Jump to content

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நான் உங்களைப் போல ஒரு கள உறுப்பினர் அவ்வளவே. ஆனால் கருத்துக்களை வைத்து விவாதம் செய்வதே தெளிவுகள் பிறக்கும் என்பதில் நம்பிக்கையுள்ளவன். பிடிக்காத கருத்து வைப்பவர்களை மெளனிக்கச் செய்யவேண்டும் என்ற பாஸிச சிந்தனை என்னிடம் இல்லை.

யாழ் களத்தில் அறிவுரைகள் சொல்லுவதில்லை. அறிவுரை கேட்கும் அளவிற்கு முதிர்ச்சி இல்லாதவர்கள் இங்கு இல்லை என்றே நினைக்கின்றேன்😁

நீங்கள் இப்படி சொல்கின்றீர்கள், ஆனா இங்கு ஒருவர், தான் மட்டும் தான் மொத்த படித்தவரென மார்தட்டிகொண்டு திரிகின்றார்🤣

பிடிக்காத கருத்து வைப்பவர்களை மெளனிக்கச் செய்யவேண்டும் என்ற பாஸிச சிந்தனைகள் யாரிடமும் இல்லை👍

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சரியாக சொன்னீர்கள் உடையார்!
தாங்கள் பெரிய புத்தக ஜீவிகள் என தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக்கொள்கின்றார்கள்.
மாவீரர் நினவுக்கூட்டங்களுக்கு செல்பவர்களை விசிலடிச்சான் கூட்டங்கள் என விளித்த மகான் அல்லவா அவர். 😁

நானும்தான் மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு தவறாமல் 2009 வரை போனேன். அதன் பின்னரும் சில தடவை போயிருந்தேன். 2009 இல் சீமானுக்கு விசிலடிச்சவர்கள் அங்கு வந்த பெரும்பகுதியினரின் உணர்வுகளை மதித்ததாக நினைக்கவில்லை. உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை அவமதித்ததாகத்தான் இப்போதும் கருதுகின்றேன்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

2008இல எமது ஆய்வாளர்கள் எழுதியது போலவே இருக்கிறது.
மேலே உள்ள கட்டுரையில் எனக்கு தெரிந்து தவறான தகவல்கள் உள்ளன.

தவறான தகவல்கள் என்னவென்று எழுதினால் அதை நாங்களும் அறியலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நீங்கள் நாம் தமிழரை பற்றி தனி திரி திறக்கலாம், நாம் திறந்தால் நீங்குதலா?

இதுதான் யாழ் களத்தின் நேர்மை???

நீங்கள் என்னத்திற்கு காணோளி இணைத்தீர்கள் இதில்???

இனியொரு கட்டுரை பல விடயங்களை அலசுகின்றது என்பதால் நாம் தமிழர் கட்சி பிரச்சாரத் திரியில் இணைக்கவில்லை. 

காணொளிகள் கட்டுரையில் இருந்தது. சீமான் அதில் பேசவில்லை. அது உல்டா செய்யப்பட்ட காணொளி என்ற சொல்லாததற்கு நன்றி🙏🏿

இதை ஏன் யாழ் களத்தின் நேர்மையோடு தொடர்புபடுத்துகின்றீர்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு குழப்பம் இருந்தால், நான் உங்கள் கருத்துக்கள் சிலவற்றை முறைப்பாடு செய்வதுபோல முறைப்பாடு செய்யுங்கள்.😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

நானும்தான் மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு தவறாமல் 2009 வரை போனேன். அதன் பின்னரும் சில தடவை போயிருந்தேன். 2009 இல் சீமானுக்கு விசிலடிச்சவர்கள் அங்கு வந்த பெரும்பகுதியினரின் உணர்வுகளை மதித்ததாக நினைக்கவில்லை. உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை அவமதித்ததாகத்தான் இப்போதும் கருதுகின்றேன்.

உலக நாடுகளிலுள்ள அரசியல் கட்சிகளிலும் சரி அல்லது அமைப்புகளிலும் சரி ஒரு சிறிய பகுதியினர் அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வார்கள். அந்த சிறிய நிகழ்வுகளையெல்லாம் காவிக்கொண்டு திரிவதெல்லாம் ஒருவகை முட்டையில் புடுங்குவதை போன்றதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

சிவப்புக்கும் நீலத்துக்கும் இருக்கும் 
அருவெறுப்பு .....கட்டுரையை வாசிப்பதே வீண் 
என்பதை பறைசாற்றி இருக்கிறது.

இதிலே முக்கியமான விடயம் 
எழுதியவர்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம் காட்டுகிறார் என்றால் 
இணைத்த கிருபன் அவர்களும் 
எங்களுக்கு புலம்பெயர் தமிழர்களை காட்டுவதுபோல 
இது பற்றி கருத்து எழுதுங்கள் என்கிறார். 

மருதர்,

நீங்கள் சிவப்பிலும் நீலத்திலும் காட்டியதைப் பார்த்தேன். இனியொரு கட்டுரையை காழ்ப்புணர்வுள்ள கட்டுரை என்று சொல்லி அதில் சொல்லப்பட்ட விடயங்களை முழுவதுமாக மறுதலிப்பதுதான் உங்கள் நோக்கம்.

