Jump to content

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

 

 

 

இலங்கைத் தீவில் பேரினவாதம் கொழுந்துவிட்டெரிகிறது. இந்திய மத அடிப்படைவாத அரசின் அருவருக்கத்தக்க மத வெறி, இலங்கை அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக இராணுவ மயமாக்கல் என்பன இன்று தெற்காசியாவின் ஒவ்வொரு மூலையையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ச என்ற முன்னை நாள் இராணுவத் தளபதி இலங்கை அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெபோதும் இல்லாத அளவிற்கு அவசியமாகிவிட்டது.

பழமைவாத நில உடமைச் சிந்தனை மரபு வழியில், மத வெறியையும், துடைத்தெறியப்பட வேண்டிய அருவருப்பான சாதியக் கட்டமைப்பையும்,மீட்க முயலும் இந்துத்துவ சமூகவிரோதிகளுக்கு இணையாக தேசிய விடுதலைக்கான கோட்பாட்டை மொழி வெறியாக மடை மாற்ற முயலும் கும்பல்களில் முதன்மையானது தான் சீமன் தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சி.

சீமான் சிங்கள பெண்களின் மார்பை அறுத்தெறிவேன் என்றும் குழந்தைகளை குண்டுவீசி கொலை செய்வேன் என்றும் கனடா நாட்டில் 2010 ஆம் ஆண்டு பேசியதைத் தொடர்ந்து அந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டார். (காணொளி1)

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி, வீரத் தமிழர் முன்னணி என்ற பினாமிப் பெயரில் புலம்பெயர் நாடுகளில் இயங்க ஆரம்பித்தது.

விடுதலை புலிகள் இலங்கையில் கோலோச்சிய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் அந்த இயக்கத்தின் சனநாயக முகமாகச் செயற்பட்ட அமைப்புக்கள் தான் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்றன. உலகத்தமிழர் பேரவை சிறிது சிறிதாக இலங்கையில் 2015 ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி அரசின்’ ஆதரவு இயக்கமாக மாறிவிட, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு ராஜபக்சவை போர்குற்றவாளிகளாக்கிவிடலாம் என்ற முழக்கத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட ஆரம்பித்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு எனச் சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் குழு 2015 இற்கு பின்னர் பல இளஞர்களை வீரத் தமிழர் முன்னணியை நோக்கி இணைத்துக்கொண்டது.

தெலுங்கர்களே தமிழர்களின் எதிரிகள், சிங்கள மக்கள் ராஜசிங்கன் என்ற தெலுங்கு மன்னனின் வழித் தோன்றல்கள்;திராவிடக் கட்சிகள் தெலுங்கர்களின் சதித்திட்டத்தால் உருவாக்கப்பட்டவை என்ற புதிய புனைவுகளின் அடிப்படையில் வீரத்தமிழர் முன்னணி இயங்க ஆரம்பித்தது.

தெலுங்கர்கள் – சிங்களவர்கள் – திராவிடக் கட்சிகள் அழிக்கப்பட்டு ஈழம் பெற வேண்டுமானல் தமிழ் நாட்டில் சீமான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெறியூட்டும் பேச்சுக்கள், கவர்ச்சிகரமான மேலங்கிகள், சமூக வலைத்தளங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. இச்சமூக விரோதக் கருத்தை மையப்படுத்தி உருவாக்க்கப்பட்ட குழுவின் ஆதரவாளர்களாக வியாபாரிகள் பலர் இணைக்கப்பட்டனர். இவை அனைத்தையும் சீமானின் சார்பில் கச்சிதமாக ஒருங்கிணைத்தவரே கல்யாணசுந்தரம் என்ற பள்ளி ஆசிரியர்.

 

 

காங்கிரஸ் எதிர்ப்பு, திராவிடர் இயக்க எதிர்ர்பு போன்றவற்றின் ஊடாக மெலிதான ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா ஆதரவும் வீரத்தமிழர் முன்னணியால் உருவமைக்கப்பட்டது. தமிழகத்தின் முன்னை நாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவின் போது புலம்பெயர் நாடுகளில் சில பகுதிகளிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவிற்கு திராவிட வெறுப்புணர்வை நாம் தமிழர் கட்சி உருவாக்கும் அளவிற்கு வெற்றிபெற்றது.

கருப்பின மக்கள் வாழும் நாடுகளில் உள் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் போன்றன இருந்தாலும், வெள்ளையின் மேலதிக்கத்திற்கு எதிராக அவர்கள் கருப்பர்களாக ஒன்றிணைகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தென்னிந்தியாவில், ஆரிய மேலாதிக்கவாத்த்திற்கு எதிராக திராவிடம் என்ற அடிப்படையில் பல் வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவதை மறுக்கும் சீமான் கும்பல் அந்த அழிவுச் சமன்பாட்டிற்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களையும் இழுத்துப் போட்டதற்கு பிரதான காரணம் புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்த பணம் மட்டுமே.

 

ஈழப் போராட்டம் மட்டுமே விமானப்படையைக் கொண்டிருந்தது; புலிகள் போன்ற பலமான இயக்கம் உலகில் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை;பிரபாகரன் போன்ற வலிமை மிக்க தலைவர் எவருமே இதுவரையில் பிறந்ததில்லை; என்ற முழக்கங்களை புலம் பெயர் அமைப்புகள் மட்டுமல்ல இலங்கை அரசும் இணைந்தே முன்வைத்தது. இதன் அடிப்படைக் காரணம், இவ்வளவு வலிமையான அமைப்பே ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள முடியவில்லை என்றால் இனி மேல் ஈழப்போராட்டம் சாத்தியமற்றது என்ற அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே.

