மதுவைத் தொட்டதில்லை, எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக தலைமைக் கழகத்தை இடிப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து கண்ணியம் இல்லாமல் பேசி வருகிறார் முதல்வர் கருணாநிதி.

சைதாப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில், கருணாநிதி பேசுகிறபோது, சிலேடையாகப் பேசியுள்ளார். தற்போது கேள்வி, பதில் பேட்டியில், கழகத்தை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி என்ற கேள்விக்கு நேற்று கொஞ்சம் 'அதிகமாகி' விட்டது போலும், அதாவது கோபம் என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இதற்கான விளக்கங்களை நீதிமன்றத்தில் சொல்ல வாய்ப்பில்லாததால், இந்த அறிக்கையில் விளக்குகிறேன். எனக்கு 59 வயதாகிறது. இன்று வரை எனது வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டது கிடையாது. எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும், என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்னுடைய இல்லப் பணியிலோ, அலுவலகப் பணியிலோ இருக்க முடியாது என்பதும் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம்.

தலைமைக் கழகத்தைப் பற்றி நான் பேசினால் அதற்கு சம்பந்தமே இல்லாத கொடநாடு எஸ்டேட் குறித்துப் பேசுகிறார் கருணாநிதி. அதுனுடன் என்னைத் தொடர்புப்படுத்திப் பேசுகிறார். 50 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், 90 அறைகள் உள்ளன என்றும் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்.

அந்தக் கட்டடம் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவும் இல்லை, அதில் 90 அறைகளும் இல்லை. அங்கு கட்டப்படுகின்ற கட்டடத்திற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

பெண் என்றும் பாராமல் என்னைப் பற்றி கருணாநிதி பேசியும், எழுதியும் வருவதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

முன்பு விஜயகாந்த்தை குடிகாரர், குடித்து விட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று படு காட்டமாக விமர்சித்திருந்தார் ஜெயலலிதா. இதற்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த், அவர்தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தாரா என்று தடாலடியாக அறிக்கை விட்டார்.

இந்த நிலையில் ஜெயலலிதா மீதே அந்த அஸ்திரம் கருணாநிதி மூலமாக திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/06/06/jaya.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ.

மதுவை நக்கி குடிப்பதானால் கையால் தொடத்தேவையிலைத்தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுவை நக்கி குடிப்பதானால் கையால் தொடத்தேவையிலைத்தானே :D

நான் சொல்ல நினச்சன் நீங்க சொல்லீட்டிங்க.

Link to comment
Share on other sites

கோடநாடு பங்களா விவகாரம்: ஜெயலலிதா புகாருக்கு கருணாநிதி பதில்:

"அரசுக்குச் சொந்த மானடான்சி நிலத்தை நான் வாங்கவில்லை. பத்திரத்தில் போட்டுள்ள கையெழுத்தும் நான் போடவில்லை'' என்று நீதி மன்றத்தில் அடித்துச் சொன்னார். ஆனால் நீதியின் முன்னே அவர் கையெழுத்துத்தான் அது என்றும் - அவர் விதிகளுக்கு மாறாக வாங்கி விட்ட அரசு நிலத்தைத் திரும்பக் கொடுத்து விட வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது ஜெயலலிதா "உண்மை விளம்பி'' என்பதற்கு ஓர் உதாரணம்!

கருணாநிதி முதல் அமைச் சராக இருந்த போது அவர் மீதுள்ள வழக்குகளை பிரதமர் இந்திரா காந்தி வாபஸ் வாங்குவது என்று பேரம் பேசி, காவிரி பிரச்சினைக் காக கர்நாடக அரசு மீது போட்டிருந்த வழக்கை கருணாநிதி வாபஸ் வாங்கிக் கொண்டார் என்ற ஒரு தக வலை ஜெயலலிதா சட்டப் பேரவையில் சொன்னார். உடனே எஸ்.ஆர். பாலசுப் பிரமணியம் எழுந்து, காவிரி வழக்கைத் தமிழக தி.மு.க. அரசு அனைத்து கட்சித் தலை வர்களிடம் ஆலோசனை கேட்டு "வாபஸ்'' வாங்கியது 1976க்கு முன்பு, ஆனால் கலைஞர் மீது வழக்கு 1976க்கு பின்பு என்கிற போது, ஜெயலலிதா இரண்டையும் தொடர்புபடுத்தி பேசுவது எந்த வகையில் நியாயமும் உண்மையும் ஆகும்ப என்று கேட்டவுடன், ஜெயலலிதா திணறிப்போனாரே, அதுவும் அவர் "உண்மை விளம்பி'' என்பதற்கு மற்றொரு உதாரணம்!