இதன் மூலம் நாம் தமிழர் கட்சி என்பதற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தொடர்பில்லை, அது தமிழகத்திற்கு மட்டுமான கட்சி, ஆனால் தமிழ் தேசியத்தை முன்னிறுத்துவதால் தார்மீக ஆதரவு மட்டும்தான் கொடுக்கின்றோம் என்று சொல்லும் கூட்டத்தோடு நிற்கின்றீர்கள். ஆனால் இன்னொரு திரியில் பாரிஸ் லாசப்பலில் கல்யாணசுந்தரம் கலந்துகொண்ட கூட்டத்தில் பணம் பெருமளவு சேர்க்கப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் புலம்பெயர் தமிழர்களை எப்படி நாம் தமிழர் கட்சி தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றது என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் தமிழர்களை எப்படி நாம் தமிழர் கட்சி தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றது என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது.

ஒரு துளி கூட விவாதிக்க தேவையில்லை... தமிழ்நாட்டு மக்கள் செய்த உதவிக்கு எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கைமாறு செய்ய முடியாது. அவர்களின் இன விடுதலை ஒன்றிற்கு உதவுவதை தவிர.

உங்களை பயன்படுத்துகின்றாதா? உதவி செய்தவர் உங்களிடம் வந்து நீதி கேட்டாரா?

சும்மா இருந்து மெல்லாதீர்கள்

இப்படிதான் ஒரு கூட்டமிருந்து எமது போராட்டத்தை அழித்தார்கள், முடிந்தபின் ஐயோ அவர்கள் இல்லையே என ஓலமிடுகின்றார்கள். விடிவுக்கு போராடும் ஒவ்வொருவரும் ஏதிர் நோக்கும் பிரச்சனைகள்தான். 

59 minutes ago, கிருபன் said:

இனியொரு கட்டுரை பல விடயங்களை அலசுகின்றது என்பதால் நாம் தமிழர் கட்சி பிரச்சாரத் திரியில் இணைக்கவில்லை. 

காணொளிகள் கட்டுரையில் இருந்தது. சீமான் அதில் பேசவில்லை. அது உல்டா செய்யப்பட்ட காணொளி என்ற சொல்லாததற்கு நன்றி🙏🏿

இதை ஏன் யாழ் களத்தின் நேர்மையோடு தொடர்புபடுத்துகின்றீர்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு குழப்பம் இருந்தால், நான் உங்கள் கருத்துக்கள் சிலவற்றை முறைப்பாடு செய்வதுபோல முறைப்பாடு செய்யுங்கள்.😁

அப்படிப்பட்ட தேவை எனக்கு இல்லை

இப்படிப்பட்ட எண்ணங்கள் எனக்கு வருவதில்லை, அதனால் அப்படி சொல்ல வேண்டிய தேவையுமில்லை, உங்களுக்கு அப்படி எண்ணங்கள் வருவதால் இப்படி கேள்வி கேட்க தோனுகின்றது,

சந்தேகம் என்பது கொடிய நோய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

இப்படிதான் ஒரு கூட்டமிருந்து எமது போராட்டத்தை அழித்தார்கள், முடிந்தபின் ஐயோ அவர்கள் இல்லையே என ஓலமிடுகின்றார்கள். விடிவுக்கு போராடும் ஒவ்வொருவரும் ஏதிர் நோக்கும் பிரச்சனைகள்தான். 

முற்றிலும் உண்மையான கருத்து உடையார்.விடுதலைப்புலிகளை முற்று முழுதாக எதிர்த்தவர்கள் தான் இன்று அவர்கள் இல்லையே என்று பொச்சடித்துக்கொண்டு திரிகின்றார்கள். இது நான் பல இடங்களில் கண்ட உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

நாம் தமிழர் மீதான வெறுப்பரசியல்  தவிர வேறென்ன இருக்கின்றது இதில். போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை மோசடி செய்த ஒருங்கிணைப்பு குழுமீதான வெறுப்பை நாம் தமிழர் பயன்படுத்திக்கொண்டதா சொல்வது எந்தவிதத்திலும் பொருத்தமற்ற கருத்து. தனது வெறுப்பரசியலுக்காக சொல்லும் பொய்.

நாம் தமிழர்  செய்வது தமிழ்த் தேசியத்தின் பேரால் செய்யப்படும் வெறுப்பரசியல். அதன் மீதான விமர்சனம் சரியான பாதையில் தமிழ்த் தேசிய போராட்டத்தை முன்நகர்த்திச் செல்லவைக்கும். விமர்சனங்களை, கருத்துக்களை உள்வாங்காமல் உள்ள கட்சி, அமைப்புக்கள் உட்சுருங்கி சிதைந்து போகும் என்பதைத்தான் அண்மைய நடப்புக்கள் காட்டுகின்றன.

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

ஒரு துளி கூட விவாதிக்க தேவையில்லை... தமிழ்நாட்டு மக்கள் செய்த உதவிக்கு எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கைமாறு செய்ய முடியாது. அவர்களின் இன விடுதலை ஒன்றிற்கு உதவுவதை தவிர.

உங்களை பயன்படுத்துகின்றாதா? உதவி செய்தவர் உங்களிடம் வந்து நீதி கேட்டாரா?

சும்மா இருந்து மெல்லாதீர்கள்

இப்படிதான் ஒரு கூட்டமிருந்து எமது போராட்டத்தை அழித்தார்கள், முடிந்தபின் ஐயோ அவர்கள் இல்லையே என ஓலமிடுகின்றார்கள். விடிவுக்கு போராடும் ஒவ்வொருவரும் ஏதிர் நோக்கும் பிரச்சனைகள்தான். 