அதனை இலங்கை அரசும் புலம்பெயர் அமைப்புக்களும் கச்சிதமாக செய்து முடித்துவிட அதன் மறுபக்கத்தில் சீமான் கும்பல் புதிய திட்டத்தை வகுத்திருந்தது. ஈழப் போராட்டம் இனிமேல் சாத்தியமற்றது என்பது உணமை தான் ஆனால் சீமான் முதலமைச்சரானால் அது வெற்றிகொள்ளப்படலாம் என்ற பிரச்சாரம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த வெற்றி தெலுங்கர்களின் அல்லது திராடவிடக் கட்சிகளின் அழிவிலேயே சாத்தியம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது.

 

 

வேதாந்த நிறுவனம் தூத்துகுடியில் நிகழ்த்திய படுகொலைக்கு எதிராக லண்டன் இந்தியத் தூதரகத்தில் ஒரு போராட்டம் நடைபெற்றது. பெருமளவில் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்ட அந்த போராட்டத்தில் அப்போது பிரித்தானியாவிற்கு வந்திருந்த சு.ப.வீரபாண்டியன் உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. கல்யாணசுந்தரம் ஒழுங்கமைத்திருந்த வீரத்தமிழர் முன்னணி சீமானின் உத்தரவின் பெயர் சு.பி.வி இற்கு மிரட்டல்விடுத்தது. அப் போராட்டத்தில் சு.ப.வி கலந்துகொண்டால் போராட்டத்தையே குழப்பப்போவதாக அதன் உறுப்பினர்கள் மிரட்டினார்கள். இறுதியில் அந்த போராட்டத்தில் சு.ப.வீ கலந்துகொள்ளவில்லை. பாரிசாலன் என்பவரின் வீடியோக்களைப் பார்வையிடுமாறு வீரத்தமிழர் முன்னணியினர் இருவர் துண்டுப்பிரசுரம் வினியோகித்துவிட்டு போராட்டத்திலிருந்து தலைமறைவாகினர்.

2009 இனப்படுகொலையின் பின்னர் உருவாக்கப்பட்டு அறிக்கை அமைப்பாகச் செயலிழந்து போன நாடுகடந்த தமிழீழ அமைப்பிற்காக பணம் சேர்த்த சிலர் இக்காலப் பகுதியில் கல்லாயணசுந்தரம் – சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

திரட்டப்படும் பணத்தை ஒவ்வோரு தேர்தல் தொகுதிக்கும் அனுப்புமாறும், ஒரு குறித்த தனிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டம் என்றும் கல்யாணசுந்தரம் உத்தரவிட்டதாகக் கூறும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி உறுப்பினர் ஒருவர் அப்போதே சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்.

பணத்தை குறித்த சில கணக்குகளுக்கே அனுப்பிவைக்குமாறு சில நாட்களின் பின்னர் உத்தரவிட்ட சீமான், புலம்பெயர் தமிழர்களின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறுகிறார்.

தவிர, புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய பணத்தை கல்யாணசுந்தரம் சூறையாடிவிட்டதாக சில நாட்களின் முன்னரே புலம்பெயர் நாடுகளில் பிராச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக வீரத் தமிழர் முன்னணியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

 

 

தோழர் சுந்தரவல்லி வெளியிட்ட காணொளியில் பேசப்பட்ட கருத்துக்களை ஒட்டியே இருவருக்கும் இடையிலான மோதல் உருவானது என்று மிகவும் தந்திரமாகத் தப்பிக்கொள்ளும் கல்யாணசுந்தரமும் சீமானும் இச் சிக்கல்களின் அடிப்படை பணப்பட்டுவாடா தொடர்பானது எனப் பேசமாட்டார்கள். அது சட்டரீதியான ஆபத்துகள் நிறைந்தது என்பது மட்டுமல்ல கடந்தகால இலப கணக்குகள் தொடர்பானதும் கூட. ஆனால் ஈழப் போராட்டம் என்பதை வலதுசாரிகளின் அழிவு அரசியலின் பக்கத்திலிருந்து மிட்டெடுக்க அவர்களின் வியாபார நோக்கம் தொடர்பாகப் பேசுவதும் அவசியமானது.

துதிபாடலின் அடிப்படையில் அல்ல, விமர்சனம் சுய விமர்சனம் ஊடகாவே ஈழப் போராட்டம் மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் நடக்கும் போராட்டமும் முன்னோக்கிய வழியில் செல்லும் என்பதை உணர்த்துவதற்காகவும் கூட தமிழ்த் தேசியம் என்ற வியாபார முழக்கத்தின் கீழ் நடக்கும் அயோக்கியத் தனத்தை வெளிக்கொண்டுவர வேண்டும்.