இப்போது "கோடநாடு மாளிகையில் நான் ஓரிரு நாள் விருந்தினராகத் தங்குவதற்குத்தான் போனேன், உண்மையில் அந்த மாளிகைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை'' என்று கூறிவிட்டு, இப்போது தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரங்கள் புறப்பட்டதும் அலறித் துடிக்கிறாரே; இது இன்னொரு உதாரணம். உயிர்த் தோழிகள் இருவரும் தலா ரூ.2 கோடி முதலீடு செய்ததை மூடி மறைக்க முடியாமல் தவிக்கிறார்களே, அது மேலும் ஒரு உதாரணம்.

என்னுடைய பிறந்த நாள் அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "கருணாநிதி நயவஞ்சக மனிதர், துரியோ தனன், துச்சாதனன், சகுனி, கம்சன், ஜார்மன்னன், கிட்லர், முசோலினி, இடி அமீன் அத்தனை பேரும் சேர்ந்த மொத்த உருவம் தான் முதல்- அமைச்சர்.

பொய், புரட்டு, வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை, வன்மம் பாராட்டுதல், இழிவான எண்ணங்கள் ஆகியவைகளின் பிறப்பிடம் அவர்'' என்றெல்லாம் கடுஞ்சொற்களால் சாடிவிட்டு, அதற் கடுத்த மூன்றாவது நாளே விடுத்த அறிக்கையிலே அவர் ஏதோ அமைதி விரும்பி என்பது போலவும், அவரை நான் ஏதோ கடுஞ்சொற்களால் விமர்சித்து விட்டேன் என்பது போலவும் பம்மாத்து செய்திருக்கிறாரே, அதுவும் அவர் "உண்மை விளம்பி'' என்பதற்கு மற்றொரு உதாரணம்.

1996ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது உடன்பிறவா சகோதரியுடன் வைத்திருந்த நட்புதான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று கூறி பகிரங்கமாக அறிக்கையே விடுத்தார் ஜெயலலிதா. பிறகு சில மாதங்களுக்குள்ளாகவே அந்த அறிக்கையைத் திரும்பப் பெற்று அவர்களுக்குள் உள்ள நட்பைத்தவிர்க்க முடியாது என்று மீண்டும் ஒரு அறிக்கை விடுத்தார். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான உதாரணம் தான்.

தமிழக மாநில ஆளுநராக இருந்த சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பேரவையி லேயே தெரிவித்தவர் தான் ஜெயலலிதா, இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற் கானசான்று தான்.

தமிழகத்திலே நடைபெறும் கொலை, வழிப்பறி கொள்ளை களுக்கு காரணம் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் தலை மையிலே உள்ள மத்திய அரசு தான் என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். அது போலவே ராஜீவ் காந்தி யின் மரணத்திற்குக் கார ணம் மூப்பனார் தான் என்று சேலம் பொதுக் கூட்டத்திலேயே பேசினார். இவைகள் எல் லாம் அவர் எத்த கைய "உண்மை விளம்பி'' என்பதற் கான சான்று தான்.

ம.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணப்பன் பொடா சட்டத்தில் கைது செய்யப்போவ தாக செய்தியாளர் களிடம் ஜெயலலிதா கூறிவிட்டு, பிறகுதான் அப்படி கூறவே இல்லை என்றார். உடனே 7.10.2003 தேதிய "இந்து'' நாளிதழ் ஜெயலலிதா செய்தி யாளர்களிடம் கூறிய "டேப்'' தங்களிடம் இருப்பதாக வெளி யிட்டது. இதுவும் அவர் எத்த கைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்று தான்.

எம்.ஜி.ஆரின் மரணம் இயற்கையானதல்ல, அது படுகொலை, மோரில் விஷம் வைத்து வி.என். ஜானகி கொன்று விட்டார் என்று பேட்டி அளித்ததும் ஜெயலலிதாதான். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

2004ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரத்தில் மோசடி என்று ஜெயலலிதா கூறினார். பின்னர் தேர்தல் கமிஷனே அதை மறுத்து செய்தி வெளியிட்டது. இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

அமெரிக்காவிலிருந்து வந்த கோடிக்கணக்கான தொகையை தன்னுடைய வங்கி கணக்கிலே டெபாசிட் செய்து கொண்டார் ஜெயலலிதா. யார் அனுப்பியது என்றே தனக்குத் தெரியாதென்றார். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

தனது வளர்ச்சியைக் கண்டு எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் என்று ராஜிவ்காந்திக்கு தன் கைப்படவே கடிதம் எழுதி ஜெயலலிதா கொடுத்தனுப்பினார். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

அரசு அலுவலர்களுக்கு அரசின் மொத்த வருவாயில் 94 சதவிகிதம் ஊதியமாகத் தரப்படுகிறது என்றார் ஜெயலலிதா. பின்னர் அரசு அலுவலர் சங்கத்தினர் எல்லாம் மறுப்புத் தெரிவித்தபிறகு வாயை மூடிக் கொண்டார். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

Link to comment
Share on other sites

நான் சொல்ல நினச்சன் நீங்க சொல்லீட்டிங்க.

நானும் சொல்ல நினைத்தனான் அதுகுள்ள நீங்க சொல்டிட்டீங்க

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.