அப்படிப்பட்ட தேவை எனக்கு இல்லை

இப்படிப்பட்ட எண்ணங்கள் எனக்கு வருவதில்லை, அதனால் அப்படி சொல்ல வேண்டிய தேவையுமில்லை, உங்களுக்கு அப்படி எண்ணங்கள் வருவதால் இப்படி கேள்வி கேட்க தோனுகின்றது,

சந்தேகம் என்பது கொடிய நோய்

1980 களில் இருந்து  தமிழ் நாட்டு மக்கள் பலர் கட்சி பேதமின்றி பலவேறு கட்சிகளில் இருந்தும் இருந்து எமக்கு உதவினாரகள். தடா, பொடா போன்ற கடுமையான சட்டங்கள் மிக இறுக்கமாக அமுல் செய்யப்பட்ட 90 களில் எமக்காக உதவிய பலர் உள்ளார்கள். நன்றியைக் காட்ட அவர்களுக்கு வேண்டுமே தவிர உதவி செய்ய  சீமானிக்கட்சிக்கு உதவ வேண்டியதில்லை. தனி நபர்களாக அந்த இனவெறிக்கட்சிக்கு உதவுவதைப்பற்றி நான் கருத்து கூறவில்லை. ஈழத்தமிழருக்கு  எந்த கடப்பாடும் இல்லை 

எமக்காக குரல்  கொடுத்த  சுபவீர பாண்டியன் போன்ற தமிழ் நாட்டு உறவுகளை லண்டனில் உரையாற்றக்கூட விடாமல் அடாவடி செய்தவர்கள்  சீமானின் விஷமிகள் கும்பல். இங்கிலாந்து நாடு கொடுத்த  ஜனநாயக உரிமைகளை அனுபவித்துக் கொண்டு எமக்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர் என்ற நன்றி கூட இல்லாமல்  ஒருவரின் பேச்சுரிமையை தடுத்த அயோக்கிய கும்பல். இந்த கும்பலுக்கு கொம்பு சீவி விட்டது தமிழகத்தில் இருந்து  சீமானின் கட்சியான தாம் தமிழர் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மருதர்,

நீங்கள் சிவப்பிலும் நீலத்திலும் காட்டியதைப் பார்த்தேன். இனியொரு கட்டுரையை காழ்ப்புணர்வுள்ள கட்டுரை என்று சொல்லி அதில் சொல்லப்பட்ட விடயங்களை முழுவதுமாக மறுதலிப்பதுதான் உங்கள் நோக்கம்.

இதன் மூலம் நாம் தமிழர் கட்சி என்பதற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தொடர்பில்லை, அது தமிழகத்திற்கு மட்டுமான கட்சி, ஆனால் தமிழ் தேசியத்தை முன்னிறுத்துவதால் தார்மீக ஆதரவு மட்டும்தான் கொடுக்கின்றோம் என்று சொல்லும் கூட்டத்தோடு நிற்கின்றீர்கள். ஆனால் இன்னொரு திரியில் பாரிஸ் லாசப்பலில் கல்யாணசுந்தரம் கலந்துகொண்ட கூட்டத்தில் பணம் பெருமளவு சேர்க்கப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் புலம்பெயர் தமிழர்களை எப்படி நாம் தமிழர் கட்சி தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றது என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது.

கிருபன் !

இதில் இருக்கும் முக்காவாசி பொய் என்பது உங்களுக்கும் தெரியும்.
லண்டனில் என்ன நடக்கிறது என்று தமிழ் நாட்டில் பூச்சாண்டி கட்டுரை எழுதலாம் 
ஆனால் அது பொய் என்று லண்டனில் இருக்கும் இருவர் தர்க்கம் செய்வது வீண் நேரம் என்று நினைக்கிறன். 

குஜராத்தில் பாரிய நிலநடுக்கம் வந்தபோது 
நானே முன்னிலையில் நின்று ஆயிரக்கணக்கான டொலர் எனது கல்லூரி வாழகத்துக்குள் சேர்த்து 
அவர்களிடம் கொடுத்தேன் பின்பு அதில் பல மோசடி நடந்தது.


சுனாமி எனது சொந்த ஊரான மருதங்கேணியையும் அழித்து  இருந்தது 
ஆனால் தமிழ் நாட்டு தமிழர்கள் காசு சேர்த்த போது நான் ஒரு $100 கொடுத்துவிட்டுதான் 
ஊருக்குப்போனேன். பின்பு வரும்போது அதிலும் மோசடி.

சிங்களவர்களும் நிறைய காசு சேர்த்தார்கள் 
எனது நாப்பண் ஒருவனை அவர்களுக்கு அறிமுக படுத்திவிட்டேன் 
பின்பு அது பெரும் மோசடியாக இருந்து இங்கு உள்ளூர் பத்திரிகையில் கூட வந்தது. 

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் இதில் எனக்கு ஒரு ரூபா வராது போனாலும் 
இந்த மோசடிகளுக்கு நானும் ஒரு கோணத்தில் உடந்தை தான்.

ஊழலுக்காகவே தமிழகத்தில் இரண்டு கட்சி இருக்கிறது என்றால் 
ஒன்று திமுக மற்றது அதிமுக இந்த லட்ஷணத்தில்தான் இவர் திமுகவுக்கு 
செம்பு தூக்கிக்கொண்டு  நாதக எதோ ஒரு மாபியா கும்பல் போல எழுதுகிறார்.