 


இன்னும் வரும்…

 

http://inioru.com/seeman-kalyanasuntharam-suntharavalli/

 

 

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

இன்னும் வரும்…

http://inioru.com/seeman-kalyanasuntharam-suntharavalli/

 

 

கல்யாணசுந்தரத்தை அன்றே மேடையில் எச்சரித்த சீமான்

 

 

 

Reply for Sundaravalli | Seeman | Kalyanasundaram | Rajiv Gandhi | Tenttu Kottaai Vicky

https://www.youtube.com/watch?v=sfA9EBMt53Y

அண்ணன் சீமான் காக தான் நாம் தமிழர் கட்சி யில் இனைந்தோம் கல்யாணம் சுந்திரத்திற்காக இல்லை என்றும் அண்ணன் சீமான் உடன் மட்டுமே பயணம் நாம் தமிழர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கல்யாணசுந்தரம் ஒரு துரோகி

 

நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வெளியில் சென்றவுடன் கட்சி ஒரு சர்வாதிகார கட்சி என்று தான்தோன்றித்தனமாக பேட்டி கொடுப்பதை பார்க்க முடிகிறது. 

அப்படி சர்வாதிகார கட்சி என்று பொதுமக்களும் நினைத்துவிடக் கூடாது அதே சமயத்தில் கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளும் ஒழுக்க கட்டுப்பாட்டுடன் நடப்பதற்காக ஒரு சின்ன ஆலோசனை. 

சர்வாதிகார கட்சி என்று பெயர் இல்லாமல் கட்சியில் ஒரு உறுப்பினரை நீக்க வேண்டுமென்றால் நான்கு கட்டங்களில் நடக்க வேண்டும் என்ற கோணத்தில் பேசப்பட்டது மாற்றுக் கருத்துக்கள் பல இருந்தாலும் நீங்களும் இது குறித்து பேசுவது தான் கட்சியின் வளர்ச்சிக்கு சரியாக இருக்குமே தவிர தலைமையை எவரும் குறை சொல்லக் கூடாது என்றால் சிறந்த ஆலோசனைகளையும் நாம் செய்ய வேண்டும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் ஏறிப் பேசியதைத் தவிர எந்த வேலையும் செய்யாதவர் கல்யாணசுந்தரம் |இயக்குனர் களஞ்சியம் ஆவேசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தானே அங்க பூட்டி விட்டார்கள்? இங்க போர்ட் போடாமல் ஆரம்பித்து விட்டார்களா?🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Justin said:

இதைத் தானே அங்க பூட்டி விட்டார்கள்? இங்க போர்ட் போடாமல் ஆரம்பித்து விட்டார்களா?🤦‍♂️

எல்லா புகழும் தங்கள் மூவருக்குமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எல்லா புகழும் தங்கள் மூவருக்குமே.

அண்ணை, எந்த முறைப்பாடும் நான் செய்யவில்லை! ஏனையோர் கோபப் பட மூவர் காரணமென்கிறீர்களோ? கருத்துக்கு கோபப் படுவதென்றால் நாம் சிறுகுழந்தைகளா அண்ணை? எங்கள் உணர்ச்சி எங்கள் பொறுப்பல்லவா? 

"தீதும் நன்றும் பிறர்தரவாரா" எதற்கும் யார் யாரைப் போட்டுக் கொடுத்ததென்று தகவல்கள் வரும் வரையாவது தீர்ப்பை தள்ளி வையுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எல்லா புகழும் தங்கள் மூவருக்குமே.

 

1 hour ago, Justin said:

அண்ணை, எந்த முறைப்பாடும் நான் செய்யவில்லை! ஏனையோர் கோபப் பட மூவர் காரணமென்கிறீர்களோ? கருத்துக்கு கோபப் படுவதென்றால் நாம் சிறுகுழந்தைகளா அண்ணை? எங்கள் உணர்ச்சி எங்கள் பொறுப்பல்லவா? 

"தீதும் நன்றும் பிறர்தரவாரா" எதற்கும் யார் யாரைப் போட்டுக் கொடுத்ததென்று தகவல்கள் வரும் வரையாவது தீர்ப்பை தள்ளி வையுங்கள்! 

இதுக்கு மட்டும் அல்ல, எதுக்குக்குமே நான் நிர்வாகத்தை முறைப்பாட்டுடன் தனி மடலில் அணுகியதில்லை.

நிர்வாகத்துக்கான என் தகவல்களையும் எப்போதும் பொது வெளியில்தான் சொல்லி உள்ளேன்.

உண்மையில் ஏன் பூட்டினார்கள் என்றே எனக்கு விளக்கம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு பிசினஸ் பரிமாணம் இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது! இனியொரு கட்டுரை இதில் வெளிச்சம் பாய்ச்சும் என்று நம்பலாம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு கட்டுரையை வாசித்து அதற்கு கருத்து வைக்காமல் சீமான் பஜனை பாடும் காணொளிகளை உடையார் இணைப்பது தேவையற்றது.  வீரத் தமிழ் முன்னணி எப்படி புலம்பெயர்நாடுகளில் செயற்படுகின்றது என்று இனியொரு கட்டுரைக்கு மறுப்புச் சொல்லும்  கருத்தைப் பதிந்தால் உண்மை, பொய்களை அறியலாம்☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

2009 இனப்படுகொலையின் பின்னர் உருவாக்கப்பட்டு அறிக்கை அமைப்பாகச் செயலிழந்து போன நாடுகடந்த தமிழீழ அமைப்பிற்காக பணம் சேர்த்த சிலர் இக்காலப் பகுதியில் கல்லாயணசுந்தரம் – சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

திரட்டப்படும் பணத்தை ஒவ்வோரு தேர்தல் தொகுதிக்கும் அனுப்புமாறும், ஒரு குறித்த தனிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டம் என்றும் கல்யாணசுந்தரம் உத்தரவிட்டதாகக் கூறும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி உறுப்பினர் ஒருவர் அப்போதே சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்.

பணத்தை குறித்த சில கணக்குகளுக்கே அனுப்பிவைக்குமாறு சில நாட்களின் பின்னர் உத்தரவிட்ட சீமான், புலம்பெயர் தமிழர்களின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறுகிறார்.

தவிர, புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய பணத்தை கல்யாணசுந்தரம் சூறையாடிவிட்டதாக சில நாட்களின் முன்னரே புலம்பெயர் நாடுகளில் பிராச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக வீரத் தமிழர் முன்னணியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் மோதலுக்கான காரணம்  தெளிவாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2008இல எமது ஆய்வாளர்கள் எழுதியது போலவே இருக்கிறது.
மேலே உள்ள கட்டுரையில் எனக்கு தெரிந்து தவறான தகவல்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இனியொரு கட்டுரையை வாசித்து அதற்கு கருத்து வைக்காமல் சீமான் பஜனை பாடும் காணொளிகளை உடையார் இணைப்பது தேவையற்றது.  வீரத் தமிழ் முன்னணி எப்படி புலம்பெயர்நாடுகளில் செயற்படுகின்றது என்று இனியொரு கட்டுரைக்கு மறுப்புச் சொல்லும்  கருத்தைப் பதிந்தால் உண்மை, பொய்களை அறியலாம்☺️

நீர் இணைக்கும் பதிவிற்கு ஏதை பதியனுமென எனக்கு தெரியும்.👍😁

உங்களுடைய இலவச அறிவுரைகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்😜.

என்ன நீர் நிர்வாகமா,  ஏதை இணைப்பது என்று கூற? 😊

உங்களுக்கு ஒரு களவிதி மற்றவர்களுக்கு ஒன்றா?

நீங்கள் நாம் தமிழரை பற்றி தனி திரி திறக்கலாம், நாம் திறந்தால் நீங்குதலா?

இதுதான் யாழ் களத்தின் நேர்மை???

நீங்கள் என்னத்திற்கு காணோளி இணைத்தீர்கள் இதில்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

 

 

 

இலங்கைத் தீவில் பேரினவாதம் கொழுந்துவிட்டெரிகிறது. இந்திய மத அடிப்படைவாத அரசின் அருவருக்கத்தக்க மத வெறி, இலங்கை அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக இராணுவ மயமாக்கல் என்பன இன்று தெற்காசியாவின் ஒவ்வொரு மூலையையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ச என்ற முன்னை நாள் இராணுவத் தளபதி இலங்கை அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெபோதும் இல்லாத அளவிற்கு அவசியமாகிவிட்டது.

பழமைவாத நில உடமைச் சிந்தனை மரபு வழியில், மத வெறியையும், துடைத்தெறியப்பட வேண்டிய அருவருப்பான சாதியக் கட்டமைப்பையும்,மீட்க முயலும் இந்துத்துவ சமூகவிரோதிகளுக்கு இணையாக தேசிய விடுதலைக்கான கோட்பாட்டை மொழி வெறியாக மடை மாற்ற முயலும் கும்பல்களில் முதன்மையானது தான் சீமன் தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சி.

சீமான் சிங்கள பெண்களின் மார்பை அறுத்தெறிவேன் என்றும் குழந்தைகளை குண்டுவீசி கொலை செய்வேன் என்றும் கனடா நாட்டில் 2010 ஆம் ஆண்டு பேசியதைத் தொடர்ந்து அந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டார். (காணொளி1)

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி, வீரத் தமிழர் முன்னணி என்ற பினாமிப் பெயரில் புலம்பெயர் நாடுகளில் இயங்க ஆரம்பித்தது.

விடுதலை புலிகள் இலங்கையில் கோலோச்சிய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் அந்த இயக்கத்தின் சனநாயக முகமாகச் செயற்பட்ட அமைப்புக்கள் தான் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்றன. உலகத்தமிழர் பேரவை சிறிது சிறிதாக இலங்கையில் 2015 ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி அரசின்’ ஆதரவு இயக்கமாக மாறிவிட, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு ராஜபக்சவை போர்குற்றவாளிகளாக்கிவிடலாம் என்ற முழக்கத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட ஆரம்பித்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு எனச் சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் குழு 2015 இற்கு பின்னர் பல இளஞர்களை வீரத் தமிழர் முன்னணியை நோக்கி இணைத்துக்கொண்டது.

தெலுங்கர்களே தமிழர்களின் எதிரிகள், சிங்கள மக்கள் ராஜசிங்கன் என்ற தெலுங்கு மன்னனின் வழித் தோன்றல்கள்;திராவிடக் கட்சிகள் தெலுங்கர்களின் சதித்திட்டத்தால் உருவாக்கப்பட்டவை என்ற புதிய புனைவுகளின் அடிப்படையில் வீரத்தமிழர் முன்னணி இயங்க ஆரம்பித்தது.

தெலுங்கர்கள் – சிங்களவர்கள் – திராவிடக் கட்சிகள் அழிக்கப்பட்டு ஈழம் பெற வேண்டுமானல் தமிழ் நாட்டில் சீமான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெறியூட்டும் பேச்சுக்கள், கவர்ச்சிகரமான மேலங்கிகள், சமூக வலைத்தளங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. இச்சமூக விரோதக் கருத்தை மையப்படுத்தி உருவாக்க்கப்பட்ட குழுவின் ஆதரவாளர்களாக வியாபாரிகள் பலர் இணைக்கப்பட்டனர். இவை அனைத்தையும் சீமானின் சார்பில் கச்சிதமாக ஒருங்கிணைத்தவரே கல்யாணசுந்தரம் என்ற பள்ளி ஆசிரியர்.