நளினி முருகன் (ராஜீவ் கொலை குற்றவாளிகள்) நளினி அவர்கள் மகளின் திருமணத்துக்கு 
ஜாமினில் வந்து அவர் மகளுக்கு விசா மறுக்கப்பட்டு இருந்தது.
அப்போது ஆயிரக்கணக்கானவர்கள் தமிழக ஊடகங்களில் இவர்களது மகள் 
லண்டனில் மருத்துவம் படிக்க எங்கிருந்து பணம் வருகிறது இவர்கள் பணதுக்கு ஆகவே இந்த 
கொலையை செய்து இருக்கிறார்கள் என்று எழுத தொடங்கினார்கள்.
அந்த லூசு பிராண்டிகளுக்கு எனது உங்களது  நிலைமை தெரியாது. அவர்கள் எனது உறவினர்கள்தான் 
முருகனின் சகோதர்களே ஜெர்மனி சுவிஸில் லண்டனில் இருக்கிறார்கள் அவர்கள் இதனால் எவ்வளவு 
கஸ்ட்டுகளுக்குள்ளால் பயணிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். 

பண மோசடி என்பது எமது விடுதலை போராடடம் 
வன்னி பண்ணைகளில் இருந்த ஆரம்ப காலத்திலேயே நடந்து 
மண்டையில் போடுவது மன்னித்து விடுவது என்று குளறுபடி நடந்தது 

இவர் என்ன காழ்ப்புணர்வை கொட்டிட வருகிறார் என்பதுக்கு 
இவர் சொல்பிரயோகமே முதல் ஆதாரம். 

2 hours ago, tulpen said:

1980 களில் இருந்து  தமிழ் நாட்டு மக்கள் பலர் கட்சி பேதமின்றி பலவேறு கட்சிகளில் இருந்தும் இருந்து எமக்கு உதவினாரகள். தடா, பொடா போன்ற கடுமையான சட்டங்கள் மிக இறுக்கமாக அமுல் செய்யப்பட்ட 90 களில் எமக்காக உதவிய பலர் உள்ளார்கள். நன்றியைக் காட்ட அவர்களுக்கு வேண்டுமே தவிர உதவி செய்ய  சீமானிக்கட்சிக்கு உதவ வேண்டியதில்லை. தனி நபர்களாக அந்த இனவெறிக்கட்சிக்கு உதவுவதைப்பற்றி நான் கருத்து கூறவில்லை. ஈழத்தமிழருக்கு  எந்த கடப்பாடும் இல்லை 

எமக்காக குரல்  கொடுத்த  சுபவீர பாண்டியன் போன்ற தமிழ் நாட்டு உறவுகளை லண்டனில் உரையாற்றக்கூட விடாமல் அடாவடி செய்தவர்கள்  சீமானின் விஷமிகள் கும்பல். இங்கிலாந்து நாடு கொடுத்த  ஜனநாயக உரிமைகளை அனுபவித்துக் கொண்டு எமக்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர் என்ற நன்றி கூட இல்லாமல்  ஒருவரின் பேச்சுரிமையை தடுத்த அயோக்கிய கும்பல். இந்த கும்பலுக்கு கொம்பு சீவி விட்டது தமிழகத்தில் இருந்து  சீமானின் கட்சியான தாம் தமிழர் தான். 

சு பா வீ  
எங்கு பேச வந்தார் அதை யார் ஒழுங்கு செய்தார் 
அதை யார்? எவ்வாறு?  தடுத்தார் என்று கொஞ்சம் விபரமாக எழுதுவீர்களா? 

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

நாம் தமிழர்  செய்வது தமிழ்த் தேசியத்தின் பேரால் செய்யப்படும் வெறுப்பரசியல். அதன் மீதான விமர்சனம் சரியான பாதையில் தமிழ்த் தேசிய போராட்டத்தை முன்நகர்த்திச் செல்லவைக்கும். விமர்சனங்களை, கருத்துக்களை உள்வாங்காமல் உள்ள கட்சி, அமைப்புக்கள் உட்சுருங்கி சிதைந்து போகும் என்பதைத்தான் அண்மைய நடப்புக்கள் காட்டுகின்றன.

பதிலுக்கு நன்றி கிருபன்

ஒரு எழுச்சியை சிதைப்பது விமர்சனமாகாது. இங்கே நடப்பது விமர்சனம் என்ற போர்வையில் நிர்மூலமாக்கும் செயல். எப்படி புலிகளின் போராட்டகாலத்தில் பாசிசம் பயங்கரவாதம் ஒரு தரப்பு தொண்டை கிழியக் கத்தியதோ, லட்சக்கணக்கான தமிழ்மக்கள் சிங்களவர்களால் வருடக்கணக்கில் கொல்லப்படும்போது ராஜின திரணகமவுக்காக மட்டும் வர்க்க கண்ணீர்வடித்ததோ அதையேதான் இந்த விடயத்திலும் செய்யகின்றர்கள். இவ்வாறு தமது ஒட்டுமொத்த அறிவையும் பயன்படுத்தி கத்தியவர்கள் கதி போராட்டம் முடிவுக்கு வந்தபின் என்ன ஆச்சு ? பாசிசம் இல்லாத தமிழ்ததேசீயத்தை முன்னகர்த்துகின்றார்களா ? தமிழ்த்தேசீயத்துக்காக ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றார்களா? அது எந்தக் காலத்திலும் இப்படியான விமர்சகர்களால் முடியவே முடியாது. நாம் தமிழர் என்ற மக்கள் எழுச்சியை சமூக விரோதமாகவும் பாசிசமாகவும் சபாநாவலன் சித்தரிப்பதும் போராட்ட காலத்தில் புலிகளின் எழுச்சியை பாசிசம் என்று சித்தரித்ததும் ஒன்றுதான். எழுச்சியை தரைமட்டமாக்கியபின் அடுத்து யார் எழுகின்றார்கள் அவர்களை நோக்கி காத்திருப்பது அன்றி இவர்கள் ஒரு சரியான பாதையையோ இல்லை மக்கள் எழுச்சியையே முன்னெடுக்கப்போவதில்லை. இவர்களின் சிந்தனை முறையால் மக்களை ஒருபோதும் அணிதிரட்ட முடியாது. 