 

 

காங்கிரஸ் எதிர்ப்பு, திராவிடர் இயக்க எதிர்ர்பு போன்றவற்றின் ஊடாக மெலிதான ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா ஆதரவும் வீரத்தமிழர் முன்னணியால் உருவமைக்கப்பட்டது. தமிழகத்தின் முன்னை நாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவின் போது புலம்பெயர் நாடுகளில் சில பகுதிகளிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவிற்கு திராவிட வெறுப்புணர்வை நாம் தமிழர் கட்சி உருவாக்கும் அளவிற்கு வெற்றிபெற்றது.

கருப்பின மக்கள் வாழும் நாடுகளில் உள் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் போன்றன இருந்தாலும், வெள்ளையின் மேலதிக்கத்திற்கு எதிராக அவர்கள் கருப்பர்களாக ஒன்றிணைகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தென்னிந்தியாவில், ஆரிய மேலாதிக்கவாத்த்திற்கு எதிராக திராவிடம் என்ற அடிப்படையில் பல் வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவதை மறுக்கும் சீமான் கும்பல் அந்த அழிவுச் சமன்பாட்டிற்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களையும் இழுத்துப் போட்டதற்கு பிரதான காரணம் புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்த பணம் மட்டுமே.

 

ஈழப் போராட்டம் மட்டுமே விமானப்படையைக் கொண்டிருந்தது; புலிகள் போன்ற பலமான இயக்கம் உலகில் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை;பிரபாகரன் போன்ற வலிமை மிக்க தலைவர் எவருமே இதுவரையில் பிறந்ததில்லை; என்ற முழக்கங்களை புலம் பெயர் அமைப்புகள் மட்டுமல்ல இலங்கை அரசும் இணைந்தே முன்வைத்தது. இதன் அடிப்படைக் காரணம், இவ்வளவு வலிமையான அமைப்பே ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள முடியவில்லை என்றால் இனி மேல் ஈழப்போராட்டம் சாத்தியமற்றது என்ற அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே.

அதனை இலங்கை அரசும் புலம்பெயர் அமைப்புக்களும் கச்சிதமாக செய்து முடித்துவிட அதன் மறுபக்கத்தில் சீமான் கும்பல் புதிய திட்டத்தை வகுத்திருந்தது. ஈழப் போராட்டம் இனிமேல் சாத்தியமற்றது என்பது உணமை தான் ஆனால் சீமான் முதலமைச்சரானால் அது வெற்றிகொள்ளப்படலாம் என்ற பிரச்சாரம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த வெற்றி தெலுங்கர்களின் அல்லது திராடவிடக் கட்சிகளின் அழிவிலேயே சாத்தியம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது.

 

 

வேதாந்த நிறுவனம் தூத்துகுடியில் நிகழ்த்திய படுகொலைக்கு எதிராக லண்டன் இந்தியத் தூதரகத்தில் ஒரு போராட்டம் நடைபெற்றது. பெருமளவில் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்ட அந்த போராட்டத்தில் அப்போது பிரித்தானியாவிற்கு வந்திருந்த சு.ப.வீரபாண்டியன் உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. கல்யாணசுந்தரம் ஒழுங்கமைத்திருந்த வீரத்தமிழர் முன்னணி சீமானின் உத்தரவின் பெயர் சு.பி.வி இற்கு மிரட்டல்விடுத்தது. அப் போராட்டத்தில் சு.ப.வி கலந்துகொண்டால் போராட்டத்தையே குழப்பப்போவதாக அதன் உறுப்பினர்கள் மிரட்டினார்கள். இறுதியில் அந்த போராட்டத்தில் சு.ப.வீ கலந்துகொள்ளவில்லை. பாரிசாலன் என்பவரின் வீடியோக்களைப் பார்வையிடுமாறு வீரத்தமிழர் முன்னணியினர் இருவர் துண்டுப்பிரசுரம் வினியோகித்துவிட்டு போராட்டத்திலிருந்து தலைமறைவாகினர்.

2009 இனப்படுகொலையின் பின்னர் உருவாக்கப்பட்டு அறிக்கை அமைப்பாகச் செயலிழந்து போன நாடுகடந்த தமிழீழ அமைப்பிற்காக பணம் சேர்த்த சிலர் இக்காலப் பகுதியில் கல்லாயணசுந்தரம் – சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

திரட்டப்படும் பணத்தை ஒவ்வோரு தேர்தல் தொகுதிக்கும் அனுப்புமாறும், ஒரு குறித்த தனிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டம் என்றும் கல்யாணசுந்தரம் உத்தரவிட்டதாகக் கூறும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி உறுப்பினர் ஒருவர் அப்போதே சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்.

பணத்தை குறித்த சில கணக்குகளுக்கே அனுப்பிவைக்குமாறு சில நாட்களின் பின்னர் உத்தரவிட்ட சீமான், புலம்பெயர் தமிழர்களின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறுகிறார்.

தவிர, புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய பணத்தை கல்யாணசுந்தரம் சூறையாடிவிட்டதாக சில நாட்களின் முன்னரே புலம்பெயர் நாடுகளில் பிராச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக வீரத் தமிழர் முன்னணியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

 

 

தோழர் சுந்தரவல்லி வெளியிட்ட காணொளியில் பேசப்பட்ட கருத்துக்களை ஒட்டியே இருவருக்கும் இடையிலான மோதல் உருவானது என்று மிகவும் தந்திரமாகத் தப்பிக்கொள்ளும் கல்யாணசுந்தரமும் சீமானும் இச் சிக்கல்களின் அடிப்படை பணப்பட்டுவாடா தொடர்பானது எனப் பேசமாட்டார்கள். அது சட்டரீதியான ஆபத்துகள் நிறைந்தது என்பது மட்டுமல்ல கடந்தகால இலப கணக்குகள் தொடர்பானதும் கூட. ஆனால் ஈழப் போராட்டம் என்பதை வலதுசாரிகளின் அழிவு அரசியலின் பக்கத்திலிருந்து மிட்டெடுக்க அவர்களின் வியாபார நோக்கம் தொடர்பாகப் பேசுவதும் அவசியமானது.

துதிபாடலின் அடிப்படையில் அல்ல, விமர்சனம் சுய விமர்சனம் ஊடகாவே ஈழப் போராட்டம் மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் நடக்கும் போராட்டமும் முன்னோக்கிய வழியில் செல்லும் என்பதை உணர்த்துவதற்காகவும் கூட தமிழ்த் தேசியம் என்ற வியாபார முழக்கத்தின் கீழ் நடக்கும் அயோக்கியத் தனத்தை வெளிக்கொண்டுவர வேண்டும்.

 


இன்னும் வரும்…

 

http://inioru.com/seeman-kalyanasuntharam-suntharavalli/

 

 

சிவப்புக்கும் நீலத்துக்கும் இருக்கும் 
அருவெறுப்பு .....கட்டுரையை வாசிப்பதே வீண் 
என்பதை பறைசாற்றி இருக்கிறது.

இதிலே முக்கியமான விடயம் 
எழுதியவர்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம் காட்டுகிறார் என்றால் 
இணைத்த கிருபன் அவர்களும் 
எங்களுக்கு புலம்பெயர் தமிழர்களை காட்டுவதுபோல 
இது பற்றி கருத்து எழுதுங்கள் என்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

சிவப்புக்கும் நீலத்துக்கும் இருக்கும் 
அருவெறுப்பு .....கட்டுரையை வாசிப்பதே வீண் 
என்பதை பறைசாற்றி இருக்கிறது.

இதிலே முக்கியமான விடயம் 
எழுதியவர்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம் காட்டுகிறார் என்றால் 
இணைத்த கிருபன் அவர்களும் 
எங்களுக்கு புலம்பெயர் தமிழர்களை காட்டுவதுபோல 
இது பற்றி கருத்து எழுதுங்கள் என்கிறார். 

அப்படி என்ன அருவெறுப்பை இந்த கட்டுரையில் கண்டீர்கள்?...புரியும் படி சொன்னால் நானும் விளங்கிக் கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அப்படி என்ன அருவெறுப்பை இந்த கட்டுரையில் கண்டீர்கள்?...புரியும் படி சொன்னால் நானும் விளங்கிக் கொள்கிறேன் 

"இந்த கட்டுரையில்"

இதுக்கே முதல் இது எந்த தகுதியும் அற்றது 
கட்டுரை என்பது வேறு காழ்ப்புணர்வு என்பது வேறு 

இது ஒரு காழ்ப்புணர்வு பிராந்தியை ஊட்டுவதுக்கு 
இருக்கிற சிலதையும் இல்லாத பலதையும் போட்டு 
ஒரு கொத்து ரொட்டி அடிப்பது. 

ஏற்கனவே வாசிப்பவர்களுக்கு என்ன மாதிரியான 
எண்ணங்களை கொடுப்பது என்று தீர்மானித்து தொடங்குவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

"இந்த கட்டுரையில்"

இதுக்கே முதல் இது எந்த தகுதியும் அற்றது 
கட்டுரை என்பது வேறு காழ்ப்புணர்வு என்பது வேறு 

இது ஒரு காழ்ப்புணர்வு பிராந்தியை ஊட்டுவதுக்கு 
இருக்கிற சிலதையும் இல்லாத பலதையும் போட்டு 
ஒரு கொத்து ரொட்டி அடிப்பது. 

ஏற்கனவே வாசிப்பவர்களுக்கு என்ன மாதிரியான 
எண்ணங்களை கொடுப்பது என்று தீர்மானித்து தொடங்குவது. 

மருதர், உங்கள் விருப்பு ,வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வாசித்து பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிவப்பாலும் நீலத்திலும் 
மார்க் பண்ணிய வார்த்தைகளை வாசித்தீர்களா? 

Just now, ரதி said:

மருதர், உங்கள் விருப்பு ,வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வாசித்து பாருங்கோ

இதில் நான் வெறுக்கவும் விரும்பவும் என்ன இருக்கிறது?
உங்களுக்கே தெரிய பல பொய்தான் இருக்கிறது 
இதை தமிழக தமிழர்கள் வாசித்து குழம்பினால் அதி அர்தமுண்டு 
உங்களை பற்றி எழுதி இருக்கிறார் .... இதில் நீங்கள் குழம்ப என்ன இருக்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

நான் சிவப்பாலும் நீலத்திலும் 
மார்க் பண்ணிய வார்த்தைகளை வாசித்தீர்களா? 