உதாரணத்திற்கு இங்கே கருத்தாடலில்  நாம் தமிழர் அரசியல் என்ற திரிகளை மூடிவிட்டு அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் ? புலிகளின் போராட்டம் முடிந்தபின் இக்களத்தில் ஒரு வெறுமை தோன்றியது. ஒரு சூனிய நிலை தோன்றியது. அதேதான் தமிழ்த்தேசீயம் என்ற உணர்வுசார் கருத்தாடலில் ஏற்படும். சூனியத்தை நோக்கி நகர்த்துவது விமர்சனமாகாது. 

ஒரு இடத்தில் மக்கள் எழுச்சி, போராட்டம், களப்பணிகள் நடைபெறும்போதே அதன் பிரதிபலிப்புகள் இங்கு நிகழும். அதை கருத்துக்களால் நிர்மூலமாககுவது ஏற்புடையதல்ல. அதற்கு பெயர் விமர்சனமும் கிடையாது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சண்டமாருதன் said:

பதிலுக்கு நன்றி கிருபன்

ஒரு எழுச்சியை சிதைப்பது விமர்சனமாகாது. இங்கே நடப்பது விமர்சனம் என்ற போர்வையில் நிர்மூலமாக்கும் செயல். எப்படி புலிகளின் போராட்டகாலத்தில் பாசிசம் பயங்கரவாதம் ஒரு தரப்பு தொண்டை கிழியக் கத்தியதோ, லட்சக்கணக்கான தமிழ்மக்கள் சிங்களவர்களால் வருடக்கணக்கில் கொல்லப்படும்போது ராஜின திரணகமவுக்காக மட்டும் வர்க்க கண்ணீர்வடித்ததோ அதையேதான் இந்த விடயத்திலும் செய்யகின்றர்கள். இவ்வாறு தமது ஒட்டுமொத்த அறிவையும் பயன்படுத்தி கத்தியவர்கள் கதி போராட்டம் முடிவுக்கு வந்தபின் என்ன ஆச்சு ? பாசிசம் இல்லாத தமிழ்ததேசீயத்தை முன்னகர்த்துகின்றார்களா ? தமிழ்த்தேசீயத்துக்காக ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றார்களா? அது எந்தக் காலத்திலும் இப்படியான விமர்சகர்களால் முடியவே முடியாது. நாம் தமிழர் என்ற மக்கள் எழுச்சியை சமூக விரோதமாகவும் பாசிசமாகவும் சபாநாவலன் சித்தரிப்பதும் போராட்ட காலத்தில் புலிகளின் எழுச்சியை பாசிசம் என்று சித்தரித்ததும் ஒன்றுதான். எழுச்சியை தரைமட்டமாக்கியபின் அடுத்து யார் எழுகின்றார்கள் அவர்களை நோக்கி காத்திருப்பது அன்றி இவர்கள் ஒரு சரியான பாதையையோ இல்லை மக்கள் எழுச்சியையே முன்னெடுக்கப்போவதில்லை. இவர்களின் சிந்தனை முறையால் மக்களை ஒருபோதும் அணிதிரட்ட முடியாது. 

உதாரணத்திற்கு இங்கே கருத்தாடலில்  நாம் தமிழர் அரசியல் என்ற திரிகளை மூடிவிட்டு அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் ? புலிகளின் போராட்டம் முடிந்தபின் இக்களத்தில் ஒரு வெறுமை தோன்றியது. ஒரு சூனிய நிலை தோன்றியது. அதேதான் தமிழ்த்தேசீயம் என்ற உணர்வுசார் கருத்தாடலில் ஏற்படும். சூனியத்தை நோக்கி நகர்த்துவது விமர்சனமாகாது. 

ஒரு இடத்தில் மக்கள் எழுச்சி, போராட்டம், களப்பணிகள் நடைபெறும்போதே அதன் பிரதிபலிப்புகள் இங்கு நிகழும். அதை கருத்துக்களால் நிர்மூலமாககுவது ஏற்புடையதல்ல. அதற்கு பெயர் விமர்சனமும் கிடையாது. 

 

 

இதைவிட எழுதமுடியாது

நன்றி சகோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

சு பா வீ  
எங்கு பேச வந்தார் அதை யார் ஒழுங்கு செய்தார் 
அதை யார்? எவ்வாறு?  தடுத்தார் என்று கொஞ்சம் விபரமாக எழுதுவீர்களா? 