இதில் நான் வெறுக்கவும் விரும்பவும் என்ன இருக்கிறது?
உங்களுக்கே தெரிய பல பொய்தான் இருக்கிறது 
இதை தமிழக தமிழர்கள் வாசித்து குழம்பினால் அதி அர்தமுண்டு 
உங்களை பற்றி எழுதி இருக்கிறார் .... இதில் நீங்கள் குழம்ப என்ன இருக்கிறது? 

இப்ப எனக்கு நேரமில்லை ...நாளைக்கு நேரமிருந்தால் இந்த கட்டுரை பற்றி விரிவாய் எழுதுகிறேன் ...நன்றி 

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

விடுதலை புலிகள் இலங்கையில் கோலோச்சிய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் அந்த இயக்கத்தின் சனநாயக முகமாகச் செயற்பட்ட அமைப்புக்கள் தான் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்றன. உலகத்தமிழர் பேரவை சிறிது சிறிதாக இலங்கையில் 2015 ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி அரசின்’ ஆதரவு இயக்கமாக மாறிவிட, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு ராஜபக்சவை போர்குற்றவாளிகளாக்கிவிடலாம் என்ற முழக்கத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட ஆரம்பித்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு எனச் சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் குழு 2015 இற்கு பின்னர் பல இளஞர்களை வீரத் தமிழர் முன்னணியை நோக்கி இணைத்துக்கொண்டது.

 

நாம் தமிழர் மீதான வெறுப்பரசியல்  தவிர வேறென்ன இருக்கின்றது இதில். போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை மோசடி செய்த ஒருங்கிணைப்பு குழுமீதான வெறுப்பை நாம் தமிழர் பயன்படுத்திக்கொண்டதா சொல்வது எந்தவிதத்திலும் பொருத்தமற்ற கருத்து. தனது வெறுப்பரசியலுக்காக சொல்லும் பொய்.

19 hours ago, கிருபன் said:

தெலுங்கர்கள் – சிங்களவர்கள் – திராவிடக் கட்சிகள் அழிக்கப்பட்டு ஈழம் பெற வேண்டுமானல் தமிழ் நாட்டில் சீமான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெறியூட்டும் பேச்சுக்கள், கவர்ச்சிகரமான மேலங்கிகள், சமூக வலைத்தளங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. இச்சமூக விரோதக் கருத்தை மையப்படுத்தி உருவாக்க்கப்பட்ட குழுவின் ஆதரவாளர்களாக வியாபாரிகள் பலர் இணைக்கப்பட்டனர். இவை அனைத்தையும் சீமானின் சார்பில் கச்சிதமாக ஒருங்கிணைத்தவரே கல்யாணசுந்தரம் என்ற பள்ளி ஆசிரியர்.

நாம் தமிழர் பேச்சுக்களில் ஈழப்போராட்டம் கச்சதீவு பிரச்சனை மீனவர் பிரச்சனை மீத்தேன் கைரோ கார்பன் பிரச்சனை, நில நீர்வளச் சுரண்டல் , அணு உலைப் பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை  என்று ஏராளமானவை முன் நிற்கின்றது.  பேரிடர் மீட்புக் குழு , ஏரிகள் துர்வருதல் மரம் நடுதல் என எத்தனையோ களபணிகள் அனைத்தையும்  சமூக விரோதக் கருத்தாக சித்தரிக்கும் இந்த சபா நாவலன் எழுத்துக்களில் எந்த அறமும் கிடையாது. 

20 hours ago, கிருபன் said:

சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

பணத்தெகை ஊதிப்பெருகிறதா ?  இங்க புலம்பெயர்ந்த மக்கள் பணம் அங்க ஊதி பெருகி பொங்கி வழியிற நிலமையில அனுப்புறதுக்கு பதிலாக நாட்டில போரால் பாதிக்கப்பட்டு ஊனப்பட்டு வீடுவாசல் இல்லாம இருக்கிற மக்களுக்கும் நுண்கடன்களால் வறுமையால் தற்கொலை செய்யும் மக்களுக்கும்  கொடுக்காமல் தமிழ்நாட்டில ஊதிப்பெருக வைக்கினம்??? அள்ளி அவிழ்த்து விடும்  போது கொஞ்சமாவது யோசிக்க மாட்டார இந்த சபா நாவலன் ?

20 hours ago, கிருபன் said:

கருப்பின மக்கள் வாழும் நாடுகளில் உள் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் போன்றன இருந்தாலும், வெள்ளையின் மேலதிக்கத்திற்கு எதிராக அவர்கள் கருப்பர்களாக ஒன்றிணைகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தென்னிந்தியாவில், ஆரிய மேலாதிக்கவாத்த்திற்கு எதிராக திராவிடம் என்ற அடிப்படையில் பல் வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவதை மறுக்கும் சீமான் கும்பல் அந்த அழிவுச் சமன்பாட்டிற்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களையும் இழுத்துப் போட்டதற்கு பிரதான காரணம் புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்த பணம் மட்டுமே.

தென்னிந்தியாவில் எந்த தேசீய இனங்கள் திராவிடம் என்ற அடிப்படையில் ஒன்றிணைகின்றது ? ஆந்திரா கர்நாடகா கேரளாவில் திராவிடம் எந்த லட்சணத்தில் இருக்கு? ஒரே இனம் என்று இணையக் கூட தேவையில்லை தண்ணிய என்றாலும் துறந்து விடுறானா ? என்ன இழவு புரிதல் இது?. இதுக்குள்ள வெள்ளயின மேலாதிக்கத்துக்கு எதிரா கருப்பர் ஒன்று கூடுகினம் என்ற உவமை வேறு !! 

----

கட்டுரையோடு இணைக்கப்பட்ட காணொளியில் செர்லைட் போராட்டத்திற்கு நாம் தமிழர் வரவில்லை என்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் செல்ல சீமானுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை கூட அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு நெல்லையில் கண்டன ஆர்பாட்டம் செய்ய வேண்டியிருந்தது. 

சுபவீ உடன் கூட இருந்த அன்பு தென்னரசு 3 நிமிடத்தில் 

--------

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நீர் இணைக்கும் பதிவிற்கு ஏதை பதியனுமென எனக்கு தெரியும்.👍😁

சீமான் என்ற பெயரை எந்தத் திரியில் கண்டாலும் அதில் என்ன சொல்லப்படுகின்றது என்பதை வாசிக்காமலேயே பிரச்சாரக் காணொளிகளை ஒட்டுவதுதான் உடையாரின் முழுநேரத் தொழில் என்பது நன்றாகத் தெரியும்.😁 இதனால்தான் யாழ் களம் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் களமாக மாறிவருகின்றது. அதன் வெறுப்பரசியலை விமர்சனம் செய்பவர்களை களத்தில் இருந்து கலைக்கவேண்டும் என்பதுதான் தொண்டரடி உடையார்களின் நோக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நீர் இணைக்கும் பதிவிற்கு ஏதை பதியனுமென எனக்கு தெரியும்.👍😁

உங்களுடைய இலவச அறிவுரைகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்😜.

என்ன நீர் நிர்வாகமா,  ஏதை இணைப்பது என்று கூற? 😊

உங்களுக்கு ஒரு களவிதி மற்றவர்களுக்கு ஒன்றா?

நீங்கள் நாம் தமிழரை பற்றி தனி திரி திறக்கலாம், நாம் திறந்தால் நீங்குதலா?

இதுதான் யாழ் களத்தின் நேர்மை???

நீங்கள் என்னத்திற்கு காணோளி இணைத்தீர்கள் இதில்???

சரியாக சொன்னீர்கள் உடையார்!
தாங்கள் பெரிய புத்தக ஜீவிகள் என தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக்கொள்கின்றார்கள்.
மாவீரர் நினவுக்கூட்டங்களுக்கு செல்பவர்களை விசிலடிச்சான் கூட்டங்கள் என விளித்த மகான் அல்லவா அவர். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

சீமான் என்ற பெயரை எந்தத் திரியில் கண்டாலும் அதில் என்ன சொல்லப்படுகின்றது என்பதை வாசிக்காமலேயே பிரச்சாரக் காணொளிகளை ஒட்டுவதுதான் உடையாரின் முழுநேரத் தொழில் என்பது நன்றாகத் தெரியும்.😁 இதனால்தான் யாழ் களம் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் களமாக மாறிவருகின்றது. அதன் வெறுப்பரசியலை விமர்சனம் செய்பவர்களை களத்தில் இருந்து கலைக்கவேண்டும் என்பதுதான் தொண்டரடி உடையார்களின் நோக்கம்.

உங்களின் ஊகம் எண்ணங்கள் உங்களுடன் இருக்கட்டும்😜, முதலில் காணோளிகைள பார்த்தீர்களா?🤣 பார்த்தபின் தொடர்பு இருக்கா இல்லையா என கதைக்கவும்👍.

கேட்ட கேள்விகளுக்கு பதிலை தரவும்.👍

நீங்கள் வெறுப்பரசியலை இணைக்கலாம், மற்றவர்கள் இணைத்தால், ஆதரவு😜. உங்கட பஐனைகளை சோபா சுத்தி என்ற தரங்கொட்டவர்களுடன்😜.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடுபவரை ஆதரிபதில் மகிழ்ச்சியே..

எங்கள் விடுதலைக்கு ஆதரவு கொடுத்த மண், விடுதலையடைய போராடுகின்றது, அதற்கு முழு ஆதரவு.

திராவிட கொள்கையின் மாயையில் பஜனை பாடுபவர்களுக்கு இது வேதனைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உங்களுடைய இலவச அறிவுரைகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்😜.

என்ன நீர் நிர்வாகமா,  ஏதை இணைப்பது என்று கூற? 😊

உங்களுக்கு ஒரு களவிதி மற்றவர்களுக்கு ஒன்றா?

நான் உங்களைப் போல ஒரு கள உறுப்பினர் அவ்வளவே. ஆனால் கருத்துக்களை வைத்து விவாதம் செய்வதே தெளிவுகள் பிறக்கும் என்பதில் நம்பிக்கையுள்ளவன். பிடிக்காத கருத்து வைப்பவர்களை மெளனிக்கச் செய்யவேண்டும் என்ற பாஸிச சிந்தனை என்னிடம் இல்லை.

யாழ் களத்தில் அறிவுரைகள் சொல்லுவதில்லை. அறிவுரை கேட்கும் அளவிற்கு முதிர்ச்சி இல்லாதவர்கள் இங்கு இல்லை என்றே நினைக்கின்றேன்😁

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.