முதல் பதிவில் உள்ள ஐபிசி அக்னிப்பார்வை காணொளியைப் பார்க்கவில்லை என்று தெரிகின்றது. பார்த்தால் இன்னும் எகிறும்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சண்டமாருதன் said:

பாசிசம் இல்லாத தமிழ்ததேசீயத்தை முன்னகர்த்துகின்றார்களா ? தமிழ்த்தேசீயத்துக்காக ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றார்களா? அது எந்தக் காலத்திலும் இப்படியான விமர்சகர்களால் முடியவே முடியாது. நாம் தமிழர் என்ற மக்கள் எழுச்சியை சமூக விரோதமாகவும் பாசிசமாகவும் சபாநாவலன் சித்தரிப்பதும் போராட்ட காலத்தில் புலிகளின் எழுச்சியை பாசிசம் என்று சித்தரித்ததும் ஒன்றுதான். எழுச்சியை தரைமட்டமாக்கியபின் அடுத்து யார் எழுகின்றார்கள் அவர்களை நோக்கி காத்திருப்பது அன்றி இவர்கள் ஒரு சரியான பாதையையோ இல்லை மக்கள் எழுச்சியையே முன்னெடுக்கப்போவதில்லை. இவர்களின் சிந்தனை முறையால் மக்களை ஒருபோதும் அணிதிரட்ட முடியாது. 

சபா. நாவலன் உரையாடலில் நாம் தமிழர் கட்சி பொய்களால் கட்டி எழுப்பும் குறுந்தேசியவாதத்தை ஏன் இனவாத பாஸிஸம் என்றும் அதனை ஏன் எதிர்க்கவேண்டும் என்றும் சொல்கின்றார்.  வாக்குப்பொறுக்கும் அரசியலுக்காக திராவிடக் கட்சிகளை நாம் தமிழர் எதிர்ப்பது பாஸிச பிஜேபியை தமிழ்நாட்டில் உள்ளே விடத்தான் என்பது பலரது கருத்து. இதை தமிழ்த் தேசியத்தின் எழுச்சியாகக் கருதுவது உண்மையான தமிழ்த்தேசியத்தை அழிக்கும் செயலே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களில் ஈழத்தமிழர்கள் மட்டும் இல்லை தானே ,தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள், NRI கள்  
இப்படி பலர் அடையாளப்படுத்தப்படலாம் , அவர்கள் பெருமளவில் NTK இற்கு உதவியிருக்கும் பட்சத்தில் நான்மட்டும் விசாரிக்கப்போகிறேன் என்று ஈழத்தமிழர்கள் தங்களது மண்டையை ஓட்டுவது அவர்களது  முந்திரிக்கொட்டைதனத்தை  மட்டுமே பறை சாற்றுவதாய் அமையும், இன்னும் ஒரு படி மேலே போய் ஈழத்தமிழர் உதவியிருக்கும் பட்சத்தில் நாம் தமிழர் தமிழ்நாட்டை சேர்ந்த கட்சி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதனால்  தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமே பிரயோசனம் அதிகமாக இருக்கும் என்று தெரியாமலா உதவியிருப்பினம், ஆகவே விசாரிக்க மற்றும் துப்பறிய வெளிக்கிடும் அப்புக்காத்துமார்கள் இதுகாறும் தங்களது NTK தொடர்பான Contribution எவ்வளவு என்பதற்கான பற்றுசீட்டையும் இங்கேயே இணைத்தால் துப்பறியும் சாம்புகள்  ஏன் இப்படி காத்தடிக்கினம் எனபதை வாசகர்கள் அறிந்துகொள்ளலாம், அதை விட்டுவிட்டு எவனோ ஒருவன் கொடுத்த பணத்திற்கு நீங்கள் கணக்கு கேட்பது, கொஞ்சமும் நாகரீகமல்லாதது  பாருங்கோ, அதை சம்பாதித்து  கொடுத்தவன் கேட்கட்டும் நீங்கள் ஏன் குத்திமுறிக்கிறீர்கள் என்று கட்சி சார்பாக வாசகர்களும் கேள்வியெழுப்பலாம்      
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரவல்லியால் நாதகவுக்குப் பெரிய நன்மை.  இரண்டு துரோகிகள் இனம் காணப்பட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

முதல் பதிவில் உள்ள ஐபிசி அக்னிப்பார்வை காணொளியைப் பார்க்கவில்லை என்று தெரிகின்றது. பார்த்தால் இன்னும் எகிறும்😃

அதை பார்த்துவிட்டுத்தான் கேட்க்கிறேன் 
யார் மிரட்டினார்? யாரை மிரட்டினார்?
மிரட்டபடவரின்  பலம் பலவீனம் தமிழகம்/லண்டனில் என்ன?

மிரட்டியவரின் பலம் பலவீனம் தமிழகம்/லண்டனில் என்ன?

ஆக இவர்கல் மிரட்டி வராத சுபவீ 
ஏன் வருவதற்கு இருந்தார்? 

இதவைவிட எவ்வளோ பெரிய மெகா  சீரியல் நீங்கள் காட்டிய போதே 
மிரளாத நாங்கள் இதுக்கு மிரள ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
எனது மிரளுதல் மிராளாமாய் இங்கு தேவையற்றது என்று எண்ணுகிறேன் 

என்னுடைய கேள்வி 
மேலே இருக்கும் கட்டுரை சார்ந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அதை பார்த்துவிட்டுத்தான் கேட்க்கிறேன் 
யார் மிரட்டினார்? யாரை மிரட்டினார்?
மிரட்டபடவரின்  பலம் பலவீனம் தமிழகம்/லண்டனில் என்ன?

மிரட்டியவரின் பலம் பலவீனம் தமிழகம்/லண்டனில் என்ன?

ஆக இவர்கல் மிரட்டி வராத சுபவீ 
ஏன் வருவதற்கு இருந்தார்? 

இதவைவிட எவ்வளோ பெரிய மெகா  சீரியல் நீங்கள் காட்டிய போதே 
மிரளாத நாங்கள் இதுக்கு மிரள ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
எனது மிரளுதல் மிராளாமாய் இங்கு தேவையற்றது என்று எண்ணுகிறேன் 

என்னுடைய கேள்வி 
மேலே இருக்கும் கட்டுரை சார்ந்தது 

நாவலன் பேட்டியில் மிரட்டியவர்களைத் தனக்குத் தெரியும் என்றும் சொல்லியிருக்கின்றார். எனது நண்பர் அன்று போயிருந்த நினைவு உள்ளது. கேட்டுப்பார்க்கின்றேன்.

கிழக்கு இலண்டனில் பொதுவாக அரசியல் கூட்டங்கள் நடக்கும். இனியொரு 2018 இல் வெளியிட்ட குறிப்பு இவ்வாறு உள்ளது..

.

பெரியார் அம்பேத்கார் படிப்புவட்டம் ஒழுங்கு செய்த கருத்தரங்கு கடந்தவாரம் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் லண்டனில் ஈஸ்ட்ஹாம் பகுதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நுளைந்த நாம் தமிழர்/ வீரத்தமிழர் ரவுடிக் கும்பல் கூட்டத்தைக் குழப்ப முற்பட்டு தோல்விகண்டது. இதனைத் தொடர்ந்து வேதாந்தவிற்கு எதிராக 26.05.18 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் சு.ப.வீரபாண்டியன் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி நாம் தமிழர் வன்முறைக் கும்பல் வேதாந்தா எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியில் நாவலன் குறிப்பிட்ட Robert Knox புத்தகம் இலவசமாகக் கிடைக்கின்றது. தமிழரின் அடிமுடி தேடுபவர்களுக்கு உதவும்!

http://www.gutenberg.org/files/14346/14346-h/14346-h.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரவள்ளி... சவுக்கு வள்ளி..கல்யாண வள்ளி.. ராசீவு வள்ளி.. இதுக்கெல்லாம்.. ஒரு கட்சியும் அதன் தத்துவமும்.. கொள்கையும் ஆட்டம் காணும் என்றால்.. அந்தக் கட்சியின் இருப்பே மக்கள் மத்தியில்.. மக்களின் அரசியல் பேரவாவின் முன்.. கேள்விக்குறியாகும்.

எனவே.. இந்தச் சில்லறைகளை தூக்கி ஒரு ஓரமாப் போட்டுவிட்டு.. இன்னும் அதிக இறுக்கமான கட்டுப்பாட்டுடன்.. கட்சியை அதன் கொள்கை நிமித்தம் பலப்படுத்தியபடி முன்னேறுவதே மக்கள் நம்பிக்கையை வெல்லும்..

தமிழ் தேசியத்தை.. தமிழர் நிலத்தில் சரிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளினதும் எண்ணங்களில் மண் தூவும்.

இது நாம் தமிழருக்கு மட்டுமல்ல.. தமிழ் தேசிய கட்சிகள் அனைத்துக்கும் பொருந்தும். ஏனெனில்.. எல்லா தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஒரு பொதுச் சவால் உள்ளது.. அதுதான் தமிழ் தேசிய கருத்தியலை பூண்டோடு அழிக்க ஒழிக்க.. ஒளிக்க முனையும் சக்திகளின் நகர்வுகளாகும்.

இதில்.. சர்வதேச சக்திகளில் இருந்து சாதாரண இனத்துரோகிகள் வரை அடங்குவர். 

எனவே இந்த விடயங்களைக் கையாள்வதில் நாம் தமிழர் தமிழ் தேசிய அமைப்புக்கள் காட்டும் புத்துக்கூர்மையான அணுகுமுறை ஒன்றே.. தமிழர்களை தமிழ் தேசிய தளத்தில் இன்னும் இன்னும் பலப்படுத்தும். அதனை அழிக்க ஒழிக்க.. ஒளிக்க நினைக்கும் சக்திகளுக்கு இது ஒரு மிகச் சவாலான விடயமாகும். இதையே அவர்களுக்கு சாதாரணம் ஆக்கிட்டோம் என்றால்.. அவர்களின் தேவைகளை மிக இலகுவில் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில்.... தமிழ் தேசிய அழிப்பு.. ஒழிப்பின் ஒளிப்பின் ஊடாக தமிழரின் இருப்பையே அழிக்க ஒருபோதும் பிந்நிற்கமாட்டார்கள்.

தென்னாசியாவில்... தென்னிந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில்.. ஈழத்திலும்.. தமிழகத்திலும் தமிழ் தேசிய தளம் வலுவடைவதை ஹிந்திய சிங்கள கூட்டுச் சக்திகள் மட்டுமல்ல.. பிற சக்திகளும் விருப்பமாட்டா. அது அவர்களின் தேவைகளுக்கு இடையூறாகிடுமோ.. இலகுவான ஊடுருவல்களுக்கு சவாலாகிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. எமக்கோ எமது இனத்தின் இருப்புக்கு இது அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

பேட்டியில் நாவலன் குறிப்பிட்ட Robert Knox புத்தகம் இலவசமாகக் கிடைக்கின்றது. தமிழரின் அடிமுடி தேடுபவர்களுக்கு உதவும்!

http://www.gutenberg.org/files/14346/14346-h/14346-h.htm

நன்றி கிருபன்.

ஒரு உதவி ( வேறு யாரும் தந்தாலும் நன்றி).

The temporal and spiritual conquest of Ceylon

Fernão de Queyroz

இந்த புத்தகம் அல்லது இணைப்பு கிடைத்தால் சொல்லவும்.

தேடிபார்த்தால் hardbacks யானை விலை குதிரை விலையில் போகிறது.

ஆராய்சியின் பால் அமைந்த இன்னொரு புத்தகத்தில் உசாதுணையாக இருந்த்து. பல தகவல்கள் இருக்கும் போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

சீமான் என்ற பெயரை எந்தத் திரியில் கண்டாலும் அதில் என்ன சொல்லப்படுகின்றது என்பதை வாசிக்காமலேயே பிரச்சாரக் காணொளிகளை ஒட்டுவதுதான் உடையாரின் முழுநேரத் தொழில் என்பது நன்றாகத் தெரியும்.😁 இதனால்தான் யாழ் களம் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் களமாக மாறிவருகின்றது. அதன் வெறுப்பரசியலை விமர்சனம் செய்பவர்களை களத்தில் இருந்து கலைக்கவேண்டும் என்பதுதான் தொண்டரடி உடையார்களின் நோக்கம்.

யாழ்  களத்தில்  இருக்கும் எத்தனையோ ஆயிரம் திரிகளில் ஒரேயொரு திரிதான் நாம்தமிழருக்கானது. உங்களுக்கு அது பிடிக்கவில்லையென்றால் மற்ற திரிகளை வாசிப்பதுதானே. நீங்கள் ஷோபாசக்தி வகையராக்களின் புகழ்பாடும் திரிகளை இணைக்கும்போது யாரும் குத்துது குடையுது என்று சொல்வதில்லையே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

யாழ்  களத்தில்  இருக்கும் எத்தனையோ ஆயிரம் திரிகளில் ஒரேயொரு திரிதான் நாம்தமிழருக்கானது. உங்களுக்கு அது பிடிக்கவில்லையென்றால் மற்ற திரிகளை வாசிப்பதுதானே. நீங்கள் ஷோபாசக்தி வகையராக்களின் புகழ்பாடும் திரிகளை இணைக்கும்போது யாரும் குத்துது குடையுது என்று சொல்வதில்லையே! 

இப்பிடி முகத்திலை குத்தக்கூடாது. அவர் ஒரு புஸ்தக கடல். பாகுபாடு வேகுபாடு இல்லாதவர். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்.... இந்தப்பதிவுடன் கோபம் கொள்ளவது எப்படி என்றும் அறிந்து கொண்டு வந்திருக்கிறார் என தெரிகிறது.

அவருடன் நான் கடும் விவாதத்தில் ஈடு பட்டிருக்கிறேன். தமிழக இணைய குப்பைகளில் அதிகம் மினக்கடுபவர். வெளியே வந்து உலகத்தினை பாருங்கள் என்று கூட சொல்லி இருக்கிறேன். கோபப்படாத மனிதர் என்று கூட சொல்லி இருக்கிறேன்.

இந்த திரி அந்த எண்ணத்தினை மாற்றுகிறது. யார் மீது கோபம்? சுந்தரவள்ளி மீதோ?

நாம் தமிழர் கட்சியில் சிறு சலசலப்பு.... விரைவில் அடங்கி நார்மலாக வரும். இதுக்கு முன்பும் பலர் கிளம்பினார்கள். முக்கியமானவர் வியனரசு. அவரும் வெளியே போன கையுடன் பேட்டி எல்லாம் கொடுத்தார்.... ஒரு வாரத்தில்.... எல்லாம் அமைதியாக, திமுகவில் ஐக்கியமானார்.

இப்போது கலியாணம். என்ன இவர் ஒரு டிவி விவாதத்தில் பெயரெடுத்ததால், கொஞ்சம் பிரபலம். ஆகவே இரண்டு வாரம் தங்குவார்.... அப்புறம்?

கு செல்வம் திமுகவில் இருந்து பாஜக க்கு பாய்ந்த போது, இதே போலவே சலசலப்பு, பேட்டிகள்..... இப்போது ஓய்ந்து விட்டன.

இதிலை வேடிக்கை என்னவென்றால், கோசன் முதல் துல்ப்பன், அவர் நிழல் விளங்க நினைப்பவன், ஜஸ்டின் எல்லோரும் தீடீரென புது பாட்டரி மாத்தப்பட்டவர்கள் போல வேகமாக வந்தது.

எல்லாமே அறிவுரை தான்..... நமக்கும்.... சீமானுக்கும்....

அது மட்டுமா, நம்ம வீடியோலட்சுமியும் தனது பாட்டுக்கு கலியாணசுந்தரத்துக்கு அறிவுரை....  

அட... அட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:
3 hours ago, கிருபன் said:

பேட்டியில் நாவலன் குறிப்பிட்ட Robert Knox புத்தகம் இலவசமாகக் கிடைக்கின்றது. தமிழரின் அடிமுடி தேடுபவர்களுக்கு உதவும்!

http://www.gutenberg.org/files/14346/14346-h/14346-h.htm

Expand  

நன்றி கிருபன்.

ஒரு உதவி ( வேறு யாரும் தந்தாலும் நன்றி).

The temporal and spiritual conquest of Ceylon

Fernão de Queyroz

இந்த புத்தகம் அல்லது இணைப்பு கிடைத்தால் சொல்லவும்.

தேடிபார்த்தால் hardbacks யானை விலை குதிரை விலையில் போகிறது.

ஆராய்சியின் பால் அமைந்த இன்னொரு புத்தகத்தில் உசாதுணையாக இருந்த்து. பல தகவல்கள் இருக்கும் போல் தெரிகிறது

வாங்கி வாசித்து போட்டு இங்கை வந்து சவாரி விடுறல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.